Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்க காத்திருக்கும் மகிந்த! இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் நாளை இலங்கைக்கு வருகை தருகிறார். இவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருப்பதோடு சீன ஜனாதிபதியையும் பாரியாரையும் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்று அழைத்து வர இருப்பதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரிவித்தார். 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரின் விஜயத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2ஆம் 3 ஆம் கட்டங்கள் சீன மற்…

  2. போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்ட மேலிடத்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்! - ஜெனிவா கூட்டத்தில் கரென் பார்க்கர் [sunday 2014-09-14 18:00] இலங்கையில் போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் புரிய உத்தரவிட்ட மேலிடத்தவர்கள் தண்டிக்கப்படுவது அவசியம் என மூத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரென் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுப் பிரதிநிதியும், ஐ.நா மனித உரிமைச்சபை வள அறிஞர் பிரதிநிதியுமாகிய கரென் பார்கர் ஐ.நா மனித உரிமைச்சபை 27வது கூட்டத்தொடரிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். உண்மை, நீதி, ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல், தண்டித்தல் மற்றும் மீள நிகழாமல் தடுத்தல் ஆகிய …

  3. புறக்கோட்டையில் பதற்றம் திங்கட்கிழமை, 15 செப்டெம்பர் 2014 10:09 புறக்கோட்டை, போதிராஜ மாவத்தையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/126950-2014-09-15-04-39-40.html

  4. சிறீசம்போதி மகாவிகாரை அமைக்கும் பணி முழுவீச்சில் news முல்லைத்தீவு கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படையினர் காவலுடன்அமைக்கப்பட்டு வரும் விகாரையில் முதற்கட்டமாக இன்று மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் பகுதியில் ஏற்கனவே புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டதை நாம் அறிந்திருப்போம். தற்போது அதற்கருகாமையில் மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டு, சிறீ சம்போதி மகா விகாரை என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி, இதற்காக கொக்கிளாய் ஆரம்ப வைத்தியசாலைக்கு சொந்தமான சுமார் 30 m அகலமும் 100m க்கும் மேற்பட்ட நீளமு…

  5. யாழ் கீரிமலையில் 148 ஏக்கர் காணி கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகளினால் அளக்கப்படுகின்றன - 15 செப்டம்பர் 2014 யாழ்ப்பாணம் கீரிமலையில் மக்களின் கடும் எதிர்பையும் மீறி 148 ஏக்கர் நிலத்தை கொழும்பில் இருந்து சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை அளவீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். படையினரின் தேவைக்காக பெறப்படவுள்ள இந்த காணிகள் பொதுமக்களுக்கு சொந்தமானவை என்றும் காணி உறுதிப்பத்திரங்கள் இருப்பதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ் சஜீவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த காணிகளை நான்கு முறை அளவீடு செய்ய அதிகாரிகள் முயற்சித்தனர் என்றும் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிட்டுச் சென்றதாகவும் கூறிய அவர் இன்று பொhலிஸாரின் பாதுகாப்புடன் காணிகளை அளவீடு…

  6. தமிழர்களுக்கு எதிராகப் போராடவில்லை- மகிந்த பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராகப் போராடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் காலத்திலும் எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டை பிரிப்பதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டேன் முப்பது வருட யுத்தம் இந்த நாட்டில் இருந்ததை இன்று பலர் மறந்துவிட்டார்கள். அந்தளவுக்கு சுதந்திரக் காற்றை இந்நாட்டு மக்கள் சுவாசிக்கிறார்கள். இன்று நாங்கள் அபிவிருத்தியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் தொழில்நுட்ப உலக…

  7. யாழ்ப்பாணம் கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேரூந்துகளுக்குரிய வழி அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இச்சேவைகளில் ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்ட 39 பேருந்துகளின் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகவலை யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன வெ ளியிட்டுள்ளார். இதற்கமைய WP JF 5666, WP NB 7043, WP NB 2259, WP ND 3965, WP NB 3266, WP NA 8947, WP ND 9365, WP ND 9829, CP NA 8546, NP NC 7575, WP ND 8145, NU ND 6284, WP NB 6350, WP NB 0412, SP NB 6293, NC NA 8551, NC NA 7828, NP NA 9995, WP NB 4511, WP ND 7896, WP NB 5906, WP NB 6240, WP NB 8557, WP ND 8465, NP NB 3484, NW ND 9729, SP NA 8582, NC NA 8749, WP ND 8535, WP ND 1985, …

  8. புலிகளை வளர்த்து விட்ட இந்தியாவே, பிரபாகரனை அழிக்க ஆயுதங்களை தந்து உதவியது! - அமைச்சர் ரம்புக்வெல கூறுகிறார். [Monday 2014-09-15 07:00] புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களை வளர்த்ததும் இந்தியாதான். பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கியதும் இந்தியாதான் என்று தெரிவித்துள்ளார் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல. இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மைதான். புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களை வளர்த்ததும் இந்தியாதான். பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசுக்…

