Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கடைசி உறுதிமொழியும் புஸ்வாணமாகிவிட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 100 நாட்கள் வேலைத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆரம்பமானது. அதன் 100 ஆவது நாள் நாளை வியாழக்கிழமையுடன் (23ஆம் திகதி) நிறைவடைகின்றது. இந்த நூறு நாட்களுக்குள் செய்து முடிப்பதாக புதிய அரசாங்கத்தினால் 24 உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அந்த உறுதி மொழிகளில் பல நிறைவேற்றப்படாமைலேயே கிடப்பில் உள்ளன. இந்நிலையில், புதிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டது, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலமாகும். அந்த சட்டமூல…

  2. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அர­சாங்­கத்­தினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­படி தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு தான் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார் . இதே­வேளை நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை வென்று பல வரு­டங்­க­ளாக அர­சியல் செய்து வரும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் ஒரு போதும் மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­ட­து­மில்லை: கொள்­ளை­யிட போவ­து­மில்லை என்றும் அவர் ச…

    • 4 replies
    • 649 views
  3. தமிழரசுக்கட்சியின் செயலாளரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தான் தர்ம சங்கடங்களை எதிர்கொள்வதாக மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார். வன்னியினில் கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினரொருவர் பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களது தற்கொலைகள் தொடர்ந்தும் சர்ச்சைகளினை ஏற்படுத்திவருகின்றது.அதன் தொடர்ச்சியாக மாவை மற்றும் சம்பந்தனின் கொடும்பாவிகள் எரியூட்டப்பட்டுமிருந்தது. இந்நிலையினில் குறித்த உள்ளுராட்சி மன்ற பிரதிநிதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கதான் பணித்திருந்த போதும் அதனை அமுல்படுத்த தமிழரசுக்கட்சியின் செயலாளர் தவறிவிட்டதாக மாவை கவலை வெளியிட்டுள்ளார்.இதன் விளைவாகவே தனது கொடும்பாவி எரிக்கப்பட காரணமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இ…

    • 23 replies
    • 1.5k views
  4. நாடாளுமன்றம் இப்போது கலைக்கப்படாது – மேற்குலக தூதுவர்களிடம் மைத்திரி உறுதி APR 22, 2015by கார்வண்ணன்in செய்திகள் அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னரே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்கு நாட்டுத் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல், அமெரிக்க பதில் தூதுவர் அன்ட்ரூ மான், பிரித்தானிய பிரதித் தூதுவர் லாறா டேவிஸ், ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் மோர்ஹாட் ஆகியோர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன் போது அவர்கள், ஜனநாயகத்தை வலுப்படுத்தும், ஊழல் மோசடிகளை ஒழிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளுக்கு தமது நாடுகள் முழு ஆதரவளிக்கும் …

    • 0 replies
    • 487 views
  5. அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – அமைச்சர் விஜேதாச ராஜபக்ச APR 22, 2015 | 8:06by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும், ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இல்லை என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரின் பணியகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டமை, ஆணைக்குழுவின் கடமைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடாகும். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பதவி வழங்கப்பட்டது ஒரு முறைகேடாகும். அதுபற்றிய மு…

    • 0 replies
    • 506 views
  6. முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்!- மஹிந்த [ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 01:09.30 AM GMT ] ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அராசங்கம் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹேனகம ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தம்சக் விஹாரை மற்றும் கெடுமான சதஹாம் விஹாரை ஆகியவற்றில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற பின் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் நூறு நாள் திட்டத்தில் நாம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்வதனையும், எம்மை பழிவாங்குவதனையும் மட்டுமே செய்கின்றது. நல்லாட்சி என்பது என்ன? நாம் இந்த அரசாங்கத்திற்கு கூறுகின்றோம், பொய்களை நிறுத்திவிட்…

  7. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சகல இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் நாளை வியாழக்கிழமை (23) இரவு 9.00 மணிக்கு சிறப்புரையாற்றவுள்ளார். http://www.tamilmirror.lk/144483#sthash.8Osm0Zxa.dpuf

  8. எனது புகழுக்கும் என் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன புதிய அர­சாங்­கத்தின் சில சக்­திகள் தனது புக­ழுக்கும் நன்­ம­திப்­புக்கும் பங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போரா­டிக்­கொண்­டி­ருப்­ப­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். இந்த சதித்­திட்­டத்தின் ஓர் அங்­க­மா­கவே தானும் தனது சகோ­த­ரரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷவும் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். எமது நாட்­டுக்­காக நான் அனைத்­தையும் தியாகம் செய்தேன். பாது­காப்பு செய­லாளர் என்ற வகி­பா­கத்தை வகித்தேன். இந்­நி­லையில் அர­சாங்­கத்தில் இருக்­கின்ற மிகவும் …

