ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143552 topics in this forum
-
ஒபாமா தம்பதியுடன் ஜனாதிபதி மகிந்த தம்பதி! [Thursday 2014-09-25 22:00] ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த செவ்வாய்க்கிழமை விருந்தளித்தார். இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியார் மிச்செல் ஒபாமா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=117496&category=TamilNews&language=tamil
-
- 19 replies
- 1.1k views
-
-
"இலங்கையில் உள்ள பாரம்பரியத்தின் அடிப்படையில் குற்றவாளியாகவும் நீதிவானாகவும் ஒருவரே காணப்படுகின்றார். அதனால் தமிழ் மக்களே பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றார்கள். இதனால் வேறு பலர் நீதிபதிகளாக மாறவேண்டிய நிலைமையை அவர்களே உருவாக்கியிருக்கின்றமையால் தற்போது சர்வதேச சமூகம் ஒரு நீதிபதியாக மாறியிருக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "மாவை சேனாதிராஜா தலைமையில் அடுத்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வை பெற முயற்சிக்க வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டமையைப் பாராட்டும் முகமாக இலங்கை தமிழரசுக் …
-
- 0 replies
- 451 views
-
-
கொழும்புக்கு மீண்டும் வருமாம் சீன நீர்மூழ்கிகள்! [Friday 2014-09-26 18:00] சீனக் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் சில இலங்கைக்கு வரவுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் கடந்தவாரம் இலங்கைக்குப் பயணம் செய்த போது சீனாவின் டீசல் மற்றும் இலத்திரனியல் நீர்மூழ்கி கப்பல் ஒன்று கொழும்புக்கு வந்தது. இது இந்து சமுத்திர பகுதிக்கு வந்த முதல் சீன நீர் மூழ்கி கப்பல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜிங்பிங்கின் வருகையின் போது பணிக்குழுவுக்கு உதவும் நோக்கில் சோங்ஷிங் என்ற பாரிய நீர் மூழ்கி கப்பல், சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்திற்கு தெற்கு முனையத்திற்கு வருகை தந்தது. இந்த நடவடிக்கையானது இந்திய பெருங்…
-
- 1 reply
- 488 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி, பொது தேர்தல்களில் வாக்களிக்க உங்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா? - மனோ கணேசன் அவசர வேண்டுகோள் [Friday 2014-09-26 16:00] இந்த நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் நீங்கள் ஒரு வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளீர்களா? நீங்கள் வாக்காளர் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அளித்தீர்களா? அப்படியாயின் http://www.slelections.gov.lk/id/index.aspx என்ற இணையதளத்துக்கு உடனடியாக சென்று உங்கள் வசிப்பிட மாவட்டம் மற்றும் அடையாள அட்டை எண் ஆகிய இரண்டு விபரங்களையும் தந்து உங்கள் பெயர் பதிவில் இருக்கின்றதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். உங்களிடம் இணைய தள வசதி இல்லாவிட்டால் அருகில் உள்ள இணைய நிலையம் (நெட் கபே) ஒன்றிற்கு சென்று சரி பார்த்து கொள்ளுங்கள். …
-
- 0 replies
- 339 views
-
-
கூட்டமைப்பை ஆதரித்தால் தான் மட்டக்களப்பில் தமிழர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்! – அரியநேந்திரன் எம்.பி [Friday 2014-09-26 18:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தால் மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். மட்டக்களப்பு பட்டிப்பளை, கெவுளியாமடு கிராமத்தில் நேற்று மக்களை சந்தித்து உரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். படுவான்கரை பிரதேசம் என்பது தமிழ்த் தேசியத்தினை நேசிக்கின்ற, நேசித்து வருகின்ற ஒரு பிரதேசமாகும். இங்குள்ள சிலர் அற்பசொற்ப ஆசைகளுக்காக மாற்றுக்கட்சியில் இணைந்து கொண்டார்கள் என்ப…
-
- 0 replies
- 346 views
-
-
இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிர போர் செய்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. திலிபனின் 27ம் ஆண்டு நினைவு நாள் வடக்கில் பெருமளவில் நினைவு கூரப்படாத நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைதியான முறையில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பெரும் புலனாய்வு கண்காணிப்பிற்குள் பல்கலைக்கழகம் வைக்கப்பட்டுள்ள போதும் நுணுக்கமான முறையில் நடைபெற்ற இந் நிகழ்வினையடுத்து மேலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34128/57//d,article_full.aspx
