Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டு.வாழைச்சேனை பிரதேசத்தில் சமையலுக்காக சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் பாம்பு ஒன்று இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் வலிஹான என்பவர் செப்பலி வகை மீன் ஒன்றினை சந்தையில் வாங்கிச் சென்றுள்ளார். அவரது மனைவி சமையலுக்காக மீனை வெட்டியபோது மீனுக்குள் இருந்து ஒன்றரை அடி நீளமான பாம்பு ஒன்று இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இச்சம்பவத்தை பார்வையிட வந்த பிரதேச மீனவர்கள் மாரி காலங்களில் செப்பலி,கொய்,கொடுவா போன்ற மீன் இனங்கள் நீர்பாம்புகளை பிடித்துண்னும் பழக்கம் கொண்டவை எனத் தெரிவித்தனர். அண்மையில் வாழைச்சேனையிலுள்ள பிரிதொரு வீட்டினுள் சமையலுக்காக அறுக்கப்பட்ட கொய் வகை மீனிலிருந்து புளுக்கள் …

    • 4 replies
    • 658 views
  2. யுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் செயற்பட்டு வருவதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் 52 ஆவது தலைமையகத்திற்கான புதிய கட்டட திறப்புவிழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களை சந்திக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1995ஆம் ஆண்டு யாழ்பாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டதுடன் 2009ஆம் ஆண்டு கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களையும் மீட்டுள்ளோம். கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த யுத்தம் காரணமாக பொதுமக்களுடைய வீடுகள் மற்றும் சொத்துக்களை நாம் பயன்படுத்தி வந்தோம். எனினும் 2009 ஆண்டு வ…

  3. பாதுகாப்பு செயலாளர் யாழ்., கிளிநொச்சி விஜயம் யாழ். எழுதுமட்டுவாளில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இராணுவ தளபதி ஆர்.எம்.தயா ரத்னாயக்க, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மத்திய ஒத்துழைப்பு மையத்தில் படை வீரர்களுக்கான நினைவுக் கல்லினைத் திரைநீக்கம் செய்தார். இதனை தொடர்ந்து கிளிநொச்சி…

    • 0 replies
    • 452 views
  4. இராணுவமுகாங்களை குறைக்கிறோம், பின் வாங்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு இராணுவமுகாங்களை இலங்கை அரசு விஸ்தரித்துக்கொண்டே செல்லுகிறது. ஈழத் தமிழர்களின் நிலத்தில் இன்று இன்னொரு இராணுவமுகாம் திறக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் மிருசுவிலில் இந்த இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. மிருசுவில் யுத்த எல்லையாக இருந்த இடம். பல சமர்களையும் பல அபகரிப்புக்களையும் பல இராணுவமுகாங்களையும் சந்தித்த பகுதி. இன்று இந்தக் கிராமத்திற்கு இன்னொரு இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கில் இராணுவமயம் நீங்காது என்பதை சொல்லும் ஒரு சமீக்ஞையே இது. ஒரு இராணுவமுகாம் அமைக்கப்படுவதால் அக் கிராமத்தின் சுதந்திரமே பறி போகிறது. பெண்களதும் சிறுவர்களதும் பாதுகாப்பு இல்லாமல் போகிறது. இளைஞர்கள் யுவ…

  5. என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை: மன்னார் ஆயர் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களே தெரியவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று தெரிவித்தார். இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்புடன் யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "இவற்றை நான் அமெரிக்கக் குழுவிற்குத் தெரிவிப்பது நாட்டின் நன்மைக்கே. இங்குள்ள மக்கள் சுதந்திரமா…

    • 0 replies
    • 474 views
  6. இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த இவர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் ஆயர் தோமஸ்சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோரைச் சந்தித்து யுத்த்திற்குப் பிந்திய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். 2009 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தின் போது மேற்கொள்ளப்படப்டுள்ள போர்க்குற்றம் தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இவ்வருடம் அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் இலங்கையில் யுத்திற்குப் பிந்திய நிலவரங்களை ஆய்வு செய்யும் ந…

  7. சிறிலங்காவில் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா பொறிமுறை ஒன்றை அமைப்பது குறித்து ஜெனிவா தீர்மானம் வரையப்படும் போது கவனத்தில் கொள்ளப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார். கொழும்பில், ஸ்டீபன் ஜே ராப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசிய போது, இதுபற்றியதொரு யோசனையை முன்வைத்திருந்தனர். தமிழர்கள் செறிந்து வாழும் சிறிலங்காவின் வடபகுதியில், தொடர்ந்தும் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதால், தற்போதைய மீறல்களை ஆராயவும், வடபகுதியைக் கண்காணிக்கவும் ஐ.நா பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழ்…

