ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இரகசியமாகவும் திட்டமிட்டுமே முன்னெடுக்கப் படுகின்றது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- ஊடகவியலாளர்கள் மீதும் அரச சார்பற்ற அமைப்புக்கள் மீதும் கெடுபிடிகளை அமுல்படுத்துவதன் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை குழப்பி விடலாமென அரசு நினைக்கின்றது. ஆனால் அது வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இரகசியமாகவும் திட்டமிட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளவர்களை இலக்கு வைத்தே விசாரணைகளை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இறுதிப்போர் தொடர்பில் இதுவரை வெளிவராத சான்றுகள் ஏதுமிருப்பினும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப…
-
- 0 replies
- 335 views
-
-
மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ‘அ’ பகுதியில் 09.08.2014 அன்று காலை 10 மணிக்கு பிரதம விருந்தினர் உரை குருர் ப்ரம்மா …………………. தலைவரவர்களே, கௌரவ அமைச்சர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே, இன்று திறக்கப்பட்ட இந்த முதியோர் இல்லம் ப்ரான்சில் உள்ள கொடையாளர் ஒருவரின் தாராள சிந்தையின் பிரதிபலிப்பாக கட்டப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அவர் தமது தாயார் ஏழாலை ப+பதி டீச்சர் ஞாபகமாகக் கட்டிக் கொடுத்துள்ளார் என்று அறிகின்றேன். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியறிதல்களும் உரித்தாகட்டும்! முதியோர் பராமரிப்பு என்பது மூத்த பிரஜைகளின் தனித்துவ தேவைகளைத் தேர்ந்தறிந்து அவற்றைப் ப+ர…
-
- 0 replies
- 343 views
-
-
சிங்களக் குடியேற்றங்களுக்காகவே புதிய பாதை அமைக்கப்படுவதாக உள்ளூராட்சித் தலைவர் சந்தேகிக்கின்றார் இலங்கையின் கிழக்கே, திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வதற்கு புதிதாக பாதையொன்று அமைக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் தமிழ் மக்கள் கவலையும் சந்தேகமும் அடைந்துள்ளனர். நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வழமையான பாதை மூடப்பட்டு புதிய பாதையொன்று அமைக்கப்படுவது கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் பெரும்பான்மை சமூக மக்களை குடியேற்றுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேசத்திற்கான உள்ளுராட்சி சபைத் தலைவரான இராமலிங்கம் விஜேந்திரன் கூறுகின்றார். ஏழு வெந்நீர் ஊற்றுக் கிணறுகளைக் கொண்ட கன்னியா பகுத…
-
- 0 replies
- 433 views
-
-
சரித்திர ரீதியாக, தலைமுறை தலைமுறையாகவும், பல நூற்றாண்டுகளாகவும் தமிழ் - இந்துக்களுக்கு இருந்து வரும் மத, கலாசார ரீதியிலான உரிமைகளை மூர்க்கத்தனமாகவும் கொடூரமாகவும் மறுக்கும் வகையில் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த - சிங்கள அத்துமீறலை, அட்டகாசங்களை நேரடியாக வந்து பார்க்குமாறு சர்வதேச சமூகத்தின் அங்கத்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் வைத்து பகிரங்கமாக அழைப்பு விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) என்ற காணிகள் தொடர்பான சட்டமூலத்தின் மீது உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவா…
-
- 0 replies
- 390 views
-
-
ஐ.நா நிபுணர்குழு பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள்: கூட்டமைப்பு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யும் ஐ.நா விசாரணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் பல்வேறு துறைகள் குறித்து நிபுணத்துவம் பெற்றவர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார். அவர்கள்- சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் கொலைகள் குறித்தும்- காணாமல் போதல் குறித்தும்- உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் குறித்தும்- சட்டபூர்வமற்ற முறையில் தடுப்பிலுள்ளவர்கள் குறித்தும்- பெண்களுக்கு எதிரான சித்திரவதைகள் குறித்தும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும் சுமந…
-
- 0 replies
- 276 views
-
-
திருகோணமலை சீனக்குடா சிவில் பாதுகாப்பு படை தலைவரின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.30 க்கும் 12.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைக்குண்டு தாக்குதலில் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/33022/57//d,article_full.aspx
-
- 0 replies
- 251 views
-
-
