ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இலங்கையில் சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் பார்த்தவாறும் திட்டமிட்டபடியும் இலங்கை சம்மந்தப்பட்ட ONHRC விசாரணை அறிக்கை சமர்பிப்பதை UNHRC வரும் புரட்டாதி 2015 ல் சமர்பிப்பதற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எமது தாயகத்தில் வாழுகின்ற எமது சகோதர சகோதரிகள் கோபமும் விரக்தியும் அடைந்துள்ள நிலையில் இவ் முடிவை எதிர்த்து இந்த அறிக்கை முற்கூட்டியே வரவிருந்த பங்குனி 2015 ல் வெளியிடுமாறு UNHRC க்கு வேண்டு கோள் விடுகின்றனர். இவர்களுடன் தமிழ் இளைய சமுதாயமாகிய நாமும் இணைந்து நிற்கின்றோம். இது போன்ற முடிவுகள் எமது தாயகமாகிய ஈழத்துக்கு ஆச்சர்யத்தை கொடுக்க போவதில்லை என்றாலும், தாயகத்திலே படுகின்ற எமது உறவுகளின் அவலம் அரசியலாக்கப்பட்டுவிட்டதை நினைக்கும் போது தாயகத்…
-
- 0 replies
- 374 views
-
-
கிளிநொச்சி குழு மோதலில் ஒருவர் படுகாயம்! [Monday 2015-02-23 19:00] கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராம இளைஞர்களிற்கு இடையிலேயே இன்று காலை 9 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் ஒருவர் மீது ஆயுதம் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் படுகாயமடைந்த அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற…
-
- 0 replies
- 356 views
-
-
நாளைய பேரணியில் அணிதிரளுங்கள்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு. [Monday 2015-02-23 19:00] ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரி பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளவுள்ள மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அறிவிப்புத் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் நீர்வேலியில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது . அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு ஐ.நா விசாரணையை காலதாமதப்படுத்து…
-
- 0 replies
- 301 views
-
-
சிறிலங்காவினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படும் உள்நாட்டு விசாரணைகள் எந்த விதத்திலும் சர்வதேச விசாரணைகளை பாதிக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணையினால் சர்வதேச விசாரணைகளோ, அதன் அறிக்கையை இடைநிறுத்தப்படாது.சிறிலங்கா அரசாங்கத்துக்கு வாய்ப்பு ஒன்றை வழங்கும் வகையில் ஒரேஒரு முறை மாத்திரம் இந்த அறிக்கை முன்வைக்கப்படும் காலம் பிற்போடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். - See more at: http://www.canadamirror.com/canada/38314.html#sthash.z1yeGCpy.dpuf
-
- 5 replies
- 662 views
-
-
இனவாதத்தைப் பரப்புகிறார் மகிந்த! - ரணில் குற்றச்சாட்டு [Monday 2015-02-23 19:00] மகிந்த ராஜபக்ச தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக இனவாதத்தை பரப்பி வருவதாகவும், அதற்கு தாம் இடமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. குருணாகலில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இனவாதத்தை கொண்டு வர முயற்சித்தால், அதற்கும் எங்களிடம் பதில் இருக்கின்றது. சில சிங்கள பத்திரிகைகள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்பி வருகின்றன. இனவாதத்தை பரப்பும் அந்த பத்திரிகைகளுக்கு எதிராக மாபெரும் கூட்டத்தை கொழும்பில் நடத்தி வீதியில் இறங்குவோம். மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த காலத்தில் ஆதரவாக செயற்பட…
-
- 0 replies
- 309 views
-
-
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நாளை காலை துவங்கும் பேரணி! - ஒழுங்குகள் அறிவிப்பு. [Monday 2015-02-23 19:00] ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிட வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள பேரணிக்கான ஒழுங்குகள் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. 1. இப்பேரணி காலை 10:00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் இருந்து ஆரம்பமாகும். 2.சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை இவ்வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் காலை 08:30 மணி முதல் வைக்கப்பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு பொது அமைப்பின் சார்பாகவும் ஒவ்வொருவர் ஒப்பமிடலாம். உங்களிடம் இறப்பர் முத்திரை இருந்தால் கொண்டு …
-
- 0 replies
- 294 views
-
-
புலம்பெயர் “புலி வால்கள்” களினால் எங்களுடைய மக்களுக்கு ஒரு காலமும் விடிவு வராது- சுமந்திரன் வெளிநாடுகளில் உள்ள “புலி வால்” களினாலோ அல்லது அவர்கள் காட்டும் வழியில் இங்கே (இலங்கையில்) இருந்து வாலாட்டுபவர்களினாலோ எங்களுடைய மக்களுக்கு எந்தக்காலத்திலும் விடிவு வராது என சுமந்திரன் கடுமையாக புலம்பெயர் புலிவால்களை சாடியுள்ளர். “புலி வால்”களுக்கு சுமந்திரன் கூறிய இந்தக் கருத்து புரியுமே தெரியாது?? புலிகளையும், புலம்பெயர் புலி வால்களையும் சர்வதேச சமுதாயம் இன்றுவரை ஒதுக்கி தான் வைத்துள்ளது. 30வருடத்துக்கு மேலாக புலம்பெயர் தேசத்திலிருந்து “புலி வால்கள்” வாலாட்டிதான் பார்த்தது. ஆனால்.. இந்த வால்களை எந்த நாடுமே மதிக்கவுமில்லை, இவர்களின் போராட்டத்தையும் அங்கீகரிக்கவுமில்ல…
-
- 40 replies
