ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
கிளிநொச்சி கோணவில் பகுதியில் இன்று காலையில் அரசாங்க ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபா வழங்கி வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். மேலதிக செய்திகளுக்கு : http://akkinikkunchu.com/new/index.php
-
- 2 replies
- 485 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பில் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைந்தளவிலேயே வாக்குகள் பதிவாகியுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகலுக்கு சற்று முன்னர் வரையில் யாழ்ப்பாணத்தில் 20 வீதமான வாக்குகளே பதிவாகியுள்ளன. எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரையில் 40 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர, கிளிநொச்சி மாவட்டத்தில் 29 வீதமான வாக்குகளும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதமான வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 22 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல மத்திய மாகாணத்தில் நண்பகல் 12 மணி வரையில் நுவரெலியா மாவட்டத்தில் 35 முதல் 40 வீதமான வாக்குகளும், கண்டி மாவட்டத்தில் 40 வீதமான வாக்குகளும், மாத்தளை மாவட்டத்தில் 30 வீதமான வாக்குகளும் …
-
- 1 reply
- 501 views
-
-
சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களின் மீன்பிடி படகுகளை அரச உடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு வெளிவிவகார அமைச்சு கடற்படை தளபதி அகியோருடன் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவிக்கின்றார்.கைப்பற்றப்பட்டுள்ள படகுகளின் உரிமையாளர்களை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த கலந்துறையாடலின் போது இந்திய மீனவர்கள் வட பகுதி கடற்பரபிற்குள் அத்துமீறி பிரவேசித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறுகின்றார். இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே செயற்பாடுகள் முன்னெடுக்கப…
-
- 1 reply
- 542 views
-
-
இராணுவம் வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசுரங்களுடன் வீரகேசரி: யாழில் இராணுவம் விநியோகம்! வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இராணுவத்தினால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசுரங்களுடன், கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி தினசரி யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்றும், நகரப் பகுதியில் வீதிகளில் வைத்தும் வீரகேசரியின் பிரதிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இராணுவத்தினால் விநியோகிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் கொழும்பில் வெளியாகிய வீரகேசரி தினசரியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோரர…
-
- 0 replies
- 446 views
-
-
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு: வைகோ உரை [காணொளி] http://www.periyarthalam.com/
-
- 0 replies
- 377 views
-
-
இருள் விலகி மறையும் இந்த இனிய காலை பொழுதை போல, தமிழர் துயர் அகன்று தேசியம் சுய நிர்ணயம் தன்னாட்சி ஆகியவற்றின் முதல்ப்படியாக இன்றைய வடக்கு தேர்தல் அமையட்டும் நீங்கள் ஒவொருவரும் உங்கள் உறவுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க சொல்லுங்கள் மறந்திடாமல் மறக்காமல் தேர்தலில் வாக்கு போட சொல்லுங்கள்! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காது சங்கே முழங்கு!!!
-
- 9 replies
- 718 views
-
-
வாக்குச் சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் சிப்பாயின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியா, கனகராயன் குளம், சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாக்களிக்க வந்திருந்த 24 வயதான நா.தவராசா என்பவறே காயமடைந்துள்ளார். இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, வவுனியாவில் இன்று காலை 10.30 மணி வரை 19 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 346 views
-
-
வடக்கு, மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்காக இன்று காலை ஆரம்பமான வாக்குப் பதிவுகளில் காலை 10.30 மணி வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி வரை 30 வீதமானவர்கள் தமது வாக்குகளை அளித்துள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதனைத்தவிர கண்டி மாவட்டத்தில் 29 வீதமான வாக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 22 வீதமான வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 19 வீதமான வாக்குகளும், குருணாகல் மாவட்டத்தில் 20 வீதமான வாக்குகளும், பதிவாகியுள்ளன. மூன்று மாகாணங்களிலும் மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருவதாகவும், நீண்ட வரிசைகள் காணப்படாவிட்டாலும் தொடர்ச்சியாக மக்கள் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி வந்தவண்ணமுள்ளதாக எமது செ…
-
- 0 replies
- 479 views
-
-
"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது." என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. திட்ட வெளியீடு ஒரு இலட்சம் தர்மபாலகர்கள் 2 ஆயிரம் பிக்குகள் அணி 2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள் 10 இலட்சம் கையேடுகள் 10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை 5 மாபெரும் யாத்திரைகள் "பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்கள் அனைவரும் சர்வமதக் கொள்கையை எதிர்த்த அநாகா…
-
- 10 replies
- 780 views
-
-
