ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சித்தாண்டி இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் மீது கவனயீனமாகவும் அசட்டுத் துணிச்சலுடனும் உழவு இயந்திரத்தை (டிராக்டர்) மோதி ஸ்தலத்திலேயே மரணத்தை ஏற்படுத்திய நபர் ஒருவருக்கு இரு குற்றச்சாட்டுக்களின் பேரில் தலா ஐந்து வருட கடூழியச் சிறைத்தண்டனையும் தண்டமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உழவு இயந்திரத்தை மோதி தண்டிக்கப்படவேண்டிய குற்றம் புரிந்தனர் எனத் எனத் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைகளுக்கு எதிரியான சந்திவெளியைச் சேர்ந்த வேலப்பு சத்தியசீலன், மன்றுக்கு சமுகமளிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் நிலையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், எதிரிக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினமான 2008ஆம் ஆண்டு 4ஆம் திகதி சித்தாண்டி இராணுவ முகாம் புலனாய்…
-
- 0 replies
- 284 views
-
-
குறிப்பாக உதயன் பத்திரிகை மக்களுக்காக அன்றி தனிப்பட்ட நலனை முன்னிறுத்தி TNAயின் ரியூனிற்கேற்ப டான்ஸ் ஆடுகிறது என்கிறார் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் போராளிகளின் (ஜனநாயகப் போராளிகள் அமைப்பின்) தலமை வேட்பாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான (அண்மையில் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது நான் இப்போ ஊடகவியலாளன் அல்ல என கூறினார்) ந. வித்தியாதரன் யாழ் ஊடகங்களை மாபியா என குறிப்பிட்டு உள்ளதுடன் உதயன் பத்திரிகை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி எவ்.ரீ பத்திரிகைக்கு வழங்கிய நீண்ட செவ்வியின் இறுதிக் கேள்வியான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் எவ்வாறான சவால்களை தற்போது எதிர்நோக்குகின்றனர்?என்பதற்…
-
- 0 replies
- 549 views
-
-
மதத் தலைவர்களிடம் ஆசி பெற்ற தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்கள்! [Thursday 2015-07-16 19:00] பாராளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மத பெரியார்களிடம் ஆசீர்வாதத்தினை பெற்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன்(சட்டத்தரணி) திருமதி பத்மினி சிதம்பரநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவரும் விரிவுரையாளருமான அமிர்தலிங்கம் இராசகுமாரன், குருநகர் பாடுமீன் விளையாட்டு…
-
- 1 reply
- 644 views
-
-
-
- 6 replies
- 919 views
-
-
30 வருட அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டம் என்பவற்றை நடத்திய நாம் தற்போது இராஜ தந்திரப் போரை நடத்த வேண்டியவர்களாக cள்ளோம் என தமிழரசுக் கட்சியின் வன்னி வேட்பாளர் ம.றோய்ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த 35 வருடங்களாக வங்கியாளனாக பணி செய்த நான் காலத்தின் கட்டாயம் கருதி மக்கள் சேவையில் மன நிறைவுடன் இறங்குகிறேன். யுத்தம் மௌனிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கான அடிப்படை சமுதாய கட்டமைப்புக்கள் மீளமைக்கப்படுவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென குற்றஞ்சாட்டிய அவர் யுத்தத்தின் பி…
-
- 5 replies
- 482 views
-
-
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை ஆரம்பம்! [Wednesday 2015-07-15 19:00] வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை மேற்படி செயற்றிட்டம் தொடர்பில் அமைச்சின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த 2014.12.19ம் திகதி மாகாணசபையில் தொடக்கி வைக்கப்பட்ட மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் கேட்…
-
- 6 replies
- 563 views
-
-
எமது கடல்வளத்தையும சமுத்திரத்தையும் சிறந்த முறையில் பாதுகாக்க தவறினால் 2100 ஆம் ஆண்டு 6 அடி 6 அங்குலம் அளவு கடல் மட்டம் உயர்வடை யும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சரின் அமெரிக்க விஜயம் தொடர் பான பயன்கள் குறித்து வடக்கு மாகாண மீன் பிடி அமைச்சின் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில், கடல் வளத்தை பாதுகாப்பது, அபிவிருத்தி செய்வது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத் தினால் 16 நாடுகளிலும் இருந்து தலா ஒருவர் வீதம் அழைக்கப்பட்டு மூன்று வாரகால கருத் தரங்கு நடைபெற்றது. கடல் வளத்தை பாது…
-
- 2 replies
- 319 views
-
-
நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரிடம் கொடுக்கப்படும் நிலையில் மஹிந்த அந்த அதிகாரங்களை மீண்டும் பயன்படுத்தும் நிலை காணப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே, இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஆட்சி மாற்றத்தின் பின்னர் பெரிய மாற்றம் கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கையை கொடுத்து தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளித்து இருந்தது. இன்று ஜனாதிபதிக்கு இருக்க கூடிய அதிகாரங்கள் படிப்படியாக அகற்றி பிரதமரிடம் பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்படும் நிலை…
-
- 7 replies
- 537 views
-
-
விக்னேஸ்வரன் தான் திருப்புமுனை! [ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 11:44.54 AM GMT ] பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை அடிக்க ஆளே இல்லை. இந்த சொந்த சோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் ஈழத்தைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்ப்பவர்கள்தான், விக்னேஸ்வரன் என்கிற மக்கள் தலைவனின் உயரத்தை உணர முடியும். பதவி - நாற்காலி என்கிற கவலையெல்லாம் இல்லாமல், துண்டை உதறித் தோளில் போட்டபடி உண்மையைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார் விக்னேஸ்வரன். அதைப் பார்த்துத்தான் பயப்படுகிறது இலங்கை. 'வடக்கில் போ…