-
- 1 reply
- 750 views
-
-
சிறிலங்காவில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்கு மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. 27வது மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய உதவி மனித உரிமைகள் ஆணையாளர் ஃப்ளேவியா பென்செய்ரீ இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு சாட்சி பதிவுகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளும் போது தரமான மொழிப் பெயர்ப்பாளர்களை கொண்டிருப்பதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் சாட்சி வழங்குகின்றவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும், அவர்களுக்கான ஆலோசனைகள் தொடர்பிலும் இந்த ஆணைக்குழு திருப்திகரமாக செயற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆதேநேரம் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்…
-
- 0 replies
- 281 views
-
-
வடக்கில் தென்னை உற்பத்தியை ஊக்குவித்து அதன் தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்ய சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளதாக தென்னை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் தென்னை உற்பத்தி சபைக்குச் சொந்தமாக உள்ள 600 ஏக்கர் காணியில் இந்த விசேட திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளதாகக் தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைத் தென்னை உற்பத்தித் தொழில் துறையின் மூலம் பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.e-jaffna.com/archives/32646
-
- 0 replies
- 502 views
-
-
இலங்கைக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம்அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ தெரிவித்துள்ளார். 'உணவு தன்னிறைவிலும் வறுமை ஒழிப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு' எனும் கருப்பொருளில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:- இலங்கையில் நிலவும் வறட்சி, அரிசி தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் அந்நாடுகளின் அரிசியில் ஆர்ஸனிக் விஷத்தின் செறிவு அதிகமாகும். இதனை அளவிடுவதற்கான கருவிகள் எவையும் இலங்கையில் இல்லை. உலக சுகாதார ஸ்தாபனம் ஒர…
-
- 0 replies
- 306 views
-
-
நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும், படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன, என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பௌத்த விஹாரைகளில் சோதனை நடத்தப்படுகின்ற போது ஏன் பள்ளிவாசல்களில் சோதனை நடத்தப்பட முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார். கடும்போக்குவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், மதரசாக்களில் வெளிநாட்டு மத போதகர்கள் எதனைச்சொலல்கின்றாhகள் என்பதனை கண்காணிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பாக…
-
- 0 replies
- 325 views
-
-
பொது பல சேனா மாநாட்டுக்கு வருகிறார் விராது பிக்கு! – முஸ்லிம் கவுன்சில் எதிர்ப்பு [Friday 2014-09-26 10:00] வரும் ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள பொது பல சேனாவின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராது பிக்குவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு முஸ்லீம் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மியன்மாரில் முஸ்லீம்களுக்கு பெரும் வன்முறைகளை தூண்டிவிட்ட குறிப்பிட்ட மதகுரு இலங்கை வருவது இலங்கையின் சமாதான சகவாழ்விற்க்கு ஆபத்தாக அமையும். இஸ்லாமின் வளர்ச்சி பௌத்தத்திற்க்கும் மியன்மார் கலாச்சாரத்திற்க்கும் ஆபத்தான விடயம் என்ற தீவிர பிரச்சாரம் மூலமாக அந்த நாட்டின…
-
- 1 reply
- 376 views
-
-
இணைய ஊடங்களின் வழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரோதப் பிரச்சாரங்களினால் சிறுபான்மை சமூகங்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றன. இலங்கை ஊடகத் தளங்களில் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களைக் கொண்ட செய்திகள் தகவல்களின் பிரச்சாரம் அதிகரித்துள்ளது. இவ்வாறான பிரச்சாரங்களின் ஊடாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்கள் தாக்குதல்களை எதிர்நோக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் குரோத உணர்வைத் தூண்டும் ஊடகப் பிரச்சாரங்களின் விளைவுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இணைய ஊடகத் தளங்களைப் போன்றே இணைய ஊடக பார்வையிடுவோரின் எண்ணிக்கையிலும் சடுதியான உயர்வு பதிவாகியுள்ளது. ஏனைய எந்தவொரு …
