Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலியா தலையிடாது முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையீடு செய்யாது என இலங்கை;கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் வீசா காலம் முடிவடைந்தும் தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நோயல் முதலிகே எனப்படும் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடப் போவதில்லை என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தீர்மானித்தள்ளது. அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக குமார் குணரட்னம் சில ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கை குடியுரிமையை…

  2. நாராயணனால் சூடுபிடிக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தாக்கப்பட்டார். அக்கருத்தரங்கை நடத்தியது 'தி இந்து' ஆங்கிலப் பத்திரிகையின் 'Hindu Center for Politics and Public Policy' என்ற அமைப்பு. இதில் இந்து பத்திரிகையின் தலைவர் என்.ராம் கலந்து கொண்டார். ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் தலைவர் சந்திரகாசனும் பங்கேற்றார். இக்கூட்டம் தொடங்கும் முன்பிலிருந்தே சென்னை மாநகரப் பொலிஸுக்குப் பதற்றம்தான். முதலில் 'மே 16 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்' இக்கூட்டத்துக்கு எதிராகப் போராடப் போகிறார்கள் என்ற பேச்சு எழுந்…

  3. களைகட்டிய தீபாவளி ஆயத்தம்... நாளை செவ்வாய்க்கிழமை (10) கொண்டாடப்படவிருக்கும் தீபத்திருநாளை முன்னிட்டு மலையக மக்கள் பல்வேறுபட்ட ஏற்பாடுகளையும் ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வீட்டை துப்பரவு செய்தல், வர்ணம் பூசுதல், உடைகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் விதவிதமான தின்பண்டங்கள் தயாரித்தல் என பண்டிகைக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். தோட்ட மக்கள் கொண்டாடும் பண்டிகையில் தீபாவளி சிறப்பிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: பா.திருஞானம்) - See more at: http://www.tamilmirror.lk/158660/%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-…

  4. தீபாவ­ளியை முன்­னிட்­டு­ அ­ர­சியல் கைதி­களை பொது மன்­னிப்பில் விடு­தலை செய்­ய வேண்டும் : வட­மாகாண முத­ல­மைச்சர் கோரிக்கை தீபா­வ­ளியை முன்­னிட்டு இன நல்­லி­ணக்­கதை ஏற்­ப­டுத்தும் வகையில் தமிழ் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நாட்­டி­லுள்ள சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அரசில் கைதி­களை விடு­தலை செய்­யா…

  5. 500 மில்லியன் கோரிய விஜயதாஸவிடம் 5000 மில்லியன் கோரும் பொன்சேகா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் இருந்து 5000 மில்லியன் ரூபாய் நஸ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மினுவான்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷ அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை முன்னதாக 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரி பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக விஜதாஸ ராஜபக்ஷ கூற…

  6. திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.தற்பொழுது அமைச்சர் திலக் மாரப்பனவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தனது முடிவை அறிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர் திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தற்பொழுது நடைபெற்றுவரும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவைக் க…

  7. கோத்தபாயவின் நிறுவனம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது: தமிழில் குளோபல் தமிழ்செய்திகள்:- 09 நவம்பர் 2015 இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தனியார் துறைநிறுவனமான ரக்னா ஆரக்சக லங்கா நிறுவனத்திடம் காணப்பட்ட ஆயுதங்களை கணக்கிலெடுத்த வேளை இலங்கையில் திட்டமிடப்பட்ட முறையில் ஆயுதவியாபாரம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்டநிறுவனங்களிடம் உள்ள 320 ஆயுதங்களில் தொடர் இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதும் இந்த கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது,ஆயுதங்களின் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிப்பதை தடுப்பதற்காகவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அவன்ட்கார்டே கப்பலில் மேலதிக ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன. முன்னா…

  8. கடந்த அரசாங்கம் எம்மை அச்சுறுத்தியது!– குகனின் மனைவி [ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2015, 12:59.42 AM GMT ] கடந்த அரசாங்கம் தம்மை அச்சுறுத்தியதாக மனித உரிமை செயற்பாட்டாளர் குகன் முருகானந்தனின் மனைவி ஜனதா தெரிவித்துள்ளார். குகன் காணாமல் போய் நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. இதுவரையில் அவர் பற்றிய எந்தவிதமான தகவல்களும் கிடையாது. குகன் பற்றிய தகவல்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட போது, “உனது பிள்ளையின் தந்தை காணாமல் போனது போன்று தாயையும் இழந்துவிடும் வகையில் செயற்படாதே” என அச்சுறுத்தப்பட்டது. வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குகன் மற்றும் லலித்குமார் ஆகியோர் மனித உரிமை செயற்பாடுகளில் தீவிர முனைப்புடன் செயற்ப…

