Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா வைரவபுளியங்குளம் முன்னால் கிராமசேவையாளர் திருமதி சற்குனசேயோன் பாலசுந்தரி மீதான இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட கிளை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 4ம் திகதி புதன் கிழமை இரவு 8.30 மணிக்கு கிராம சேவையாளரின் வேப்பங்குளம் வீடிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஜெகன் என்ற ஒரு பெயரைக் கூறி அவர் நிகின்றாரா என கேட்டனர். அதற்கு அவ்வாறான பெயரையுடைய ஒருவர் இங்கு இல்லை என முன்னால் கிராம சேவையாளர் பதில் …

  2. நெடுந்தீவுப்பகுதியில் இன்று காலை தொழிலுக்கென புறப்பட்டுச் சென்றிருந்த மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு ஆறாம் வட்டாரத்தினை சேர்ந்த 42 வயதுடைய வ.ஜீவராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் கடற்கiயிலுள்ள வாடி வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலொன்றினை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே அதே இடத்தினை சேர்ந்த 56 வயதுடைய எஸ்.ஜேசுதாசன் என்பவரது சடலமும் மீடகப்பட்டு வைத்தியசாலையினில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவித்து அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.globaltamiln…

  3. இந்தியாவும் இலங்கையும் பெளத்த மதம் தொடர்பில் பொதுவான கொள்கையொன்றை பகிர்ந்து வருவதன் மூலம் அவை எவராலும் முறிக்கமுடியாத வரலாற்று ரீதியான பந்தப் பிணைப்பினைக் கொண்டு விளங்குவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் இந்திய கலரியொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா. இந்திய துணைக் கண்டத்தினதும் இந்தியாவினதும் தவப் புதல்வனாம் புத்த பகவான் எமது இரு நாடுகளையும் பின்னிப்பிணைய வைத்துள்ளார். எமது சமய , இனம் சார்ந்த மற்றும் மொழிசார்ந்த தொடர்புகள் உலகின் எப்பாகத்திலும் இல்லாதவாறு ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன.இலங்கைக்கு பெளத்த மதத்தைக் கொண்டு வந்திருந்த மஹிந்த தேரர் பீஹா…

  4. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கனடா அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க கனடா முனைப்பு காட்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பார்ம் கில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமை, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடாத்தப்படாமை போன்றன ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக…

  5. இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தாபயவின் ஆயுத களஞ்சியம்! - இந்தியக் கடற்படைத்தளபதி அதிருப்தி. [Monday, 2013-12-09 08:04:52] கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் கூறியுள்ளார். சர்வதேச கடல்சார் அமைப்பு இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் மிகப் பெரிய சட்டவிரோத நடவடிக்கையாக இது மாறிவிடும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமை…

  6. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரு பிரேரணைகளின் போதும், இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆதரவுச் செயற்பாட்டுக்காக 59 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த இரு மனித உரிமைகள் கூட்டத் தொடர்களின் போதும், அமெரிக்க அரசினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இந்தப் பிரேரணையை எதிர்த்து இலங்கையைக் காப்பாற்றுவதற்காக 59 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். …

  7. ஜெர்மனியில் நேற்று நடைபெற்ற மக்கள் நம்பிக்கை தீர்ப்பாயத்தில் வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே சாட்சியமளித்தார். இலங்கையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர், சிங்களவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மக்ரே சாட்சியமளித்துள்ளார். அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த 11 நீதிபதிகள் இந்த தீர்ப்பாயத்தின் வழக்கு விசாரணைகளை நடத்தினர்.இங்கு சாட்சியமளித்த மக்ரே மூன்று இலங்கையர்கள் தமக்கு இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கியதாக கூறியுள்ளார். கெலும் மக்ரே வன்னிப் போரை நேரில் பார்த்தவர் போல் சாட்சியமளித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. புலம்ப…