-
- 0 replies
- 443 views
-
-
சீனாவின் கடன்களை ரத்துச் செய்யும் திட்டமில்லை – என்கிறது சிறிலங்கா அரசாங்கம்JUL 16, 2015 | 12:58by கி.தவசீலன்in செய்திகள் சீனாவிடம் பெறப்பட்ட கடன்களை ரத்துச் செய்யும் திட்டம் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, “சீனாவிடம் பெறப்பட்ட கடன்களை ரத்துச் செய்யும் திட்டம் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது. இந்தக் கடன்கள் நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானவை. சீனக் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தொடர்பாக மீள் இணக்கப்பாடு செய்து கொள்கிறோமே தவிர, இந்தக் கடன்களில் இருந்து விடுபடும் திட்…
-
- 0 replies
- 520 views
-
-
கோப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களிடையேயான விளையாட்டுப் போட்டி-2015 [Tuesday 2015-07-14 22:00] யாழ். கோப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் சம்பியன் வெற்றிக்கிண்ணப் போட்டி 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை திரு. சயூட்டன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினரும், பாராளுமன்றத் தேர்தலின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தேசிய இளைஞர் சம்மேளன வடபிராந்திய இயக்குநர் திரு. தவேந்திரன், திரு. சமன் ஜயசிங்க (பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம், அச்சுவேலி), திரு. சண்முகவடிவேலு (இளைஞர் உத்தியோகத்தர், யாழ். மாவட்டம்), திரு. விஜிதரன் (உபதலைவர், …
-
- 0 replies
- 652 views
-
-
நாளை பிரசாரத்தை துவங்குகிறார் மகிந்த! - மைத்திரிக்கு பதிலடி கொடுப்பார்.[Thursday 2015-07-16 19:00] நாடாளுமன்ற தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாளை அநுராதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளது. நாளை காலை அநுராதபுரம் ஸ்ரீ மஹாபோதி விஹாரையில் சர்வமத தலைவர்களின் ஆசீர்வாத நிகழ்வு நடைபெறவுள்ளதாக, சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதனையடுத்து பிரமாண்டமாக நடத்தப்படவுள்ள தமது முதலாவது பிரசாரக்கூட்டத்தில், சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் அனைவரும் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ, நாளைய பிரசார கூட்ட…
-
- 0 replies
- 271 views
-
-
ஜனாதிபதி எங்களுடன் தான்! - என்கிறார் ராஜித[Thursday 2015-07-16 19:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தலைமை வகித்தாலும், எங்கள் நிலைப்பாட்டிலேயே அவர் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திபில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், தற்போது நீங்கள் எந்தக் கட்சி உறுப்பினர்?, ஜனாதிபதி மைத்திரியின் ஆசி உங்கள் அணிக்கு உள்ளதா? என கேள்விகளைத் தொடுத்தனர். குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். ‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த நான் தற்போது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னண…
-
- 0 replies
- 381 views
-
-
லண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரின் சிறப்புரை! [Thursday 2015-07-16 19:00] சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் ஆண்டுதோறும் நடத்தும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாயகத்தின் இன்றைய நிலவரம் தொடர்பில் உரையாற்றவிருக்கிறார். இந்நிகழ்ச்சி இம்மாதம் (ஜுலை) 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குலண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் ( Kadwa Patidar Centre,Kenmore Avenue,Harrow, HA3 5BD)நடைபெறவுள்ளது. வரையறுக்கப்பட்ட ஆசனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால் அனுமதிச்சீட்டுக்களை ( தனி நபர் : 10 பவுண்டுகள், சிறுவர்கள…
-
- 0 replies
- 337 views
-
-
வடக்கின் நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை! [Thursday 2015-07-16 19:00] இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம், மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த கரிசனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான சாதகமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் முன்னேற்றமடைந்துள்ளதுடன், புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. சில இணையத்தளங்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர…
-
- 0 replies
- 463 views
-
-
நடராஜா குருபரன்L:- முகநூலில் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விகளை பார்த்த பலர் இதனை விவாதத்திற்காக இணையத்திலும் பிரசுரிக்கச் சொன்னார்கள் அதனால் பிரசுரிக்கிறேன்.. ஆ.ர் “நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும் என்பதனால் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்குமாறு, அன்று தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கி இருந்தது.” ஆகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின், தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இன்று (16.07.15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துகளில் முக்கிய பகுதி... இங்கே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்ப…
-
- 0 replies
- 592 views
-
-
