Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத்தின் திடீர் கொள்கை மாற்றத்திற்கான காரணம் என்ன என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. காணால் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழு ஒன்றிணை நியமித்துள்ளார். பிரித்தானியாவின் சட்ட வல்லுனர் சேர் டெஸ்மன் டி சில்வா தலைமையிலான மூவர் அட்ஙகிய நிபுணர் குழு இந்த நோக்கதிற்காக நியமிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழு தற்போது யுத்த கால இழப்புக்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை ந…

  2. இராணுவ உயர் அதிகாரி - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட தனிநபரின் பாவத்திற்காக, அவரைக் காப்பாற்றுவதற்காக படையினரும் முழுநாடும் பலியாக முடியாது என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரே அந்த பாவங்களுக்கு காரணமானவர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்…

  3. -எம்.றொசாந்த் எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் பகுதியிலுள்ள 50 ஏக்கர் காணியின் உரிமையாளர் தம்பிராசா மகேஸ்வரி இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார். யாழ்., மிருசுவில் ஆசைப்பிள்ளையேற்றத்திற்கு அருகில் படைமுகாம் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியினை சுவீகரிப்பதற்காக அதனை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவையாளர் திணைக்களத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) முன்னெடுக்கப்பட இருந்தது. இதனை, மகேஸ்வரியும், அவரது உறவினர்களும் இணைந்து போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தம்பிராசா மகேஸ்வரி மேற்கண்டவாறு…

    • 0 replies
    • 593 views
  4. ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்று, நடுக்கடலில் வழி மறிக்கப்பட்டு, அந்த நாட்டு அரசினால் சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 இலங்கையர்கள் தொடர்பான வழக்கில் அந்நாட்டு அரசாங்கம் உயர் நீதிமன்றில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவில் இருந்து 19 மணி நேரம் கழித்தே அரசு தாக்கல் செய்துள்ளது என்று ஏ.பி.சி. செய்திசேவை அறிக்கையிட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 7 ஆம் திகதி 157 இலங்கையர்கள் படகு மூலமாக பயணித்திருந்தனர். இவர்களை கடலில் வழிமறுத்த ஆஸ்திரேலிய ரோந்துப் படையினர் சுங்கத் திணைக்களத்துக்…

    • 0 replies
    • 354 views
  5. மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றப் பகுதியில் இராணுவத்தின் 52 ஆவது படைத் தலைமையகம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்ககாக, காணிகளை அளக்க வந்த அதிகாரிகள் உரிமையாளரின் எதிர்ப்பால் திரும்பிச்சென்றனர். தனியார் ஒருவருக்குச் சொந்தமான 53 ஏக்கர் காணியில் 3 ஏக்கர் தவிர்ந்த காணியை இராணுவத்தினர் சுவீகரித்து 52 ஆவது படைத் தலைமையகத்தை அதில் நிரந்தரமாக நிறுவியுள்ளனர். இந்த காணியை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அந்த காணியை அளப்பதற்கு நில அளவையாளர்கள் அங்கு சென்றனர். இதன்போது காணி உரிமையாளரும் பொதுமக்களும் அங்கு கூடி தமது எதிர்ப்பபை வெளிப்படுத்தினர். சம்பவ இடத்துக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர் பா.கஜதீபன், …

    • 0 replies
    • 379 views
  6. பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதேவேளை, பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் 'மோடியின் கீழ் இந்தியா' என்ற தொனிப் பொருளில் அவர் உரையாற்றவுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, மீனவர் பிரச்சினைகள் இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவர் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-0…

  7. கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்களைப் பிடுங்கி சாவகச்சேரி பொதுச்சந்தையில் மலிவு விலையில் விற்பனை செய்து வந்த சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்கள் கடந்த ஒரு வார காலமாக இரவு வேளைகளில் திருட்டுப் போவதாக குறித்த தோட்டங்களின் உரிமையாளர்களான விவசாயிகள், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். சந்தையில் 400 ரூபா தொடக்கம் 600 ரூபா வரையில் பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற போதும், ஒரு நபர் மட்டும் 150 ரூபாவிற்கு பச்சை மிளகாய்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அவதானித்த விவசாயிகள் மேற்படி சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவித்தனர். …

