ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
பான் கீ மூன் எத்தகைய கோரிக்கை விடுத்தாலும், தமது முடிவு மாறாதாம்! - என்கிறது இலங்கை அரசு [Friday 2014-08-22 10:00] ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் எத்தகைய கோரிக்கையை விடுத்தாலும் ஐ.நா. விசாரணைக்குழு குறித்த இலங்கையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்னும் பத்து நாட்களில் ஓய்வுபெறப் போகின்றார். எனவே, அவரால் நியமிக்கப்பட்ட ஜ.நா. விசாரணைக்குழு பற்றி இலங்கை அரசு அலட்டிக்கொள்ளாது. …
-
- 0 replies
- 413 views
-
-
ழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடம் வலியுறுத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர். புதுடில்லி சென்றுள்ள கூட்டமைப்பு குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து கலந்துரையாடினர். இதன்பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது, தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும் என்று இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினோம். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சி்ங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன. சிங்கள குடியேற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த …
-
- 0 replies
- 329 views
-
-
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் தொடர்ந்து அங்கு வாழ்வதற்காக யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக, குற்றம்சாட்டியுள்ளார் யாழ். படைகளின் தளபதி உதய பெரேரா. நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட 11 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்களிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டனர். விமானம் மூலம் வந்த இவர்களை யாழ். படைகளின் தளபதி உதய பெரேரா பலாலியில் வரவேற்றார். பின்னர் இடம்பெற்ற சந்திப்பின்போதே வெளிநாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களிடம் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்கமுடியாது! சிங்கப்பூர் முன்னாள்பிரதமர் லீகுவான்யூ புத்தகத்தில் கருத்து. [Thursday 2014-08-21 22:00] சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத் தனி நாடே தீர்வாகும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். "லீ குவான் யூவுடனான உரையாடல்கள்" என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பேராசிரியர்…
-
- 8 replies
- 846 views
-
-
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே ஒரே வழி – சுரேஸ் 22 ஆகஸ்ட் 2014 'நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை' இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே ஒரே வழி, எனினும் இது குறித்த பேச்சுக்களில் தீவிரத்தன்மை தென்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் பினான்ஸ்சியல் டைம்ஸிற்கு அளித்துள்ள பேட்;டியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சியின் நிலைப்பாடு பற்றி அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது. பௌத்த துறவியொருவரால் அனைத்து சமூகங்களினதும் வாக்குகளையும் பெற முடியாது, அவர் எவ்வளவு நேர்மையானவராக இருந…
-
- 0 replies
- 426 views
-
-
எபோலா வைரஸ் ; இலங்கையில் நுழைவு விசா இடைநிறுத்தம் news எபோலா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க நாட்டுக்கு வருவோருக்கு வழங்கப்படும் நுழைவு விசா தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஆபிரிக்காவைச்சேர்ந்த நைஜீரியா, சியரா லியோன், மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைதருவோருக்கான நுழைவு விஸா வழங்கும் நடைமுறையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 22 ஆகஸ்ட்டு 2014, வெள்ளி 10:00 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=760143357622576275#sthash.4qKMf86g.dpuf
-
- 0 replies
- 359 views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டுகிறது சர்வதேச மன்னிப்புச் சபை:- 22 ஆகஸ்ட் 2014 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைளுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கும் இலங்கையில் நடத்தப்பட்டு வரும் உள்நாட்டு விசாரணைகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரும் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தினால்…
-
- 0 replies
- 337 views
-
-
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். யுத்ததிற்கு பின் சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சில தற்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கோட்டாபாய ராஜபக்ஷ் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு…
-
- 0 replies
- 722 views
-
-
தம்பலகாமத்தில் வீடுகளின் கூரைகளை பிய்த்தெறிந்த மினி சூறாவளி! Top News [Friday 2014-08-22 07:00] திருகோணமலை, தம்பலாகமம் பிரதேசத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. தம்பலாகமம் கோயிலடியில் சுமார் 30 நிமிடங்கள் வீசிய சுழல்காற்றினால் வீடுகளின் கூரைகள் 300 மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டன. சம்பவ இடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், பிரதேச செயலாளர், தம்பலாகம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று சேத விபரங்களைப் பார்வையிட்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=115417&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 290 views
-
-
