ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
நாவற்குழியில் இரு இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்! [Tuesday 2014-07-22 09:00] கொடிகாமம் அம்மன் கோவிலடிச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், அவரது நண்பரும் இனம்தெரியாதவர்களினால் நேற்றுக் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புவனேஸ்வரன் ரஜீபன் என்ற 23 வயது நிரம்பிய இளைஞனும், அவரது நண்பனுமே கடத்தப்பட்டு காணாமல்போயுள்ளனர். குறித்த இளைஞன் நேற்று தனது வீட்டிலிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனையடுத்து தனது நண்பனையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் நாவற்குழி பகுதியில் வைத்து வெள்ளை வாகனம் ஒன்றில் வந்த சிலர் துப்பாக்கியைக் காண்பித்து அவர்களை கைது செய்ததை அருகிலிருந்த கடையில் உள்ளவர்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபைச் சாரதியா…
-
- 0 replies
- 445 views
-
-
இலங்கை - இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும்! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி. [Tuesday 2014-07-22 09:00] இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் என்று பாரதீய ஜனாதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் 'மோடியின் கீழ் இந்தியா' என்ற தொனிப் பொருளில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்நாட்டிலோ தமிழ்நாட்டு தேர்தல்களிலோ இலங்கைத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. அவர்கள் தேர்தல்கள் மூலம் இதனை வெளிப்படுத்தி உள்ளார்கள். வெளிநா…
-
- 0 replies
- 486 views
-
-
வடக்கில் காணி அபகரிப்புக்கள் எந்த ஒழுங்கின் கீழ் நடைபெறுகின்றன? – கூட்டமைப்பு கேள்வி! மக்களின் சம்மதமின்றி அவர்களின் காணிகள் சுவீகரிக்கப்படக்கூடாது என இந்த நாட்டின் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் வடக்கு, கிழக்கில் மாத்திரம் மக்களின் சம்மதமின்றி அவர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இவை எந்த ஒழுங்கமைப்பின் கீழ் நடைபெறுகின்றன என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள அச்சுவேலி ஜே. 285 கிராம அலுவலர் பிரிவில் 5ஆவது காலாட்படை பெரும்பகுதி தலைமை காரியாலயம் அமைப்பதற்கு நில அளவையாளர்கள் வருகை தந்தபோது அதனைத் தடுத்து நிறுத்…
-
- 0 replies
- 302 views
-
-
இந்திய தளபதியை சந்திக்க முன்பாக சீனாவுக்கு ஓடிய சிங்களத் தளபதி?! சீனன்குடாவில், சீன நிறுவனம் சார்பில் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக, சீன விமானப்படைத் தளபதி ஜெனரல் மா சியாவோதியனுடன், சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக கடந்த வாரத்துக்கு முந்திய வாரம், சீனாவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணம் குறித்த தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாக வைத்திருந்தது. இதன்போது, கடந்த 10ம் நாள் மாலை 6.30 மணியளவில், சிறிலங்கா விமானப்படைத் தளபதி, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் விமானப்படைத் தளபதி ஜெனரல் மா சியாவோதியனைச் சந்தித்துப் பேச்சு நடத்த…
-
- 0 replies
- 363 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்ட பேராசிரியர் இ. இளங்குமரன் துறைத் தலைவர் பதவியிலிருந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு இருந்தனர் . மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதாக மாணவர்கள் இவர் மீது குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தெரிவித்திருந்த நிலையில் இதுவரை துணைவேந்தர் அவர்கள் சரியான விசாரணை ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கவில்லை என்று பதிவு இணையத்திற்கு மாணவர்கள் தெரிவித்துள்ளனர். துணைவேந்தர் அவர்கள் சரியான விசாரணை ஒன்றை மேற்கொண்டு கொண்…
-
- 0 replies
- 579 views
-
-
மாகாணசபை முறைமையை ஒழித்து அந்த அதிகாரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்ள நினைக்கும் அரசுடன் ஒட்டிக்கொண்டு முஸ்லிம்கள் அரசியல் செய்வது முறையற்றது என்று நேரடியாகக் குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தங்கள் நிலைமை உணர்ந்து அவர்கள் வெகுவிரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கரம் சேர்ப்பர் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி முன்பாகவே இந்தக் கேள்வியை அவர் எழுப்பினார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 ஆவது சிறப்பு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு வீரசிங்கம் மண் டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப் புரையாற்றுகையிலேயே சம்பந்தன் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார்…
