Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்கா அல்லது பிரித்தானியா போன்ற நாடுகளால் தனித்தோ, அல்லது ஐரோப்பிய ஒன்றியம் மூலமாகவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும். ஆனால் அதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. எந்தவொரு தனிப்பட்ட நாடும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால், பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது. அதற்குரிய அதிகாரங்கள் பாதுகாப்புச்சபைக்கு மட்டுமே உள்ளது. பாதுகாப்புச…

  2. படையினரை சிறையில் அடைத்து, பயங்கரவாதிகளை நாடாளுமன்றில் அமர்த்துவதே ராஜபக்சவின் ஜனநாயகம்! – சரத் பொன்சேகா. [saturday, 2014-03-22 08:24:27] நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்த படையினரை சிறையில் அடைத்து, அரந்தலாவை பௌத்த பிக்குகள் படுகொலை உள்ளிட்ட கொடூரச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை நாடாளுமன்றில் அமர்த்துவதே ராஜபக்ச அரசாங்கத்தின் ஜனநயாகம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வியாங்கொடவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், தேர்தல் நெருங்கும் போது அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்த ஏதாவது ஒன்னறை பிடித்துக் கொள்ளும். மத்திய, வட மாகாணசபைத் தேர்தல்களின் போது எரிவாயு, கனிய எண்ணெய் வளம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கம் பிரசாரம் …

  3. ஜெயலலிதாவின் நிபந்தனையை நிராகரிப்பு! – விரும்பினால் பேச்சுக்கு வரட்டும் என்கிறார் அமைச்சர் ராஜித. [saturday, 2014-03-22 08:49:42] தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிபந்தனையை ஏற்கமுடியாது. விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால்தான் எதிர்வரும் 25ம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாகவே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு கூறினார். …

  4. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினர் நேற்று கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த இளைஞர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்து வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. தற்போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சோதனைகளும்,தேடுதல்களும் இடம் பெற்றும் வரும் நிலையிலே குறித்த இளைஞர் கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது குறித்த இளைஞர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வர…

  5. சிறிலங்காவில் போரின் போதான சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக, அவரது பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை, நிலுவையில் உள்ள தீர்மானத்தின் மூலம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனிதஉரிமைகள் சட்டவாளர் யஸ்மின் சூகா, மற்றும் பிரித்தானிய மனிதஉரிமை சட்டவாளர் குழுவின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பர்ஹான் ஹக் நேரடியாகப் பதிலளிக்க மறுத்து விட்டார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள உறுப்பு நாடுகள் நிலு…

  6. சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக பாடுபடும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசாங்கம் துன்புறுத்தி வருவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகி இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “சிறிலங்காவில் சிவில் சமூக மற்றும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது. குறிப்பாக, இன்னொரு செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, நன்கு அறியப்பட்ட மனிதஉரிமை காப்பாளர்களான ருக்கி பெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டது குறித்து நாம் சிறப்பாக கரிசனை கொண்டுள்ளோம். ருக்கி பெர்னான்டோவ…

  7. சிறிலங்காவின் எதிர்கால உறுதித்தன்மை மற்றும் செழுமை போன்றவற்றைக் கருத்திற் கொண்டு உலக நாடுகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என நான் நம்புகிறேன். அதாவது உலக நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்து தமது வாக்குகளை வழங்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹெக் [William Hague is the Foreign Secretary of the U.K.] சென்னையை தளமாகக் கொண்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மார்ச் 24 அன்று தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்கப்படுவர்…

  8. பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்! – மிரட்டுகிறது ஹெல உறுமய. [saturday, 2014-03-22 08:35:57] விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நிசாந்த ஸ்ரீவர்னசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், பிரபாகரன் ஆயுதங்களை ஏந்தி யுத்தம் செய்தார். விக்னேஸ்வரன் அரசியல் சாசனத்துடன் யுத்தம் புரிகிறார். முதலமைச்சர் என்ற வரப்பிரசாதங்களை அனுபவித்து வரும் விக்னேஸ்வரன் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து வருகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது…

  9. மிலேச்சத்தனமாக நடந்து கொள்கிறார் இலங்கை ஜனாதிபதி! – சர்வதேச ஊடகம் விமர்சனம். [saturday, 2014-03-22 08:33:12] இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மனித உரிமைகள் விடயத்தில் மிலேச்சத்தனமாக நடந்து கொள்வதாக த எக்னமிஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது. த எக்கனமிஸ்ட் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற மனிதஉரிமைகள் மாநாட்டில் இலங்கையின் விவகாரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை பொருட்படுத்தாத மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதுடன் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம் பாலேந்திரன் ஜெயகுமாரி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். …

