ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை பிரிட்டனில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிட்டனில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் அமைப்பு ஒன்றின் கோரிக்கையின் பேரில் லண்டனின் டெட்லீ மையத்தில் வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=144667&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 2.1k views
-
-
மாதுளுவாவே சோபித தேரரின் மறைவை இராணுவத்தினர் சிலர் விருந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அனுராதபுரம் ரணசேவாபுர ராணுவ முகாமில் இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த முகாமில் கடமையாற்றும் பத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய விருந்து வைபவத்துடன் போதாக்குறைக்கு இசைக்கலைஞர்களையும் வரவழைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலான கொண்டாட்டங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்விருந்து வைபவத்தை கேணல் தர அதிகாரிகளுள் ஒருவரான விஜேகோன் என்பவர் ஏற்பாடு செய்துள்ளார். இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் …
-
- 1 reply
- 542 views
-
-
சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீள இலங்கைக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கணக்கு உரிமையாளர்கள், இலங்கை வங்கிகளில் சுமார் 450 மில்லியன் டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளனர். இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்திருந்த பணத்தை இலங்கை வங்கிகளில் வைப்புச் செய்ய ஆரம்பித்துள்ளனர். சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் வைப்பாளர்களது பணமும் இவற்றில் அடங்குகின்றது எனவும் ரவி கருணாநாயக…
-
- 0 replies
- 670 views
-
-
அரசியல் காரணங்களுக்காக ஜனாதிபதியால் கைதிகளை விடுவிக்க முடியவில்லையாம் : சுவிஸ் பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எண்ணம் இருந்தால்கூட அதனை தன்னால் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் காரணங்கள் தன்னை கட்டுப்படுத்துகின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக சுவிஸர்லாந்து நாட்டின் பிரதிநிதியிடம் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டினார். இன்று சுவிஸர்லாந்து நாட்டின் பிரதிநிதி கெய்ன் வால்கர் நெடர் கூர்ன் வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்…
-
- 0 replies
- 387 views
-
-
நீதித்துறை மீது எவ்வித நம்பிக்கையும் கிடையாது *மஹிந்தவின் ஆட்களே நீதித்துறையில் அதிகமாக உள்ளனர். *இனவழிப்பு செய்வதாக இருந்தால் சரணடைந்த 12000 புலிகளையும் எளிதாக அழித்திருப்போம் *குற்றவாளிகள் இருப்பார்களேயானால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். நாட்டின் நீதித்துறைமீது எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது. மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டவர்களில் அனேகர் இன்னமும் நீதித்துறையிலுள்ள முக்கிய பொறுப்புக்களில் இருக்கின்ற காரணத்தினாலேயே முக்கிய வழக்குகளில் தாமதங்களும் இழுத்தடிப்புப்களும் காணப்படுகின்றன என முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார். சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் …
-
- 0 replies
- 969 views
-
-
24 அரசியல் கைதிகள் விடுவிப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்ட 31 அரசியல் கைதிகளில் 24 பேர், இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/159054/-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.4gIkcq5H.dpuf
-
- 0 replies
- 342 views
-
-
யாழ்.பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125880/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 355 views
-
-
கடந்த 07.11.2015 இல் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் முதலாவது தடவையாக தேர்தல் தொகுதி அடிப்படையில் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவு இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், 'மட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அமையப்பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவர் தெரிவு செய்யப்படும் வகையிலேயே பொத்துவில், மட்டக்களப்பு தொகுதிகள் அமையப்பெற்றுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவை மன்றமும் கவனத்திற்கொள்ளாமை பாரிய தவறு. இத்தவறினால் மட்டக்களப்…
-
- 0 replies
- 722 views
-
-
WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு, இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. www.tamilmirror.lk/159024/WT-F-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A மர்மபொருள் 6.30 க்கு விழும் விண்வெளியில் இருந்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் இன்று மாலை 6.30 மணியளவில் தென் கடற்பரப்பில் விழும் என ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழில் பூரண ஹர்த்தால் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் நடவடிக்கையினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய யாழ். மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், பல்கலைக்கழம் என்பன மூடப்பட்டுள்ளதுடன், யாழ் நகரம் உட்பட யாழ் மாவட்டமே வெறிச்சோடி …
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் சிலரை பிணையில் விடுதலை செய்துள்ளமையை கடுமையாக எதிர்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதன் மூலம் நாட்டு மக்களிடையே பெரும் அச்சநிலை தோன்றியிருப்பதாகவும் கூறினார். அத்துடன் நாகதீபத்தை நயினாதீவாக பெயர் மாற்றும் யோசனை வடக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் இப்படியான மேலும் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- நல்லாட்சி அரசுக்கு ஒரு கொள்கை இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர். அவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சிலரை விடுவிப்பதன் மூலம் நலன் என்ன? அவ்வாறு …
-
- 0 replies
- 515 views
-
-
பலமுனை நகர்வு தேவை தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை நம்பி, கடந்த மாதம் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியிருந்த அரசியல் கைதிகள் கடந்த 8ஆம் திகதி மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களின் போராட்டம் இந்தப் பத்தி எழுதப்படும் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பத்தி வெளிவரும் போதும், அது தொடர்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகம். ஏனென்றால், அதற்கிடையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்குச் சாதகமான எந்த நகர்விலும் அரசாங்கம் ஈடுபடுவதற்கான சாத்தியங்களோ வாய்ப்புகளோ இருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே கடந்த மாதம் அரசியல் கைதிகள் உண…
-
- 0 replies
- 913 views
-
-
இந்தியாவிலிருந்து அகதிகள் மீண்டும் தாய் நாட்டிற்கு வருகை இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் அசாதாரண நிலைமைகள் காரணமாக வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்த மக்களில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில், 70 பேரடங்கிய குழுவொன்று, எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி, இலங்கையை திரும்பவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவின் பல்வேறு நலன்புரி முகாம்களில் இலங்கைத் தமிழ் அகதிகளைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றதுடன், அவர்கள் வெவ்வோ…