  9. ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் கண்டனப்பேரணியொன்றினை நடத்தியுள்ளனர். மணல் சேவையில் ஈடுபடுவதற்காக மகேஸ்வரி நிதியத்திற்கு செலுத்திய தமது பணத்தை மீள வழங்குமாறு கோரியே யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்க பாரவூர்தி உரிமையாளர்கள் இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர். பல்வேறு வாசகங்களை சுலோக அட்டைகளில் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்ற சங்க உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் தமது கோரிக்கை மனுவை முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளரிடம் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து ஊர்வலமாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு சென்று அங்கு, மாவட்ட அரச அதிபரிடமும் ,வடக்கு மாகாண ஆளுநரிடமும் மனுக்கள் கையளிக்கப்பட்டது. http://www.pat…

    • 0 replies
    • 727 views
  10. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப்பகுதியின் எஞ்சிய பகுதிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கை இடம்பெயர்ந்த மக்களிடையே பொய்க்கத்தொடங்கியுள்ளது.தற்போது விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட, ஏனைய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி மரக்கட்டை, முட்கம்பி வேலிகள் அகற்றப்பட்டு அவ்விடத்தில் கொங்கிறீட் தூண்கள் நாட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்படுவதால் இவ்வாறான சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது நிரந்தர வேலிகள் எனவும் மீதமுள்ள தமது காணிகள் விடுவிக்கப்பட சாத்தியமில்லையெனவும் இடம்பெயர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பகுதியில் 9 கிராமஅலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதிகளாக மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன்போது அன…

    • 0 replies
    • 486 views
  11. நாட்டை பணயக் கைதியாக வைத்திருந்த நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடாத்துங்கள் 19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன்இ அசாத் சாலிஇ விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் கூறியதாவது, …

  12. திருடர்களைப் பாதுகாக்க பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்! - எதிர்க்கட்சியினரிடம் ரணில் கோரிக்கை [Wednesday 2015-04-22 08:00] பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி எம்.பிக்களிடம் நேற்றுக் கோரிக்கை விடுத்தார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி கோஷமிடுவதாகவும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் தொட…

  13. நாட்டைக் காப்பாற்ற மகிந்தவும் மைத்திரியும் ஒன்றிணைய வேண்டும்! - என்கிறார் கோத்தபாய [Wednesday 2015-04-22 08:00] நாட்டை பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கை கோர்த்துக்கொள்ள வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஆறு ஆண்டுகள் பதவி வகிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் அவரது கடமைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும், விரைவில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தி மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இருவரும் இணைந்து மீண்டும் செயற்பாட்டு ரீதியான ஸ்திரம…

  14. வரதராஜப்பெருமாளைக் கைது செய்யக் கோருகிறது சிங்கள அமைப்பு! [Wednesday 2015-04-22 08:00] வட-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளை கைது செய்ய வேண்டுமென ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புத்கல ஜீனவன்ச தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் பிரதான சட்டமான அரசியல் அமைப்பை மீறிச் செயற்பட்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற வரதராஜப்பெருமாளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும். 1978ம் ஆண்டு அரசியல் அமைப்பின் 157ம் இலக்க சரத்தின் அடிப்படையில் தனியொரு இராச்சியத்தை அமைத்தல் அல்லது அதற்கு ஆதரவளித்தல் இராஜதுரோகச் செயலாகும். 1988ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக கடமையாற்றிய வரதராஜப்பெரு…

  15. வட,கிழக்கில் படையினரின் கேந்திர நிலைகள் பறிபோகிறதாம்! - எச்சரிக்கிறார் குணதாச அமரசேகர [Wednesday 2015-04-22 08:00] பலாலி விமான நிலையம் மீது இந்திய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தேசப்பற்று அமைப்புக்களின் கூட்டமைப்பினது அமைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். பொரளை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய அழுத்தம் காரணமாக பலாலி விமான நிலையம் சிவில் விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது.இவ்வாறு செய்வதனால் வடக்கிற்கு ஓர் விமானப்படை விமான நிலையம் இல்லாமல் போய்விடும். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 33000 ஏக்கர் காணியில…

  16. லலித் வீரதுங்கவிடம் விசாரணை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம், நிதி மோசடி விசாரணை பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட நிதிக் கொடுக்கல் , வாங்கல் தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://onlineuthayan.com/News_More.php?id=794183991422290104

  17. மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம் மகேஸ்வரி நிதியத்தில் வைப்பிட்ட பணத்தை மீள வழங்கக் கோரிஇ யாழ் மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினால் இன்று யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை முன்றலில் இருந்து அமைதி பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு வாசகங்களை சுலோக அட்டைகளில் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்ற சங்க உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் தமது கோரிக்கை மனுவை முதலமைச்சரின் செயலாளர் மன்மதராசாவிடம் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு சென்று அங்கு, மாவட்ட அரச அதிபரிடம் மனுவைக் கையளித்தனர். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் சென்று அவரிடமும் மனு கையளிக்கப்பட்டது. மேலும் …

