ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
மத்தல விமான நிலையத்தினை நெற்களஞ்சியசாலையாக மாற்ற அனுமதி? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து கடனாக பெறப்பட்ட 210 மில்லியன் டொலர் கடன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தினால் எவ்விதமான பயணும் இல்லை என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தன. இவ்வாறாதொரு சூழ்நிலையிலேயே மத்தல விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தல சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சிய சாலைகளில், யால போக அறுவடையின் போது கொள்வனவு செய்யப்படும் நெல்லை …
-
- 2 replies
- 476 views
-
-
இடம்பெயர்ந்த முஸ்லிம்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர அழைக்கிறார் வடக்கு அமைச்சர்! [Monday 2015-08-31 20:00] மன்னார் மாவட்டத்தில் இருந்துர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மன்னாரில் உள்ள தமது பூர்வீக இடங்களில் விரைவாக குடியேறுங்கள் என வட மாகாண கிராமிய அமைச்சர் பா. டெனிஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். புத்தளம் தில்லையடி முஹாஜிரின் அரபுக்கலூரிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களைசந்தித்து கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்திலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை விரைவாக மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியமருமாறு அழைப்பு வி…
-
- 2 replies
- 655 views
-
-
தேசிய அரசில் 5 தமிழ் அமைச்சர்கள்? - விஜயகலா, அங்கஜனுக்கு இடமில்லை [Saturday 2015-08-29 08:00] தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தேசிய அரசாங்கத்த…
-
- 13 replies
- 1.1k views
-
-
மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவை மைத்திரியும், ரணிலும் காப்பாற்றிவிட்டனர்! - சிங்கள ஊடகம் தெரிவிப்பு [Monday 2015-08-31 20:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்பிய அமெரிக்கா, அது சம்பந்தமாக உள்நாட்டு விசாரணையை நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு உதவி வழங்க தீர்மானித்துள்ளது.அமெரிக்காவின் இந்த தீர்மானம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த …
-
- 1 reply
- 553 views
-
-
போரில் காலை இழந்த நான் மக்களின் வலிகளை அறிவேன்! - நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா [Monday 2015-08-31 20:00] இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் வரை சென்று தன் காலை இழந்தும் தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவின் மங்கை சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கு வற்றாப்பளை கண்ணகி ஆலய நிர்வாக சபை தலைவர் மு.குகதாசன் தலைமையில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் புதிய பெண் பாராளுமன்ற உறுப்பினரை வாழ்த்தி உரைகளும் ஆற்றினர். இந்த நிகழ்வின்போது இராணுவ ஆக்கிமிப்பில் உள்ள, பொது மக்களுக்கு சொந்தமான கேப்பாப்பிலவு நிலத்தை விடுவித்து தர மகஜர் ஒன்றும் அப்பகுதி மக்களால் சாந்தி ஸ்ரீஸ்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
காரைநகர் வேணன் அணை புனரமைப்பு ஆரம்பம்! [Monday 2015-08-31 20:00] காரைநகரின் பிரசித்தி பெற்ற வேணன் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சம்பிரதாய பூர்வமாகத் ஆரம்பித்து வைத்துள்ளார். காரைநகர் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவுகின்ற ஒரு பிரதேசம். இதனால், மழைநீரை வீணாகக் கடலினுள் கலக்கவிடாது தேக்கி நிலத்தடிநீரை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வேணன் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள் சிலர் வேணன் அணைக்கட்டைச் சேதமாக்கியதால், தேக்கப்பட்டிருந்த மழைநீர் கடலுடன் கலந்தது. இது, விவசாய அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து ஏறத்தாழ 7000 மணற்பைகளின் உதவியோடு சேதமாக்கப்பட்ட அணைக்கட்டுப்பகுதி அப்போது த…
-
- 0 replies
- 416 views
-
-
அல்வாயில் கொலைக் குற்றவாளியை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்த பொலிசார்! [Monday 2015-08-31 20:00] பொலிஸார் கைது செய்யச் சென்ற போது கொலைக்குற்ற சந்தேகநபர் பொலிஸாரை வாளால் வெட்ட முயன்றமையால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்த சம்பவம், நேற்று மாலை அல்வாய் பகுதியில் இடம்பெற்றது. காலில் படுகாயமடைந்த சந்தேகநபரான எம்.சதீஸ்குமார் (வயது 28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். அல்வாய் வடக்கு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தகராறு ஒன்றின் போது சின்னத்தம்பி திருச்செல்வம் (வயது 48) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை ப…
-
- 0 replies
- 532 views
-
-
வடக்கு விவசாய அமைச்சின் சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் வடக்கு விவசாய அமைச்சின்‘ சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும் தொனிப்பொருளிலான மாபெரும் விவசாயக் கண்காட்சி எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் மகோற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி நல்லூர் கோவில்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியை புதன்கிழமை மாலை 5 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்துவைக்க உள்ளார். அளவுக்கு மிஞ்சிய செயற்கை உரங்களினதும், இரசாயனக் களைகொல்லிகளினதும் பயன்பாட்டினால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடிநீரும் மாசுபட்டு வருகிறது. விவசாய இரசாயனங்களின் வரம்பு மீறிய பாவனையால் ஏற்பட்…
-
- 1 reply
- 602 views
-
-
எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு எதிர்க்கட்சிகளிடம் : ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை தெரிவுசெய்யும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில், ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து, தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக விமல் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற சர்ச்சை கடந்…
-
- 0 replies
- 409 views
-
-
கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகள் கொழும்பில் கூடி ஆலோசனை! - நடந்தது என்ன?[Monday 2015-08-31 07:00] தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் கொழும்பில் நேற்றுக் கூடி தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரங்கள் தொடர்பாகவும், அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். இந்தக் கூட்டத்தில் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 6 பேரும், ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட 5 பேரும், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட இருவருமாக 13 பேர் கலந்து கொண்டிருந்தனர். செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக்…
-
- 1 reply
- 597 views
-
-
மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி பெற்றுக்கொள்ளப்படும் :மங்கள சமரவீர மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தின் தொழில்நுட்பசார் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உளவியல், சமூக ரீதியான உதவிகளை பெற்றுக் கொள்ளல், உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தில் மற்றும் மீள்குடியேற்றல் நடவடிக்கைகள் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அண்மையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த போது அவ…
-
- 0 replies
- 367 views
-
-
உள்நாட்டு விசாரணைக்கு அரசாங்கம் இணங்கியமை சர்வதேச சதி : ஜீ.எல்.பீரிஸ் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்நாட்டு விசாரணைக்கு அரசாங்கம் இணங்கியுள்ளமையானது சர்வதேச சதியென முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்தின் கைப்பாவையாக மாறியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு, இன அடிப்படையில் கோட்டாக்களை அறிமுகப்படுத்தி அனைத்து துறைகளிலும் அதனைக் கடைப்பிடித்தாலே போதுமானதென குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பிற்கு முரணான வகையில் செயற்படுவதாக குறிப்பிட்ட…
-
- 0 replies
- 1.8k views
-
-
கட்சித் தாவலே தேசிய அரசாங்கத்திற்கு வழிகோலியது : பிரதமர் ரணில் கட்சித் தாவல்களே தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்தை எடுப்பதற்கு வழிகோலியதாகஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பு நகர நிர்மாண பணிகளை பார்வையிடுவதற்கான கண்காணிப்பு பயணத்தின் போது, ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சித்தாவல் காரணமாகவே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேசிய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளவில்லையென குறிப்பிட்ட அவர், கட்சித் தாவல்களில் ஈடுபடுவோரை இணைத்துக்கொள்ளாமையே மக்களின் விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான தீர்மானம் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும…
-
- 0 replies
- 449 views
-
-
உள்ளக விசாரணை குறித்து அமெரிக்காவின் நகர்வு இலங்கைக்கு ஆபத்து இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு இலங்கைக்குச் சாதகமானதல்ல” என்று முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதில எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தால் நடத்திமுடிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்தும் நோக்கில் உள்ளக விசாரணையை நடத்துவதற்கு அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணையொன்றை வலியுறுத்தி வந்த அம…
-
- 0 replies
- 338 views
-
-
தேசிய அரசுக்கான ஆசனப் பங்கீடு நாடாளுமன்ற முதல் அமர்வில் இடம்பெறாது தேசிய அரசுக்கான பேச்சுக்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் இடைபெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறும் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் தேசிய அரசுக்கான ஆசனப்பகிர்வு சபையில் இடம்பெறாது என்றும், அதன் பின்னரே ஆசனப்பகிர்வு இடம்பெறும் என்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் டப்ளியூ.பீ.டி.தஸநாயக்க தெரிவித்தார். முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளதுடன், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் அனைவரும் உத்தியோகபூர்மாகப் பதவியேற்றுக் கொள்வதையடுத்து,மாலை 3 மணிவரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 296 views
-
-
உள்ளக விசாரணைக்கு எதிராக களத்திலும் புலத்திலும் போராட்டங்கள் வெடிக்கும்! - செல்வம் அடைக்கலநாதன்[Monday 2015-08-31 07:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. இந்த நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். சர்வதேச விசாரணை ஊடாகவே போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வைப் பெற்றுக் கொள்ளல…
-
- 0 replies
- 150 views
-
-
ஐ.நா அறிக்கை வெளிவந்த பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும்! - என்கிறார் சம்பந்தன்[Monday 2015-08-31 07:00] போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிடமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைக்கென்று நியமிக்கப்பட்ட சன்ட்ரா பெய்டாஸ், மார்ட்டி அடிசாரி, அஸ்மா ஜகாங்கிர் மற்றும் சில்வியா காட்ரைட் ஆகியோரின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட…
-
- 0 replies
- 304 views
-
-