-
- 0 replies
- 475 views
-
-
மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பு யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தில் 620 ஏக்கர் காணி ஆட்சிமாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலதிகமாக 18.04 ஏக்கர் காணி நேற்றய தினம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு தொடக்கத்தில் ஆட்சிமாற்றம் உருவாக்கப்பட்டதன் பின்னர் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 620 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்களுடைய காணிகளை பார்வையிடலாம். எனினும் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருக்க…
-
- 0 replies
- 471 views
-
-
புனர்வாழ்வு வழங்கியாவது எம்மை விடுவியுங்கள் : ஜனாதிபதிக்கு கைதிகள் கடிதம் தம்மை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியாவது விடுதலை செய்யுங்கள் என்று உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள்,ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்த வேண்டுகோளை விடுக்கும் கடிதத்தை ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் அனுப்பிவைத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.இதனால் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் கடந்த …
-
- 0 replies
- 361 views
-
-
-
யாழ்ப்பாணத்தில்; கடந்த நாட்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக, வடமராட்சிப் பிரதேசத்தில் தற்போது வயிற்றோட்டம் பரவி வருவதாக, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக அறிவித்தல்கள் விடப்பட்டு வருகின்றன. குடிநீர், உணவருந்துதல் மற்றும் மலசலகூடங்களை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது, http://www.tamilmirror.lk/159005#sthash.3rMU3bPn.dpuf
-
- 0 replies
- 162 views
-
-
எனது மகன் காணாமல் போய்விட்டார் என்று எழுதப்பட்ட கடிதத்தை தருவதற்கு, கிராம அலுவலகர் பின்நிற்கின்றார். என்னை அவமானப்படுத்துகின்றார். என்னை எப்போதும் ஏளனமாகவே அவர் கதைக்கின்றார் என்று காணாமல் போனவரின் தாயார் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன், வியாழக்கிழமை (12) அமைதியான முறையில் காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரவித்தார். 'தும்பளை ஜே - 407 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கின்றேன். எனது மகன் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட பின்னர் காணாமல் போனார். அதன் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், தான் திரும்பி …
-
- 0 replies
- 183 views
-
-
நேற்று சரீரப் பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள் அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை, இதனால் நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீரப் பிணையில் அழைத்துச்சென்றனர். இவ்வாறு நேற்று சரீரப் பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன முடிந்தவரை இவர்கள் விபரங்களை அவர்களின் உறவினர்களுக்க்கு தெரியப்படுத்துங்க் 1. தங்கராஜா புவனேஸ்வரன் 2. சுந்தரலிங்கம் அகிலன் 3. பூபாலசிங்கம் நிசாந்தன், 4. மயில்வாகனம் ஜெசிகரன் 5. சசிகரன் தங்கமலர் 6. சபாரத்னம் உமாகரன் …
-
- 0 replies
- 379 views
-
-
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்புக் குறித்து திங்களன்று முடிவு! - விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி வாக்குறுதி [Thursday 2015-11-12 19:00] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னினப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான தனது முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை தெரிவிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், ரி.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம்…
-
- 1 reply
- 552 views
-
-
நம்பிக்கையை தளரவிடாது தொடர்ந்து போராடுங்கள்! - காணாமற்போனோரின் உறவினர்களிடம் ஐ.நா அதிகாரி [Thursday 2015-11-12 19:00] நம்பிக்கையை கைவிடாது தொடர்ந்து போராடுங்கள், எங்களால் முடிந்த நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரியூக் பெய்ங். காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுவதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நா செயற்குழு யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு இன்று வந்தனர். அவ்வேளை அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமலாக்க…
-
- 0 replies
- 632 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை மகிந்தவின் கையில்! - வட மாகாண அமைச்சர்கள் தெரிவிப்பு [Thursday 2015-11-12 18:00] மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கைகளிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தங்கியுள்ளதாக வட மாகாண அமைச்சர்கள் தெரிவித்தனர். மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று மாலை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கைகளிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடந்த விசேட கலந்துரையாடலின் போது தம்மால் உணர்ந்…
-
- 0 replies
- 580 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கப்படும்! - சோபித தேரர் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி உறுதி [Thursday 2015-11-12 18:00] நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு தன்னால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தனக்குள்ள அதிகாரங்களை கைவிட்டு ஜனநாயக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவது இன்றியமையாத ஒன்று எனத் தெரிவித்தார். சேபித தேரர் பாடுபட்ட நியாயமான சமுத…
-
- 0 replies
- 426 views
-
-
கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கமைய யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் சிறுவர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி 11 மணி வரை இத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 180 வேட்பாளர்களில் 120 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் மத்தியில் வாக்களிப்பு தொடர்பான அறிவையும் ஜனநாயகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தேர்தல் நடாத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் வே.ஞானகாந்தன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. …
-
- 1 reply
- 631 views
-
-
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை வான் கலாசாரத்தின் பிதாமகன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார் வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று நீதிமன்றில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ ஒரு முரட்டுதனமான மனிதர். அவரே வெள்ளை வான் கலாசாரத்திற்கு காரணமானவர். இது உண்மை. இந்தை கருத்தை ஒரு போதும் மாற்றி கூறமாட்டேன் என்றார். வெள்ளை வான் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேன்வின் சில்வா செய்த முறைப்பாடு மற்றும் தகவல்களுக்கு அமைவாகஇ…
-
- 1 reply
- 555 views
-