  9. கோதபாயவின் தலைமையில் ராஜபக்ஸக்களை மீளவும் கட்டியெழுப்ப முயற்சி: குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு: 09 நவம்பர் 2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் தலைமையில் ராஜபக்ஸக்களை மீளவும் கட்டியெழுப்ப முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாகவே தினேஸ் குணவர்தன தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக தினேஸ் குணவர்தன செயற்பட்டாலும், உள்ளகத் தலைவராக கோதபாய ராஜபக்ஸ செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வலுவான ஓர் கட்டமைப்பை …

  10. விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் (பொதுவேலைநிறுத்தம்) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் மூடி இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. பேரூந்துகள், முச்சக்கரணவண்டிகள், பொது சேவைகள் ஆகியவற்றின் சங்கங்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று ஞாயிறன்று பிற்பகல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப…

  11. வடக்கு அமைச்சர்கள் சிலரை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? வடமாகாண அமைச்சர்கள் நால்வரை மாற்றுவது குறித்து தன்னிடம் எந்தவித கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடமாகாண அமைச்சர்கள் சிலரை மாற்றுமாறு சிலர் கோரிக்கைகள் விடுத்திருப்பது உண்மை. ஆனால், நேரடியாக தன்னிடம் எந்தவிதமான கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால், அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் அல்லது அமைச்சர்க…

  12. அன்புக்குரிய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வணக்கம். எங்கள் மீது உங்கள் சிலருக்கு பிடிப்பில்லாமல் இருக்கலாம். எனினும் எங்கள் அனைவரதும் நோக்கம் எங்கள் இனம் வாழவேண்டும் என்பதாகும். வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடந்த போது தமிழ் மக்கள் வாக்களித்த வேகம் கண்டு இந்த உலகமே வியந்தது. தேர்தல் தினத்தன்றும் கூலி வேலைக்குப் போனால்தான் அன்றைய சீவனோபாயம் நடக்கும் என்ற நிலைமை இருந்த போதும் கூட, எத் தனையோ பேர் வாக்களிப்பதை ஒரு விரதமாகக் கருதி அதிகாலையிலேயே விழித்து, நேரத்தோடு வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களித்த அந்த வாக்குகளே உங்களுக்குப் பதவி தந்தன. உங்கள் பதவியை தீர்மானித்த புள்ளடிகள் ஒவ்வொன்றும் சாதாரணமானவையல்ல. அது வாக்களித்த ஒவ்வொரு தமிழ் மகனதும் எண்ணிறைந்த எ…

  13. அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசாங்கம் முற்படுகின்றது.ஆயுத ப்போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ தமிழ்த்தேசியப் பிரச்சினையை எப்படி அதிகாரப் பரவலாக்கலுக்குரிய பிரச்சினையாகக் காட்டினார்களோ அப்படித்தான் கைதிகள் விவகாரத்தையும் ஒரு சட்ட விவகாரமாகக் காட்ட முற்பகிறார்கள். இவ்வாறு ஒரு விவகாரத்தின் மையத்தைச் சிதைத்து அதை வேறொன்றாகக் காட்டுவதன் மூலம் அதை ஒத்தி வைக்கலாம் அல்லது அதைத் தீர்க்காமலே விடலாம். அதற்குரிய மிக நீண்ட பாரம்பரியம் இலங்கைத் தீவின் அரசாட்சி முறைமைக்குள் உண்டு. அதற்குத் தேவையான முதிர்;ச்சியும், நிபுணத்துவமும், உத்திகளும் அவர்களிடம் உண்டு. …

  14. வவுனியாவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளையும், காணி அனுமதிப்பத்திரம் இல்லாத காணிகளையும் தமது திணைக்களத்துக்கு உரித்துடைய காணிகள் எனக்கூறி வன இலாகா திணைக்களம் சுவீகரித்து வருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, வவுனியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளுக்கு முறைப்படியான உறுதிப்பத்திரங்கள் காணப்படவில்லை. நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக அவற்றுக்கு முறைப்படியான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடுகள் தவறவிடப்பட்டுள்ளன. எனினும் குறித்த காணிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகளென எழுத்து மூலம் உற…

  15. பிரதமரைத் தோற்கடிக்க புதிய முயற்சிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றி இந்த அரசாங்கத்தை நிராகரித்து புதிய ஐ.தே.க, ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி தினேஸ் குணவர்த்தன தலைமையில் இதுதொடர்பான கூட்டம் ஒன்று நடந்துள்ளது. விசேடமாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களில் 90 வீதமானவர்கள் பிரதமர் மற்றும் தேசிய அரசாங்கம் மீது விரக்தியில் இருப்பதால் தினேஸ் குணவர்த்தனவின் திட்டம் நிறைவேறும் சாத்தியம் உள்ளது. அதில் ஐ.தே.க முக்கிய தலைவர்கள் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய கட்சி ஆரம்பித்து இதனை முன்னெடுப்பதைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய…

