Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம் சமூகத்தின் மிகவும் உன்னதமான விரதமாக நோக்கப்படும் நோன்புவிரதம் "இப்தார்" என புனித திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. இதை நான் புனித மத அனுஷ்டானமாக மதிப்பதனால்தான் எந்த ஒரு இப்தார் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேட்டபோது அது தொடர்பாக அரியம் எம்.பி. கூறியவை வருமாறு:- ஒவ்வொரு மதமும் அவர்களின் மத சம்பிராயங்களுடனும் பக்தியுடனும் வழிபாட்டுடனும் நோன்பு நோத்து அந்த உன்னத விரதத்தை பூர்த்தி செய்வது அந்தந்த…

    • 0 replies
    • 542 views
  2. இலங்கை அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. புனித ரமழான் நோன்பு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒரு மாத கால நோன்பை முடித்து கொண்டாடுவதற்கான தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டு;ள்ளார். அனைத்து மதங்களை மதிக்கக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அனைத்து இஸ்லாமிய தோழர்களுக்கும் ஈதுல் பிதர் வாழ்த்தக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/…

  3. திட்டமிட்ட குழுவொன்று நாடு முழுவதும் இன்று அதிகாலை சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இருளை எதிர்க்கும் உங்களுக்கு என அதில் எழுதப்பட்டுள்ளதுடன் கீழ் பகுதியில் முதலாம் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் யாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன என்பது தெரியவில்லை. http://tamil24news.com/news/archives/176907

  4. அமெரிக்காவில் மருத்துவத் துறையின் உயர் பொறுப்பை வகிக்கும் முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையை இந்தியர் பெற்றார்! [Monday 2014-07-28 16:00] அமெரிக்காவின் மிசிசிபி மாகாண மனநல மருத்துவ வாரியத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சம்பத் சிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் மருத்துவத் துறையின் உயர் பொறுப்பை வகிக்கும் முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையை சம்பத் சிவாங்கி பெற்றுள்ளார். அடுத்த ஓராண்டு அவர் இப்பதவியில் இருப்பார். முன்ன தாக மாகாண மருத்துவ வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக சம்பத் சிவாங்கி இருந்தார். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஆலோசகராக வும் சம்பத் சிவாங்கி பணியாற்றியுள்ள…

  5. வடக்கில் 400 பாடசாலைகளில் 80க்கும் குறைந்த மாணவர்களே கல்வி கற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள 400 பாடசாலைகளில் இவ்வாறு 80க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்று வருவதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 162 பாடசாலைகளில் 50 முதல் 80 வரையிலான மாணவ மாணவியரே கல்வி கற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளது. மேலும் 250க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஐம்பதை விடவும் குறைவான மாணவ மாணவியரே கல்வி கற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. யுத்தம் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்தமையே இவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் ஆசிரியர்கள் விகிதாசாரத்திலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக…

  6. வவுனியா வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்! - மாணவி உள்ளிட்ட மூவர் காயம். [Monday 2014-07-28 18:00] யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர். மோதல் சம்பவத்தில் மாணவி ஒருவர் உட்பட மூவர் காயமடைந்தனர். இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=113954&category=TamilNews&language=tamil

  7. தமிழரசுக்கட்சிப் பொறுப்பினை ஒப்படைக்க விரும்புகிறேன் – சம்பந்தன்! அரசாங்கம் ஏனைய கட்சிகளைப் பிரித்து, துருவப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த நினைக்கின்றது. அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்த முனைகின்றது. கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒரு போதும் பலிக்காது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட ஓர் கட்சியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்…

