ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தனியே வன்னியில் இருந்து மட்டுமே அழித்ததே தவிர, அவர்களை கிழக்கில் இருந்து விரட்டி, கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐதேகவும் ஒரு போரை நடத்திக் கொண்டே, நீர்மின், சக்தி, ஆடைத்தொழில், வீடமைப்புத் துறைகளில் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. ஆனால், ராஜபக்ச அரசாங்கத்தைப் போன்று கடனுக்குள் நாம் நாட்டை தள்ளிவிடவில்லை. இந்தக் கடனை, பிறக்கப் போகும் தலைமுறைகளால் கூட ஈடுசெய்ய முடியாது. நாமே கிழக்கை கைப்பற்றினோம். கடற்புலிகளின் முதுகெலும்பையும் முறித்தோம். சந்திரிகா தலைமையிலான அரசாங்கமும் கூட விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. யாழ்ப்பாணத்தில் அவர்களைத் தோற்கடித்தது. அவர…
-
- 0 replies
- 218 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு பிரிவினைவாதக் கொள்கைகளுடன் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், அரியநேத்திரன் ஆகியோரை கட்சியிலிருந்து புறந்தள்ளிவைக்குமாறு மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக கூட்டமைப்பின் உயர்மட்டத் தரப்பு தகவல் ஒன்றின் மூலம் தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சபாநாயகர் ஒழுங்கு செய்திருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமிழ்க் கூட்டமைப்புத் தலைவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக, சிறீதரன் எம்.பி. உள்ளிட்ட தரப்பினர் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், இது அவ்வளவு நல்லதல்ல என்றும் மகிந…
-
- 4 replies
- 436 views
-
-
செவ்வாய்க்கிழமை, 24 டிசெம்பர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் எம்.பிக்களையும் வடக்கு,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அரசியல் நிலைமைகளையும், அவர்களின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்யும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடமாகாண சபை தேர்தலின் பின்னர் ஒரு பொதுவான கருத்தாடலுக்கான வாய்ப்பாக இந்த கலந்துரையாடல் அமையுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்துக்கு 19 உறுப்பினர்கள் உள்ளனர். நாம் போனால் எமக்கு நான்கு இடங்கள் கிடைக்கும். இதனால் எமது கருத்து எடுபடாது போகும். இந்நிலையில் ந…
-
- 0 replies
- 398 views
-
-
செவ்வாய்க்கிழமை, 24 டிசெம்பர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் எம்.பிக்களையும் வடக்கு,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அரசியல் நிலைமைகளையும், அவர்களின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்யும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடமாகாண சபை தேர்தலின் பின்னர் ஒரு பொதுவான கருத்தாடலுக்கான வாய்ப்பாக இந்த கலந்துரையாடல் அமையுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்துக்கு 19 உறுப்பினர்கள் உள்ளனர். நாம் போனால் எமக்கு நான்கு இடங்கள் கிடைக்கும். இதனால் எமது கருத்து எடுபடாது போகும். இந்நிலையில் ந…
-
- 0 replies
- 508 views
-
-
http://www.youtube.com/watch?v=FzSnZ27Cgmc ரிலாக்ஸ் பிளீஸ்! நான் எப்போதும் சீரியஸ்சான அரசியல் விடயங்களையே எழுதுவதாக சில நண்பர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். அவர்களுக்காக இந்த பதிவை பகிர்கிறேன். கடந்த 20.12.2013யன்று கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர். அவர்களுக்குரிய பரிசை எமது “குத்துப்பாட்டு” புகழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன் வழங்கியுள்ளார்.... இடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி முன்மாதிரியாக விளங்குகின்றனர். இனி மற்ற நாடுகளில் வாழும் புலத்து தமிழர்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட முனைவார்கள். கீழ்வரும் இணைப்பில் அந்த நிகழ்வைப் பார்வைய…
-
- 2 replies
- 642 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளில் மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் குறுக்கீடுகள் அதிகரித்துள்ளது, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரை மாற்றும்படி வடக்கு மாகாணசபை கோரிய போதிலும் அதற்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இந்தச் சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, வடக்கு மாகாணத்தை அபிவிர…
-
- 4 replies
