Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மத்திய கிழக்கு நாடுகளில் பரவிவரும் வைரஸ் நோய்! - இலங்கையரைப் பாதுகாக்க நடவடிக்கை. [Tuesday, 2014-04-29 09:08:59] மத்திய கிழக்கு நாடுகளில் பரவிவரும் சுவாசம் தொடர்பான வைரஸ் தொற்று நோயால் இலங்கையர் எவரும் இது வரை பாதிக்கப்பட வில்லை. எனினும், நோய் தொற்றிலிருந்து இலங்கையரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்கள் எவருக்காவது இரண்டு கிழமைகளுக்குள் சுவாசிப்பதில் சிரமம் அல்லது சளித்தொல்லை தென்பட்டால் உடனடியாக வைத்திய சாலையை நாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் பரவிவரும் சுவாச நோயானது சனநெரிசல்…

  2. மதவிவகாரங்களுக்கு தனி பொலிஸ் பிரிவு: சரத் பொன்சேகா எதிர்ப்பு, ஏட்டிக்குப் போட்டியாக முறைப்பாடுகள். [Tuesday, 2014-04-29 09:03:35] மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனியாக பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்த வேண்டியதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஏதேனும் அமைப்பு அல்லது இயக்கங்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டில் சட்டங்கள் காணப்படுகின்றன.பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பொலிஸாருக்கு அதிகாரமுண்டு.ஏதேனும் ஓர் சம்பவம் இடம்பெறும்போது அதற்கு தீர்வு காண அரசியல் நோக்கத்துடன் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டால், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ஒவ்வொரு சேனாக்களையும் பாதுகாப்பதற்காக பொலிஸ் பரிவுக் உரு…

  3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்று சந்திப்பு! - எதிர்கால நடவடிக்கை குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு. [Tuesday, 2014-04-29 08:53:36] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக, கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் நாளை திருகோணமலையில் இரா.சம்பந்தன் தலைமையில் ஒன்றுகூடவுள்ளனர். இந்தசந்திப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தம், கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவின் தென்னாபிரிக்கா பயணம், ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை இலக்கு வைத்துத் தொடரும் அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட சம கால ந…

  4. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்காவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. அதேவேளை, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுடனும், நிஷா பிஸ்வால் தனியான சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மனிதஉரிமைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரின் போது இடம்பெற்ற போருக்குப் பின்னரும், சிறிலங்காவில் இடம்பெறும், பாலியல் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இந்தச்…

  5. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து அரசியல் சாசன நீதிஇருக்கை முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதால் ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு மேலும் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும்மேலாக நீட்டித்துச் செல்கின்றதே என்ற அவர்களது வருத்தம் அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று. அரசியல் சாசன நீதிஇருக்கை மட்டுமே இதனை முடிவு செய்ய இயலும் என்கிற பட்சத்தில் இத்தனை நாள்களாக உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தன்வசம் வைத்திருந்திருக்கத் தேவையில்லை. அப்போதே இதனை அரசியல் சாசன நீதிஇருக்கையின் விசாரணைக்கு மாற்றியிருக்கலாம். இந்த வழக்கு இன்னும் விரைவுபட்டிருக்கும். உச்சநீதிமன்றம் அரசியல் சாசன நீதிஇருக்கையிடம் விளக்கம…

  6. சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பாக, அரசசார்பற்ற நிறுவனங்களுடன் பிரித்தானிய இணைவெளிவிவகார அமைச்சர் ஹியூகோ சுவைர் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இந்த தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், 'சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அரசசார்பற்ற நிறுவனங்களுடன் நடத்திய சந்திப்பு பயன்மிக்கதாக இருந்தது' என்று கூறியுள்ளார். எனினும் மேலதிக விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. http://www.puthinappalakai.com/view.php?20140429110416

  7. சிறிலங்கா கடற்படுகையில், இருந்து வரும் 2016ம் ஆண்டு தொடக்கத்தில் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக கெய்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நான்கு துண்டங்களில், இரண்டில் எரிவாயு படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டோராடோ, பரக்குடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு துளைகளும் மன்னார் கடற்படுகையில் அமைந்துள்ளன. இங்கு 74 மில்லியன் பரல் எண்ணெய் படிமங்கள் இருப்பதாக கெய்ன் இந்தியா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த எரிவாயுப் படிமங்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்வது குறித்து தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கெய்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.puthina…

  8. கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு செல்லும் பாதையை கோவில் நிர்வாகத்தினர் அனுமதி இன்றி தடைசெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பல ஆண்டுகாலமாக பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை எந்தவித முன்னறிவித்தலும் இன்றி அனுமதி நல்லூர் பிதேச சபையிடம் அனுமதி பெறாமல் மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதேச சபை தலைவரின் உத்தரவுக்கமைய பிரதேச சபை உழியர்களால் குறித்த வீதித்தடைகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்ட போது கோவில் நிர்வாகித்தினருக்கும் பிரதேச சபை உழியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினரால் ஏற்றப்பட்ட பொருட்கள் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டதுடன் பிரதேச சபை தலைவருக்கெதிராக கோசங்களை எழுப்பி எதிர்ப்பையும் வெளியிட்ட…

