ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடமிருந்து முஸ்லிம்களை தூரமாக்கி அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னாலிருந்து சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இவர்களது சதித்திட்டங்களுக்கு பலியாகாது முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு முஸ்லிம்களுக்கு நூறு வீத பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பேருவளை சீனன்கோட்டையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுடனான விசேட கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இங்கு தொடர்ந்து…
-
- 1 reply
- 717 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்தே முடிவுகள் எடுக்கப்படும் என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆளும் தரப்பினர் மற்றும் எதிர்த் தரப்பினரின் தேர்தல் வாக்குறுதிகளை ஆராய்ந்தே கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார். இத்தேர்தல் குறித்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் தலைமைகள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர் மற்றும் புத்திஜீவிகளுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதேவேளை எதிர்கட்சி கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக்கூட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் சுமந்திரன் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்க…
-
- 4 replies
- 485 views
-
-
சந்தேகம் வெளியிட்டுள்ளது சிங்கள இணையத்தளம்:- முன்னாள் ஜே.வீ.பீ உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான லொக்கு அத்துள அலரி மாளிகையில் மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக லங்கா ஈ நியுஸ் செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விஜயமுனி தேவகே நிமால் ஜெயசிங்க என்ற லொக்கு அத்துள ஜேவீபியின் 1971 காலத்தில் இருந்து முக்கிய இடத்தில் 4 ஆவது இடத்தில் அவ் அமைப்பை வழி நடத்தியவர்... மிகவும் திடகாத்திரமான அவர் காராட்டியில் புகழ் பெற்றவர். ஜேவீபீயில் இருந்து விலகி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த இவர் எரிபொருள் சக்த்தி இஇணை அமைச்சராக பதவி வகித்தவர்.. தற்போதைய கம்பகா மாவட்ட அமைப்பாளராக இருந்த இவர் மைத்திரிபால சேனநாயக்கவை ஆதரிக்கும் முடிவில் இருந்த வேளை அலரிமாளிகை…
-
- 0 replies
- 638 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி இல்லத்தில் இன்று (02) காலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் சார்க் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114086/language/ta-IN/a…
-
- 0 replies
- 221 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது பதவிக்காலம் முடிவடைய முன் ஜனாதிபதி ஆட்சி முறை இந்நாட்டு அரசியலிலிருந்து ஒழிக்கப்படும். அதற்கு பின் இந்த நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் இருக்க மாட்டார் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். மாத்தறை மாவட்டத்தில் ரண்பிம காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிடுபவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கே முயற்சி செய்கின்றனர். ஜனாதிபதிக்குள்ள ஒரேயொரு பாதுகாப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையாகும். இதனை ஒழித்தால் ஜனாதிபதியை இலகுவில் யுத்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யலாம் என்று அல்ஜ…
-
- 0 replies
- 373 views
-
-
'சமுத்திர நலனுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைவின் முக்கியத்துவம்' எனும் தொனிப்பொருளில் காலி, லைட் ஹவுஸ் ஹோட்டலில் 'காலி பேச்சுவார்த்தை 2014' எனும் சர்வதேச கடற் பாதுகாப்பு மாநாடு, நேற்று திங்கட்கிழமை (01) காலை ஆரம்பமானது. (படங்கள்: பிரதீப் பத்திரண) http://www.tamilmirror.lk/--main/135299--2014.html
-
- 0 replies
- 306 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது உள்ள தனிப்பட்ட கோபம் காரணமாக வெளிநாடுகளிடம் பணம் வாங்கிகொண்டு நாட்டின் பாதாளத்தில் தள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டார நாயக்க குமாரதுங்க செயற்படுகின்றார் என தெரிவித்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சந்திரிக்கா இயற்றும் திரைப்படத்தில் கதாநாயகன்களாக மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் நடிக்கின்றனர் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பொதுதேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேடியாக நாம் ஆதரவை வழங்குவோம் என ஒருபோதும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ ஆதரவு வழ…
-
- 0 replies
- 393 views
-
-
மேற்கத்தைய நாடுகளின் கைப்பொம்மையாக செயற்பட எம்மால் ஒருபோது முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இணக்க சபை உறுப்பினர்களுக்கான சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டை அடிமைப்படுத்த எந்த சக்திகளுக்கும் இடமளிக்க முடியாது. இப்போது மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் நிலைமைகள் நாம் அறிந்ததே. ஈராக் எகிப்து லிபியா போன்ற நாடுகளில் இப்போது இடம்பெறும் செயற்பாடுகள் நாட்டை ஒருபோதும் முன்னேற்றாது சீர்குலைக்கவே உதவும். நாம் எந்தவொரு இனத்திற்கு எதிராகவும் யுத்தம் செய்யவில்லை. மாறாக பயங்கரவாதத்தை ஒழிக்கவே யுத்தம் செய்தோம்.அந்த நிலையை மீண்டும் நாட்டில் ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டை வீழ்ச்சியுறச் செய்ய இடமளிக்க முடியாது. …
-
- 0 replies
- 235 views
-
-
- சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்துக்குட்பட்ட கோட்டை கட்டிய குளம், மருதங்குளம், பழைய முறிகண்டிக்குளம் ஆகிய குளங்களில் கொள்ளளவைவிட நீர்மட்டம் அதிகரித்தமையால், அக்குளங்களில் நீர் வான் பாய்கவதாக வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றமையடுத்து, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து மேற்படி மூன்று குளங்களிலும் வான் பாய்கின்றது. கோட்டை கட்டிய குளத்தில் 9 அடி 11 அங்குலமும் (5 அங்குலம் வான் பாய்கின்றது), மருதங்குளத்தில் 9 அடி 10 அங்குலமும் (4 அங்குலம் வான் பாய்கின்றது), பழைய முறிகண்…
-
- 1 reply
- 395 views
-
-
சரத் பொன்சேகாவின் சின்னத்தில் மைத்திரிபால கட்டுப்பணம் செலுத்தினார்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 02 டிசம்பர் 2014 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கட்டுப்பணம் செலுத்தினார். சற்று முன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் செயலகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த கட்சியின் செயலாளராக சர்மிள பெரேரா கடமையாற்றி வருகின்றார். முன்னதாக மைத்திரிபால சிறிசேன புறா சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மு…
-
- 0 replies
- 456 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, மட்டக்களப்பு பிரதேசவாசிகளால் திங்கட்கிழமை (01) ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கே எங்கள் வாக்குகள், மைத்திரி கட்சியை காட்டிக்கொடுத்து விட்டார், தமிழ் மக்களின் ஆதரவு மஹிந்தவுக்கே என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியவண்ணம் பேரணியை முன்னெடுத்து சென்றனர். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செங்கலடி காரியாலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இவ்வார்ப்பட்டத்தில், கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால கலந்து கொண்டிருந்தார். இவ்வார்ப்பட்ட பேரணி சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது…
-
- 1 reply
- 511 views
-
-
சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிர்கட்சியினால் 100 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்றையதினம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டார். இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாரம் எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/35731/57//d,article_full.aspx
-
- 15 replies
- 1.6k views
-
-
சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் சீனவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரியளவிலான மோசடிகள் பற்றிய விபரங்களை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நம்ப முடியாத அளவிற்கு மோசடிகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் தலைவரையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…
-
- 3 replies
- 550 views
-
-
நோர்வேயின் குடியுரிமை பெற்றுள்ள இலங்கை உட்பட வெளிநாட்டவர்கள் மீதான நிறவெறி அடக்குமுறை செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனவே தவிர அவற்றில் எந்தவித குறைவும் இடம்பெறவில்லையென பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர். நோர்வேயில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் பிள்ளைச் செல்வங்களை நோர்வே குழந்தைகள் காப்பகங்களால் கொண்டு செல்லப்படுவதுடன் அவர்களது கலாச்சாரங்களை சீரழித்து பெற்றோரிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து விடுவதற்கான திட்டமிட்ட வகையிலான சூழ்ச்சி நடவடிக்கைகளை நோர்வே சிறுவர் காப்பங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிள்ளைகளை இழந்த பெற்றோர் தனது நிலைமைகளை வெளிப்படுத்தியும் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் க…
-
- 7 replies
- 1k views
-
-
மைத்திரிபாலவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளில் சரத் என் சில்வா ஈடுபட்டுள்ளார் 02 டிசம்பர் 2014 மைத்திரிபாலவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேனவின் சார்பில், நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பலர் இருக்கின்றார்கள் எனவும் அதனால் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டம் மற்றும் அரசியல் சாசன வரைவுத் திட்டங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக வெற்றியீட்டுவார் எ…
-
- 0 replies
- 450 views
-
-
போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ள இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள தாஜ் விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, அதிகரித்த சிறிலங்கா இராணுவப் பிரசன்னம், உயர்பாதுகாப்பு வலயங்களால் மீள்குடியமர்வில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் க…
-
- 0 replies
- 730 views
-
-
இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் அங்கு ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரகால வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்கும்படி பிரித்தானிய அரசு எச்சரித்திருக்கிறது. வெளிநாடு மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சு இன்று வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில், “இலங்கையில் தேர்தல் கூட்டங்களும், பிரச்சார நடவடிக்கைகளும் அடிக்கடி வன்முறை நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன” என்றும், ஆகவே தேர்தல் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2016 நவம்பர் மாதம் நிறைவடைகின்ற போதிலும், மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைவதனை உணர்ந்த ஜனாதிபதி, மூன்றாவது தவணையாகவும் ஆணைகேட்டு எதிர்வரும் ஜ…