- 3.2k views
- 1 follower
-
-
விஸ்வமடுவில் கிடந்த 35 ஆயிரம் சடலங்கள் – மன்னார் ஆயர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் FEB 23, 2015 | 0:21by புதினப்பணிமனைin செய்திகள் போரின் இறுதிக்கட்டத்தில், விஸ்வமடுவுக்கு அருகில் 30 ஆயிரம் தொடக்கம், 35 ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம், இரண்டு வாரங்களுக்கு முன்னரே எனக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. போரின் இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானதே. போரின் இறுதி எட்டுமாத காலத்தில் 1,46,679 மக்களுக்கு எ…
-
- 4 replies
- 804 views
-
-
இனவாதத்தை இல்லாதொழிக்கும் பயணத்தில் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இரண்டு குழுக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்றே வடக்கு மாகாணசபை முதல்வரின் இனவாத கருத்தெனவும் , அதற்கான பதிலை கன்னத்தில் அறைந்தால் போல சர்வதேச சமூகம் வழங்கியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதார். இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் அச்சு ஊடகங்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பிரதமர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சில அச்சு ஊடகங்கள் அதைப் பிரிக்கின்றார்கள், இதைக் கொடுக்க போ…
-
- 0 replies
- 756 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரனின் கொடும்பாவி, வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக சனிக்கிழமை(21) எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். காணாமற் போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் சமர்ப்பிக்க கோரியும் சனிக்கிழமை (21) யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டமை தொடர்பில் சுரேஸ்; எம்.பி.யிடம் வினா…
-
- 0 replies
- 781 views
-
-
யாழ்.பல்கலைகழக சமூகத்தின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமைப்பு, நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நடதத் தீர்மானித்துள்ளது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பிலேயே மேற்படி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர் எழில்றாஜன் மேலும் தெரிவித்தவை வருமாறு. ஐ.நா. மனிதவுரிமைகள் கவுன்ஸிலின் சர்வதேச விசாரணை அறிக்கையை வெளிடக் கோரியும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை நிராகரித்தும் நாளை செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்தவு…
-
- 0 replies
- 308 views
-
-
இனவாதத்தை இல்லாதொழிக்கும் பயணத்தில் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இரண்டு குழுக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்றே வடக்கு மாகாணசபை முதல்வரின் இனவாத கருத்தெனவும் , அதற்கான பதிலை கன்னத்தில் அறைந்தால் போல சர்வதேச சமூகம் வழங்கியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதார். இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் அச்சு ஊடகங்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பிரதமர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சில அச்சு ஊடகங்கள் அதைப் பிரிக்கின்றார்கள், இதைக் கொடுக்க போ…
-
- 0 replies
- 453 views
-
-
Kelvikkenna Bathil Special : Exclusive Interview with S. Shritharan (21/2/15) - Thanthi TV கேள்விக்கென்ன பதில் விஷேட நேர்காணல் :- திரு சிறிதரன் அவர்கள் https://www.youtube.com/watch?v=glz0G8aJQNE#t=87
-
- 0 replies
- 437 views
-
-
சிறிலங்கா அதிபர் முன் உள்ள சவால்கள் – அனைத்துலக ஊடகம் FEB 23, 2015 | 4:45by நித்தியபாரதிin கட்டுரைகள் ராஜபக்சக்களால் அனுமதிக்கப்பட்ட சீனாவை சிறிலங்கா தனது நாட்டிலிருந்து வெளியேற்றினால் இந்தியா மகிழ்ச்சியடைந்திருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இந்த விடயத்தில் சிறிலங்காவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. இவ்வாறு economist இதழில், வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் இந்தியாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்ட நிலையில், அவர் தனது முதலாவது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை பயணிகள் விமானம் ஒன்றில் மேற்கொண்டதானது இலங்கையர்களை வியப்பில் ஆழ…
-
- 0 replies
- 281 views
-
-
விமல் வீரவன்ஸவின் மனைவி கைது! தேசியசுந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸவின் மனைவி சஷி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய்யான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றார் என இவர் மீது குற்றஞ்சாட்டிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - http://www.malarum.com/article/tam/2015/02/22/8758/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-.html#sthash.4ae9U…
-
- 3 replies
- 713 views
-
-