  8. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசன் "விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியாளர்"(Best Scientific Researcher) எனும் விருதினை இந்தியாவிலுள்ள அபிவிருத்திஇ விஞ்ஞானஇ கல்வியாளர் சங்கத்திடமிருந்து(Association of Developers Scientists and Faculities) பெற்றுக்கொள்கின்றார். இவ்விருது வழங்கலானது எதிர்வரும் 30ம் திகதி இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் பிரசுரித்திருப்பது குறிப்பிடத்தக்கவொரு அம்சமாகும். http://www.seithy.com/breifNews.php?newsID=98810&category=TamilNews&language=tamil

  9. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மீனவர்கள் அனைவரும் உயிர்க்காப்பு அங்கிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. மீனவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மீனவர்கள் இயற்கை அனர்த்தங்களாலும் ஏனைய நேரங்களில் கடலில் அடித்துச் செல்லப்பட்டும் இறக்கின்றனர். இதற்கிணங்க இவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே உயிர்க்காப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் , முதலாளிமார்கள் தங்களது படகுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்காலங்களில் கடற்றொழில்களில் ஈடுபடும் படகுகளில் தேவையான உயிர்காப்பு அங்கிகள் இல்லாதவிடத்து குறித்த படகின் அனுமதியும் இரத்துச் செய்வத…

  10. வடக்கிலிருந்து படையினரை வெளியேற்ற தீர்மானம்! மாகாணசபையின் VIP பகுதியில் புலனாய்வாளர்கள் குடியிருப்பு 11 டிசம்பர் 2013 வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு ஒரு புறம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேரவையில் தீர்மானத்தினை நிறைவேற்றிக் கொண்டிருக்க அதனை பார்வையிட வி.ஜ.பி பார்வையாளர் பகுதியில் சிவிலுடையில் அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறித்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிற்கு எவ்வாறு யாரால் பாஸ் அனுமதி பெற்று வழங்கப்பட்டதென்ற விவகாரம் சந்தேகங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தி உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்று (10.12.13) வடமாகாண சபையினது வரவு - செலவுத்திட்ட சமர்ப்பிற்கான பேரவை கூட்டம் நடந்துகொண்டிருந்த வேளை ஊடகவியலாளர்கள் சிலர் த…

  11. சா்வதேச மனித உாமைகள்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று பி.ப3.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணாமல் போன மற்றும் சிறைச்சாலையில் வாடும் உறவுகளதும் விடுதலையையும் நலனையும் வேண்டி தீபமேற்றி பிராத்தனை செய்யப்பட்டது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் அவா்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செல்வராசா கஜேந்திரன் வரவேற்புரையையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரசார செயலாளா் திரு.எஸ்.இளங்கோ தலைமை உரையினையும் ஆற்றினா். தொடா்ந்து மனித உரிமை செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும…

  12. நாட்டின் எந்தவொரு இன சமூகத்திற்கும் நன்மை ஏற்படவில்லை என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். நாடு மிகவும் நெருக்கடியான நிலையை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்தேசிய நிறுவனங்களுக்கு மட்டுமே நன்மைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு எவ்வித நன்மையும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கும் என்பதனை உலகமே பார்த்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்திற்கு கொங்கிரீட் குவில்களை அமைப்பதனை தவிர நாட்டின் அபிவிருத்திக்காக எதனையம் செய்ய முடியாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அபிவிருத்தி என்ற பெயரில் சிலர் செல்…

  13. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். "யுத்தத்தின்போது எமக்கும் இழப்புகள் ஏற்பட்டன. ஏன் அதைப்பற்றி நீங்கள் கதைக்க மறுக்கிறீர்கள்? உங்களது ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள். இது எங்களது இடம். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டோம்" என்று கூறி தாக்குதல் நடத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர்.…

