ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
தமிழ், - சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும் முஸ்லிம்களுக்கு பிறிதொரு சட்டமும் ஒரே நாட்டில் செயற்படுவதன் காரணத்தினாலேயே முஸ்லிம் தீவிரவாதம் பரப்பப்படுகின்றது. தேர்தலில் வாக்களிப்பின்போது முஸ்லிம்கள் நிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டமை எமக்கு கிடைத்த வெற்றியாகும் என்று ஜாதிக ஹெலஉறுமய தெரிவித்தது. ஜாதிக ஹெல உறுமயவினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; இந்த நாட்டில் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு சட்டமும் தமிழ்…
-
- 0 replies
- 297 views
-
-
வடமாகாண விவசாய அமைச்சினால் கிலோ 10 ரூபாவுக்கு பார்த்தீனியம் கொள்வனவு என்ற திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பார்த்தீனியம் அழிப்பு நடவடிக்கையில் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 634 கிலோ பார்த்தீனியச் செடிகள் பொதுமக்களினால் அழிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, மூன்று கட்டங்களாக இடம்பெற்று வந்தது. முதல் கட்டத்தில் 9 ஆயிரத்து 230 கிலோகிராம் பார்த்தீனியமும், இரண்டாம் கட்டத்தில் 27 ஆயிரத்து 470 கிலோகிராம் பார்த்தீனியமும், மூன்றாம் கட்டத்தில் 73 ஆயிரத்து 934 கிலோகிராம் பார்த்தீனியமும் பொதுமக்களிடம் இருந்து கிலோ 10 என்ற ரீதியில் கொள்முதல் செய்யப்பட்டது. முதல…
-
- 0 replies
- 387 views
-
-
எஸ்.கார்த்திகேசு கிழக்கு மாகாணத்தில் நான்காவது கண்ணகி கலை விழா இன்று வெள்ளிக்கிழமை காலை விழாக்குழு தலைவரும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வண்ணக்கருமான வண்ணியசிங்கம் ஜெயந்தனின் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது. இவ் இலக்கிய விழாவானது இன்று முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடம்பெறவுள்ளது. ஆரம்ப நாளான இன்று (1) பண்பாட்டு பவனி, திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தினை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கூலவாணிகன் சாத்தனார் அரங்கில் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண பண்பாட்டு…
-
- 0 replies
- 430 views
-
-
தமிழ் ஊடகவியலாளர்களால் ஆபத்து: அவர்களை தொடர்ந்து கண்காணிப்போம்: சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு ஆக 1, 2014 தமிழ் ஊடகவியலாளர்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இதனால் தமிழ் ஊடகவியலாளர்களை அரசாங்கம் தொடர்ந்தும் கண்காணிக்கும் என்றும் கடும்தொனியில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்புக்கு வந்தவர்கள் உண்மையிலேயே ஊடகவியலாளர்களா அல்லது கஞ்சா கடத்துபவர்களா என்றும் அவர் ஊடகவியலாளர்களை ஏளனம் செய்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஹெகலிய இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கின்றார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை…
-
- 0 replies
- 368 views
-
-
வாக்களிக்கும் போது நிகாபுக்கு தடை: மஹிந்த உறுதி என்கிறது ஹெல உறுமய வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014 தேர்தல்களில் வாக்களிக்கும் போது முஸ்லிம் பெண்கள் நிகாப் - ஹிஜாப் அணியவே முடியாது என்றும் காதுகளை மூடிய அடையாள அட்டையும் செல்லுபடியாகாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், கட்சிகளின் செயலாளர்களுக்கான விசேட கூட்டம், தேர்தல்கள் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் நான் கலந்துகொண்டு வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வருகின்ற முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தைமூ…
-
- 0 replies
- 339 views
-
-
புலிகள் பயன்படுத்திய வெளிநாட்டு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ராஜதந்திரிகள் கோரினர்: 01 ஆகஸ்ட் 2014 கெஹலிய:- யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட வேண்டாம் என சில ராஜதந்திரிகள் கோரியிருந்தனர் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாட்டு ஆயுங்களைப் பயன்படுத்தியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மற்றும் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயதங்களின் மூலம் இந்த வி…
-
- 0 replies