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைத் தீர்மானிக்கப் போகும் மூன்று விசாரணை அறிக்கைகள்! [Monday 2015-08-31 07:00] போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க அரசால் அமைக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையானது மூன்று அறிக்கைகளை மையப்படுத்தியதாக அமையவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கை, அந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள டெஸ்மன் சில்வா தலைமையிலான குழுவின் அறிக்கை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விசாரணை அறிக்கை ஆகிய மூன்று அறிக்கைகளை மையப்படுத்தியே உள்ளகப் பொறிமுறை அமையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மெக்ஸ்வெல் பரண…
-
- 0 replies
- 195 views
-
-
பிரகீத் கடத்தல் - மற்றொரு புலனாய்வு அதிகாரியும் விசாரணைக்கு அழைப்பு! [Monday 2015-08-31 07:00] கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகளுக்காக மற்றுமொரு புலனாய்வு அதிகாரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. எக்னெலிகொட வழக்கில் பொலிசாரால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள ஆறாவது புலனாய்வு அதிகாரி இவர் ஆகும். இன்று காலை குறித்த அதிகாரி பொலிஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இவரை வரவழைத்து மேலோட்டமான விசாரணையொன்றை மேற்கொண்டுள்ள பொலிசார், இன்று மீண்டும் வருமாறு அழைத்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே பிரகீத் எக்னெலிகொட வழக்கின் விசாரணைகள் மூலமாக நாட்டின் முக்கிய புலனாய்வுத் தகவல்கள்…
-
- 0 replies
- 175 views
-
-
எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது! - கொதிக்கிறார் விமல் வீரவன்ச[Monday 2015-08-31 07:00] பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களே எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டுமே தவிர ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதி நியமனம் செய்தால் நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் ஜனநாயகம் சீர்குலையுமென்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமது கட்சிக்கு உரித்தானதென உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இப்பதவி வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. தர்க்கம் புரிகிறது.…
-
- 0 replies
- 163 views
-
-
தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் விரைவில் கைது! [Monday 2015-08-31 07:00] ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் மூவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கைது செய்யப்படுவரென சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. இதேவேளை, லண்டனில் வசித்து வரும் இலங்கை பிரஜை ஒருவரும் தாஜுதீனின் கொலை விவகாரம் குறித்து தகவல் அறிந்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. “சந்தேக நபர்கள் இத்தாலிக்கு பறந்துவிட்டதாக கூறும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. நிச்சயமாக லண்டனில் வசிக்கும் நபர் குறித்தே இவ்வாறு கூறப்படுகிறது. அவர் ஒரு சிவிலிய…
-
- 0 replies
- 186 views
-
-
குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக்க மஹிந்த அணி திட்டம்! - நாடாளுமன்றில் தனி அணியாக செயற்படும்[Monday 2015-08-31 07:00] மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சித் தலைவராக குமார வெல்கமவை நியமிக்கத் தீர்மானித்துள்ளனர். இதன் முதற்கட்டமாக தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தனிக்கட்சியொன்றை ஆரம்பிக்கவும் ஆலோசித்துள்ளனர். தற்போதைய நிலையில் இந்தக் கூட்டணிக்கு சுமார் 60-70 வரையான சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் செயலாளராக முன்னாள் சுதந்திரக் கட்சி செயலாளர் அனுர யாப்பாவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை இறுதி முடிவு எட…
-
- 0 replies
- 173 views
-
-
பெண்களுடன் கீழ்த்தரமாக நடந்த ரவுடிகளை தப்பிக்க விட்ட பொலிஸ்! - வவுனியாவில் நேற்றிரவு சம்பவம்[Monday 2015-08-31 07:00] வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக் கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணியில் இருந்து வந்த தந்தை இரு புதல்வர்கள் மற்றும் 4 சகோதரிகள் குருக்கள் புதுக்குளத்தில் உள்ள தமது வீட்டிற்கு செல்வதற்காக குருமண்காட்டில் உள்ள பேருந்துத் தரிப்பிடத்தில் காத்திருந்தனர். எனினும் நீண்ட நேரமாக பேருந்து வராமையால் பெண்களுடன் நிற்பதில் அச்சம் கொண்ட வயதான தந்தையார் அங்கிருந்த முச்சக்கவண்டி தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்த சென்றிருந்த சமயம் அங்கு அப்ப…
-
- 0 replies
- 184 views
-
-
கூட்டமைப்பின் இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்டவேண்டும்! - ஏனைய கட்சிகள் கோரிக்கை!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்டவேண்டும் என்று இக்கட்சியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவாபர்த்தை நடத்திய போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் எற்பட்டிருந்த அதிருப்தி நிலையைத் த…
-
- 0 replies
- 212 views
-
-
போரில் உடல்உறுப்பை இழந்து நாடாளுமன்றம் செல்லும் முதல் உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜாAug 30, 2015 சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார். 8ஆவது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இம்முறை நாடாளுமன்றத்துக்கு 63 புதுமுகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கிறார் சாந்தி சிறீஸ்கந்தராஜா. வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மிக குறைந்தளவு வாக்குகள் வ…
-
- 3 replies
- 951 views
-