ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
நாவற்குழி பாலத்துக்கு அருகிலுள்ள கடல்நீரேரியில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.அரியாலை பகுதியை சேர்ந்த வி.விஜேந்திரராஜ் (வயது 23) என்பவரே உயிரிழந்தவராவார். நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இவர், நீர்த்தடுப்பு அணையின் மீது ஏறி நின்று டைவ் அடித்து பாய்ந்த போது, நீருக்கடியிலிருந்த சேற்றுக்குள் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://seithy.com/breifNews.php?newsID=124866&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 627 views
-
-
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் முன்னரே பல தரப்புகளாலும் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையிலும் முன்னாள் ராஜபக்ஷ தன்னிச்சையாக பெரும் செலவில் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.malarum.com/article/tam/2015/01/16/8124/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%…
-
- 47 replies
- 3.1k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறி தேர்தலை முன்கூட்டியே நடத்த வைத்தது தானே என்றும், அப்படி தேர்தல் நடக்காமல் இருந்திருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார் எனவும், மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர், தேர்தல் ஆணையாளரையும் பொலிஸ் மா அதிபரையும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பற்றப்பட்டது என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். நான் இல்லாவிட்டால் அவர்களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா? தேர்தல் 2017ம் ஆண்டே நடைபெறவிருந்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை நடத்த …
-
- 0 replies
- 382 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் நேற்று வெளியிட்ட செய்தியை பிரதமர் ரணில் மறுத்துள்ளார். 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவிருப்பதாக கூறியதை இந்த இணையத்தளம் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா விசாரணையை நடத்துவதற்காக நிபுணர் குழு ஒன்று நியமித்து விசாரணை நடாத்தி வருகின்றது. இந்தக்குழுவுடன் அரசு இணைந்து செயல்படுவதோடு, குற்றத்துக்கான தண்டனையை உள்நாட்டு சட்டதிட்டத்தின்படியே அணுகப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=124870&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 942 views
-
-
கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவிக்காக இழுபறி! - கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இன்று இறுதி முடிவு [sunday 2015-01-18 09:00] கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது சம்பந்தமான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் மட்டக்குழுவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக்குழுவும் இன்று கூடவுள்ளன. கொழும்பில் கூட்டப்படவுள்ள இரு கட்சிக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு காணப்படவில்லையாயின் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென இரு கட்சிகளின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர்கள் தெரிவித்தார்கள். அண்மையில் ஏற…
-
- 13 replies
- 600 views
-
-
கிளிநொச்சியில் இருந்து இராணுவத்திற்கும் ஈபிடிபிக்கும் நெருக்கமாக கடந்த காலத்தில் இயங்கிய சில ஊடகவியளாலரகளால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். சின்னராசா சிவேந்திரன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சிப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிவதுடன் சுயாதீனப் பத்திரிகையாளராகவும் இவர் இயங்கி வருகின்றனர். தன்னைப் பயமுறுத்திய குறித்த ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் இராணுவத்திற்கு நெருக்கமாக செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.. அவர்கள் தன்னை அவதூறாக பேசியதாகவும் தனக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com…
-
- 0 replies
- 483 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட 68,000 சுவர்க்கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெய்யந்துடுவ, மாபிம பிரதேசத்திலிருந்த களஞ்சியசாலையொன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்டிருந்த ஒருதொகை சுவரொட்டிகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மஹர நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை விறாந்தின் அடிப்படையிலேயே அந்த களஞ்சியசாலை, நேற்று …
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவிக்கு வழங்கிய பேட்டியிலேயே பிரதமர் ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பின்வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயற்பட்டார். அவரின் காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாங்கள் மறு ஆய்வு செய்ய உள்ளோம். மேலும், …
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் என்று கூறப்பட்ட குமரன் பத்மநாதன் (கே.பி)க்கு எதிராக ஜே.வி.பி வழக்குத்தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=124838&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 350 views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் முதன் முதலாக நாளை திங்கட்கிழமை (ஜனவரி 19) பாராளுமன்றம் கூடவுள்ளது. பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது தேசிய அரசாங்கம் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப…
-
- 0 replies
- 340 views
-
-
ராஜபக்ச மீதான... ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு, ஒத்துழைப்பு: ரணில் விக்ரமசிங்க பரபரப்பு பேட்டி. கொழும்பு: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. அவருடன் சேர்த்து 27 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் இணை அமைச்சர்களாகவும், 8 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்நிலையில் இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி சேனல், என்டிடிவிக்கு, ரனில் விக்ரமசிங…
-
- 3 replies
- 921 views
-
-
ராஜபக்சவின் விளம்பர செலவு, 2 பில்லியன் ரூபாய்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மகிந்த ராஜபக்ச தேர்தல் விளம்பரங்களுக்காக 2 பில்லியன் ரூபாய்களையும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 676 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரங்களுக்காக 1 பில்லியன் ரூபாய்களையும் பத்திரிகை விளம்பரங்களுக்காக 1 பில்லியன் ரூபாய்களையும் செலவிட்டுள்ளார். இந்த நிலையில் மொத்த விளம்பர செலவான 2.03 பில்லியன் ரூபாய்களும் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஏனைய அமைச்சுக்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. இதேவேளை காட்டப்பட்டுள்ள இந்த செலவுத்தொகையில் விளம்…
-
- 0 replies
- 422 views
-
-
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படுமென ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேரி கெலி நேற்று வீரகேசரிக்கு வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார். இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை இவ்வாரம் கிளிநொச்சியில் நடைபெறவிருந்த சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/articles/2015/01/18/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE…