  9. நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கமாட்டேன்! - ஜனாதிபதி மஹிந்த சூளுரை. [sunday 2014-09-14 18:00] இனி எந்தக் காலத்திலும் எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டை பிரிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரவளை நகரில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில், முப்பது வருட யுத்தம் இந்த நாட்டில் இருந்ததை இன்று பலர் மறந்துவிட்டார்கள். அந்தளவுக்கு சுதந்திரக் காற்றை இந்நாட்டு மக்கள் சுவாசிக்கிறார்கள். இன்று நாங்கள் அபிவிருத்தியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் தொ…

  10. நியுயோர்க்கில் ஜனாதிபதி மகிந்தவுக்கு காத்திருக்கும் சங்கடமான சந்திப்பு! [Monday 2014-09-15 07:00] இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதமர்களை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியூயோர்க்கில் நேரடியாக எதிர்கொள்ளவுள்ளார். ஐ.நாவின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அங்கு பொதுநலவாய தலைவர்களின் கூட்டத்துக்கும் தலைமை தாங்கவுள்ளார். இதன்போது மஹிந்தவை கடுமையாக விமர்சித்து வரும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை நேருக்குநேர் எதிர்கொள்வார். ஐ.நா கூட்டத்தொடருக்கு வெளியே இட…

  11. இந்தியாவில் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக இந்தியர்கள் பலர் சூதாடுவதற்காகவே கொழும்புக்குச் செல்கின்றனர் என்றும் இந்திய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ஹைதராபாத் விடுதிகளில் சூதாடுவதற்கு எதிராகப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் பண வசதியுள்ளவர்கள் சூதாட்டத்துக்காக இலங்கை செல்கின்றனர். இதேபோன்று தெலுங்கான முதலமைச்சர், விடுதிகளில் சூதாட்டம் இடம்பெறுவதற்கு அனுமதிக்கவேண்டாம் என்றும், அப்படி சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொலிஸாருக்கு கடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சூதாட்டம் இடம்பெற்ற…

  12. முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை, மற்றும் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிகளில் பெளத்த விகாரை ஒன்றை அமைக்கும் பணி இரகசியமாக நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இடத்தில் நேற்று புதன்கிழமை சிறிய புத்தர் சிலை ஒன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது என்றும், அதனைவிட காணியின் உள் பகுதியில் ஆழமாகக் கிடங்குகள் வெட்டப்பட்டு அத்திவாரம் இடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை கட்டப்பட்டு, ஒன்றரை வருடங்கள் கழிந்தும் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை. அத்துடன் வைத்தியசாலைக்கு சுற்று வேலி அமைப்பதற்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதும் இதுவரை வேலியும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து…

    • 55 replies
    • 3.2k views
  13. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் ஹிந்தி தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய துணைத் தூதுவர் எஸ்.தெட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரகத்தால் ஹிந்தி தினத்தையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. - http://malarum.com/article/tam/2014/09/14/5410/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE…

  14. இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இது தான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும் இது தான் முதற் தடவையல்ல. ரெலோ இயக்கத்தின் தலைவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்திருந்ததை இங்கு நினைவுகூரலாம். எனினும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் மிகப்பெரியதும் பல தசாப்த கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும்; கொண்டிருப்பதுமாகிய தமிழரசுக் கட்சியின் தலைவர் வவுனியாவில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் வைத்து இவ்விதமாக அ…

  15. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரச தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கிய ஊடகம் ஒன்று ஐ.நா கூட்டத்தொடரின் போது இந்திய பிரதமரை சந்தித்து விட வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிடிவாதமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகளின் 69 வது கூட்டத்தொடரின் போது இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்கான அனுமதியை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். எனினும் இந்த சந்திப்பு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஜிரிஎன் நிகழ…

  16. நாட்டு மக்கள் உணவுக்ககா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர், சிலர் பட்டினியேடிருக்கின்றனர். ஆனால் மஹிந்தவும் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய சகாக்களும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். - இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர. ஊவாமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐ.தே.க., ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணன்டோவை ஆதரித்து ஹப்புத்தளை,பேருவிலா தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை பிரசார கூட்டமொன்று நடைபெற்றது. இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- பெரும்பகுதி மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகின்றனர். ஒரு காலணியை வாங்…

  17. இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விரும்பவில்லை என கருதினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 3 நாள் பயணமாக இலங்கை வரும் பாப்பரசர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்திக்கவுள்ளளார். இந்நிலையில் அவரின் வருகை தொடர்பான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில் முன்னர் இலங்கைக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலின் பயணத்துக்கு குண்டு து…

  18. நாங்கள் அமைதியாக இருந்தவாறு தீர்வை எதிர்பார்க்க முடியாது. தீர்வு தானாகவே வரும் என்ற மனப்பாங்கில் இருந்தால் எதுவும் இங்கு நடவாது. வெறுமனே போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எமக்காக யாரும் போராட வரமாட்டார்கள். சிறீலங்கா அரசின் அடக்குமுறைகள் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்டு வரும் நாங்கள் முதலில் போராட வேண்டும். அதன் பின்னர் தானாகவே சர்வதேச சக்திகளும், அதன் ஆதரவும் கூடி வருமென்று த.தே.கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பதினைந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது உரையி…