-
- 3 replies
- 447 views
-
-
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஐந்து நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. குறித்த விசாரணைக் குழுவினர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா அனுமதி கோரிய போதிலும், இந்தியா அதற்கு அனுமதியளிக்கவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். மூன்று நிபுணர்கள் மற்றும் 13 பிரதிநிதிகளுடன் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு இலங்கை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா ஏற்கனவே குறித்த விசாரணைக் குழுவிற்கு வீசா வழங்க மறுத்துள்ள நிலையில், ஏனைய அண்டை நாடுகளும் அதே நிலைப்பாட்டைக…
-
- 2 replies
- 434 views
-
-
கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை(21) இடம்பெற்றது. இதன்போது பெருந்திரளான பக்தர்கள் காவடி மற்றும் கற்பூரச்சட்டி எடுத்து தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். (படங்கள்:- வருண வன்னியாராச்சி, சன்) http://tamil.dailymirror.lk/--main/118968-2014-07-21-10-34-09.html
-
- 0 replies
- 406 views
-
-
யாழ்., அச்சுவேலி, இராச வீதியில் 5ஆம் காலாற்படையினரின் முகாமிற்காக காணி அளவிடும் நடவடிக்கையில் ஈடுபடச்சென்ற போது, அங்கு நின்ற பொதுமக்கள் தம்மை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நிலஅளவையாளர் சிதரம்பரப்பிள்ளை இராமநாத சுவேந்திர கலாநிதியினால், இன்று திங்கட்கிழமை (21) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சிரேஸ்ட அளவையாளர் பி.சிவதாஸின் உத்தரவிற்கமைய யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பாதுகாப்பு அனுமதியுடன் தாம் நிலஅளவை செய்யச் சென்றதாகவும், ஆனால் அங்கு நின்ற பொதுமக்கள் எமது வாகனத்தினை சுற்றி நின்றதுடன், எமது நிலஅளவை உபகரணங்களை வாகனத்திலிருந்து எடுக்கவிடாமல் தடுத்தனர் என அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர். மேலும், எம்மைப்…
-
- 1 reply
- 382 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, தொண்டமான்நகர் பொதுக்காணியை தென்னிலங்கையை சேர்ந்த தனியார் கம்பனி ஒன்றுக்கு கரைச்சி பிரதேச செயலாளர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள மேற்படி காணியில் இன்று திங்கட்கிழமை (21) நடத்தினர். நீதிமன்ற உத்தரவினையும் மீறி பிரதேச செயலாளர், மேற்படி காணியினை தனியார் நிறுவனத்திற்கு வழங்க முன்வந்துள்ளார் எனத் தெரிவித்தே பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் முடிவில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கிளிநொச்…
-
- 0 replies
- 303 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்கு தமிழ் மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்ட அல்லது சாட்சிகளான தமிழ் மக்கள் சாட்சியமளிப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கைக்கு விஜயம்செய்துள்ள போர்த்துக்கல் நாட்ன் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு விசா…
-
- 0 replies
- 309 views
-
-
வவுனியா தர்மலிங்கம் வீதிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை அதிரடிப்படை பவல் வாகனம் மோதியதில் அவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந் நிலையில் அப்பகுதியில் திரண்ட பொது மக்கள் ஒன்று திரண்டு அதிரடிப் படையினரின் வாகனத்தை முற்றுகையிட்ட நிலையில் பொலிஸாருடன் முரண்பட்டுக் கொண்டனர். இன்று 2 மணியிளவில் இடம்பெற்ற இவ் விபத்திலேயே வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த 35 வயதுதுடைய வாமதேவன் ரேகா என்ற பெண் காயமடைந்துள்ளார். இவ் விபத்து இடம்பெற்றதை அடுத்து அப்பகுதியில் இருந்த பொது மக்கள் விசேட அதிரடிப் படையினரின் வாகனத்தை சூழ்ந்து கோசமெழுப்பியதுடன் அதிரடிப் படையினரின் வாகனத்தை கொண்டு செல்ல விடாது தடுத்து பொலிஸாருடன் முரண்பட்டனர். இதனையடுத்து …
-
- 0 replies
- 339 views
-
-
-எஸ்.ஜெகநாதன் யாழ்., மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணிப் பிரதேசத்திலுள்ள சுமார் 800 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவை செய்யும் பணிகள் பொதுமக்களின் எதிர்ப்பினால் இன்று திங்கட்கிழமை (21) கைவிடப்பட்டன. மேற்படி பிரதேசத்தில் புல்லாவெளி, தட்டங்கோடு, வயல்விடுதி, மண்டலாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 800 ஏக்கர் காணிகளை நிலஅளவை செய்வதற்காக நிலஅளவை திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கு சென்றனர். இருந்தும், அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். இதனால், காணி அளவீடு செய்யும் நடவடிக்கையினைக் கைவிட்டு நிலஅளவையாளர் திரும்பிச் சென்றனர். பொதுமக்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வ…