விடுதலைப் புலிகளுக்கான கடிதத்தை ஏற்க இந்திய வெளிவிவகார அமைச்சு மறுப்பு! [saturday 2014-08-09 16:00] விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புக்குப் பதிலளிக்க கோரி, விசேட தீர்ப்பாயத்தினால், விடுதலைப் புலிகளுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தைப் பொறுப்பேற்க இந்திய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தீர்ப்பாயம், அந்த தடையை நீக்க வேண்டுமாக இருந்தால், அது குறித்த விளக்கத்தை வழங்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜுலை மாதம் 17ம் திகதி இது தொடர்பான உத்தரவு குறித்த தீர்ப்பாயத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இந்த உத்தரவு எந்த முகவரிக…
-
- 0 replies
- 264 views
-
-
வடக்கு, கிழக்கில் பெரும்பான்மை இன குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன. வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கவே இவ்வாறு செய்யப்படுகின்றது. அதே சமயம் காணிகளை இழந்த மக்களுக்கு ஆட்சியுரிமைச் சட்டமூலம் சாதகமாக அமைந்தாலும் அதன் கால எல்லை ஒருவருடமாக்கப்பட்ட தன் பின்னணி என்ன? இவ்வாறு சபையில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மக்களுக்கு நீதியை வழங்காத அரசால் நிலைத்து நிற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: காணி விவகாரம் தொடர…
-
- 0 replies
- 250 views
-
-
அரசில் இருந்தவாறு பெளத்த குருமாரை நோக்கிக் குரைக்கும், விமர்சிக்கும் அமைச்சர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்டிப்போட வேண்டும். அமைச்சர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ காவியுடை மீது கை வைக்க முயல்வார்களே ஆனால் அதுவே அரசின் சாவு மணியாக அமையும் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர். பெளத்தத்துக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டித்து கொழும்பு பெளத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்ற "சிங்கள பெளத்த குரு மார்களின் முன்னோக்கிய பயணம்'' எனும் பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: "1988, 89ஆம் ஆண்டுகளில் ஐ.தே.கட்சியில் இருந்து கொண்ட…
-
- 0 replies
- 233 views
-
-
மகிந்த நியமித்துள்ள சர்வதேச நிபுணர்களின் பின்னணியைப் புட்டுப்புட்டு வைக்கிறார் மங்கள சமரவீர! [saturday 2014-08-09 05:00] போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதப் படுகொலைகளில் ஈடுபட்ட சர்வதிகாரத் தலைவர்களைப் பாதுகாப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களே, காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிவிவகார சேவைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவகாரத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- "மனித உரிமைகள் பேரவையினால், இலங்கையில் விசாரணைகளை …
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கைப் போர் முடிவடைந்த பின்னர் பெல்பெஸ்ட்டில் நடந்த இரகசியக் கூட்டம்! - அம்பலப்படுத்துகிறது தி கார்டியன். [saturday 2014-08-09 09:00] இலங்கையில் 2009ம் ஆண்டு போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டவுடன் பிரித்தானிய அதிகாரிகளையும் இலங்கையின் இராணுவ ஆலோசகரையும் அழைத்து வடஅயர்லாந்து பொலிஸார் கூட்டம் ஒன்றை நடத்தியதாக தி கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வட அயர்லாந்தின் பொலிஸ் சபை இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. அயர்லாந்து அரசாங்கத்தின் சட்டத்தரணிகளின் தகவல்படி பெல்பெஸ்ட்டில் 2009ம் ஆண்டு ஜூன் 18ம் திகதியன்று இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. எனினும் இதுவரை இந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் ஒத்துழ…
-
- 0 replies
- 448 views
-
-
புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவரை இலங்கைக்கு நாடுகடத்துவதை தடுத்து நிறுத்தியது அவுஸ்ரேலியா! [saturday 2014-08-09 08:00] விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவருக்கு அவுஸ்ரேலியா புகலிடம் வழங்கியுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் சுவர்ணராஜா பூர்ணராஜா என்பவரை மலேசிய அதிகாரிகள் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தத் தீர்மானித்திருந்தனர். எனினும், அவரை நாடு கடத்துவதற்கு அவுஸ்ரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சுவர்ணராஜாவிற்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக…
-
- 0 replies
- 518 views
-
-
வவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்களுக்கான விடுதியை திறந்து வைத்தார் முதல்வர்! [saturday 2014-08-09 00:00] வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, வைத்திய நிபுணர்களுக்கான 3 மாடிகளைக் கொண்ட விடுதியை நேற்றுக் காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட 22 மில்லியன் ரூபா கொடை நிதியில் இந்த மூன்றுமாடி விடுதிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா, வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அ…
-
- 0 replies
- 258 views
-
-
"எப்பிடி? யாழ்ப்பாணம் டெவலப் ஆகிட்டுது பாத்தீங்களா?" ஒவ்வொரு முறை யாழ் செல்லும்போதும் யாராவது ஒருவரேனும் இப்படிக் கேட்பது வழமை. ஒரு நகரத்தின் அபிவிருத்தி முதலில் வீதிகளில் தெரியவேண்டும் என்கிற நம்பிக்கையின்படி அகலப்படுத்தப்பட்ட சீரான வீதிகள், தற்போது ஓரிடத்தில் மட்டுமே உள்ள ரோட் சிக்னல், வீதிக் குறியீடுகள், பாதசாரிகள் கடவை என இம்முறை உண்மையான வளர்ச்சி சற்றே தெரிந்தது. அவசரமான ஒரு யாழ் பிரயாணம். நான்குநாட்கள் தங்கிநின்ற முழுநேரமும் வேலையாக இருந்ததால் பார்க்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை. இடையிடையே அயலவர்களுடன் மட்டும் பேச முடிந்தது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் பார்த்ததை விட நகரப்பகுதி மாறியிருந்தது. சில இடங்கள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தது. …
-
- 1 reply
- 748 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குமரன் பத்மநாபனை விசாரணை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்கெனவே தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. இவ்வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த குமரன் பத்மநாபனை சிபிஐ தேடி வந்தது. கடந்த 2009-ல் மலேசியாவில் தலைமறைவாக இருந்த அவர் இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். பின்னர், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போது, பத்மநாபன் இலங்கையி…
-
- 0 replies
- 257 views
-
-
காணாமற்போன மகன் குறித்து தாய் வழங்கிய ஆதாரத்தை அலட்சியப்படுத்திய ஆணைக்குழு! [saturday 2014-08-09 09:00] அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாட புத்தகத்தில் கூட எனது மகனின் படம் இருக்கும் போது, எப்படி எனது மகனை காணவில்லை என்று அரசு கூறுகின்றது என மகனை காணாது கதறும் தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் கேள்வி எழுப்பியுள்ளார். மன்னாரில் நேற்று நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப் பதிவுகளின் போது. தாயொருவர் சாட்சியமளிக்கையில், எனது மகனை 2007 இல் இயக்கம் பிடிச்சது. பிறகு நாங்கள் போனபோது காட்டவில்லை. பின்னர் 2நாள் பார்த்தம். சண்டை தொடங்கிவிட்டது மகனை காணவில்லை . அரசாங்கத்தினால் வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான புத்தகத்தில் எனது மகனின் படம் உள்ளது. அதனையடுத…
-
- 0 replies
- 251 views
-
-
செல்லப்பிராணிகளுக்கு புதிய சட்ட மூலம் news செல்லப்பிராணிகளை வீட்டில் அல்லது விற்பனை செய்யும் கடைகளில் வைத்திருப்பது தொடர்பிலான புதிய சட்ட மூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர்எச். ஆர்.மைத்திரிபால இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் புதிய சட்டமூலமானது செல்லப்பிராணிகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கக்கூடியதாக அமையும். இது சட்ட வரைஞர் திணைக்களம் மூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். பாதைகளில் பிச்சைக்காரர்களும் அவர்களுடன் இருக்கும் தெரு நாய்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்…
-
- 0 replies
- 313 views
-
-
ரணில் - கரு - சந்திரிக்கா -இந்தியப் பிரதமரை சந்திப்பதில் ஆர்வம்? 09 ஆகஸ்ட் 2014 எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காப பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவை தலைவர் கரு ஜயசூரிய ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆர்வம் காட்டி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த மூவருமே, மோடியை சந்திப்பதற்கு விரும்புவதாக இந்திய அரசாங்கத்திடம் அறிவித்துள்ளனர். சந்திப்பு நடாத்த நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு இந்த மூன்று பேரும் முயற்சித்து வருவதாகவும், அதன் ஓர் கட்டமாக இ…
-
- 0 replies
- 368 views
-
-
அரசியலமைப்புச் சட்டவிதிகளின்படி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு விதிகளின்படி, மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமையற்றவர். 2010 நொவம்பர் 19ம் நாள், அரசியலமைப்பின் 31/2 வது பிரிவுக்கமையவே இரண்டாவது பதவிக்காலத்துக்காக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதால், மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை. பின்னர், இரண்டாவது பதவிக்காலத்தில் உள்ள ஒருவர், மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று, அரசியலமைப்பில் 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டது . எவ்வாறாயினும், மகிநத ரா…