  8. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிடவேண்டும். இவ்வாறு கொழும்பில் வைத்து அவருக்கு அழைப்பொன்றை விடுத்தார் பாரதீய ஜனாதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி. பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் 'மோடியின் கீழ் இந்தியா' என்ற தொனிப் பொருளில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார். தமிழ் நாட்டிலோ தமிழ் நாட்டு தேர்தல்களிலோ இலங்கைத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. அவர்கள் தேர்தல்கள் மூலம் இதனை வெளிப்படு…

  9. பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழிற்சாலை அரைக்கும் இயந்திரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஹெரோயின் போதைப் பொருள்கள் நேற்றுமாலை கைப்பற்றப்பட்டுள்ளன. 3 பாரிய அரைக்கும் இயந்திரங்களில் இருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருட்கள் ஒருகொடவத்தை கொள்கலன் வளாகத்திலிருந்து சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.தொழிற்சாலை அரைத்தல் இயந்திரங்களின் எரிவாயு விநியோக கொள்கலன்களிலேயே ஹெரொயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஹெரொயின் போதைப்பொருளின் பெறுமதி 70 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.seith…

    • 3 replies
    • 391 views
  10. எம்.றொசாந்த் 'இந்த நாட்டைப் பிரிக்கத் தேவையில்லை. அதற்காக எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். அரசியல் தீர்வை ஏற்படுத்தவும் அதனை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் தயாரான நிலையில் இருக்கின்றோம்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது மாநாட்டின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில…

    • 10 replies
    • 816 views
  11. கூட்டமைப்பு கோட்டையை, அணுஆயுதம் கொண்டும் அழிக்க முடியாது! - வடமாகாண சபை உறுப்பினர் சிவமோகன் [Tuesday 2014-07-22 09:00] தேசிய தலைவரின் எண்ணங்களால் கட்டப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் கோட்டையை, கயவர்கள் அணுஆயுதம் கொண்டு தாக்கினாலும் அந்தக் அழிக்க முடியாது என்று வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய போதே வைத்தியகலாநிதி சி.சிவமோகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் முள்ளிவாய்க்காலுடன் முற்றிலும் முடிந்தது என எக்காளம் இட்டது சிங்களம். கொலைகாரன் விட்டுப்போன செருப்பு அவனை கா…

  12. பெருந்திருவிழாவுக்குத் தயாராகிறது நல்லூர்! [Tuesday 2014-07-22 09:00] பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் யாழ்.மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இதனையடுத்து மஹோற்சவ காலத்தில் பிரதட்டை அடிப்பவர்களுக்கு ஏதுவாக ஆலய சூழலிருந்த பழைய மணல் அகற்றப்பட்டு புதிய மணல் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றது. மேலும் ஆலயத்தின் நான்கு திசைகளிலுமுள்ள வீதிகளில் நிழல் பந்தல்களும் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. http://www.seithy.com/breifNews.php?ne…

  13. கனடாவுக்கான, இலங்கையின் புதிய தூதுவராகிறார் அசேல வீரக்கோன்! [Tuesday 2014-07-22 09:00] கனடாவுக்கான, இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக புதிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அசேல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரொட்னி பெரேரா, பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இந்த இரண்டு நியமனங்களுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=113552&category=TamilNews&language=tamil

  14. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த பெண் உறுப்பினரின் ஒருவரின் சிபாரிசுக் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியிலுள்ள செம்பாட்டுச் சுடலையில் சடலங்களை எரியூட்டுவதற்கு இராணுவத்தினர் அனுமதியளிப்பதாக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம்பிள்ளை இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார். யாழ்;., மிருசுவில், ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியில் 50 ஏக்கர் காணியினை இராணுவ முகாம் அமைப்பதற்காக நிலஅளவை செய்யவிருந்த நடவடிக்கை, போராட்டம் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இந்த 50 ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான இந்தப் பெண…