-
- 0 replies
- 348 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைபொறுப்பு மீண்டும் சந்திரிக்காவிடம் வழங்க தீர்மானம்! [saturday 2015-01-17 22:00] சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு அமைய நேற்று கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் யாப்பு திருத்தப்பட்டு கட்சியின் தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலின் போது, எதிரணி பொது வேட்பாளராக மைத்த…
-
- 0 replies
- 390 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்குப் பின்னரான நிகழ்வுகள் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாழ்விலும் மலையக மக்களின் விடிவிற்கும் வித்திடுவதாக அமைந்துள்ளன. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்புமாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு விடுத்த செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கூறிய விடயங்கள் வருமாறு: ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையுடன் வட மாகாணஆளுநராக சிவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதும், பதினொருவரைக் கொண்ட தேசிய நிறைவேற்று சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸின் த…
-
- 0 replies
- 387 views
-
-
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 5 அறைகளுக்கு சீல்! அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அறிவுரையின் பேரில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள ஐந்து அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டுத்தாபனத்திலுள்ள முக்கிய ஆவணங்களை சிலர் கொண்டு செல்ல முற்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் மூவரின் அறைகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளன onlineuthayan.com/New
-
- 0 replies
- 359 views
-
-
கடமையைப் பொறுப்பேற்றார் அமைச்சர் ஹக்கீம் நகர அபிவிருத்தி மற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கடமையைப் பொறுப்பேற்றார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். onlineuthayan.com/News_More
-
- 0 replies
- 304 views
-
-
100 நாள் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜங்க கல்வி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் டயகம கிழக்கு தோட்டத்தை கடந்து செல்லும் ஆற்றுக்கு மேலாக உள்ள பாலம் கடந்த காலங்களில் உடைந்திருந்தது. இந்நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News
-
- 0 replies
- 312 views
-
-
சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிமால் சிறிபால டி சில்வா! - கை சின்னத்தில் போட்டி [sunday 2015-01-18 08:00] இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவே போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பின்னர் அவர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடாமல் ஜனாதிபதி பதவியை நீடிப்பார். அதேநேரம் முன்னர் கூறப்பட்டதைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்காக போட்டியிடமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்…
-
- 0 replies
- 292 views
-
-
பளையில் குழிக்குள் விழுந்து இரு குழந்தைகள் பலி! [sunday 2015-01-18 08:00] பளைப் பகுதியில் குளத்தின் அருகாக வெட்டப்பட்டிருந்த குழி ஒன்றில் இருந்த நீரில் மூழ்கி இரு குழந்தைகள் பரிதாபமாக மரணமாகினர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் பளை - தம்பலகாமம் - வண்ணாங்கேணிப் பகுதியில் இடம்பெற்றது. அயல் வீடுகளில் வசிக்கும் இரண்டரை வயதான உ. யஸ்மிதா, ஒரு வயதான ஜூலியட் டானியல் ஆகிய குழுந்தைகளே உயிரிழந்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இருவரும் திடீரெனக் காணாமல் போயிருந்தனர். அவர்களைத் தேடிய போது வீட்டின் அருகேயிருந்த குளத்துக்கு அண்மையாக வெட்டப்பட்ட பெரும் குழிக்குள் சடலங்களாக மிதந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இரு சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக…
-
- 0 replies
- 298 views
-
-
ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலம்! - 21ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது [sunday 2015-01-18 09:00] நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலம் எதிர்வரும் 21ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அத்துடன் 17வது திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தவும் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் நாடாளுமன்றில் பிரேரணைகள் முன்வைக்கப்பட உள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்து நாடாளுமன்றுக்கு பொறுப்பு சொல்லக்கூடிய பிரதமர் ஆட்சி முறைமையை ஒன்று நிறுவப்பட உள்ளது. சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன அரச சேவை ஆணைக்குழு, சுயாதீன லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு போன்றனவற்…
-
- 0 replies
- 205 views
-
-
JANUARY 16, 2015 · 3:28 PM ↓ தேசிய நிறைவேற்று சபை நியமனம் தமிழ் பேசும் பிரதிநிதிகள் சம்பந்தன், மனோ, ரவுப், ரிசாத் தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வட-கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள் உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த சபை ஜனாதிபதி…
-
- 40 replies
- 1.9k views
-
-
இடைக்கால அறிக்கையை மைத்திரியிடம் கையளிக்கிறது ஜனாதிபதி ஆணைக்குழு! - கிளிநொச்சி அமர்வு பிற்போடப்பட்டது. [sunday 2015-01-18 09:00] காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேரி கெலி தெரிவித்தார். இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும். இதேவேளை இவ்வாரம் கிளிநொச்சியில் நடைபெறவிருந்த சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.…
-
- 0 replies
- 199 views
-
-
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக் கொடுக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 20ம் திகதி கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இணைந்து, கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கவுள்ளன. இதன் போது 11 உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பே அங்கு முதலமைச்சர் பதவியை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றிருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தும், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணையாது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கத…
-
- 33 replies
- 2.1k views
-
-
நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட்ட பின்னர் பிரதமர் பதிவிக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்திரி ஆட்சியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் வகையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட்டதும் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. “அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்டுப் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தற்போது வெளியிடும் கருத்துக்களினூடாக இந்த விடயத்தை ஓ…
-
- 8 replies
- 1k views
-