-
- 0 replies
- 241 views
-
-
-
தமிழர்கள், அவர்களது 'தமிழர்' என்ற தேசிய அடையாளத்தினாலேயே இலங்கையில் இலக்கு வைக்கப்படுகின்றனர். அதனைக் குறிப்பிடுவதற்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பின்னடிக்கின்றமை எமக்கு கவலையைத் தருகின்றது. - இவ்வாறு இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை தொடர்பாக ஜெனீவாவில் கவலை வெளியிட்டிருக்கின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையிலேயே மேற்படி விடயம் …
-
- 1 reply
- 722 views
-
-
இந்திய வீட்டுத் திட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்கு வழங்க வேண்டும்! http://www.intertam.net/
-
- 0 replies
- 490 views
-
-
தலைமன்னார் பகுதியில் வீட்டின் மீது இடிவிழுந்ததில் இருவருக்குக் காயம்! தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிவிழுந்ததில் அங்கு இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவரும் காயமடைந்தனர். அத்துடன் வீடும் அங்கிருந்த மின்சார உபகரணங்களும் பாதிப்படைந்தன. நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் பகுதியில் இடி மின்னலுடக் கூடிய மழை இலேசாகப் பெய்தது. அச்சமயம் மாலை 7.30 மணியளவில் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வீட்டின் சுவர் மீது இடி விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கணவனும் மனைவியும் காயமடைந்தனர். வீடு சிறு சேதத்துக்கு உள்ளாகியதுடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்சார வயர்கள் முற்றாக எரிந்ததுடன் மின்சார உபகரணங்கள் யாவும் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தில் தலைமன்னார் தபால் அலுவலகத்தில் கடமை…
-
- 0 replies
- 354 views
-
-
மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல் மாணவனான சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிரான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரெட்ணம் உத்தரவிட்டார். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:- கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் சென்ற மாணவனை பாடசாலையின் அதிபர் அங்குள்ள களஞ்சிய அறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுவன் பெற்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்தான். இச்…
-
- 0 replies
- 411 views
-
-
இறக்குமதியாகும் அரிசியில் விஷம்! – பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல். [Friday 2014-09-26 10:00] இலங்கைக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம் அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'உணவு தன்னிறைவிலும் வறுமை ஒழிப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு' எனும் கருப்பொருளில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் நிலவும் வறட்சி, அரிசி தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் அந்நாடுகளின் அரிசியில் ஆர்ஸ…
-
- 0 replies
- 277 views
-
-
மாகாணசபைக்கு அரசு நிதி ஒதுக்குவதில்லை! – புலம்புகிறார் வடமேல் மாகாண முதலமைச்சர் [Friday 2014-09-26 10:00] மாகாணசபைகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குவதில்லை என்று வடமத்திய மாகாணசபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மாகாணசபை அமர்வுகளின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அமைப்பிற்கு அமைவாக மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை அமுல்படுத்த பணம் இருக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எமக்கு தேவைப்படுவது பணமாகும். நாம் எவ்வளவு பணம் கேட்டாலும் கிடைப்பதில்லை. அன்றும் அவ்வாறே இன்றும் அவ்வாறே.மூன்று மடங்கு பணம் கோரினால் ஒரு பகுதியே கிடைக்கப்பெறும். வேறும் வழிகளில் எமக்கு பணம் கிடைத்தால் நன்று. எந்த வகையிலாவத…
-
- 0 replies
- 227 views
-
-