  15. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் படகு மூலம் வந்த சிறுவனுக்கு நிரந்தர விசா வழங்கியுள்ளார். எத்தியோப்பிய சிறுவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடிய மொரிசன், ஈற்றில் சிறுவனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமது நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விபரித்துள்ளார். எத்தியோப்பியாவில் இருந்து புறப்பட்டு கப்பலொன்றில் ஏறி 16 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்த சிறுவன், கடந்த சில மாதங்களாக மெல்பேர்ணில் வாழ்ந்து வருகிறான். மொரிசனின் உத்தரவு தமது உயிரைக் காப்பாற்றியிருப்பதாக எத்தியோப்பிய சிறுவன் குறிப்பிட்டான். சிறுவனின் சார்பில் பிரபல சட்டத்தரணி டேவின் மாண் வாதாடியிருந்தார். விசாக்கள் இல்லாமல் அவுஸ்திரேலியாவை அட…

  16. இராணுவ உயர் அதிகாரி - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:- இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயாhர் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட தனிநபரின் பாவத்திற்காக, அவரை காப்பாற்றுவதற்காக படையினரும் முழுநாடும் பலியாக முடியாது என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜ…

    • 0 replies
    • 554 views
  17. சிறிலங்காவின் பாதுகாப்பு இந்தியாவுக்கு முக்கியமானது என்று, பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், சிறிலங்கா அரசாங்கத்தின் காவலாளி முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் அலரி மாளிகையில், சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பாஜக உறுப்பினர்களின் குழுவொன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தது. இந்தச் சந்திப்பின் போதே, சிறிலங்கா அரசாங்கத்தின் காவலாளி சுப்பிரமணியன் சுவாமி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் போர்முடிவுக்கு வந்தது, இந்தியாவின் பாதுகாப்புக்கும், கூட அனுகூலமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியப் பெருங்கடல் விளிம்பு அமைப்பு, இதற்கு சிறிலங்காவின் மூலோபாய முக்கிய…

    • 1 reply
    • 354 views
  18. முஸ்லிம் பிரமுகர்கள் அரபு நாடுகளுக்கு பயணம்! சிங்கள அரசுக்கு எதிரான நடவடிக்கையா?! உம்ரா செய்­வ­தற்­காக சவூதி அரே­பியா சென்­றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உயர் மட்­டக்­கு­ழு­வினர் சில அரபு நாடு­களின் முக்­கி­யஸ்­தர்­களையும் இஸ்லாமிய ஒற்றுமைக்கான அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்­தித்து இலங்கை முஸ்­லிம் ­களின் பிரச்­சி­னைகள் குறித்து விப­ரித்துவரு­வ­தாக தெரிய வரு­கின்­றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், கட்­சியின் பிர­திச்­செ­ய­லாளர் நாய­கமும் கல்­முனை மாந­கர முதல்­வ­ரு­மான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னரும் சபையின் மு.கா.குழுத்­த­லை­வரும் கட்­சியின் சர்­வ­தேச விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­த…

    • 2 replies
    • 642 views
  19. தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையில் ஒரு வகையான இலைகளை போட்டு மீன்பிடித்ததாகக் கூறப்படும் 05 பேரை பருத்தித்துறை முனைக் கடற்பகுதியில் கடற்படையினரும் முனை மீனவர் சங்கமும் இணைந்து திங்கட்கிழமை (21) கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், இவர்களிடமிருந்து 03 படகுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். இந்தக் கடற்பரப்பில் ஒருவகையான இலைகளை போட்டு கணவாய் பிடிப்பதில் சிலர் ஈடுபடுவதாக முனை மீனவர் சங்கத்துக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் முனை மீனவர் சங்கத்தை சேர்ந்த இருவர் அங்கு சென்றனர். இதன்போது, இலைகளை போட்டு மீன்பிடித்ததாகக் கூறப்படும் 07 பேரை கைதுசெய்ய முயன்ற வேளை இருவர் தப்பியோடியுள்ளளனர். இந்த …