ஜனாதிபதி மஹிந்தவிற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் - கருணா 22 ஆகஸ்ட் 2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென பிரதி அமைச்சர் கருணா என்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழராலோ அல்லது முஸ்லிம் ஒருவரினாலோ ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் சனத்தொகைப் பரம்பலுக்கு அமைய இவ்வாறு ஜனாதிபதியாக பதவி வகிக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்யுள்ளார். எனவே தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒருவரை ஆட்சி பீடத்தில் ஏற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் வெற்றியீட்ட முடியாத ஓர் வேட்பாளருக்கு வாக்களிப்பதில் …
-
- 0 replies
- 252 views
-
-
மகிந்த ராஜபக்சவின் பங்காளி நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது தமிழர்களின் தாயகத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்புக்களை சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பாவிலும் தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் லைக்கா மொபைல் தொடர்பாக தமிழர் அமைப்புக்கள் மௌனமாக இருக்கும் இவ்வேளையில் இவ்வெதிர்ப்பலைகள் ஐரோப்பாவில் பரவலாக ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்சில் தமிழர் வர்த்தக மையங்களில் ஓட்டப்படிருந்த லைக்கா சுவரொட்டிகள் மற்றும் கத்தி பட சுவரொட்டிகள் மற்றும் லைக்கா தொலைபேசி அட்டை என்பவற்றை எரித்து போரட்டம் ஒன்றை பிரான்ஸ் வாழ் இளையவர்கள் நடத்தி உள்ளனர். http://www.pathivu.com/news/33339/57//d,article_full.aspx
-
- 13 replies
- 997 views
-
-
புத்தசாசனத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி போராட தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகி வரும் பௌத்த விகாரை மற்றும் ஆலயங்கள் தொடர்பான சட்டமூலத்தினால் பௌத்த சாசனத்திற்கு எந்த நன்மையுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தேச இந்த சட்டமூலம் தொடர்பில் கோட்டே நாக விகாரையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள திருத்த யோசனைகளை உள்ளடக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கட்சி என்ற வகையில் பௌத்த சாசனத்தை பாதுகாக்க நாம் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 320 views
-
-
பொது மக்களின் அனைத்து நிகழ்வுகளையும் இலங்கை அரசாங்கம் தமது புலனாய்வு பிரிவினரைக் கொண்டு வேவு பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சமாதான பேரவை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தற்போது திருமணவீடுகள், செயலமர்வுகள், பொது வைபவங்கள், மத வழிபாடுகள் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இது பொது மக்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட இந்த நிலைமை தற்போது தென்னிலங்கையிலும் பரவி இருப்பதாக தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் அது தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/news/33341/57//d,article_ful…
-
- 3 replies
- 343 views
-
-
இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி. [Thursday 2014-08-21 09:00] இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார். இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நான்காவது பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று பிரதான உரை நிகழ்த்திய சுப்பிரமணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில், இந்தியாவை பொறுத்த மட்டில் தேசிய மட்டத்திலான நலனை கருத்திற் கொண்டே தனது வெளிநாட்டு மற்றும் தேசிய கொள்கையை வகுக்குமே தவிர ப…
-
- 13 replies
- 725 views
-
-
பொதுமக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரே பொது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் ஒர் பெயரளவு வேட்பாளராக இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். யாரும் பொது வேட்பாளர் ஓருவரை பரிந்துரை செய்ய முடியும் எனினும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து செயற்படக் கூடிய ஒருவருக்கு மட்டுமே ஜனநாயகக் கட்சி ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். குறுகிய கால தேவைகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவதில் உடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட ரீதியில் எதனையும் அடைந்து கொள்ள விரும்பியதில்லை என அவர் குறிப்பிட்…
-
- 1 reply
- 242 views
-
-
ஜோன் சிவ்டன் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- யுத்தக் குற்ற விசாரணையர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு அதன் சிங்களவாக்காளாகள் மத்தியில் ஆதரவை அதிகரிப்தை நோக்கமாக கொண்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜோன் சிவ்டன் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது மற்றும் பொறுப்புக் கூறுவது தொடர்பாக அரசாங்கம் உண்மையில் எந்தவித அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை, இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆச்சரியமளிக்கவில்லை. அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றும் சூழலில் செயற்படுகின்றனர். அவர்கள் அந்த நிலையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதை நம்பவில்லை. தாங்கள் செய்தது அனைத்தும் மன்னிக்க கூடி…
-
- 1 reply
- 429 views
-
-
வடமாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக வேலையற்ற இளைஞர் யுவதிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் மீன்பிடியியல் கற்கையினை பூர்த்தி செய்த டிப்ளோமா பட்டதாரிகளே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். தமக்கு அரச பணிகளினில் நியமனம் வழங்கவேண்டும் என்று கோரியே வடமாகாண சபைக்கு முன்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.வடமாகாண சபை அமர்வினில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் அவர்கள் மகஜர்; ஒன்றையும் கையளித்திருந்தனர்.http://www.pathivu.com/news/33327/57//d,article_full.aspx
-
