Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்தாண்டு வாழ்த்துக் கூறாத தொழிற்கட்சித் தலைவருக்கு புலம்பெயர் சிங்களவர்கள் கண்டனம் APR 15, 2015 | 8:04by பிரித்தானியாச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த, பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் எட்வேர்ட் மிலிபான்டுக்கு, பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சித் தலைவர் எட்வேர்ட் மிலிபான்ட் வாழ்த்துச் செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதில், பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுடன்,தொழிற்கட்சி எப்போதுமே, நட்பாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த நட்புத் தொடரும் என்றும், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்த…

    • 0 replies
    • 631 views
  2. "கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக - கௌரவமாக - நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும் என்று சித்திரைப் புத்தாண்டில் நாம் பிரார்த்திக்கின்றோம். அதுவரை நாம் ஓயாது போராடுவோம் என்றும் சபதம் எடுத்துக்கொள்கின்றோம்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் ஆட்சி மாற்றத்தையும் அரசியல் தீர்வையும் எதிர்பார்த்தோம். நாம் எதிர்பார்த்த மாதிரி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் நீதியைக் கட்டியெழ…

    • 7 replies
    • 458 views
  3. இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றில் காணப்படும் சித்திரவதைக கூடங்கள் கடந்த காலங்களில் இருந்து வந்த சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மட்டும் படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவல்கள் இல்லை... குறிப்பாக மஹிந்த ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இவ்வாறு காணாமல் போயிருந்த போதிலும் இன்று வரை அவர்கள் பற்றி தகவல்களும் மர்மமாகவே உள்ளது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டிருந்ததை மூத்த படை அதிகாரியொருவர் உறுதிப்படுத…

    • 3 replies
    • 843 views
  4. தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம்! [Wednesday 2015-04-15 10:00] தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமையில் தேர்தல் நடத்தப்படுவதற்கு சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. தொகுதிவாரி முறைமையில் 165 உறுப்பினர்களையும், விகிதாசார அடிப்படையில் 85 உறுப்பினர்களையும் தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 160 தேர்தல் தொகுதியில் 165 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் எ…

  5. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது உயர்மட்ட கொள்கைத் தோல்வி! - இந்திய அமைச்சர் வி.கே.சிங் [Wednesday 2015-04-15 08:00] 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினரை இலங்கைக்கு அனுப்ப எடுக்கப்பட்ட தீர்மானம் உயர்மட்டத்தின் ஒரு கொள்கை தோல்வி என்று இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவ தளபதியான வி கே சிங், புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே இதனை தெரிவித்துள்ளார். அமைதி காப்பதற்காக சென்ற இந்திய இராணுவம் இறுதியில் யுத்தத்தில் ஈடுபடவேண்டியிருந்தது.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைது செய்வதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும் சில கட்டளைகள் காரணமாக அவர் பாதுகாப்பாக செல்ல முடிந்தது…

  6. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஜனாதிபதி மைத்திரிக்கு சிறிதரன் எம்.பி கடிதம். [Wednesday 2015-04-15 08:00] ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த 7 ஆம் திகதி மூன்று ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கௌரவ.மைதிரிபால சிறிசேன, அதிமேதகு ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே! …

  7. மகிந்தவை பிரதமராக்கியே தீருவேன்! - விமல் வீரவன்சவின் சபதம். [Wednesday 2015-04-15 08:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொதுத்தேர்தலில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். போலியான வாக்குறுதிகளை வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை தம்வசப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்தக் குற்றச்சாட்டை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற செவ்வியின் போது சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ச, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமையை…

  8. முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம். இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை 862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 488 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0…

    • 0 replies
    • 393 views
  9. எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அந்­தக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் வித­மா­கவே கட்­சிக்குள் இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய வரு­கி­றது. இது தொடர்­பாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரிய வரு­வ­தா­வது, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு வாசு, தினேஷ், விமல் மற்றும் கம்­மன்­பில, பிர­சன்ன ரண­துங்க உட்­ப…

    • 0 replies
    • 394 views
  10. இலங்கை வரலாற்றில் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை இன்று காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது. கலாசார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்சி திணைக்கள வழிகாட்டலில் பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினனருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை வ…

    • 0 replies
    • 1.7k views
  11. கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 5 பிள்ளைகளின் தாயாரான திருமதி இந்திரா யோகேந்திரன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். - http://www.malarum.com/article/tam/2015/04/15/9612/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%A…