  14. ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவில் இராணுவத்தினருக்காக குரல் கொடுத்து அவர்களை காப்பாற்ற தயார். எனினும் சில நபர்களை காப்பற்ற நான் தயாரில்லை. சட்ட ரீதியான இலங்கை அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சட்டத்திட்டங்கள் அனைத்தும் இலங்கைக்கும் பொருந்தும். இலங்கையில் போர் நடைபெற்ற போது தவறுகள் இடம்பெற்றனவா என்பதை அறிந்து கொள்ளும் தேவை எவருக்காகவது இருந்தால், இராணுவத்தின் சார்பில் ஆஜராகி நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க நான் தயாராக இருக்கின்றேன். எனினும் சில நபர்கள் தவறு செய்திர…

  15. -குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத் சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதன்போதே ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சிவில் சமூகத்தைச் சேர்ந்த வட மாகாண தமிழர் ஒருவரே ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்றை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் முன்வைத்தார். இந்த பிரேரணையை ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிந்தார். எனினும் இந்த பிரேரணையில் மாற்றத்தை ஏற்படுத…

  16. இலங்கையில் லஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக சீனாவும் குற்றம் சுமத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜாதிக சேவக சங்கமய தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு பாரியளவில் கடன் வழங்கும் சீனாவும், இலங்கையில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதனை ஒப்புக்கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக சீனப் பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லெண்ண அடிப்படையில் சீனா இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கி வருவதாகவும், இலங்கைத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேசாடிகளில் ஈடுபட்டு வருகின்றமையை சீனா புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2…

  17. இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு வந்த இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இன்றிரவு முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவர் இல்லத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறும். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தச் சந்திப்பில் தமிழர் தாயகப் பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசின் அடக்கும…

  18. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். வியட்னாம் பிரகடனத்தின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டு 20 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு தசாப்த காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கீழ் மனித உரிமைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச ரீதியில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த இதுவரை 5 ஆணையாளர்கள் திறம்பட செயற்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளிடையே மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஐ.நா மனித உரிமைகள் ஆனைக்குழுவின் பிரதான செயற்பாடாகவுள்ளது. மனி…

  19. மகிந்த ராஜபக்‌ச ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் அவரது குடும்பத்தில் கோடிஸ்வரர்கள் எவரும் இருக்கவில்லை எனவும் தற்பொழுது அவரது குடும்பத்தில் லட்சாதிபதிகள், கோடிஸ்வர்கள் அல்லது அதனையும் மீறிய செல்வந்தர்கள் இருப்பதாக நீதியாவல பாலித தேரர் தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்குள் திருட்டுத்தனமாக பல கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு வரப்படுகிறது. அப்படி கொண்டு வரப்படும் போதைப் பொருளில் 100க்கும் மேற்பட்ட கிலோ கிராம் காணாமல் போகின்றது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை செய்யப்படுகின்றனர். அரசாங்கத்திற்குள் நெருக்கடி அதிகரித்துள்ளது. அ…

  20. தமிழர்களின் வரலாற்றில் எத்தனையோ சோதனையான காலகட்டங்கள். எல்லாவற்றையும் தாண்டித்தான் போராடிக்கொண்டிருக்கிறது இந்த இனம். “தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறோம்” என்று கூறியபடியே தமது பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் சோரம்போன அரசியல் தலைவர்களையும் போராளித் தலைவர்களையும் கண்டவர்கள்தான் நாம். இந்த இனம் தமது விடுதலை குறித்து கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாமல் கவலைப்படாமல் வாழ்ந்த பொற்காலம்தான் புலிகளின் ஆட்சிக்காலம். இதை எதிரிகளே ஏற்றுக்கொள்வார்கள். எந்த மிரட்டலும் விலைபேசலும் புலிகளை அடிபணிய செய்யவில்லை. மக்களினதும் புலிகளினதும் உளவியல் அலைவரிசை சீராக பயணித்த ஒரு அற்புதமான காலகட்டம் அது. புலிகளின் ஆட்சிக்கு முன்பும் சரி மே 18 இற்கு பின்பும் சரி இனி வரப்போகும் காலங்களிலும் சரி…