- 1 reply
- 500 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன்னால் வாரியபொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தியது. தன் ஆடையை வர்ணித்த ஆணின் கன்னத்தில் அறைந்து, அவரை சரமாரியாக தாக்கியிருந்தார் ஒரு யுவதி. இந்த அசம்பாவிதம் நடைபெற உண்மையான காரணம் என்ன? உண்மையில் இங்கு நடந்தது என்ன? வாரியப்பொலயை வசிப்பிடமாக கொண்ட R.C.சந்திரகுமார தான் சம்பவத்தில் சிக்கிக்கொண்டவர், இது தொடர்பில் அவரோடு பேசிய போது அவர் தினசரி கூலிவேலை செய்து பிழைப்பவர் என்றும், அன்றும் தான் ஒரு வேலையை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நேரம், இப்பெண், தனது நண்பியுடன் பஸ் தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார் என்றும் கூறியவர், "அப்பெண் மிகவும் இறுக்கமான ஆடை அணிந்திருந்தார்.. நா…
-
- 0 replies
- 698 views
-
-
வலிகாமம் வடக்கில் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்காக சிறிலங்காவின் இராணுவத்தினர் கொத்தணி முறையிலான வீடுகளை நிர்மாணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வலிகாமம் வடக்கின் அதி உயர் பாதுகாப்பு வலையங்களில் காணப்படுகின்ற தமிழ் மக்களின் காணிகளை சிங்கள படைத்தரப்பினர் தம்வசப்படுத்திக் கொண்டுள்ளனர். அங்கிருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு தற்போது அங்கு இவ்வாறான கொத்தணி முறையிலான வீடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடுகளில் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வசவிலான் மேற்கில் இருந்து – அச்சுவேலி வரையில் இதற்காக பாரிய வேலி ஒன்றும் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. h…
-
- 0 replies
- 266 views
-
-
மோசடியான முறையில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொள்ள முயற்சித்த இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 வயதான பெண்ணும், வயதுக்கு வந்த அவரது இரண்டு புதல்விகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வீசாவிற்காக விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2005ம் ஆண்டில் வேறும் பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகளைப் பயன்படுத்தி இவர்கள் பிரித்தானிய வீசாவிற்காக விண்ணப்பித்துள்ளனர். குறித்த மூன்று பேரினதும் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாண்டு காலம் பிரித்தானியாவிற்கு பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குறித்த மோசடியில் ஈடுபட்ட ப…
-
- 0 replies
- 255 views
-
-
(J.M.Hafees) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து திருடப்பட்ட பெறுமதி மிக்க நான்கு புத்தர் சிலைகளையும், ஒரு தூபியையும் கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரையும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2014/08/21/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%A…
-
- 0 replies
- 356 views
-
-
-எம்.றொசாந்த் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தனது அமைச்சுத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு இடையூறாகவிருப்பதாக வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது. இதன்போதே, மேற்படி விடயம் தொடர்பில் உறுப்பினர்கள் பரஸ்பரம் கருத்து கூறினார்கள். இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் இமானுவல் ஆர்னோல்ட் கூறியதாவது, வடமாகாணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சு ஒன்று இருக்கின்ற போதும், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த ஊக்குவிப்ப…
-
- 0 replies
- 228 views
-
-
-எம்.றொசாந்த் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுடன் கதைத்துப் பெறும் வீடுகளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாம் பெற்று வழங்கியதாகக் கூறி, மக்களுக்கு வழங்குவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றது. இதன்போது, இந்திய வீட்டுத்திட்டத்தில், பயனாளிகள் தெரிவில் பின்பற்றப்படும் புள்ளிகள் வழக்கும் நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டார். இதன்போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம், "சம்பந்தன் பெற…
-
- 0 replies
- 223 views
-
-
ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை விரிவுபடுத்த எந்தவொரு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை: - மாவை சேனாதிராஜா [Thursday 2014-08-21 19:00] ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை விரிவுபடுத்த எந்தவொரு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 33 உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், ஐக்கிய நாடுகளின் விசாரணையை போர் இடம்பெற்ற காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் 1974 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்றதாக கூறப்படும் "தமிழினப்படுகொலைகள்" தொடர்ப…
-
- 0 replies
- 215 views
-
-
தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து இலண்டனில் மாபெரும் போராட்டம்! [Thursday 2014-08-21 20:00] இனவழிப்பின் ஓர் ஆயுதமாகத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டித்தும் செஞ்சோலைச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதன் 08ஆம் ஆண்டை நினைவுகூருவதற்காகவும் நாளைமறுதினம் 23.08.2014 சனிக்கிழமை இலண்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் இனவழிப்பின் நீண்ட வரலாற்றில், 14.08.2014 செஞ்சோலை மாணவச் செல்வங்கள் சிறிலங்கா வான்படையால் திட்டமிட்டு இலக்குவைத்துத் தாக்கப்பட்டதில் 53 மாணவிகளும் 03 ஆசிரியர்களும் கோரப் படுகொலை செய்யப்பட்டதுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமுற்றிருந்தனர். செஞ்சோலைப் படுகொ…
-
- 0 replies
- 256 views
-