-
- 0 replies
- 600 views
-
-
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தனியாக – மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள தாஜ் விடுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐதேக தலைவர்களுடன், அஜித் டோவல் நடத்திய சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐதேக தலைவர்களுடனான குறுகிய நேரச் சந்திப்பு ஒன்றையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவுடன், தனியாக – சுமார் 10 நிமிடங்கள் பேச்சு நடத்தியுள்ளார் அஜித் டோவல். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும், கொழும்பிலுள்ள முக்கிய வட்டாரம்…
-
- 0 replies
- 729 views
-
-
யாழ். மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 496.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. இந்த வருடத்தில் அதிகளவாக மழை பெய்த நாளகவும் நவம்பர் 27 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களை விட இந்த ஆண்டிலேயே யாழ்.மாவட்டத்தில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=127833691601591907#sthash.Uc6HGFI7.dpuf
-
- 1 reply
- 377 views
-
-
தன்னை நியாயப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வருவதாக, கவலை தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ். காலியில் இன்று ஆரம்பமான கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதத்திற்கும் கடற்கொள்ளைக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் பல கப்பல்களை கடத்தியுள்ளனர். அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பொருட்டு உலகின் எந்த நா…
-
- 2 replies
- 526 views
-
-
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொது எதிரணியின் ஏனைய கட்சித்தலைவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் வைத்தே இந்த ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்படுகின்றது. இந்த வைபவம் இன்று காலையிலிருந்த சுபநேரமான காலை 10.31க்கு மதவழிபாடுகளுடன் ஆரம்பமானது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/135212-2014-12-01-05-08-27.html எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் - Live Blog அசாத் சாலி : பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்நாட்டு முஸ்லிம் மக்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவர். எனவே இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி ப…
-
- 2 replies
- 460 views
-
-
தமிழ் மக்கள் மாத்திரமன்றி பெரும்பாலான சிங்கள மக்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது வெறுப்பில் உள்ளனர் என்று, நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியானது பொலிஸ் சேவை தொடக்கம் நீதிமன்றம் வரை காணப்படுகிறது. ஊழல்களில் ஈடுபடுபர்களும், குற்றம் புரிபவர்களும் இந்த அரசினால் அரசினால் பாதுகாக்கப்படுகின்றனர். இதனால் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினால் இந்த நாட்டின் ஜனநாயகம், சட்டம் மற்றும் நல்லாட்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதால் வலுவான பொறிமுறையின் கீழ் அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர்…
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கைக் கடற்பரப்பில் சீன மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையர்களைப் போன்று வேடமிட்டு இலங்கை வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரியளவில் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மீனவர் சமாசத்தின் இணைப்பாளர் அன்டன் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சீன மீனவர்களின் நடவடிக்கைகயினால் மீன் வளம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளைப் போன்றே சீன மீனவர்களின் படகுகளின் மூலமாகவும் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சீன மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் அதி நவீனமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 301 views
-
-
இன்றைய தினம் இந்த நாட்டிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இங்கு பொது எதிரணியாக ஒரு புரிந்துணர்வு உடபடிக்கையில் கையெழுத்து இட்டுள்ளோம். இந்த உடன்படிக்கை இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் அடையாளப்படுத்தவில்லை. எங்கள் தேசிய அபிலாசைகளுக்கு முழுமையான தீர்வுகளை தரவில்லை. ஆனால், ஒரு ஜனநாயக அடிப்படை இங்கே காணப்படுகிறது. அது எமது எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் எமது பயணத்துக்கு வழிசமைக்கும் என நாம் நம்புகின்றோம். ஆகவேதான் நம்பிக்கை வைத்து முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்திட்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெள…
-
- 0 replies
- 461 views
-
-
மைத்திரிபால சிறிசேன என்பவர், ஜனநாயகத் தலைவர். எதிர் கருத்துக்களை வெளியிடுவோரை வீதியில் கொன்று குவிக்காதவர். அடுத்தவர்களின் கருத்துக்களை செவிமடுக்கக்கூடிய, பொறுமைசாலியான தலைவராவார். எதிரணியின் இந்த புதிய போராட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் குழுவொன்றே இருக்கிறது. இன்னும் பலர் வரவிருக்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கொழும்பில் கைச்சாத்திடப்பட்டு வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போத…
-
- 0 replies
- 235 views
-