- 459 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்புப் பிரிவு வன்னியில் பரவலாக தேக்குமரங்களை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டன. அவ்வாறு நாட்டப்பட்டட மரங்கள் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இராணுவத்தினருக்கான முகாம் அமைக்கும் நோக்கில் இயற்கை காடுகள் அமைந்த பகுதிகளில் உள்ள மரங்களை இராணுவத்தினர் அழித்து வருகின்றனர். ஏ-9 பாதையில் மாங்குளத்திற்கும் பனிக்கன்குளத்திற்கும் இடையில் இராணுவத்தினர் தேக்குமரங்களை எரித்திருப்பதை மேற்குறிற் புகைப்படங்களில் காண முடியும். இவ்வாறே இந்தப் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் எரிக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறுகிறார். இவ்வாறு காடுகளுக்கஜ வைக்கப்பட்ட தீயினால் பயன்தரு வீட்டு மரங்கள் சிலவும் எரியுண்டு காட்சி அளிக்கின்றன. இதேவேளை முல்லை மாங்க…
-
- 0 replies
- 561 views
-
-
"கத்தி", "புலிப்பார்வை" திரைப்படங்கள் தமிழர்களுக்கு எதிரான போர்!" - திருமுருகன் காந்தி ஆவேசம் [Thursday 2014-07-31 21:00] திருமுருகன் காந்திஇனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் நெருங்கிய கூட்டாளியான 'லைக்கா மொபைல்ஸ்' நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கும் 'கத்தி', ஈழ விடுதலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் தயாரிக்கும் 'புலிப்பார்வை' ஆகிய படங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இப்படங்கள் தயாரிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமுருகன் காந்தி, "தமிழ் திரையுலகின் வழியாக தமிழர்கள் மீது உளவியல் - பொருளியல் - கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் போராக இலங்கை - இந்திய அரசினால் நிகழ்த்தப…
-
- 2 replies
- 961 views
-
-
வடக்கு கிழக்கு கைத்தொழிலாளர்களுக்கு ஊக்கம் வழங்கி உள்ளூர் உற்பத்தியை ஊக்கிவிக்கவேண்டும் .இதற்கு அரசும் தனியாரும் முக்கிய பங்காற்றவேண்டம். அதுமட்டுமின்றி பல்கலைக் கழகங்களும் கைத்தொழில் ஊக்குவிப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியமாகும். இதன்மூலம் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் பாரம்பரியங்களையும் பேணவேண்டும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதவமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். வடமாகாணக் கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கைத்தொழில் கண்காட்சி இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கண்காட்சிக்கூடத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- கூட்டுறவ…
-
- 0 replies
- 297 views
-
-
அவுஸ்ரேலியா தடுத்து வைத்துள்ள 80 வீதமான அகதிகளுக்கு மனஅழுத்த நோய்! [Thursday 2014-07-31 18:00] ஒரு மாதகாலமாக கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, தற்போது அவுஸ்ரேலிய கேர்ட்டின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 153 இலங்கை தமிழ் அகதிகளில் 80 வீதமானவர்கள் மனஅழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதாக கிறீன் கட்சியின் செனெட்டர் சரா யங் தெரிவித்துள்ளார். மன நல மருத்துவர்கள் தாங்கள் மதிப்பீடு செய்த 5 அகதிகளில் நால்வருக்கு மன அழுத்தங்களும் உடற்காயங்களும் காணப்பட்டதாக தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக இவர்களின் பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வினை குடிவரவு அமைச்சர் மொரிசன் வழங்க வேண்டும் இல்லை என்றால் இவர்களின் நிலைமை மிகவும் பாதிப்படையலாம் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 353 views
-
-
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்! [Thursday 2014-07-31 18:00] சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி இன்று நண்பகல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும், பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஊடகவியலாளர்களை சிறையிலடைக்கும் அரசினது சதி முயற்சிகளைக் கண்டித்தும் இந்தப் போராட்டத்தில் குரல் எழுப்பப்பட்டது. கஞ்சாவுடன் சென்றனர் எனக்கூறி கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஓமந்தைப் பகுதியில் ஊடகவியலாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது குறிப்…
-
- 0 replies
- 1k views
-
-
நல்லூர்க் கந்தனின் கொடிச்சீலை சிவாச்சாரியாரிடம் ஒப்படைப்பு! [Thursday 2014-07-31 18:00] வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான கொடிச்சீலை இன்று எடுத்து வரப்பட்டது. சம்பிரதாய முறைப்படி ஆண்டுதோறும் நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவத்துக்கான கொடிச்சீலை, செங்குந்த மரபு மக்களால் உற்சவத்துக்கு முதல்நாள் கையளிக்கப்படுவது வழமை. வழமைபோன்று இராமலிங்கம் வீதியில் அமைந்துள்ள கொடிச்சீலை உபயகாரரின் இல்லத்தில் இருந்து காலை 7.30 மணியளவில் மங்கள வாத்தியங்களுடன் எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வேல்முருகன் கொடித்தேர் மடத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் சந்நிதியில் வைத்து விசேட பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்…