  8. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணை ஒன்றை நடத்துவதற்கு பெரும்பாலும் எந்த ஆசிய நாடும் இடமளிக்காது என்று கூறியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இது சந்தர்ப்ப வசத்தாலோ அல்லது விபத்தாகவோ வந்த விடயம் அல்ல என்றும், இந்த நாடுகளை அத்தகைய தீர்மானத்துக்கு வருவதற்கான இணக்க நிலைக்கு இலங்கை அரசே வரவழைத்தது என்றும் கூறினார். கடந்த வார இறுதியில் குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். மேற்குலகின் அரசியல் நலன்களுக்காக இலங்கை மீது திணிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அநீதியானது என்பதில் பூமிப் பந்தின் பெரும்பாலான நாடுகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளன என்றார் அவர். எங்கள் நா…

  9. அமெரிக்காவை வளைத்துப்போட ஒபாமாவின் நண்பர் இமாட் யுபேரியை நாடுகின்றது அரசு! [Monday 2014-07-28 08:00] இலங்கை தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக ஜனாதிபதி ஒபாமாவின் நெருங்கிய நண்பர் ஒரு வரை அரசு பயன்படுத்த முனைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் நண்பரான இமாட் யுபேரி ஒரு பாகிஸ்தானியர் எனவும் ஒபாமாவுக்கான தேர்தல் நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் எனவும், அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்காக இலங்கை அரசு அவரை அணுகி உள்ளது எனவும் தெரியவருகிறது. சர்வதேச அரங்கில் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் அரசு பெருமளவு பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது.. இலங்கை அரசு நான்கு ந…

  10. ஐ.எஸ். ஐ இன் விருப்பப்படி இந்தியாவின் தென்பகுதியில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய உபதூதரகங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக திட்டமிடுவதில் பிரதான பங்கு வகிப்பவராக கூறப்படும் கொழும்பிலுள்ள பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி பற்றி இந்தியா, இலங்கைக்கு தகவல் அனுப்பவுள்ளது. இரண்டு நாடுகளும் 2012 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் இந்த தகவல் பகிர்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை பிரஜையான சகிர் உஷைன் புலனாய்வு பணியகத்தின் தகவலின் அடிப்படையில் தமிழ் நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது சென்னையிலுள்ள அமெரிக்க உப-தூதரகத்தையும் பெங்களூரிலுள்ள இஸ்ரேலிய உப-தூதரகத்தையும் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்…

  11. தமிழின வளர்ச்சிப்பணிகள் இனி தொடர்ந்து கொண்டே இருக்கும். மெல்ல மெல்ல தமிழ்ச்சமுதாய அடையாளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் அடையாளங்கள் அனைத்தும் இம்மண்ணில் மீள எழுச்சிபெறுவதற்கு பண்பான ஒழுக்கமுள்ள தூரநோக்கு சிந்தையுள்ள இளையசமுதாயமாக மாணவர்கள் நீங்கள் உருவாகவேண்டும் என்று மாணவர்களுக்கான கல்வி சார் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டம் கடந்த 2014-07-26 அன்று கா…

  12. சீனாவுடன் இந்தியா நெருக்கமாகி வரும் நிலையில், சீனா என்ற துருப்புச் சீட்டை வைத்து சிறிலங்காவினால் நீண்டகாலத்துக்கு இந்தியாவுடன் விளையாட முடியாது என்று அரசியல், மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சிறிலங்கா ஒன்றுக்கு இரட்டிப்பு மடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சீன விமானங்களைப் பழுதுபார்ப்பதற்கும், பராமரிப்பதற்குமான விமான பராமரிப்பு நிலையத்தை திருகோணமலையில், அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக, சிறிலங்கா அரசாங்கம் இதனை நிராகர…

  13. இலங்கையில் அல்குவைதா அமைப்போ அல்லது ஏனைய பயங்கரவாத அமைப்புகளோ தளங்களைக் கொண்டிருக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது பாதுகாப்பு அமைச்சு. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிக சூரிய, "வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் இலங்கையைத் தமது பயிற்சித் தளமாக வைத்திருக்கின்றன என்று பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறான குழுக்கள் இலங்கைக்குள் தமது நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு அரசு எந்தச் சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை. பயங்கரவாதம் எந்த வடிவமாக இருந்தாலும் பயங்கரவாதமே. முஸ்லிம்களோ, முஸ்லிம் குழுக்களோ இலங்கைக்குள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயன்றால் அதற்கு இடம் வழங்கப்படாது. விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வாறு தோற…