அரச புலனாய்வுச் சேவையை விஞ்சியுள்ள சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவு FEB 23, 2015 | 1:45by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் பிரதான புலனாய்வு அமைப்பான அரச புலனாய்வுச் சேவையை மிஞ்சி, இராணுவப் புலனாய்வுப் பிரிவு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், அண்மைய இராணுவக் கட்டமைப்பு மாற்றங்களின் போது, இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் சிறிலங்காவின் இராணுவக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் மட்டத்தில் மாற்றங்கள் ஏதும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பற்றாலியன்களின் எண்ணிக்கை, ஒன்றில் …
-
- 0 replies
- 323 views
-
-
மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டிருந்த அவுஸ்ரேலிய அரசு மீது ரணில் கடும் குற்றச்சாட்டு FEB 23, 2015 | 1:05by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட் கொண்டிருந்த நெருக்கமான உறவு, இலங்கையர்களுக்கு ஒரு மர்மமாகவே இருந்தது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தி ஒஸ்ரேலியன் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். “அவுஸ்ரேலியாவின் புதிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டட்டனை முன்னைய அரசாங்கம் வரவேற்க வாய்ப்பில்லை. தஞ்சம் கோரி வருவோரின் படகுகளைத் தடுப்பதற்கு ராஜபக்ச அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான விலையாக, சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறி…
-
- 0 replies
- 324 views
-
-
சர்வதேச விசாரணையை பிற்போடப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கான ஒரு காத்திரமான நடவடிக்கையென தான் நம்பவில்லை. சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப…
-
- 0 replies
- 288 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வில் அணி வகுப்பு மரியாதையின் போது ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குண்டு துளைக்காத விசேட மேலாடையை அணிந்திருந்தாகக் கூறப்படுகிறது. http://www.tamil.srilankamirror.com/news/item/1728-2015-02-23-01-02-24
-
- 0 replies
- 332 views
-
-
ஐநா தீர்மானத்தை எரித்தவர்கள் எங்களுடைய மக்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை - சுமந்திரன் காணொளி நன்றி : கயீபன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116858/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 439 views
-
-
சிங்கள ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சில உள்நாட்டு ஊடகங்கள் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்தி அமைப்புக்களும் இந்த சந்திப்பின் போது அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் இடம்பெறும் என்ற அர்த்தத்தில் சில சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்த சில பத்திரிகை நிறுவன உரிமையாளர்கள் புதிய அர…
-
- 0 replies
- 287 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் காலத்தை கடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். சிங்களப் பெரும்பான்மை மக்களை கோப்படுத்த ரணில் விக்ரமசிங்க விரும்ப மாட்டார் எனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் அவர் இவ்வாறு நடந்து கொள்கின்றார் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் பிரதமர் காலத்தை கடத்த விரும்புகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களிலும் இவ்வாறான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சரியான எண்ணிக்கை பற்றிய விபரங்களை வெளியிட முடியாத…
-
- 0 replies
- 292 views
-
-
சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கான ஒரு காத்திரமான நடவடிக்கையென தான் நம்பவில்லை. சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்ப…
-
- 1 reply
- 305 views
-
-
ஜெனீவா அறிக்கை விவகாரம் .. ஜெனீவா அறிக்கை பல ஆயிரக்கனைகானோரின் படுகொலை மறும் காயப்படுத்தல் தொடர்பான வழக்கு . படுகொலையை மனிக்கவும் படுகொலைகளை நேரில் பார்த்தவர்களின் வாக்கு மூலங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல், அந்த கொலைகளின் பொழுது காயப்பட்டவர்களின் சாட்சியங்களின் வாக்கு மூலங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல் , கொலையின் பொழுது எற்பட்ட பொருட்சேதங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல் வழக்கு நடத்த வேண்டும் என்று கோருபவன் முழு முட்டாளாக அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக்கி அரசியல் செய்யும் நபராக அல்லது விபரம் அறியாத நபராக மட்டுமே இருக்க முடியும் . மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக்கி அரசியல் செய்வது தமிழ் அரசியல்வாதிகளின் வழக்கமாக இருந்ததாலேயே …
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, டில்லியில் வைத்து முக்கிய போர்க்குற்றவாளிகளில் ஒருவரான இலங்கை இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியை சந்தித்துப் பேசியுள்ளார். அண்மையில் இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டில்லியில் உள்ள ஐரிசி மௌரியா செரட்டன் விடுதியில் தங்கியிருந்தார். எதிர்பாராதவிதமாக, அங்கு வந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். முன்னர், ஐ.நாவுக்கான துணைத் தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தற்போது புதுடில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்கை நெறியை மேற்கொண்டு வருகிறார். போரின் இ…
-
- 0 replies
- 339 views
-