  9. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினை என்பது தீர்க்கப்படமுடியாத பெரும் பிரச்சினையாக நீண்டு செல்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். தீர்வுகள் எட்டப்பட முடியாத காணிப்பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றங்களின் ஊடாக தீர்வு காண்பது என்று தீர்மானித்துள்ளோம் இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.பொதுநூலக வளாகத்தில் உள்ள மாகாண சபைக் கட்டடத்தில் நேற்றுப் பிற்பகல் இடம் பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ""வட பகுதியில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காணிப்பிரச்சினை. இடம் பெயர்ந்த மக்கள் தங்களின் இடங்கள் தெரியாமல் வேறு இடங்க…

  10. வடக்கில் பாடசாலைகளுக்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்வதை இராணுவம் நிறுத்த வேண்டும்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல். [Monday, 2014-04-28 06:59:39] வடக்கில் உள்ள பாடசாலைகளுக்குள் நுழைந்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் அடாவடித்தனம் புரிவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் மன்னார் மடு கல்வி வலயத்துக்குட்பட்ட சில பாடசாலைகளுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை சிவில் உடையில் அத்துமீறிப் பிரவேசித்த இராணுவப் புலனாய்வாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தனித்தனியாகவும், பாட…

  11. ஆழியவளை சக்திவேல் விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் சக்திவேல் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப விழாவில் சக்திவேல் கழகத்தின் ஸ்தாபக தலைவர் அமரர் சண்முகம் வேலுப்பிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் சக்திவேல் பழைய மைதானத்திலிருந்து வெட்டு முருகன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து புதிய மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு மூத்த உறுப்பினர்களில் ஒருவரான அப்புக்குட்டி தனபாலசிங்கம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. http://www.thinakkathir.c…

  12. மகிந்த ராஜபக்‌ஷவின் இளைய மகன் யோசித விளையாடும் இலங்கைத் தேசிய ரக்பி அணியினர் டி 56 துப்பாக்கிகள் சகிதம் குறிபார்த்துச் சுடும் விளையாட்டொன்றில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் சில வெளியாகியுள்ளன. இங்கு பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் உண்மையான துப்பாக்கிகள் என்பதோடு, ஊண்மையான ரவைகளும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே, ஒரு தேசிய விளையாட்டு அணி ஆயுதங்களுடன் விளையாடியதென்றால் அது இலங்கையாகத்தான் இருக்க முடியும். screen shots

  13. http://www.youtube.com/watch?v=zhHs9grzIe0&feature=youtu.be

    • 0 replies
    • 392 views
  14. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம் திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014 15:00 இலங்கை அரசியல் சட்டத்திலிருந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சமர்ப்பித்த தனிநபர் அவசர பிரேரணையே திங்கட்கிழமை(28) நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறும் சிங்கள பேரினவாத அரசுகளால் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்றே அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பிரேரணைக்கும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.…

    • 1 reply
    • 593 views
  15. முகம் தெரியாது ஹெல்மட் அணிவோருக்கு சோதனை ஆரம்பம் news நாடு முழுவதும் முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில் தலைக் கவசங்களை அணிந்து செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளை சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர். அண்மைக்காலமாக இவ்வாறான தலைக்கவசங்களை அணிந்து செல்வோர் வங்கிகளிலும் நகைக்கடைகளிலும் நடத்திய கொள்ளைகளை அடுத்தே சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகத்தை மூடிய தலைக் கவசங்கள் இலங்கையில் இன்னமும் தடை செய்யப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டு வருகின்றோம் என்று பொலிஸார் கூறினர். 29 ஏப்ரல் 2014, செவ்வாய் 10:30 மு.ப http://www.onlineuthayan.com/News_More.php?id=629242933329857640

  16. யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் கலைக்கப்படும் - அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா:- 28 ஏப்ரல் 2014 யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் கலைக்கப்படவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று திங்கட்கிழமை (28.04.14) தெரிவித்தார். யாழ். மாநகர சபையில் தற்காலிக தொழிலாளர்களாக கடமையாற்றிய 87 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்.மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை (28.04.14) நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கலைக்கப்படாலும், அடுத்த ஆட்சி வரும் வரையில் மாநகர சபை செயற்படும். உங்கள் தொழிலுக்கு…

  17. அழுது கொண்டிருந்த ஒரு வயது நிரம்பிய குழந்தை ஒன்று அழுகையை நிறுத்தவில்லை என்ற காரணத்தால் குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று மஹாஓயா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. காவிந்த பிரபோத் தென்னக்கோன் என்ற குழந்தையே இவ்வாறு நிலத்தில் அடித்து தந்தையாலேயே கொலை செய்யப்பட்டுள்ளது. விடயம் அறிந்த தெஹியத்தகண்டிய பொலிஸார் தந்தையைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.தனது குழந்தை தொடர்ந்து அழுதமையினால் தனது கணவன் குழந்தையை நான் கேட்டும் கொடுக்காமல் ஆத்திரம் கொண்டு குழந்தையை பலமாகக் குலுக்கியதுடன் மட்டுமல்லாது குழந்தையை தரையிலும் அடித்தார். உடனே குழந்தையை நான் தூக்கும்போது குழந்தை நினைவிழந்த நிலையிலேயே இருந்தத…