  14. தமிழ் ஊடகவியலாளர்களை சிறையில் அடைக்கும் சதி திட்டமே வவுனியா சம்பவம்! அனந்தி குற்றச்சாட்டு [Monday 2014-07-28 08:00] அரசாங்கம் தமிழ்மக்களின் நிலைப்பாடுகளை வெளியே கொண்டுவரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களை சிறையில் அடைக்கும் திட்டமிட்ட சதியாகவே ஓமந்தை சந்தர்ப்பத்தினை நோக்க வேண்டியிருப்பதாக கூட்டமைப்பின் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பினில் அவர் கருத்து தெரிவிக்கையில்... கடந்த பல தசாப்த காலமாக ஊடக அடக்குமுறை என்பது தமிழ் மக்களின் நியாய பூர்வமான போராட்ட நிலமைகளை வெளியில் கொண்டுவருவதனால் சர்வதேச ரீதியாக நியாய பின்புலம் கிடைத்துவிடும் என்பதனால் அரசாங்கம் ஊடகத்தணிக்கை, ஊடகக்கட்டுப்பாடு, இந்த இரண்டையும் விதி…

  15. புலம்பெயர்ந்தவர்களும் சாட்சிய மளிக்கலாம் என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல்! [Monday 2014-07-28 08:00] புலம்பெயர்ந்த இலங்கை பிரஜைகளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தமது சாட்சியங்களை அளிக்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரனகம தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் போது இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்பொருட்டு விசாரணைகளில் பங்கேற்பதற்கான அழைப்பாணைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை பதிவு செய்வத…

  16. வெள்ளை வான் பாவித்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் யாழ் பொலீசாரிடம் சிக்கியது! [Monday 2014-07-28 08:00] யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான்களில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் குறித்த கொள்ளைக் கும்பல், வீடுகளில் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, ஊர்காவற்துறை, கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் இரகசிய பொலிஸார் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் புகுந்து, குறித்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் குறித்த கொள்ளையர்கள் பொதுமக்…

  17. அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட போது, நடுக்கடலில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட 157 இலங்கை அகதிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. குறித்த 157 அகதிகளும் தமிழகத்தின் விழுப்புரம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச்சென்றதுடன் இவர்களில் 38 குழந்தைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் படகு மூலம் தப்பிச்சென்ற குறித்த அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டு சுங்கத் துறை கப்பலில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அகதிகள் 157 பேரையும் வடக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாமிற்கு மாற்ற முடிவு செ…

    • 2 replies
    • 942 views
  18. -ரீ.கே.றஹ்மத்தல்லா 'இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சவூதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டில் இருப்பவர்கள் போன்று சிந்திக்கக் கூடாது' என்று கட்டார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தீன்முஹம்மட் தெரிவித்தார். 'இலங்கையில் முஸ்லிம்களாக வாழ்கின்ற நாம் இலங்கை முஸ்லிம்களாக வாழ்வதற்கு மறந்து விடுகின்றோம். சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் மிகவும் சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று நாம் கூறமுடியாது. ஆனால் அந்த நிலைக்கு முஸ்லிம்கள்தான் காரணமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை உணருவதற்கு முஸ்லிம்களுக்கு காலம் தேவைப்படுகின்றது போல்தான் தென்படுகின்றது' என்றும் அவர் தெரிவித்தார். அக்கரைப்பற்று மாநகரசபை வளாகத்தில் சனிக்கிழமை(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் விசேட சொற்பொழிவாளராகக் கலந்துகொண்ட…

  19. இலங்கை கடற்பரப்பில் வைத்து எந்தவொரு இந்திய மீனவர்களது இறப்பு சம்பந்தமான வழக்குகளும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவாகவில்லையென இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மக்களவை கூட்டத்தொடரில் வைத்தே இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்திய மீனவர்களை தமது கடல்எல்லைக்குள் வைத்து தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை. எவ்வித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என்பதே உண்மை என மக்களவையில் வைத்து எழுத்து வடிவில் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதைவிடவும் இலங்கை இந்திய மீனவர்களுக…