-
- 0 replies
- 340 views
-
-
(ஆதவன்) சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும், பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஊடகவியலாளர்களை சிறையிலடைக்கும் அரசினது சதி முயற்சிகளைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். ஊடகவியலாளர்கள் கஞ்சாவுடன் சென்றனர் எனக்கூறி கடந்த வெள்ளிக்கிழமை (25) இரவு ஓமந்தைப் பகுதியில் ஊடகவியலாளர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், த…
-
- 0 replies
- 399 views
-
-
சட்ட விரோதமாக புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகளை கடத்திய விடயம் தொடர்பாக, அவுஸ்திரேலியாவிடமிருந்து உத்தியோக பூர்வமான வழியில் சில தகவல்களை எதிர்பார்த்திருப்பதாக புதுச்சேரியின் புதிய தலைமை பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ்மா அதிபர் பிரவீன் ரஞ்சன் தெரிவித்தார்;. புகலிட கோரிக்கையாளர், புதுச்சேரி கரையிலிருந்து படகில்; புறப்பட்டு சென்றதாக பலர் கூறினும் இவர்களை யாரும் காணவில்லை. இது இவ்வளவு இரகசியமாக எவ்வாறு நடந்ததென்பது பொலிஸாருக்கும் தெரியவில்லை. இதனால்தான் நீங்கள் எங்களிடமிருந்து உத்தியோகபூர்வ அறிக்கையை பெற முடியாது என அவர் கூறினார். தற்போது அரசாங்க வழியில் சில தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறிய ரஞ்சன், இந்த தகவலின் அடிப்படையில் குறித்த ஒரு படகின் மீது ஒரு வழக…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபை தொடர்பில் யாழ். மாநகர சபையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது சபையில் முதல்வர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளை யாழ். மாநகர சபை உதாசீனம் செய்து வருதாக உறுப்பினரான சோதிலிங்கம் சபையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்து உரையாற்றினார். நான் பதவியேற்றதில் இருந்து எமது பகுதியில் உள்ள வீதிகளை புனரமைத்துத் தருமாறு கேட்டு வருகின்றேன். எனினும் அவற்றில் முக்கியமான வீதிகள் இன்னும் புனரமைத்து தரப்படவில்லை. இந்த விடயத்தில் முதல்வர் புறக்கணித்து வருகின்றார் என்றார். அதன்போது குறுக்கிட்ட முதல்வர், இது அரசியல் பேச்சு இல்லை. பர…
-
- 0 replies
- 381 views
-
-
மட்டக்களப்பு முஸ்லிம்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தால் பதவி விலகுவேன்! - பசீர் சேகுதாவூத் [Thursday 2014-07-31 18:00] மட்டக்களப்பில் கடந்தமுறை மகிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குறைந்து போனால், தாம் அமைச்சர் பதவியை விட்டு விலகுவேன் என்று அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹ…
-
- 0 replies
- 358 views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் பங்களாதேஷ் போர்க்கப்பல்கள்! [Thursday 2014-07-31 18:00] பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. ஒஸ்மான் மற்றும் மதுமதி ஆகிய இரண்டு போர்க் கப்பல்களே இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.ஒஸ்மான் என்ற கப்பலில் 250 கடற்படையினரும், மதுமதி என்ற கப்பலில் 70 கடற்படையினரும் வருகை தந்துள்ளனர். இந்த இரண்டு கப்பல்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்குமென தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=114115&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 268 views
-
-
யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி! - நாளையும் பார்வையிடலாம். [Thursday 2014-07-31 18:00] வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கைத்தொழில் கண்காட்சி இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந்தநிகழ்வில் கைத்தறி நெசவு உற்பத்திப் பொருட்கள்,மட்பாண்ட உற்பத்திப் பொருட்கள்,சிற்பியிலான கைப்பணிப் பொருட்கள்,பனை தெங்கு சார் உற்பத்திப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சி நாளையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் மற்றும்…
-
- 0 replies
- 845 views
-
-
யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்வதற்காக அவசரமாகத் தயாராகும் நாவற்குழி ரயில் பாலம்! [Thursday 2014-07-31 18:00] வரும் செப்ரெம்பர் மாதம், யாழ்ப்பாணம் வரை ரயில் சேவைகள் விஸ்தரிக்கப்படவுள்ள நிலையில், நாவற்குழி ரயில் பாலம் அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. யுத்த காலத்தில் முற்றாகச் சேதமடைந்த இந்தப் பாலம் சுமார் 210 மீற்றர் நீளம் கொண்டதாகும். இந்த பாலம் தற்போது நவீன இயந்திரங்களின் உதவியுடன் துரிதமாக அமைக்கப்பட்டுகிறது. அத்துடன் நாவற்குழி ரயில் நிலையம் அழகு மிகுந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புகையிரத நிலைய மேடைக்கு கற்கள் பதிக்கும் வேலைகள் இடம்பெற்று வருகிறன. இந்தப் பணிகள், அடுத்த ஓரிருவாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