    • 0 replies
    • 249 views
  12. இந்தியப்படைகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது கொள்கை ரீதியான தவறு – ஜெனரல் வி.கே.சிங் APR 15, 2015 | 2:44by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவு, கொள்கை ரீதியான ஒரு உயர்மட்டத் தவறு என்று, இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுக்குச் செல்லும் முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும், போரிட்டுக் கொண்டிருந்த போது, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமையவே, அந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் நிலைமை மோசமாக இருந்தது. எம்மால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே நாம் போரிட வேண்டியிருந்தது. இந்திய…

    • 1 reply
    • 504 views
  13. கண்­ணி­வெடி அகற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கும் மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்­சுக்­கு­மி­டை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் இயங்­கி­வந்த கண்­ணி­வெடி அகற்றும் நிறு­வ­னங்கள் தற்­போது புதிய அமைச்­ச­ர­வையின் விசேட தீர்­மா­னத்தின் அமை­வாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சின் கீழ் இயங்­கு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மை­வாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் திரு­மதி ரஞ்­ஜினி நட­ரா­ஜ­பிள்ளை “தி கலோ ரஸ்ட்” தலைவர் டமியன் ஒப்ரின் மற்றும் ப…

    • 0 replies
    • 407 views
  14. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் அவசியம் என பிரித்தானிய தொழில் கட்சியின் தலைவர் இட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதாபிமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முழு அளவில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தொழில…

    • 0 replies
    • 320 views
  15. தேர்தல் முறை மாற்றம் குறித்து இரண்டு யோசனைகள்- அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் APR 15, 2015 | 3:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. புதிய தேர்தல் முறை தொடர்பாக எல்லா பிரதான அரசியல் கட்சிகளினதும் ஒப்புதலைப் பெறும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. தேர்தல் முறை குறித்த இரண்டு யோசனைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த இரண்டு யோசனைகளையுமே ஐதேக ஏற்றுக் கொள்கிறது, முதலாவது யோசனையின…

    • 0 replies
    • 428 views
  16. 9 மாதங்களில் மத்தல விமான நிலையம் ஊடாக 30 ஆயிரம் பேரே பயணம் APR 14, 2015 | 11:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையத்தின் ஊடாக, கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையான 9 மாதங்களில், சுமார் 30 ஆயிரம் பயணிகள் மாத்திரமே பயணம் மேற்கொண்டுள்ளனர். பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு ஜனவரி தொடக்கம், செப்ரெம்பர் வரையான காலப் பகுதியில், 13,371 பயணிகள் மாத்திரமே மத்தல விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். இந்தக் காலப்பகுதியில், 16,712 பயணிகள், மத்தல விமான நிலையம் வழியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால் இதே காலப்பகுதியில் சிறிலங்காவின் …

  17. சென்னை – கொழும்பு இடையே நான்காவது விமானசேவையை தொடங்குகிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ் APR 15, 2015 | 2:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான விமான சேவைகளை நாளை முதல் அதிகரிக்கவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் சென்னைக்கும் இடையில் நாளொன்றுக்கு நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன. இதையடுத்து, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மிகவேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரான சென்னை, தமக்கு முக்கியமான ஒரு சந்தை என்று சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் சமிந்த பெரேரா தெரிவித்துள்ளார். புதிய விமான சேவையின் மூலம் இரு நாடுக…

    • 0 replies
    • 462 views
  18. வடக்கில் படுமோசமான நிலையில் ஊடக சுதந்திரம் – அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு APR 14, 2015 | 1:13by கி.தவசீலன்in செய்திகள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு, சுதந்திர ஊடக இயக்கமும், அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளன. தமிழ் ஊடகவியலாளர்களை, சிறிலங்கா காவல்துறை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டி, பிரசெல்சை தளமாக கொண்ட, அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவி ஒருவர் நெல்லியடி காவல்நிலையத்தில் தாக்கப்பட்டதாக, வெளியான செய்தி தொடர்பாக, உதயன் நாளிதழின் சுதந்திர ஊடகவியலாளான லோகதயாளன், கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்ப…

  19. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் நெஞ்சுவி காரணமாக கொழும்பிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இது பாரதூரமான ஒன்றல்ல என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளையில், அஸ்கிரிய பீடாதிபதியின் மரணத்தையடுத்து இவ்வருட புத்தாண்டு நிகழ்வுகள் எதிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.malarum.com/article/tam/2015/04/14/9604/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-.html#stha…