  8. இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் எந்தவிதமான பாரம்பரிய கடற்பகுதியும் கிடையாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய. மன்னார் வளைகுடாவில் தமது பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறிலங்கா கடற்படை துன்புறுத்துவதாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர், “சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பகுதியில் பாரம்பரிய மீன்பிடிப் பகுதி என்று எதுவும் கிடையாது. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதி ஐ.நாவின் கடல் தொடர்பான பிரகடனங்களுக்கு அமையவே பிரிக்கப்பட்டுள…

  9. காணிப் பதிவுகள் தொடர்பான விடயங்களை இவர்கள் கையாள்வர்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு அதிகாரிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை தமது கடமையை பொறுப்பேற்றதாக கூறப்படுகின்றது. பொது நிர்வாக அதிகாரிகளாக இவர்கள் பதவியேற்று உள்ளதாகவும் காணிப் பதிவுகள் தொடர்பான விடயங்களை அந்த அதிகாரிகள் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. முற்று முழுதாக தமிழர்கள் வாழும் பிரதேசம் ஒன்றிற்கு சிங்கள அதிகாரிகள் எதற்காக நியமிக்ப்பட்டனர் என்பது தொடர்பாக யாழ் செயலக அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதுவும் தெரி…

  10. இலங்கையில் நாளொன்றுக்கு ஐந்து பெண் குழந்தைகள் வரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் 84 வீதமான பாலியல் வன்கொடுமைகளினால் 18 வயதுக்கும் குறைந்த பெண் பிள்ளைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதேவேளை அவர்கள் இணையம் கைத்தொலைபேசி போன்றவற்றின் பாவனை காரணமாக பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது அதிகரிக்கிறது. மேலும் ஆபாச இணைய தள பயன்பாட்டில் இலங்கை உலக அளவில் முன்னணி வகிக்கும் நிலை ஏற்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.ஆகவே தான் துஸ்பிரயோகம் ஏற்படுவதை குறைக்க பெற்யோர்கள் பிள்ளைகள் மட்டில் கூடிய கரிசனை காட்ட வேண்டும் என சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் யாசாஞ்சலி தேவிகா ஜயதிலக்க சுட்டிக்காட்டினார். - See more at: http://onlineuthay…

  11. கொழும்பு 7 பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் செய்த சிலர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பதற்ற நிலையின் போது பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிஹல ராவய அமைப்பு ஆர்ப்பாட்டம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=894632563708842127#sthash.U6XvArks.dpuf

  12. இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் பாகிஸ்தா பிரஜகுறித்து முந்தல் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முந்தல் - மதுரங்குளி சிறிமாபுர பிரதேசத்தில் வசிக்கும் 7 மற்றும் 10 வயதுடைய பாடசாலை மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து முந்தல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர் பாகிஸ்தான் பிரஜை என தெரியவந்துள்ளது. http://www.sankathi24.com/news/37352/64//d,fullart.aspx

  13. ஒருவர் வெளிநாடு சென்றார் - மற்றயவர் கண்முனாலேயே படையை பலப்படுத்துகிறார்:- இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஸரீபன்ரெப்பிற்கு சவால் விடுக்கும் அல்லது அவமதிக்கும் நடவடிக்கைகளாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுப் பயனத்தை ஆரம்பித்தார். மறுமுனையில் ஸரீபன்ரெப் இலங்கையில் இருக்கும் போதே வடக்கில் புதிய இராணு முகாம் திறப்பு, படையினரை பலப்படுத்தல், முகாம்களுக்கான பயணங்களும் கலந்துரையாடல்களும் என வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்}ச மேற்கொள்கின்றார். கடந்த காலங்களிலும் சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்கும் பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி பறந்து செல்வது வழமையான நடவடிக்கையாகவே அமையும். இம்முற…

  14. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி, மல்லாகம் , ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்கள், எதிர்வரும் 09 ஆம் திகதி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திறப்புவிழாவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரனையும் அழைக்க வேண்டுமென நீதியமைச்சிடம் யாழ்.மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீதியமைச்சருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை அழைக்க முடியாது என நீதி அமைச்சு அறிவித்துள்ளதால் யாழ். சட்டத்தரணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதலில் சாவகச்சேரி நீதிமன்றமும் பின்னர் மல்லாகம் நீதிமன்றமும் அதன் பின்னர் அன்று பிற்பகலே ஊர்காவற்றுறை நீதிமன்றமும் திறக்கப்படும் எனத் தீர்மானிக்…

  15. தமக்கு வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு எனத் தெரியாது சபரிமலை யாத்திரைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 55 யாதிரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த யாத்திரிகர்களிடம் வழங்கப்பட்டது போலி பயணச் சீட்டு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் 55 பேரும் விமான பயணச் சீட்டு வழங்கிய முகவருக்கு எதிராக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். போலி விமான பயணச் சீட்டுக்களை வழங்கி சபரிமலை யாத்திரிகர்களை ஏமாற்றிய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். http://www.virakesari.l…