  10. இந்திய அமைதிப்படைக்கு எதிராக கிழக்கிலும் முறைப்பாடுகள்! [saturday, 2014-03-22 08:29:51] காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு, இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் இருந்தும் முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு குணதாச இதனைத் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு நசெங்கலடியில் விசாரணை நடத்திய போது, 250 புதிய முறைபாடுகள் கிடைக்கப் பெற்றன. அதில் 3 முறைபாடுகள் இந்திய அமைதிக்காக்கும் படையினருக்கு எதிரானவை. எனினும் இந்த ஆணைக்குழு 1990ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குறிய விசாரணைகளையே மேற்கொள்ளும் நிலையில், இந்திய அமைதிக்காக்கும் படையினருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் ஏதும் செய்ய முடியாது என்று அவர…

  11. வடக்கில் ஏன் இந்தப் புலி நாடகங்கள்! – முதல்வர் விக்னேஸ்வரன் விளக்கம். [saturday, 2014-03-22 07:42:00] வடக்கில் நிலைமை சீரடையவில்லை என்று ஜெனீவாவில் காட்டுவதற்காகவே இப்போது இங்கு புலி நாடகங்கள் அரகேற்றப்படுகின்றன என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று இடம்பெற்ற சத்தியாக்கிரகத்திற்கு அனுப்பி வைத்த செய்தியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டவை வருமாறு:- அண்மையில் யாழ் குடாநாட்டுக்கு ஒரு புதிய கட்டளைத் தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். முன்னர் கிளிநொச்சியில் பதவியேற்றிருந்த அவர் யாழ்.குடாநாட்டில் பதவி ஏற்றதும் பல நல்ல காரியங்களைச் செய்தார். இவ்வாறு இருக்கும் போதுதான் ஜெனீவா வந்தது. நேற்றைக்கு முந்தைய தின…

  12. வட்டுக்கோட்டை பகுதி நேற்றிரவு முதல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலை முதல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இரவிரவாக நடைபெற்ற தேடுதலில் இராணுவத்தினர் மதில் பாய்ந்தும் , வேலிகளை வெட்டியும் வீடுகள…

  13. யாழ்.மாவட்ட கட்­ட­ளைத்­த­ள­பதி என்னைச் சந்­தித்து விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் மீள் இணை­கின்­றார்கள். இதனால் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்று அறி­வித்­துள்ளார். இதன் மூலம் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்­கொண்­டுள்­ளது போல் தெரி­கின்­றது. சர்­வ­தேசம் எமது நாட்டின் நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணிப்­பதை அர­சாங்கம் விரும்­ப­வில்லை. இதனால் தான் இவ்­வ­ளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28 ஆம் திக­திக்கு கிட்­டிய கால கட்­டத்தில் கதைகள், கட்­ட­விழ்க்­கப்­பட்டு ஜெனி­வா­விலும் கூறப்­பட்டு வரு­கின்­றன என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். நான்கு அம்ச கோரிக்­கையை முன்­வைத்து மன்­னாரில் நேற்று சத்­தி­யாக்­கி­ர­கப்­போ­ராட்டம் நடத…

    • 2 replies
    • 541 views
  14. குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறது என உலக தண்ணீர் தினம் தொடர்பாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தண்ணீர் தினம் தொடர்பில் வெளியிட்ட ஊடகஅறிக்கையிலேயே மேற்கூறப்பட்டவாறு. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பூவுலகில் உயிரிகள் தோன்றுவதற்கும் உயிரிகளின் நிலைத்திருத்தலுக்கும் காரணமாக அமைந்திருப்பது தண்ணீர். ஆனால், இந்த உயிர்த்திரவத்துக்கு இன்று உ…

  15. "பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர்" குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதும் இலங்கையில் நடக்கும் விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு விருப்பமில்லை. இருட்டுக்குள் செய்யும் காரியங்களையே செய்கின்றனர். மெய்யை சொல்வதற்கு அற்பமேனும் சக்கதி அவர்களுக்கு வரவில்லை. இவ்வாறு இருட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் கைகளால்…

  16. வட்டுக்கோட்டையில் சுற்றிவளைப்பு: பதற்றம் சனிக்கிழமை, 22 மார்ச் 2014 10:38 யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுவருகின்றது. இதனால் அப்பகுதியில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்; வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியிலுள்ள வட்டுக்கோட்டை, சங்கரத்தை, மாவடி, மூளாய், பொன்னாலை போன்ற பிரதேசங்களிலேயே சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றனர். இந்தச் சோதனை நடவடிக்கைக்காக மக்கள் எவரும் வெ…