    • 16 replies
    • 791 views
  19. வரும் ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல்? [sunday 2014-09-14 07:00] அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ம் ஆண்டு ஜனவரி முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி மாதம் 7ம் திகதிக்கும் 11ம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில் தேர்தல் நடைபெறும் என்றும், பெரும்பாலும் 8ம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நவம்பர் 20ம் திகதி அறிவிப்பார் என்றும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நான்கு வருடங்கள் நவம்பர் 19ம் திகதியுடன் நிறைவடைகின்றன. ஜனாதிபதி தேர்தலை 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிப்பகுதியில் நடத்…

  20. கோத்தபாயவைச சந்திப்பதில்லை! - கூட்டமைப்பு முடிவு. [sunday 2014-09-14 09:00] வடமாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் பேச்சு நடத்துவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக, சிங்கள பத்திரிகை ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம், தாம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக கோத்தபாய ராஜபக்ச கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து இது தொடர்பில் கருத்துரைத்திருந்த விக்னேஸ்வரன், தமக்கு இது தொடர்பில் நேரடியான அழைப்பு வரவில்லை. அத்துடன் அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டால் அது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து மு…

  21. நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் - ஜனாதிபதி (பண்டாரவளையிலிருந்து ஆர். நிர்ஷன்) பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் போராடினோம். நாம் தமிழர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இனி எந்தக் காலத்திலும் எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டை பிரிப்பதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பண்டாரவளை நகரில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலைய அங்குரார்ப்பண ந…

  22. ஸ்டீபன் ஹார்ப்பர் - டேவிட் கமரூனை நேருக்கு நேர் சந்தி்க்கவுள்ளார் மெதமுலன ராஜபக்ஸ:- 14 செப்டம்பர் 2014 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- ஐ.நாவின் பொதுச்சபையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரை கடுமையாக விமர்சித்துவரும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை நேருக்கு நேர் எதிர் கொள்கிறார். ஐ.நா கூட்டத்தொடரிற்க்கு வெளியே இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ள இந்த கூட்டத்தில் கனடா, பிரிட்டிஸ் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். ஹார்ப்பர் கொழும்பில் நடைபெற்ற பொதுநல…

  23. இலங்கையில் இருவேறு உலகங்கள் - மகிந்த ராஜ்ய ஆடம்பர உலகு - சாதாரண மக்களின் துயர் சூழ் உலகம்:- 14 செப்டம்பர் 2014 மங்கள சமரவீர - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையில் இரு உலகங்கள் காணப்படுகின்றன, ஒன்று ஜனாதபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் அனுபவிக்கும் ஆடம்பர உலகம், மற்றையது சாதாரண மக்கள் வாழும், துயரத்தை அனுபவிக்கும் உலகம்.என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஊவா தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தை விட மக்கள் தற்போது அதிகளவு துயரத்தை அனுபவிக்கின்றனர். ஜனாதிபதியும், அவரது குடும்பத்தினரும், அவர்களுடைய நெருங்கிய சகாக்களும், நாளாந்தம் ஐந்து நட்சத்திர விடுதி வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்…

  24. ஜனாதிபதி தேர்தலுக்கு முன் TNAயுடன் பேச்சுக்கு சாத்தியமிலை– மோடியை சந்திப்பதற்கு மகிந்த அடம்பிடிப்பு: 14 செப்டம்பர் 2014 நிகழ்ச்சி நிரல் மாற்றம்? தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரச தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கிய ஊடகம் ஒன்று ஐ.நா கூட்டத்தொடரின் போது இந்திய பிரதமரை சந்தித்து விட வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிடிவாதமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகளின் 69 வது கூட்டத்தொடரின் போது இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந…

  25. எம்மை மீறி எவருமே இல்லை இதுவே இராணுவத்தினர் விடுக்கும் செய்தி! வடக்கு முதலமைச்சர்:- 14 செப்டம்பர் 2014 "எவரும் எங்களை மீறியவர்கள் அல்லர் என்பதுதான் இராணுவத்தினர் சொல்லும் செய்தியாகவுள்ளது. அதனால்தான் எமது மக்களின் பாதுகாப்புக் குறித்து நான் கருத்துக்களைத் தெரிவித்தேன். எனது பாதுகாப்பு பற்றி எதையும் நான் சொல்லவில்லை இவ்வாறு தெரிவித் துள்ளார் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். "தன்னை ஒளிப்படம் எடுக்கின்றார்கள் என்று முதலமைச்சர் கூறுகின்றார். ஆனால் அது தொடர்பில் பாதுகாப்பு பிரச்சினை இருந்தால் ஏன் பொலிஸில் முறைஆ;பாடு செய்யவில்லை'' என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கேள்வி ஸழுப்பியிருந்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.