  16. தமிழக இஸ்லாமிய மதகுருவிற்கு இலங்கை அரசாங்கம் வீசா மறுக்கக்கூடிய சாத்தியம் 07 நவம்பர் 2015 தமிழக இஸ்லாமிய மத குரு ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் வீசா மறுக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மௌலவி ஜெனுல்ஆப்டீன் என்ற மதகுருவிற்கு இவ்வாறு வீசா அனுமதி மறுக்கப்படலாம் என குறிப்பிடப்படுகிறது.இந்த மதகுருவின் இலங்கை விஜயம் இலங்கை இஸ்லாமிய சமூகத்திற்கு இடையில் முரண்பாடுகளை வெடிக்கச் செய்யக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்திற்குள்ளும் ஏனைய மதங்களுக்கு இடையிலும் முரண்பாடுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதனால், மௌலவி ஜெனுல்ஆப்டீனுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. இதே காரணத்திற்காக 2005ம் ஆண்டிலும் மௌலவி ஜெ…

  17. மஹிந்த குடும்பமும் சகாக்களும் மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை:- 08 நவம்பர் 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினரும், அவரது சகாக்களும் ஹெலிகொப்டர்களில் மேற்கொண்ட பயணங்களுக்கான கட்டணங்கள் இதுவiரியல் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்கு சொந்தமா ஹெலிகொப்டர்களின் ஊடாக கடன் அடிப்படையில் பயணங்கள் மேற்கொண்ட போதிலும் அந்தக் கடன் இதுவரையில் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இதுவரையில் விசாரணைகளும் நடத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சோ அல்லது சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் தரப்பி;னரோ செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை அறவீடு செய்வதற்கான முனைப்புக…

  18. மகிந்த ஆட்சிக்கு ஆப்பு வைத்த சோபித தேரர் காலமானார்! [Sunday 2015-11-08 08:00] கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியும், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளருமான, மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார். கவலைக்கிடமான நிலையில், சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சோபித தேரர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானதாக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரை நிர்வாகம் அறிவித்துள்ளது. கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியும், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளருமான, மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார். கவலைக்கிடமான நிலையில், சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சோபித தேரர் இன்று அதிகாலை 4.30 மணியளவில்…

  19. ஜீ.எஸ்.பி சலுகையை மீள வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நிபந்தனைகள்! [Sunday 2015-11-08 07:00] ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையையை மீள வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையையை மீள வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த …

  20. மர்மப்பொரும் விழும் அபாயம்! தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை? [ ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2015, 03:34.44 AM GMT ] விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ம் நாள், வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படும், இலங்கையின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 2 மீற்றர் நீளமான – WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ம் நாள் இலங்கைக்குத் தெற்கில், 100 கி.மீ தொலைவில், கடலில் விழும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 13ம் நாள் வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்ப…

  21. சந்திரிகாவின் மகன் விமுக்தியை அரசியலுக்கு கொண்டு வர முனைகிறதாம் இந்தியா! - சிங்கள ஊடகம் கூறுகிறது. [Sunday 2015-11-08 08:00] முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் ஈடுபடுத்த இந்தியா முயற்சிப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே விமுக்தியை அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இந்திய முயற்சித்து வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் ஈடுபடுத்த இந்தியா முயற்சிப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே விமுக்தியை அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இந்திய முயற்சித்து வருகின்றது. இலங்…

  22. நீதி அமைச்சரிடம் 500 கோடி ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தொடரப்படும் - சரத் பொன்சேகா 07 நவம்பர் 2015 நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவிடம் 500 கோடி ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தொடர உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மினுவன்கொடையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என அண்மையில் சரத் பொன்சேகா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவை விமர்சனம் செய்திருந்தார். இதனால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு நட்ட ஈடாக சரத்பொன்சேகா 50 கோடி ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டுமெனக் கோரி நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்ப உள்ளதாக விஜயதாச ராஜபக…

  23. போர்க்களத்தில் ஒரு பூ- "இயக்குனருக்கும் எம்தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்" 24 அக்டோபர் 2015 திருமதி வாகீசன் தர்மினி - இங்கிலாந்து:- போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் எம் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்: இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரண்டைந்த பொழுது இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட திருமதி சோபனா அவர்களது புகைப்பட…

    • 24 replies
    • 2.5k views
  24. எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு மட்டுமன்றி நாட்டின் எந்தவொரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுவதனை எமது கட்சி எதிர்க்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு மாநிலத்தின் அளவையேனும் கொண்டிராத இலங்கையில் அதிகாரம் பகிரப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கப்படக்கூடிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு விடயம் தொ…

  25. நெடுங்கேணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் குடிபோதையில் அட்டகாசம் புரிந்த நிலையில், நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப் பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர். இந் நிலையில் காலையில் பாடசாலைக்குச் சென்ற அதிபர், பாடசாலையில் நடந்த சம்பவங்களை பார்வையிட்டதுடன் காவலாளியினால் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அதிபரினால் வலய கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.