-
- 0 replies
- 356 views
-
-
-எம்.றொசாந்த் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து எங்கள் பூமியை (வட மாகாணத்தை) இராணுவ பூமியாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிக்கின்றனர் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்;துரை ஐங்கரநேசன் இன்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார். அச்சுவேலி, இராச வீதியில் பொதுமக்களுடைய 53 பரப்புக் காணிகளை இராணுவ முகாமிற்காக சுவீகரிக்கும் நோக்கில் அளவீடுகள் செய்ய நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்திய பின்னர் கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'இராணுவத்திற்காக காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அச்சுவேலியில் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முய…
-
- 0 replies
- 423 views
-
-
சந்தைக்கு அடிக்கல் நாட்டவிடாமல் முட்டுக்கட்டை போடும் ஈபிடிபி இணக்க அரசியல் பற்றிப் பேசுகிறது! - சரவணபவன் எம்.பி சாட்டை [Monday 2014-07-21 10:00] அபிவிருத்தி நடவடிக்கையில் ஈ.பி.டி.பி கட்சியினர் தடைகளை போட்டு வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். வலி.மேற்குப் பகுதிக்கான புதிய சந்தை கட்டட அடிக்கல் நாட்டு வைபவத்தினை மேற்கொள்ளவிடாது இணக்க அரசியல் பேசி வரும் ஈ.பி.டி.பி கட்சியினர் பல முட்டுக்கட்டைகளை இட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அராலி திருமகள் விளையாட்டுக்கழக 34-வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிர…
-
- 0 replies
- 402 views
-
-
போரில் தோற்க நேரிடும் என புலிகளின் தலைவர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை! - மலேசியா திருப்பி அனுப்பிய புலிகள் கூறினராம். [Monday 2014-07-21 09:00] போரில் தோற்க நேரிடும் என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று விடுதலைப் புலிச் சந்தேக நபர்களும் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளனராம். வடக்கு போரில் படுதோல்வியடைய நேரிடும் என பிரபாகரனோ அல்லது புலி உறுப்பினர்களோ கருதவில்லை. போர் இ…
-
- 0 replies
- 398 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில் மலையக மக்கள் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ளனர்! - மனோ கணேசன் [Monday 2014-07-21 07:00] விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத போராட்டத்தில் மலையக மக்கள் காத்திரமான பங்கை வகித்திருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமாகிய மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வெறுமனே வடக்குகிழக்கு தமிழ் மக்களை சார்ந்தது மாத்திரமல்ல. வடக்கிற்கு வெளியில் வாழும் மலையக தமிழர்களையும் சார்ந்தது என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எப்போதும் எடுத்துக் காட்டியது. …
-
- 0 replies
- 566 views
-
-
சோர்வின்றிப் பேராடும் புலம் பெயர் தமிழர்கள்!!! முறியடிப்பாரா மகிந்த?????? பொதுநலவாய விளையாட்டுக்களைத் தொடக்கி வைப்பதற்காக பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற போர்வையில் ஸ்கொட்லாண்ட் நாட்டுக்கு அந்த நாட்டின் அழைப்பின்பேரில் சிறிலங்காவின் அதிபர்மகிந்த வரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்தகாலங்களில் மகிந்தவின் வருகைக்கு இங்கிலாந்தில் வசிக்கும் தமிழீழ மக்களின் பலமான எதிர்ப்பின் காரணமாக மகிந்தவுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தன.குறிப்பாக புகழ்மிக்க ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக வருகைதந்த மகிந்தருக்கு தமிழ்மக்களின் எதிர்ப்புக் காரணமாக கடைசிநேரத்தில் அவரது உரையை இரத்துச் செய்வதாக ஒக்ஸ்போட் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தமை மிகப் பெரும் அவமானமாகும். இதை வி…
-
- 0 replies
- 342 views
-
-
சர்வதேச நிபுணர்கள் கொழும்பு வந்ததும், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை தொடங்கும்! - ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் கூறுகிறார் [Monday 2014-07-21 07:00] 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தத்தில், இராணுவத்தாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தமது ஆணைக்குழு விசாரிக்கவுள்ளதாக காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். தமது ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவுள்ள சர்வதேச சட்டநிபுணர்களான சேர். டெஸ்மண்ட் டி சில்வா, பேராசிரியர் ஜெஃப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேண் ஆகியோர் ஓரிரு வாரங்களில் இலங்கை வந்தவுடன் விசாரணைக்கான பணிகள் தொ…