- 792 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 24 டிசெம்பர் 2013, 00:12 GMT ] [ தா.அருணாசலம் ] வடக்கு மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கோரியுள்ளார். வீடமைப்பு மற்றும் போக்குவரத்து திணைக்களங்களை புதிதாக உருவாக்கும் யோசனையை வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத்திட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்மொழிந்திருந்தார். இது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, ஊடகங்களில் தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது. இதையடுத்து, ஆளுனருக்கும், மாகாணசபைக்கும் இடையிலான பனிப்போர் தீவிரம் பெற்றது.…
-
- 0 replies
- 595 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் மகாவித்தியாலையத்தில் உயர்தரக் கல்வி கற்று வந்த பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி க. பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக பெபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு தான் கல்வி கற்று வந்த பாடசாலைக்கும், அறிவையூட்டிய ஆசிரியர்களுக்கும் பெருமையையும் சிறப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட மாணவியின் தாயார் இவரின் ஒரு வயதிலேயே இறந்து விட சிறியதாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இவருக்கு இரண்டு மூத்த ஆண் சகோதர்கள் மாவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கற்க முடியாத சூழ்நிலையில் இடை நிறுத்தப் பட்ட இவரின் படிப்பு பின் பல இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் கல்வியைத் தொடர முடிய…
-
- 16 replies
- 1.1k views
-
-
க.பொ.த.(உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2013ஆம் ஆண்டு க.பொ.த.(உஃத) பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை என்ற http://www.doenets.lk/exam/contact.html இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/?q=node/360034
-
- 16 replies
- 4.7k views
-
-
தமிழ் மக்களை ஆயுதங்களினால் ஒடுக்க முயன்றவர்கள் தற்போது வேறு வடிவத்தில் செய்கின்றார்கள் ஆயுதப் போராட்டம் முடிந்து இந்த நாட்டில் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையிலும்கூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதி பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு, நகர அபிவிருத்தி, நிதிதிட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி ஆகிய நான்கு அமைச்சுக்களுக்கும் 47 வீதமான நிதியினை ஒதுக்கி, அரசாங்கம் தமது குடும்ப அரசியலுக்கு கிட்டத்தட்ட 50 வீதமான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர். கோவிந்தம்-கருணாகரம் அவர்கள் தெரிவித்துள்ளார். குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தினால் நேற்று சிறுவர் நூலகத் திறப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேத…
-
- 0 replies
- 450 views
-
-
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் சிங்களவர்களை எதிர்க்கவில்லை, வடக்கு,கிழக்கு சிங்கள மயப்படுத்தப்படுவதையே எதிர்க்கிறார்கள் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த சர்வோதய இயக்கத்தின் ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், “வடக்கில் இராணுவத் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது தெற்கிலுள்ள சிங்கள மக்களின் கடமை. உள்நோக்கங்களுடன் தான் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என்பதில் எமக்கு எந்த சந்தேகமும் இல்லை. எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. எமது வர்த்தகம் அபகரிக்கப்பட்டுள்ளது. எமது தொழில்வாய்ப்புகள் அபகரிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு காலத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தமது படைகளை வடக்கில் வைத்திருக்கப் போகிறது.? இந்…
-
- 1 reply
- 424 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மக்கள் மீளக்குடியமரவும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள சுண்டிக்குளம் பகுதியில்; நேற்று சுற்றுலாவிடுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் வனவள பாதுகாப்பு அமைச்சின் நிதி ஏற்பாட்டில் சுமார் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. சுண்டிக்குளம் கடற்கரை மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றுடன் கூடிய பரந்த இயற்கை வனப்பு மிகு பிரதேசத்திலேயே இவ்விடுதி அமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டதில் பிரசித்தி பெற்ற கடற்பிராந்தியமாகக் கருதப்படும் சுண்டிக்குளம் இப்பிரதேசத்தில் முதன் முறையாக இவ்வாறான சுற்றுலா வீதி அமைக்கப்பெற்றுள்ள நிலையில் நேற்;று குறித்த விடுதியினை இலங்கையின் வனவள பாதுகாப்பு அமைச்ச…