  18. தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 படகுகளை மீட்டுச்செல்ல வருகிறது இந்தியக் குழு இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகளை மீட்டுச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 143 பேர் இன்று இலங்கை வருகின்றனர். இலங்கையில தடுத்துவைக்கப்பட்டிருந்த 87 படகுகளையும் விடுவிக்க கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. இதன்படி முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 33 படகுகள் தமிழக தரப்பினரால் மீட்டுச் செல்லப்பட்டன. மேலும் இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக யாழ்ப்பாணத்திலுள்ள 30 படகுகள் மற்றும் மன்னாரிலுள்ள ஒரு படகு என 31 படகுகளை மீட்டுச் செல்வதற்க…

  19. நிதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பசில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்று முன்னர் நிதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சமூகமளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சாட்சியம் அளிக்கும் பொருட்டே அவர் அங்கு சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தார். மருத்துவ சிகிச்சைகளை பெற்று கொள்வதற்காக தாம் அமெரிக்கா சென்றிருந்ததாக அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார். http://onlineuthayan.com/News_More.php?id=225233991322679333

  20. அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர் வடமராட்சி கிழக்கு மக்கள் இந்திய ரோலர்களின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துவதோடு கடற்றொழில் உபகரணங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கக் கோருதல் போன்ற 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று முற்பகல் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக வடமராட்சி கிழக்கு மக்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்று வருகின்றது. நாட்டில் எமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் காபெற், கொங்றீற் வீதிகள் போடப்பட்டு அதி சொகுசு வாகனங்கள் பயணிக்கின்ற நிலையில் போராலும், சுனாமியாலும் முழுமையாக பாதிக்கப்பட்டு உயிர்சொத்துக்களை இழந்த நிலையில் 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யபட்ட எமது வடமராட்சி கிழ…

  21. விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை: - தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு! [Monday 2015-04-20 20:00] விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் கூறும்போது, ''எங்களுக்கு விடுதலைப்புலிகளுடனோ, அவர்களது கொள்கைகளுடனோ எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். ஆனால், நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதும் இல்லை, ஊக்குவிப்பதும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என்ற வருத்தம் யாருக்கும் தேவையி…

  22. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து சொன்னாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யமாட்டோம் என மாவை சேனாதிராஜா உறுதிபட கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தமிழரசுக் கட்சியின் ஏகபோகம் அதிகரித்த நிலையில், ஏனைய கட்சிகள் புறக்கணிக்கப்பட தொடங்கியதும், கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. எனினும், பல வருடங்களாக இந்த கோரிக்கையை தமிழரசுக்கட்சி கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த நிலையில், இலங்கை வடக்கு முதல்வர் விக்னேஷ்வரனின் திடீர் எழுச்சியின் பின்னரான சூழலில், தமிழரசுக் கட்சியின் இருப்பிற்கு ஆபத்த நிகழலாமென்ற பரவலான கருத்துக்கள் எழத் தொடங்கியது. இந்தநிலையில் சுவிஸிலுள்ள தமிழர் அமைப்பொன்றின் ஊடாக தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சி…

  23. சித்திரைப் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மகிடிக்கூத்து, புலிக்கூத்து நிகழ்வுகள் ஏறாவூர்பற்று சித்தாண்டி பிரதேச மக்களினால் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. சித்தாண்டி உதயன்மூலை கிராம அபிவிருத்திச்சங்க வளாகத்தில் இவ் மகிடிக்கூத்து நடைபெற்றது. சித்திரை வருட பிறப்பு என்றாலே ஊரெங்கும் கிராமிய விளையாட்டுக்கள், புலிக்கூத்து மற்றும் மகிடிக்கூத்து என்பன இடம்பெறும். அந்த வகையில் பாரம்பரிய முறையாகவும் ஒரு தெய்வீகப் போக்கையும் கொண்ட மகிடிக்கூத்து மற்றும் புலிக்கூத்து என்பனவும் இன்றை வரைக்கும் கிராமங்கள் தோறும் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் அதுவே தமிழர்களின் பாராம்பரிய புதுவருட பொழுதுபோக்கு நிகழ்வாகவும் அமைந்திருந்தமையும் சுட…

    • 0 replies
    • 349 views
  24. யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரின் இரத்தமாதிரிகளை எடுத்து டீஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷ பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேகநபரான முனசிங்க உட்பட கடற்படை அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். ரவிராஜ் எம்.பி.ய…

    • 0 replies
    • 1.5k views
  25. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட, ஏனைய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி மரக்கட்டை, முட்கம்பி வேலிகளை அமைத்திருந்தனர். தற்போது அவ்வேலிகள் அகற்றப்பட்டு அவ்விடத்தில் கொங்கிறீட் தூண்கள் நாட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்படுவதால் இது நிரந்தர வேலிகளா என்றும் மீதமுள்ள தமது காணிகள் விடுவிக்கப்படாத நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பகுதியில் 9 கிராமஅலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதிகளாக மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன்போது அனுமதிக்கப்படாத பகுதிகள், மரக்கட்டை வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது மக்கள், விடுவிக்கபட்ட தம…

    • 0 replies
    • 335 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.