-
- 0 replies
- 428 views
-
-
முள்ளிவாய்க்கல் படுகொலையில் உலகை ஏமாற்றும் அரசாங்கம் மாந்தை புதைகுழியில் நியாயம் தருமென நம்பவில்லை! அனந்தி மூன்று தசாப்தங்களிற்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர். இவற்றுக்கு பலரது முகவரிகள் இன்னும் கண்டு கொள்ளப்படவில்லை. பல்வேறு விதமான இடப்பெயர்வு சூழல்கள் இதற்குகாரணமாக அமைந்துவிட்டன. அதில் ஒன்றாகவே மன்னார் மாந்தை திருக் கேதீச்சரம் மனிதப் புதைகுழியையும் கருதவேண்டியுள்ளது. 1999ம் ஆண்டு 07ம் மாத முற்பகுதியில் ‘ரணகோச இராணுவ நடவடிக்கை’ தீவிரப்படுத்தப்பட்டு மக்களை பல்வேறு துன்பங்களுக்கு உட்படுத்தி இடம்பெயர செய்த காலத்தில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் வெளி மாவட்டங்களுக்கு துண்டிக்கப்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளுடைய…
-
- 0 replies
- 533 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என முன்ளாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அரசியல் சாசனத்தின் 31-2 என்ற பிரிவின் அடிப்படையில் இரண்டாம் தவணைக்காக ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் மூன்றாம் தவணைக்காக போட்டியிடும் தகுதியை ஜனாதிபதி இழந்துள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 879 views
-
-
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழுவின் நியமனமானது ஏமாற்றுத்தனமான செயற்பாடு என்பதுடன் அரசாங்கம் நியாயமான விசாரணையொன்றை நடத்தும் என நாம் நம்பத்தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதென மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது, காணாமல் ப…
-
- 0 replies
- 336 views
-
-
Posted on : Tue Apr 8 9:10:00 2008 சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி சிறந்த பெறுபேற்றைப் பெற உதவியது 10 "ஏ' சித்தி பெற்ற மாணவி ஜெயதர்சினி சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி நாம் சிறந்த பெறு பேறு களைப் பெற உதவியது. பரீட்சை நடைபெற்ற வேளையில் பரீட்சை எழுதிவிட்டு மண்டபத்தை விட்டுவெளியேறும்போதுஅந்தப் பாடத்திற்கு"ஏ' சித்தி கிடைக்குமென நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. எனது நம்பிக்கையினை மென்மேலும் வளர்க்க ஒரு பொறியியலாளராக வந்து மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும். ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் பத்து பாடங்களிலும் அதி சிறப்பு பெறுபேறுகளைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி செல்வி ஜெயகணேசன் ஜெயதர்சினி மேற்கண்டவாறு தனது விருப்பத்தினை வெளிப்ப டுத்தினார். சாவகச…
-
- 21 replies
- 3.6k views
-
-
வடக்கு மாகாணத்திற்கு 5000 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நிதி தந்துவிட்டதாக மத்திய அரசாங்கம் தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், பெரும் பகுதி நிதி தரப்படவில்லை. அதனை, மத்திய அரசாங்கமே வைத்து விளையாடுகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா, ஓமந்தை, நவ்வி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச வைத்தியசாலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாணம் என்பது சிறிய பிரதேசம் இல்லை. பலவிதமான இடங்கள், தொழில்கள், சூழல்கள், மக்கள் கூட்டங்கள், இயற்கை வளங்கள் என்று பரந்து கிடக்கும் ஐந்து மாவட்டங்களின் சேர்க்கை. சில சந்தர்பங்களில் 40, 50 …
-
- 1 reply
- 435 views
-
-
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகளின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றில் 80 வீதமானவற்றை அரசு ஏற்றுக்கொண்டது. எனினும், அவற்றுக்கு எதிராகவும் அரச கூட்டணிக்குள் பிரச்சினைகள் எழத்தான் செய்தன. இதனால்தான் இவை குறித்து பொதுக் களத்தில் கலந்துரையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாகாண சபைகளும் அதிகாரங்களை முழுமையாகப் பெற்றிருக்கவில்லை. அந்த வகையில், வடமாகாணத்திற்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தி முன்நோக்கிச்செல்வதே சிறந்தது. மாறாக இருக்கும் அதிகாரங்களை விடுத்து, "ஒன்றுமே இல்லை... இல்லை எனக் கூறுவது பொருத்தமற்றச் செயலாகும்." - வெளிவிவகார அமைச்சர் பேராசிரி…
-
- 2 replies
- 552 views
-