  16. இந்த வருடத்தில் மேல் மாகாணத்திலுள்ள அநேகமான மார்க்கங்களில் பஸ் டிக்கெட்டுக்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மேல் மாகாண போக்குவரத்து அமைச்சர், உபாலி கொடிகார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது -முற்கொடுப்பனவு அட்டை முழுமையாக அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பஸ் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாவதோடு பயணிகள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீரும். மிகுதிப் பணம் வழங்காமை தொடர்பான பிரச்சினை இனிமேல் எழாது. தென் ஆசியாவில் முதற் தடவையாக டிக்கெட்டுக்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மேல் மாகாண பயண…

  17. எதிர்கால அரசியல் வியூகங்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. விரைவில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவில் இருந்து கொழும்பு திரும்பியதும் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்றும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு சம்பந்தனை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது. இதேவேளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்து மு…

  18. போரினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் வாழும் வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தம்பிராசா எதிர்வரும் 16ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரப்போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் அகதிகள் யாரும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 2009ஆம் ஆண்டு அப்போது அரசாங்க அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் சுமார் 6500 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணத்தை நிறுத்தினார். அரசாங்க…

  19. இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் 5ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். லசந்தவின் சகோதரரின் இரு மகள்கள், எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் தலைவர் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உள்ளுர், சர்வதேச ஊடகவியலாளர்கள் பலரும் இணைந்து அவரின் கல்லறைக்கு மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு – பிரதீப் பதிரண) http://tamil.dailymirror.lk/--main/96088-2014-01-08-09-30-18.html

  20. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லைக்கா நிறுவனம் பற்றி செய்திகள் பல வெளியிட்டிருந்தோம். லைக்கா குழுமத்துக்கும் சிறீலங்காவுக்கும் இடையேயான தொடர்புகள் தொடர்பாக பல ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிட்டிருந்தமை சங்கதி24ன் வாசகர்கள் அறிந்ததே. மேலும் பல ஆதாரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. லைக்கா குழுமம் சிறீலங்கா சென்று அங்கிருந்து இலங்கைத்தீவை சிங்கள விமானப்படையின் உதவியுடன் சுற்றித்திருந்தமை தொடர்பாக படங்கள் வெளியாகியுள்ளது. எமது உறவுகள் பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போனதை நாங்கள் மறக்கவில்லை. எமது உறவுகளை குண்டு போட்டு அழித்த அதே சிங்கள வான்படையின் உதவியுடன் உல்லாசப்பயணம் செய்து தமிழர்களின் முதுகில் பலமாக குத்தியுள்ளார்கள். இவர்கள் எங்கள் உறவுகளின் பணத்தில் வளர்ந்து அப்பணத்தில் …

  21. பலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெத்லஹேம் நகரிலுள்ள நெற்விட்றி தேவாலயத்திற்கு விஜயம் செய்து நள்ளிரவு ஆராதனைகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளில் பலஸ்தீன் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/95958-2014-01-07-09-29-13.html

  22. மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்டவான் அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது பாரியளவில செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சாசேனை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார். சோளம் செய்கைக்கு மத்தியில் பெரும் பாதுகாப்பான முறையில் அடர்ந்த யானைக்காட்டுப்பகுதியில் இக்கஞ்சாசேனை செய்கை பண்ணபபட்டிருந்தது.மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரனின் பணிப்புரையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. காட்டில் செய்கை பண்ணப்பட்ட மூன்று அடி உயரமான 70 கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டன. ஒரு மரத்திலிருந்து 1 கிலோ கஞ்சாவை அறுவடை செய்யமுடியும். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மரங்கள்…

  23. - சி. சிவகருணாகரன், எஸ்.கே.பிரசாத், எஸ்.றொசேரியன் லெம்பேட், கிளிநொச்சியில் திடீரென மரணமடைந்த தன்னுடைய 16 வயதான மகனுக்கு கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (வயது 48) இன்று 18 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது மகனான நிதர்ஷனின் இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தனது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், சிறைச்சாலை அதிகாரிகள் அறுவரும் பொலிஸார் 11 பேரும் அவரது கணவனை, இன்று முற்பகல் 11 மணியளவில் அவரது வீட்டு …

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் முஸ்லிம் மக்களை அடக்கி ஆழ நினைக்கவும் இல்லை நினைக்கப் போவதும் இல்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாரம்பரியமாக இருந்த உறவினையும், தற்போது இருந்துவரும் உறவினையும் அறியாமல் அதனை கொச்சப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் நடந்துகொள்ளக் கூடாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார். 'கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையளராக தமிழர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால' வெளியிடப்பட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைய…

  25. 'இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். புதியதலைமுறை டி.வி.யில் இடம்பெற்ற நிகழ்சியொன்றில் பேசிய போதே அமைச்சர் சிதம்பரம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 'இன்றைய அரசியல் நிலை, சிவகங்கை தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசின் தடை, லோக்சபா தேர்தல் கூட்டணி, ராஜீவ் படுகொலை, இலங்கை இறுதிக்கட்டப் போர் நிலவரம் பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.