    • 0 replies
    • 398 views
  20. காரைநகரில் சிறுமிகளை வன்புணர்வுக்குட்படுத்திய கடற்படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டாம்! - ஜனாதிபதி சார்பில் உத்தரவு [Monday 2014-07-21 07:00] காரைநகரில் 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினருக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அவரது பாராளுமன்ற விவகார இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான குமாரசிறி ஹெட்டிகே, காவல்துறையினருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இரண்டு தடவைகள் குமாரசிறி ஹெட்டிகெ நெடுந்தீவு காவல…

  21. அரச தனியார் வங்கி பணியாளர்களுக்கான வரி நீக்கம் -மகிந்த உத்தரவு! ஜூலை 22, 2014 சிறீலங்காவின் அரச மற்றும் தனியார் வங்கி பணியாளர்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட விசேட வரியினை ரத்துசெய்யுமாறு மகிந்த றாஜபக்ச உத்தரவிட்டுள்ளார். 1857/8 என்ற விசோட வர்தமானி மூலம் விதிக்கப்பட்ட விசேட வரியினை மகிந்தறாஜபக்ச ரத்துசெய்யுமாறு நேற்ற அலரிமாளிகையில் வைத்து அறிவித்துள்ளார். தனியார் மற்றும் அரச நிறுவனங்களை சோ்ந்த சேவையாளர்களின் வீட்டுக்கடன் வரி,அனர்த்த நிவாரண வரி,வாகன கடன் வரி,வைத்திய சேவைக்கான வரி,மேலதிக கொடுப்பனவிற்கு விதிக்கப்பட்ட வரிஉள்ளிட்டவை இதில் உள்ளடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.sankathi24.com/news/44303/64//d,fullart.aspx

  22. எழிலன் உள்ளிட்டோரின் வழக்கு சிறப்பு நீதவான் முன்னிலையில் முல்லைத்தீவில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது- 22 ஜூலை 2014 இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று திங்களன்று (21.07.14) அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்குகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் முல்லைத்தீவிலேயே நடந்துள்ளமையால், அவை பற்றிய விசாரணைகளை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்…

  23. தருஸ்மன் அறிக்கையில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக இலங்கையிடம் விளக்கம் விளக்கம் கோரப்படவுள்ளது 22 ஜூலை 2014 காணமற் போனவாகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவர் குழு தருஸ்மன் அறிக்கையை ஆராய்ந்து அதிலுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் இராணுவத்திடம் விளக்கம் கோரவுள்ளது. மூவர் குழுவில் இடம்பெற்றுள்ள சேர் ஜெவ்ரி நைஸ் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் நிபுணர் குழுவினர், ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஆராயவுள்ளனர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணா குழுவினர், தாருஸ்மான் தலைமையிலான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பிர…

  24. நாவற்குழியில் இரு இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்! [Tuesday 2014-07-22 09:00] கொடிகாமம் அம்மன் கோவிலடிச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், அவரது நண்பரும் இனம்தெரியாதவர்களினால் நேற்றுக் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புவனேஸ்வரன் ரஜீபன் என்ற 23 வயது நிரம்பிய இளைஞனும், அவரது நண்பனுமே கடத்தப்பட்டு காணாமல்போயுள்ளனர். குறித்த இளைஞன் நேற்று தனது வீட்டிலிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனையடுத்து தனது நண்பனையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் நாவற்குழி பகுதியில் வைத்து வெள்ளை வாகனம் ஒன்றில் வந்த சிலர் துப்பாக்கியைக் காண்பித்து அவர்களை கைது செய்ததை அருகிலிருந்த கடையில் உள்ளவர்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபைச் சாரதியா…

  25. இலங்கை - இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும்! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி. [Tuesday 2014-07-22 09:00] இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் என்று பாரதீய ஜனாதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் 'மோடியின் கீழ் இந்தியா' என்ற தொனிப் பொருளில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்நாட்டிலோ தமிழ்நாட்டு தேர்தல்களிலோ இலங்கைத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. அவர்கள் தேர்தல்கள் மூலம் இதனை வெளிப்படுத்தி உள்ளார்கள். வெளிநா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.