மலம் கழிக்க கூட சி.ஐ.டியினர் விடுகிறார்களில்லை! – மாகாணசபையில் புலம்பிய அன்ரனி ஜெகநாதன். [Friday 2014-09-26 10:00] மலம் கழிக்க கூட விடாமல், சிஐடியினர் தொலைபேசி அழைப்பை எடுத்துக் கொண்டிருப்பதாக வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஆதங்கத்துடன் சபையில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினரின் பிரதான கடற்படைத்தளம் ஒன்றினை அமைப்பதற்கு மக்களுடைய 614 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு நேற்று முன்தினம் நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்திருந்தனர். அவர்களுடன் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடும் எதிர்ப்பினால் எமது காணிகளை அளக்கும…
-
- 0 replies
- 329 views
-
-
சம்பந்தன், மாவை கொழும்பில் கௌரவிப்பு! [Friday 2014-09-26 10:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டக் கிளையினரால், கௌரவிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரும், சட்டத்துறை செயளாளருமான கே.வி தவராசாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ .சுமந்திரன், ஈ. சுரவணபவான் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.இமாம், மற்றும் பலரும் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNew…
-
- 0 replies
- 2.2k views
-
-
வடக்கு மாகாணசபையில் சிங்களத்திலும் நடந்த விவாதம்! [Friday 2014-09-26 10:00] வடக்கு மாகாணசபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் விவாதத்தின் போது அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அன்ரனி ஜெகநாதன், அஸ்மின், ஆனோல்ட், லிங்கநாதன் , ஜெயதிலக, தர்மபால மற்றும் முதலமைச்சர், அவைத்தவைலர் ஆகியோருக்கு இடையில் பல விடயங்கள் தொடர்பில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. மாகாணசபை எதிர்க்கட்சியினர் கேள்விகளைக் கேட்டு மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு தேடிக்கொண்டிருந்தனர். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கொதித்தெழுந்து பதில்களை வழங்கினர். இவர்கள் அனைவரும் தமிழில்…
-
- 0 replies
- 328 views
-
-
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மகிந்த வாக்குறுதி! [Friday 2014-09-26 10:00] இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை தாம் உறுதிப்படுத்துவதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் லயாட் அமீன் மதானியிடம் வாக்குறுதி அளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நியூயோர்க்கில் வைத்து மதானியை சந்தித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைச்சின் நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைப் பேண விரும்புகிறோம். முஸ்லிம் மக்களை சொந்த சகோதரர்களாக நோக்குகிறேன். மதா…
-
- 0 replies
- 245 views
-
-
வெலிஓயாவுக்கு எந்த ஒதுக்கீடுகளையும் வழக்கக் கூடாது! - வடக்கு மாகாணசபையில் நிறைவேறியது தீர்மானம். [Friday 2014-09-26 07:00] முல்லைத்தீவு மாவட்டத்துடன் சட்டத்துக்கு முரணாக இணைக்கப்பட்டிருக்கும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவிற்கு வடமாகாண சபையிலிருந்து நிதி உள்ளிட்ட எந்தவொரு ஒதுக்கீடுகளையும் வழங்கக் கூடாதென வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் முன்மொழிந்த பிரேரணை தொடர்பாக சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறித்த பிரேரணையை முன்மொழிந்து பிரதி அவைத்தலைவர் உரையாற்றுகையில் கூறியதாவது. மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலர் பிரிவுகளுக்கு மேலதிகமாக 6 ஆவது பிரதேச செயலர் பிரிவாக முல்லைத்தீவ…
-
- 0 replies
- 250 views
-
-
13வது திருத்தம், அரசியல்தீர்வு, விசாரணையில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தியது இந்தியா! [Friday 2014-09-26 07:00] இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்துமாறு இந்தியா கோரியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று இலங்கை தொடர்பான அறிக்கை மீது உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, குறித்த நாடு ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில் இந்த விசாரணையை எப்படி மேலெடுத்துச் செல்வது என்பது குறித்து மனித உரிமை ஆணையர் ஏதும் சொல்லவில்லை என்பதை நாங்கள் கரிசனையுடன் குறித்துக் கொள்கிறோம். யார் இந்த விசாரணைக் குழுவில் இருப்பார்கள், இது எப்படி வேலை செய்யும், இதற்கான நிதி ஆதாரங்களை எப்படி வரப்போகிறது என்பது போன்ற தகவல்களும் மனித உரிமை கவுன்சில் உறுப்ப…
-
- 0 replies
- 315 views
-