  18. http://www.youtube.com/watch?v=o6CSx28l91k&feature=youtu.be

    • 0 replies
    • 423 views
  19. யாரிடம் கையளிக்கப்பட்டது பகிரங்கப்படுத்தினால் பதில் அளிக்கத் தயார் - தவநாதன் - சிறீரங்கேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது – சிவாஜி வன்னியிலிருந்து அகதிகளான எமது மக்களது படகுகளை பறித்து இலங்கை இராணுவம் ஈபிடிபியிடமே கையளித்துள்ளது. இவ்வாறு யுத்த அவலங்களை தாங்கி நிற்கும் மீனவர்களது படகுகளையே சுருட்டும் ஈபிடிபி பின்னர் எவ்வாறு புனிதர்களாக கதைக்கின்றதென் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான கமலேந்திரன் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் புதிதாக பதவி ஏற்றுள்ள எஸ்.தவராசா வடக்கு மாகாண சபையின் அமர்வில் பங்கு கொண்டு தனது ஆரம்ப உரையினை ஆற்றியிருந்தார். இந்நிலையில்; முதல்வர் சி.வி.விக்னே…

  20. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆளும்கட்சியின் ஏகமனதாக ஆதரவுடனும் எதிர்க்கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறும் சிங்கள பேரினவாத அரசுகளால் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் தனிநபர் அவசர பிரேரணை இன்று இடம்பெற்ற மாகாணசபையின் 8 ஆவது அமர்வில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிங்கள பௌத்த பேரினவாதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தால் 3 வருடங்களுக்கு எ…

  21. யாழில் ஜனாதிபதியின் பதாகை எரிப்பு– கிழக்கில் கருணாவின் முகம் கிழிப்பு– புலி நாடகத்தின் தொடர்ச்சியா? 28 ஏப்ரல் 2014 யாழில் ஜனாதிபதியின் பதாகை எரிப்பு – கிழக்கில் கருணாவின் முகம் கிழிப்பு – புலி நாடகத்தின் தொடர்ச்சியா? வகை தொகையின்றிய கைதுகள் தொடருமா? யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகை, இனந்தெரியாத நபர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.04.14) இரவு எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ்தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பதாகைகளில் 12 அடி உயரமான ஒரு பதாகையே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்விடத்திற்கு இன்று (28.04.14) அதிகாலை சென்றுள்ள இராணுவத்தினர், எரியூட்டப்பட்ட பதாகையினை அகற்…

  22. நெடியவன் தலைமறைவு நோர்வேயில் தேடுதல் என கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன:- 28 ஏப்ரல் 2014 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டவர் எனக் கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரனை (நெடியவன்) கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல், சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்பட்டதை அடுத்து நோர்வேயில் அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடங்களிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிப்பதாக கூறி இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், நெடியவனை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் நோர்வே பாதுகாப்பு தரப்பினர் ஈடபட்டுள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்…

  23. இலங்கைக்கு சீனா எச்சரிக்கை! [Monday, 2014-04-28 07:15:49] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின், இருதரப்புப் பேச்சுக்களின் போது இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தீர்மானத்தை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றால், இலங்கை அரசாங்கம் பாதகமான விளைவுகளை சந்திக்க கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், சீனாவினால் உதவ முடியாமல் போகக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், …

  24. வில்பத்தில் குடியேறிய 73 முஸ்லிம் குடும்பங்களுக்கும் மாற்றுக் காணிகள்! - அரசின் திட்டத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இணக்கம். [Monday, 2014-04-28 07:32:48] வில்பத்து தேசிய பூங்காவுக்குட்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் குடியேறியுள்ள 73 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்காக பூங்காவிற்கு புறம்பாக வெளியே 50 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட செயலாளர் எம். வை. எஸ். தேசப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் இருவார காலப் பகுதிக்குள் இந்தக் காணிகளை பிரித்து வழங்கக் கூடியதாக விருக்குமெனக் கூறிய மாவட்ட செயலாளர், அதனைத் தொடர்ந்து காணிகளை சுத்திரிகரிக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார். குடியமர்த்தப் படவுள்ள குடும்பங்களுக்கு புத்தளத்தில் அல்லது நாட்டின் ஏதேனும்…

  25. இலங்கையை பலம்பொருந்திய ஜனநாயக நாடாக மாற்ற வேண்டும்! - என்கிறார் ஜனாதிபதி. [Monday, 2014-04-28 07:39:32] பல நூற்றாண்டுகளாக பேணிப் பாதுகாக்கப்பட்ட ஊடகங்களின் நன்னெறியை பாதுகாப்பது ஊடகங்களின் சமூகப் பொறுப்பு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் ஆண்டுக்கான நிறைவேற்று உத்தியோகத்தரை தெரிவு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். ஊடகங்கள் தேசிய அபிவிருத்திப் பணிகளிலும் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும். மக்களுக்கு நன்மை அளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் விஞ்ஞான, கல்வி, கலாசார முன்னெடுப்புகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் முக்கிய காலகட்டத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.