-
- 1 reply
- 1k views
-
-
-கெலும் பண்டார ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் இலங்கை, கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள சாதனைகளைப்பற்றி அரசாங்கம் இரண்டு முக்கிய விளக்கங்களை அளிக்கவுள்ளது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பொறுப்பாகவுள்ள ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க ஜனவரியில் ஜெனீவா சென்று பல்வேறு நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பார். இலங்கையிலுள்ள இராஜதந்திர நிறுவங்களின் தலைவர்களுக்கும் இது தொடர்பான விளக்கமளிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற…
-
- 0 replies
- 278 views
-
-
இனப்படுகொலை - ஐநாவின் மனித உரிமை கழகத்திலும் இலங்கைக்கு மறைமுக ஆதரவளிக்கும் இந்தியா தமிழினப் படுகொலையின்போது அனுபவித்த சொல்லவொண்ணா துயரத்திற்காக இலங்கை மீது ஐநாவின் மனித உரிமை கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த கூட்டம் 2011 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 2009ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் கழகத்திற்கு (யூஎன்எச்ஆர்சி) கொழும்பு/ இந்தியா அழுத்தம் கொடுத்ததைப்போல அல்லாமல் தற்போது ராஜபக்சேவுக்கு எதிராக ஏராளமான இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு விக்கிலீக்ஸ் இணையதளம் (போர்க்குற்றத்திற்கு உடந்தையாக ஏராளமான ஆவணங்களை வெளியிட்டு வருகிறது), ஐநா ‘நிபுணர் குழு‘ அறிக்கை, சேனல்4-ன் ‘கொலைக்களங…
-
- 0 replies
- 850 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரை இலக்கு வைத்து எதிர்வரும் மார்ச் மாதத்தில் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் மாநாடொன்றை நடத்துவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கான மாநாடு என பெயரிடப்பட்டுள்ள குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர்கள் என அனைத்து தரப்பினரையும் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியும் இடம்பெறுகின்றது. இதற்குப் புறம்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுப்பதற்கு அரசு எதிர்ப்பார்த்துள்ளது என தெரியவந்தாலும் இதுதொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் …
-
- 3 replies
- 614 views
-
-
மன்னார் பிரதேச சபைக்குற்பட்ட பகுதியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 510 ஏக்கர் காணி தனி நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட உவரி,தாழங்காடு,கருப்பன் குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கி புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவரினால் 510 ஏக்கர் காணி அபகரிக…
-
- 0 replies
- 463 views
-
-
இராணுவத்தினரின் உதவியுடன் வடகிழக்கில் சைவ ஆலயங்களில் திருடிய விக்கிரங்கள் தெற்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . பிள்ளையார் சிலை மற்றும் 5 மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயன்ற நால்வர் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . பிள்ளையார் சிலை மற்றும் மாணிக்க கற்களின் பெறுமதி 12 ½ கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது . அநுராதபுரம் , பனக பிரதேசத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . பிள்ளையார் சிலையை புதையல் அகழ்வின் மூலம் பெற்றுக் கொண்டதாக சந்கேநபர்கள் தெரிவித்திருந்தாலும் இவை வடகிழக்கில் சைவ ஆலயங்களில் திருடப்பட்டதாக தெரியவருகிறது . கொழும்பு நிருபர் . http://www.ttnnews.com/othernews/5947-2013-12-23-01-31-11
-
- 0 replies
- 370 views
-
-
கிழக்கு சம்பூரிலும் வடக்கில் வலிகாமம் வடக்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். அண்மையில் சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களின் நிலையைக் கண்டு நான் கலங்கி விட்டேன் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துக்கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்துபசார நிகழ்வை நடத்தினார். இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இங்கு ஜனாதிபதியை சந்தித்து பேசியபோதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு எடுத்துக்கூறியுள்ளார். சம்பூர் …
-
- 0 replies
- 575 views
-
-
ஜனாதிபதி மஹிந்தராஜபக்~வுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளார். கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில், தென்னாபிரிக்கா, மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்தராஜபக்~ கொழும்பு திரும்பிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டுபாய் விமான நிலையத்தில், ஜனாதிபதி மஹிந்தராஜபக்~ ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அவரது ஊடகக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவர், 2325 டொலர் (3 இலட்சம் ரூபா) பெறுமதியான, கண்காணிப்பு காண…