வல்வெட்டித்துறை நகராளுமன்ற சபையை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த திங்களன்று விடுவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டோருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக அறியவந்தது. சபை இடைநிறுத்தப்பட்டதால் நகராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முதலமைச்சர் ஒப்படைத்திருக்கின்றார். வல்வெட்டித்துறை நகர சபையில் முதல்வர் அனந்தராஜுக்கு எதிராக அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவர் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்தமையை அடுத்து, சபையின் வழமையான செயற்பாடுகளுக்குரிய சம்பளக் கொடுப்பனவு மற்றும் அத்தியாவசிய செலவினங்கள் …
-
- 2 replies
- 577 views
-
-
பிரமந்தனாறுக்குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவரை இழுத்துச் சென்றது முதலை? [Thursday 2014-07-31 09:00] கிளிநொச்சி, பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை, முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தர்மபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பழனி பன்னீர்ச்செல்வம் (வயது 42) என்பவர் நேற்று கிளிநொச்சி, பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் தங்களுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குளத்தில் அவரை தேடி வருவதாக பொலிஸார் கூறினர். இவரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாமென்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=114…
-
- 3 replies
- 447 views
-
-
மத்திய அரசு எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு பலவித நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் கூட்டுறவே அத்தடைகளை உடைத்தெறிந்து முன்னேற வழிவகுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண சபையின் கீழான கூட்டுறவு சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:- மத்திய அரசாங்கத்திற்கும் எமக்கும் சில விடயங்களில் ஒருங்கிணைந்த அதிகாரங்கள் இருப்பினும் உள்ளூராட்சி, கூட்டுறவு பற்றிய விடயங்களில் எமக்குப் போதிய அளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதை நாம் மறத்தலாகாது. போரினால் பாத…
-
- 4 replies
- 562 views
-
-
சூறாவளி, சுனாமி போன்றவற்றால் உருவான இடம்பெயர்வுகள் இலவசமாக கையேந்துவதற்கு பழக்கியுள்ளதாக மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார். வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் உக்டா நிறுவனத்தால் Head Way எனும் ஆங்கில கல்வி அமைப்பு ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் Let's go எனும் ஆங்கிலக் கல்லூரியில் தரம் – 02 ஐ பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (29) முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'எதிர்கால கல்வி நிலைக்கு ஆங்கிலம் மற்றும் கணினி மிக முக்கியமானவை. இவையின்றி எந்தவித தொழிலும் செய்யமுடியாத சூழல் எதிர்காலத்த…
-
- 1 reply
- 477 views
-
-
யாழ்.நீர்வேலிப் பகுதியில் . வெடிமருந்துகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த 36 அகவையுடைய ஆசைப்பிள்ளை சசீந்திரன் என்பவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலி காவல்துறை அறிவித்துள்ளது. அத்துடன், மேற்படி நபரிடமிருந்து 23 கிலோ 270 கிராம் ரி.என்.ரி வெடி மருந்தினையும் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/44746/64//d,fullart.aspx
-
- 2 replies
- 560 views
-
-
-எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை (01) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்திற்கான கொடிச்சீலை வியாழக்கிழமை (31) எடுத்து வரப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலையினை செங்குந்தர் மரபு வழியில் வந்தவர்களே உருவாக்கி ஆலயத்திற்கு வழங்குவது வழமை. அந்தவகையில், இவ்வருடத்திற்கான கொடிச்சீலை செய்வதற்காக காளாஞ்சி கடந்த 22 ஆம் திகதி ஆலய பிரதம குருவினால், கொடிச்சீலை தயாரித்து வழங்குபவர்களிடம் வழங்கப்பட்டது. அந்தக் காளாஞ்சி பெற்றுக்கொண்டவர்கள், கொடிச்சீலையினைத் தயாரித்து, சட்டநாதர் சிவன்; ஆலயத்திற்கு அருகிலுள்ள வேல்மடம் முருகன் கோவிலில் இருந்து சிறிய ரகத் தேரில் கொடிச்சீலையினை எடுத்து வந்து,…
-
- 1 reply
- 352 views
-