    • 7 replies
    • 1k views
  20. தமிழ்மக்களின் உளவியலைப் பாதித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பு APR 14, 2015by நித்தியபாரதிin கட்டுரைகள் தமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உளவியலை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. இராணுவத்தால் இவை நிர்மூலமாக்கப்பட்டமையால் தமிழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சிலோன் ருடே’ நாளிதழில், ‘சுலோச்சனா ராமையா மோகன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. ‘எனது சகோதரன் இறந்துவிட்டார். ஆனால் புதைகுழியை அழிப்பதன் மூலம் அவருடைய நினைவு…

    • 0 replies
    • 2.2k views
  21. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “பிரிட்டனிலும், இலங்கையிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் இன்று புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மில்லியன் கணக்கான மக்கள் இன்று தமது குடும்பத்தினர், நண்பர்கள், அயலவர்களுடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். பிரித்தானியாவில் தமிழ், சிங்கள சமூகங்களின் அற்புதமான பங்களிப்புகளையும் இந்த தருணத்தில்…

    • 0 replies
    • 412 views
  22. மத்திய அரசின் சுகாதார அமைச்சின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினரால் கடந்த மாதம் வலிகாமம் பகுதிகளில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் உள்ள 30 கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிறீஸ் என்பவற்றிற்காகப் பரிசோதிக்கப்ட்டது. இப்பரிசோதனைகள் அனைத்தும் இலங்கையிலேயே நம்பகத் தன்மையானதும் சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதுமான அரசாங்க பகுப்பாய்வு நிறுவனத்தில் நடாத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சி;ன் உயர் அதிகாரியினால் சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பரிசோதிக்கப்பட்ட 30 கிணறுகளிலுமே எண்ணெய் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 3 கிணறுகளில் அதிக செறிவில் காணப்படுகின்றது. மேலும் அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இக் கிணறுகள் தொடர்பாக …

    • 0 replies
    • 631 views
  23. இறுதியுத்தம் முடிந்தும் ஆயிரம் அடிக்குமேல் பறப்பில் இந்திய "ரோ" விமானங்கள்! வியப்பூட்டும் உண்மைகள் [ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 02:26.35 AM GMT ] இலங்கை தொடர்பான சகல ஆதாரங்களும் ஐ.நா அதிகாரிகளிடம் உள்ளதாகவும் அதை விட முக்கிய ஆதாரமொன்று இந்தியவின் உளவு நிறுவனமான ரோவிடம் இருப்பதாக சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் இலங்கையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள ஐ.நா அதிகாரிகளிடம் இலங்கை தொடர்பான ஆதாரம் எப்படி கிடைத்தது.? மேலும் இந்திய உளவு நிறுவனம் ரோ முக்கிய தகவல்களை திரட்டியது எப்போது..? போன்று வெளிவராத பல உண்மைளை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் வெளிப்படுத்துகிறார் எம்.எம்.நிலாம்டீன். …

    • 3 replies
    • 1.2k views
  24. யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. ஏனைய ஏழு கிராமங்களிலும் 423 ஏக்கர் நிலப்பரப்பையே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்து வெளி இடங்களில் வாழ்ந்தவர்கள் பெரும் ஆவலோடு தமது காணிகளைப் பார்வையிடச் சென்றபோதும் சில இடங்களுக்கு இராணுவத்தினர் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர் மக்கள். இதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) …

    • 12 replies
    • 3.1k views
  25. 'வடக்கின் வசந்தம்' என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மாகாணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இது ஒரு அரசியல் செயற்பாடு. இதனால் சென்ற வருடம் வரை 'வசந்தம்' என்ற சொல் ஆக்கிரமிப்பை சுட்டும் சொல்லாக இருந்தது. அப்படியான வசந்தம் போய்விட்டது. இனி வரப்போவதானது புது வசந்தம் என்று கூறி அதை மலரச் செய்யும் விதத்தில் இந்தியத் துணைத் தூதரகமும் எமது மாகாண சபையின் கல்வி அமைச்சும் இந்த நிகழ்வை ஆக்கித் தந்துள்ளமை சாலப் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தியத் துணைத் தூதரகமும் வட மாகாண கல்வி அமைச்சும் இணைந்து நெல்லியடி மத்திய கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடத்திய 'மலரட்டும் புதுவசந்தம்' நடன நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

    • 0 replies
    • 507 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.