-
- 3 replies
- 348 views
-
-
இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் அறிந்து வைத்திருந்த புலி பொலிஸாரை விடவும் எமது இலங்கை பொலிஸார் வித்தியாசமானவர் கள், நல்லவர்கள் என நிரூபிக்க வேண்டுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற 240 தமிழ் கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 233 தமிழ் கனிஸ்ட கான்ஸ்டபிள்களும் பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்விலேயே அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்த கல்லூரியிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சிநேகபூர்வமான சேவை வழங்குவது முக்கியம் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் வலியுறுத்தியுள்ளார். பயிற்சி பெற்று வெளியேறும் அனைவரையும் வடக்கு மற்றும் கிழக்கிலிருக்கும் பொலிஸ் நிலையங்களில்…
-
- 3 replies
- 752 views
-
-
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பலஸ்தீன் மற்;றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 6ஆம் திகதி ஜனாதிபதி புறப்படவுள்ளார். இந்த விஜயத்தின்போது இரு நாட்டு அரச தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/94110-2013-12-22-11-02-46.html
-
- 1 reply
- 393 views
-
-
நீர்பாசன திணைக்களத்தின் - நீர்பாசன ஆய்வுகூட உதவியாளர்கள் பதவிக்கான நேர்முகத் தெரிவுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இந்த நேர்முகத் தெரிவு இடம்பெறவிருந்தது. எனினும் இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதங்கள் தனி சிங்களத்தில் இருந்த நிலையில், அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைபாட்டின் அடிப்படையில் நீர்பாசன திணைக்களத்திற்கு, குறித்து நேர்முகத் தேர்வை இடைநிறுத்துமாறு, உத்தரவிடப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த நேர்முகத் தெரிவுக்கான விண்ணப்பதாரிகளுக்கான கடிதங்களை தமிழ் மொழியில் அனுப…
-
- 0 replies
- 689 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனத்தா கட்சி துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்னைகள் குறித்தும் நாங்கள் நன்கு அறிவோம். இவை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் எங்கள் கட்சி எப்போதும் துணைநிற்கும். அதே நேரத்தில் இலங்கையை நட்பு நாடாகவும் ஏற்றுக்கொள்வோம் என்…
-
- 1 reply
- 688 views
-
-
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க ஆகிய 3 நாடுகளின் உதவியில்லாமல் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் நடைபெற்றிருக்க முடியாது என்று இலங்கைப் போர் குறித்து ஜேர்மனியில் விசாரணை நடத்திய மக்கள் தீர்ப்பாயம் கூறியுள்ளதாக "மே 17 இயக்கம்" தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தில்லி செய்தியாளர் மன்றத்தில் சனிக்கிழமை அந்த அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியது; இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசும், ராணுவமும் சேர்ந்து நடத்திய இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து மக்கள் தீர்ப்பாயம் டிசம்பர் 7 முதல் 10-ஆம் திகதி வரை ஜேர்மனியில் உள்ள பிரெமன் நகரில் விசாரணை நடத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் டென்னிஸ் ஹேலிடே தலைமையிலா…
-
- 0 replies
- 787 views
-
-
நீண்ட காலமாக நிரந்தர நியமனமின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த தொண்டர் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழக்கக் கோரி முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 11வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கிறது. நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், தாம் முன்னெடுத்த பணிகளில் புதியவர்களை ஈடுபடுத்தக்கூடாது மற்றும் நிரந்தர நியமனத்திற்கான எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே தொண்டர் ஊழியர் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அமைதியான முறையில் கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் போராட்டத்தை குழப்புவதற்கான முயற்சிகள் சில தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், தாம் தொடர்ந்தும் தமது உரிமைகளுக்காக போராடப்போவத…
-
- 0 replies
- 515 views
-