    • 0 replies
    • 298 views
  20. திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாத என சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றில் சீன நிறுவனமொன்று விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அனுமதிப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய விவகாரங்களில் எடுக்கப்படு;ம் தீர்மானங்கள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சீன நிறுவனமொன்று இலங்கையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்ற போதிலும், அதன் அமைவிடமே சர்ச்சையை ஏற்படுத்…

    • 0 replies
    • 215 views
  21. கஞ்சா கடத்தியதாக ஊடகவியலாளர்களைச் சிறையில் தள்ள முற்பட்ட்முயற்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்களினால் பாதுகாப்பு தரப்பிற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டினை எவ்வாறேனும் விலக்கிக் கொள்ள, இலங்கை அரசு தற்போது அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அவ்வகையில் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஓமந்தை காவல்; நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை மீண்டும் நாளை விசாரணைக்கு சமூகமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமைய நிர்வாக குழு உறுப்பினர்களும் முன்னணி களச் செய்தியாளர்களுமான பாஸ்கரன், கஜீபன், கம்சனன், தர்சன், சொரூபன், மயூரதன் மற்றும் நியூமன் ஆகிய எழுவருமே மீண்டும் விசாரணைக்கு ஓமந்தை காவல்நிலையத்தினில் சமூகமளிக்க அழைப்…

    • 0 replies
    • 322 views
  22. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது பொருத்தமானதாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அது அரசாங்கத்திற்கே சாதக தன்மையை ஏற்படுத்தும் எனவும் தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் சம்பந்தன், நேரடியாக குறிப்பிட்டுள்ளார…

    • 0 replies
    • 260 views
  23. புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகளவானவர்கள் பொருளாதாரப் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அண்மையில் கடலில் வைத்து மீட்கப்பட்ட 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட நாட்களாக கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அண்மையில் மேற்கு அவுஸ்திரேலியாவின் குர்டெய்ன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு;ள்ளனர். இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் வ…

    • 0 replies
    • 295 views
  24. இன்றைய தினம் ஈகைத் திருநாளாம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என்னுடைய உளமார்ந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் உவகையடைகின்றேன். றம்ழான் மாதம் முழுவதும் பகல் வேளைகளில் உண்ணாமல், பருகாமல் பசித்திருந்து, இரவு வேளைகளில் இறைவனை நின்று வணங்கி ஒரு உன்னதமான கடமையினை நீங்கள் எல்லோரும் நிறைவேற்றி அதன் இறுதியில் பெருநாளைக் கொண்டாடுகின்றீர்கள். இந்துக்களும் கிறீஸ்தவர்களும் கூட விரதங்களுக்கு முக்கிய இடம் அளிக்கின்றார்கள்.வருடத்தில் சில நாட்களை ஒதுக்கி வைத்து வாழ்தல் கிறீஸ்தவ பண்பு.நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் எதுவும் உண்ணாமல் நீராகாரம் மட்டும் சிலகுறிப்பிட்ட வேளைகளில் அருந்தி நவராத்திரி ஒன்பது நாட்களையும் கந்த சஷ்ட…

    • 0 replies
    • 688 views
  25. ஞானசார தேரர் , சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்குகளைத் தடை செய்க! 24 மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள்! [Monday 2014-07-28 08:00] பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்குகளைத் தடை செய்யுமாறு கோரி 24 மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள் அமெரிக்காவிலுள்ள முகநூல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக தகவலகள் வெளிவந்துள்ளன. பொதுபல சேனாவின் முகநூலினை தடைசெய்யுமாறு கோரி சுமார் 50 இலட்சம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், பங்களாதேஷ் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோருடன் அடிப்படைவாதிகள் ஒன்றிணைந்தே இந்தக் கார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.