-
- 0 replies
- 488 views
-
-
நாங்கள் இறைமையுள்ள மக்களின் உரிமைகளைத்தான் கேட்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் 34 வது மாநாட்டின், இரண்டாவது நாள் நிகழ்வுகள் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் உரையாற்றிய இரா.சம்பந்தன், தமிழர்கள் இந்த மண்ணிலே சரித்திர ரீதியாக வாழ்ந்தவர்கள். அவர்களும் இந்த நாட்டின் இறைமை இருக்கின்றது. எனவே. அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது ஜனநாயக தீர்ப்பை எமக்கு விரும்பி அளித்துள்ளனர். எனவே, தமிழ் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்க மாட்டோம். …
-
- 0 replies
- 414 views
-
-
பொதுபல சேனா அமைப்பு தன்னை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பொதுபல சேனா அரசாங்கத்தையே அதிகமாக சாடி வருகிறது. என்னையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறது. பொதுபல சேனா அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற அமைப்பு என்பது தவறானது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எவ்வாறாயினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்துடனேயே பொதுபல சேனா அமைப்பு இயங்கி வருவதாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். பொதுபல சேனா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இடையிலான இணைப்பு நடவடிக்கைகளை, முன்னாள் அமைச்சர் …
-
- 0 replies
- 182 views
-
-
போரினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள போர்த்துகல் பிரதமர், பெட்ரோ பசோஸ் கோயில்ஹோ நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசினார். இதன்போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் நல்லிணக்கச் செயல்முறைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள போதும், போரினால் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு காலம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார் . விடுதலைப் புலிகளின் தீவிரவாத செயற்பாடுகளால் நாடு எதிர்கொண்டிருந்த நெருக்கடிகள் குறித்து விபரித்துக் கூறிய சிறிலங்கா அதிபர், வெளிநாட்டுத் தலைவர்கள் சிறிலங்கா வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். கொ…
-
- 0 replies
- 223 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில், இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமி, கொழும்பு சென்றுள்ளார். “மோடி ஆட்சியின் கீழ் இந்தியா” என்ற தலைப்பில், கொழும்பில் இன்று நடக்கவுள்ள கருத்தரங்கில் பாஜக தலைவர்கள் ஐவர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். இந்தக் குழுவுக்கு சுப்பிரமணியன் சாமியே தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாம் சிறிலங்கா அதிபரின் அழைப்பின் பேரிலேயே அங்கு செல்வதாக, கொழும்பு புறப்பட முன்னர், சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று பிரிஐ செய்தியாளரிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சுப்பிரமணியன் சாமியை சிறிலங்கா அதிபர் எதற்காக அழைத்துள்ளார் என்பது குறித்த த…
-
- 0 replies
- 229 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக மூவர் தற்கொலை செய்யும் முயற்சிக்கு தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் கடன்கள் காரணமாகின்றன என்று திருகோணமலை பொதுவைத்தியசாலைப்பிரிவின் உளநலப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மக்களை ஈர்க்கும் நோக்குடன் நுண் கடன் என்ற வகைக்கடன்களை மக்களுக்கு வழங்குகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கடனுக்கு கூடிய வட்டிகள் அறவிடப்படுகின்றனவென்றும் இக்கடன்களைப்பெற்ற விவசாயிகள், மீன் பிடியாளர்கள் தொழில் நடைபெறாத காலங்களில் கடனை மீளச் செலுத்த முடியாத காரணத்தினால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நிதி நிறுவனங்களின் இச்செயற்பாடுகள்பற்றி உயர் அதிகாரிகள் கவனம் ச…
-
- 0 replies
- 206 views
-
-
தமிழ் மக்கள் அழிந்தாலும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டெழுந்து போராடிக் கொண்டடு இருக்கின்றார்கள். முஸ்லிம் இனம் அழிந்துகொண்டு இருக்கின்றது. தமிழ் மக்கள் அழிந்தாலும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் போராட்டக் குணம் எங்களிடம் இல்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி இன்று ஞாயிற்றுக்கிழமை (20.07.14) தெரிவித்தார். வலுவான ஐக்கியத்தினை நோக்கி என்ற தொனிப்பொருளின் கீழ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது மாநாடு சனிக்கிழமை (19.07.14) முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மாநா…
-
- 4 replies
- 859 views
-