ஜனாதிபதியின் அனுமதியின்றி பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்சவை நியமிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொய்யான கருத்தியலை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பிற்கமைய பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே இருக்கின்றது என்பதை அவர்கள் அறியாதுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். ''அவர்களை முதலில் அரசியலமைப்பை வாசித்துவிட்டு வரச்சொல்லுங்கள். அதுகூட தெரியாதவர்களே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வழிநடத்துகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தின்படி எவ்வாறு பிரதமரை நியமிக்க முடியும். அந்த அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கிறது.'' என்ற அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துளள்ளார். நாடா…
-
- 1 reply
- 407 views
-
-
எமது வேட்பாளர்கள் மீது அதிருப்தி இருக்குமானால் கட்சிக்கு மட்டும் வாக்களியுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4500 வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் ஒரு தமிழரும் நான்கு முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். மாறாக 10 ஆயிரம் வாக்குகளை நாம் இன்னும் பெற்றிருந்தால் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்போம். எனவே தமிழ் மக்கள் இதனை நன்கு சிந்தித்து எதிர்வரும் தேர்தலில் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். கொல்லன் உலை நரசிங்க வைரவர் ஆலயத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர…
-
- 0 replies
- 332 views
-
-
தனுஷின் மாரி திரைப்படத்தின் பதாகைகளில் அதிகளவான சிகரட் பிடிக்கும் காட்சி புகுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் நேற்று வியாழக்கழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பட்டக்காரர்கள் தனுஷின் படத்துக்கு செருப்பு மாலை அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். சமூகத்துக்கான நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர். : http://www.tamilmirror.lk/150344#sthash.alH4gxhN.dpuf
-
- 2 replies
- 1.8k views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பிலான பட்டியல் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி த.தே.கூட்டமைப்பில் சி.க.சிற்றம்பலம் , நாச்சியார் செல்வநாயகம், சொலமன் சிறில், மயில்வாகனம் தேவராஜன், மேரி கமலா குணசீலன், கனகநமநாதன் , சூ.செ. குலநாயகம், அந்தோனிப்பிள்ளை மேரியம்மா, அருணாசலம் குணபாலசிங்கம் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவிக்கு தேசியப் பட்டியலில் ஆசனம் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் எனினும் அவர் மறுத்தமையால் வழங்கப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=11568415…
-
- 0 replies
- 354 views
-
-
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சர்கள் பலத்த பாராட்டுகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்கிழமை நாட்டிற்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மத்தியில் உற்சாகமான மனோநிலை காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது. அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பல அமைச்சர்கள் சிறிசேனவின் உரையை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். பின்னர் அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னரும் மகிந்தராஜபக்சவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தமைக்காக அமைச்சர்கள் ஜனாதிபதியை பாராட்டியுள்ளனர். பின்னர் ஜனாதிபதி பொலனறுவையில் மரணச்சடங்கொன்றில் கலந்துகொள்வதற்காக செல்வற்கு முன்னர் ஸ…
-
- 0 replies
- 382 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் துரோகியே எனவும் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது எனவும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கியது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறினசே இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தற்போது தப்பித்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கியதன் மூலம் துரோகி என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122031/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 286 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செவ்வாய்கிழமை உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை சேர்ந்த மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பிரதியமைச்சர்கள் சுதர்சினிபெர்ணாண்டோ புள்ளே,லசந்த அலகியவண்ண,எரிக் வீரவர்த்தன ஆகியோரே தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122034/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 151 views
-
-
இலங்கைக்கான பிரித்தானியா தூதரகத்தின் அரசியல் செயலாளர் டோம் சோபருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று முல்லைத்தீவில் உள்ள துரைராஜா ரவிகரனின் இல்லத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. ஒரு மணி நேரமாக நடைபெற்ற சந்திப்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான அரசியல் சூழல், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய விரிவான பார்வை, தமிழர் தாயகத்தில் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், தமிழ் இளைஞர்கள் மீது திணிக்கப்படும் புலம்பெயரும் நிர்ப்பந்தம், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மத அடையாளங்கள் திணிக்கும் நடவடிக்கைகள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் பற்றி கலந்…
-
- 0 replies
- 244 views
-
-
வந்துட்டார் சந்திரிகா… அடுத்து என்ன…? July 15, 20159:05 pm முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் கூட்டங்கள் பலவற்றில் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.jvpnews.com/srilanka/116635.html
-
- 1 reply
- 607 views
-