  21. இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தினருக்கு, பயிற்சி கொடுத்த அமெரிக்கா: திடுக்கிடும் சாட்சியம். பிரீமன்: இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என்று திடுக்கிடும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோம் நகரை தளமாகக் கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தில் தற்போது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு குறித்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. மக்கள் தீர்ப்பாயத்தில் திங்களன்று நடைபெற்ற விசாரணையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் "வானவில்" …

  22. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை கலைப்பது குறித்து இக்கட்சியின் தலைமை மிக தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என தெரிகின்றது. கட்சிக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் வெளியாட்களால் அவதூறுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும், உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கைகள் கட்சிக்கு மேலும் அவப் பெயரை ஏற்படுத்தி உள்ள நிலையிலும் இத்தீர்மானம் குறித்து யோசிக்கப்படுகின்றது என அறியப்படுகிறது. அரச அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா இது குறித்து கட்சி முக்கியஸ்தர்கள், விசுவாசிகள் ஆகியோருடன் மந்திராலோசனைகள் நடத்தி வருகின்றார் என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. தற்போதைய சூழலில் கட்சிமீது மக்கள் வெறுப்பு காட்ட ஆரம்பித்துள்ளதுடன்…

  23. ஒரு பேப்பர் - 207 : பிரதிகள் அபகரிப்பு! ஒரு பேப்பரின் 207 வது இதழ் வார இறுதியில் வெளியானது. அதன் பிரதிகள் பெருமளவில் விநியோகிக்கப்பட்ட நிலையில் இன்று கிழக்கு, மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பத்திரிகையின் பிரதிகளை குறித்த ஒரு நிறுவனத்தின் வாகனத்தில் வந்த இரண்டு பேர் தொகையாக எடுத்துச் சென்றதாக எங்களிடம் முறையிடப்பட்டுள்ளது. இவ்வாரம் வெளியான 'ஒரு பேப்பர்' இல் கீழக்காணும் தலைப்பிலான கட்டுரையை பிரசுரித்திருந்தோம். 'மலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்' இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டமைக்கும் பத்திரிகையை மக்கள் பார்வையிடாமல் தடுக்கும் செயலுக்கும் தொடர்புள்ளதாக நாம் உறுதியாக நம்புகிறோ…

  24. பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபையில் ஆர்ப்பாட்டம் : 10 டிசம்பர் 2013 இனப்படுகொலைக்கு நீதி கோரியும் வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பு மற்றும் அதனை பார்வையிடச்சென்ற முதலமைச்சர் திருப்பி அனுப்பபட்டமையுள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் கே.சிவாஜிலிங்கம் தலைமையினில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடமாகாணசபையின் மூன்றாவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைக்கட்டிடத்தில் நடைபெற்றிருந்தது.வடமாகாணசபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டமும் இன்று சமர்ப்பிக்கப்படவிருந்தது. அமர்வு ஆரம்பமாகி சிறிது நேரத்தினில் கே.சிவாஜிலிங்கம் தான் எடுத்து வந்திருந்த சுலோக அட்டைகளை கூட்டமைப்பின் சக அங்கத்…

  25. மன்மோகன் விரைவில் பதவியில் இருந்து தூக்கியெறிப்படுவார் இந்தியா ஒரு சுரண்டும் நாடு என இலங்கை எம்.பி.சூரியபெருமா தாக்கு 11:53:13 Monday 2013-12-09 இந்தியா ஒரு சுரண்டும் நாடு எனவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வயதான முட்டாள் என்றும் இலங்கை நாடாளுமன்ற ஆளும்கடசி உறுப்பினர் ஜே.ஆர்.பி. சூரியபெருமா காட்மாக விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் ராஜ்பக்சே கட்சியின் எம்.பி.யான அவர் இலங்கை வெளியுறவு அமைச்சரவை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனை தெரிவித்ததாக இலங்கை ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்கு வருவதாக வாக்குறுதி அளித்து விட்டு வராமல் புறக்கணித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.