  17. இலங்­கையில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­வேண்டும். தற்­போது தமிழி­னத்தின் இருப்பை முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக கட்­ட­மை க்­கப்­பட்ட இன­வ­ழிப்­பொன்று இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது. இவற்றைத் தடை­செய்­வ­தற்கு இடை­கால நிர்­வாகம் ஒன்று ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும் தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தீர்­வொன்று வழங்­கப்­ட­வேண்டும் அத்­துடன் இலங்­கையில் இடம்­பெற்ற இன­வ­ழிப்பு தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு இதுவே பொருத்­த­மான தரு­மாகும். இதற்­கான சந்­தர்ப்­பத்தை நழு­வ­விடும் பட்­சத்தில் தமி­ழர்­களின் அடை­யா­ளங்கள் அழிக்­கப்­பட்­டு­வ…

    • 0 replies
    • 287 views
  18. இலங்கை எதிராக விசேட நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் - பிரித்தானியா 22 மார்ச் 2014 இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. சியரே லியோனில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிறுவப்பட்ட விசேட நீதிமன்றமொன்றைப் போன்றதொரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு பிரித்தானியா இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சியரே லியோனில் விசேட சர்வதேச நீதிமன்ற…

  19. இலங்கையில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் மிதமிஞ்சிய முஸ்லிம் குடியேற்றங்களை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் சிங்கள தமிழ் மக்களையும் இணைத்து குடியமர்த்த வேண்டுமென பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் எனவும அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞனசார தேரர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தேரர் மேலும் தெரிவிக்கையில், வில்பத்துவில் இருந்து மன்னார் வரையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் முன்னெடுக்கப்பட…

  20. -சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா ஆசிரியர் சங்கத்தினால் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் வெள்ளிக்கிழமை(21) மேற்கொள்ளப்பட்ட கறுப்புப்பட்டி போராட்டத்தில் 'ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தற்கொலை செய்துகொண்டார்' என தலையங்கம் இடப்பட்ட துண்டுப்பிரசுங்கள் வீசப்பட்டதாக சங்கத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். எனினும் அத்துண்டு பிரசுரங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலேயே தீ வைத்து எரித்துள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ். கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் கா.நிரூபன் வவுனியாவில் விஞ்ஞான பாட ஆசிரியராகக் கடமையாற்றி வந்த நிலையில் வடமாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 2013 செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்ற வேளை காணாம…

    • 0 replies
    • 383 views
  21. சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய செய்தியில் தெரிவித்திருந்தார். எப்படியாவது வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை வரவழைக்கவே இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஏகோபித்த முடிவு. எனவே கட்சி அடிப்படையில் அன்றி நாங்கள் வருங்காலம் எமக்கு மேலும் இடர் தருவதாக அமையாது நல்லவிதமாக அமைய வேண்டும் என்றே நாங்கள் இந்த அடையாள விரதத்தையும், பிரார்த்தனையையும் நடத்துகின்றோம். ஆனால் எனதர…

  22. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக விடுதியில் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட நிகழ்வொன்றில் மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை மீண்டும் இவ்வாறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக முதலாம் ஆண்டு கலைப்பிரிவின் தமிழ் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த 4 ஆம் ஆண்டு சிங்கள மாணவர்கள் தடாலடியாக இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. மதுபோதையிலேயே இந்தத் தாக்குதல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வேளையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் க…

  23. அமெரிக்கத் தீர்மானத்தை அவுஸ்ரேலியா ஆதரிக்காது! – வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவிப்பு. [Friday, 2014-03-21 18:47:23] ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார்.தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக இலங்கையின் கள நிலவரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது. புனர்நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு அளித்தல் தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின…

  24. சர்வதேச விசாரணை குறித்த காலவரையறையும் தீர்மானத்தில் இடம்பெறும்! – சுமந்திரன் தகவல். [Friday, 2014-03-21 18:40:40] சர்வதேச விசாரணை தொடர்பிலான காலவரையறை தொடர்பாகவும், தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை நாம் எதிர்பார்த்த வகையில் அமையாதிருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த வேண்டுகோளின் பிரகாரமே அமெரிக்காவின் பிரேணையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. எமது கோரிக்கைள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும் முக்கிய திருத்தங்கள் சில எமது கோரிக்கையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டிரு…

  25. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் குழு தாக்குதல்! - மோதலில் 10 பேர் காயம்! [Friday, 2014-03-21 18:25:32] கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர்கள் 7 பேரும் சிங்கள மாணவர்கள் 3 பேரும் என 10 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பல்கலைக்கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்திலுள்ள விடுதியில் நேற்று நள்ளிரவு இம் மாணவர்களுக்கிடையிலான மோதல் இடம்பெற்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் காவல்துறை கூறுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை வளாகத்தில் மாணவர்களுக்கியைிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் போது மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.