வடக்கு, வடமேல், மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்களிப்பு இலங்கை நேரப்படி இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானது. இந்த மூன்று தேர்தல்களிலும் வாக்களிப்பதற்கு 43 இலட்சத்து 63 ஆயிரத்து 251பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்கவென 3,712 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மூன்று மாகாண சபைகளுக்கும் போனஸ் ஆசனங்கள் உட்பட 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையில் 3,785 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக அரச உத்தியோகஸ்தர்கள் 40 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களென 5000 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தேர்தல்களை கண்காணிக்கும் கண்காணிப்பு நிறுவனங்கள் அறிவ…
-
- 1 reply
- 601 views
-
-
கொழும்பு: யாழ் பகுதியில் உள்ள பெண்களை வேலை வாங்கித் தருவதாக மலேசியாவுக்கு அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்த நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டியுள்ளது விக்கிலீக்ஸ். பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தமது தலைமைக்கு தாம் அறியும் அந்நாட்டு ரகசியங்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வழக்கம். இவ்வாறு அனுப்பப்படும் ரகசியங்கள் கேபிள் மூலமாக அமெரிக்க தலைமைக்கு செல்லும். அத்தகவல்களை இடைமறித்து ரகசியங்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ், அந்தவகையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், தமது தலைமைக்கு அனுப்பிய நம்பிக்கையான சில் ரகசியத் தகவல்களை தற்போது The telegraph நாளிதழுக்கு வழங்கி அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ். அதில், அப்பாவி பெண்களை வைத்து மலேச…
-
- 7 replies
- 1.2k views
-
-
யாழில் உள்ள முகாங்களில் இருக்கும் மக்களையும், ஏனைய பகுதிகளில் உள்ள மக்களையும் தேர்தலில் சிறீலங்கா அரசாங்கத்தின் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளும் இராணுவத்தினர், அரசாங்கத்திற்கு வாக்களிக்கத் தவறினால் மீண்டும் கிறிஸ் பூதம் யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இராணுவத்தினால் பொருத்தப்பட்ட இரகசியக் கமராக்கள் உள்ளன. அதனால் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று நாம் இலகுவில் கண்டுபிடித்துவிடுவோம, அரசாங்கத்திற்கு வாக்களிக்காத எவரும் யாழ்ப்பாணத்தில் நின்மதியாக இருக்க முடியாது என்றும் இராணுவத்தினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பகா அச்சுறத்தப்பட்ட மக்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
-
- 1 reply
- 484 views
-
-
At the wedding event the authorities are keeping a close eye, to make sure all goes to plan. A man who had been following us then gives the soldiers an account of our movements. The same happens in Jaffna, when we try to talk to shopkeepers. Soldiers appear, then a police car and several men in plain clothes. Soon everyone dries up. We hear later that the one man we had talked to had been questioned. வடக்குத் தேர்தலை ஒட்டி.. பிபிசி செய்தியாளர் சிறீலங்காவில் Andrew North போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் விஜயம் செய்து வழங்கிய செய்திக் குறிப்பில் வடக்கு தமிழ் மக்களின் மனங்களில் பிளவு வேரூன்றி உள்ளதை அவதானித்திருப்பதோடு.. எங்கும் இராணுவத் தலையீடு மக்கள…
-
- 0 replies
- 799 views
-
-
பாதுகாப்புச் செயலாளரின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். சுதந்திர சதுக்கத்தில் காணப்படும் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் சிலையை அகற்றுமாறு தாம் கோரியதாக, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தாம் இவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை விஜயத்தின் போது ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் தம்மை இழிவுபடுத்தி அவமானப்படுத்தியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். துரதிஸ்டவசமாக இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்…
-
- 4 replies
- 664 views
-
-
நடைபெறவிருக்கின்ற தேர்தலுக்காக வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற அதிகாரிகளின் மீது குளவி கொட்டியதில் ஒருவர் பலியானதுடன் கடுமையாக பாதிக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வவுனியார் புதுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. புதுக்குளம் மகா வித்தியாலயத்திற்கு சென்ற அதிகாரிகளின் மீதே குளவி கொட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மாறம்பைக்குளம் மதினா நகர் பாடசாலையின் ஆசிரியர் ம.கிறிஸ்துராஜா என்பவரே மரணமடைந்துள்ளார். புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் அ.லோகேஸ்வரன் அதேபாடசாலையைச்சேர்ந்த ஆசிரியை து.ரஞ்சிதமலர் ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளனர். வாக்களிப்ப…
-
- 2 replies
- 599 views
-
-
சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது ஏன் என விளக்கப்பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்றது. இடம் : லாயிஸ் சாலை, வி.எம்.தெரு சந்திப்பு, ராயப்பேட்டை 26.09.2013 மாலை 6 மணிக்கு http://www.sankathi24.com/news/33406/64//d,fullart.aspx
-
- 0 replies
- 524 views
-
-
"அனந்தி சசிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் கேள்விக்கணைகளை தொடுத்தனர்" அனந்தி சசிதரன் மீதான தாக்குதல் தொடர்பினில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடைபெறுமென அரச அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இன்று மாலை வாக்கெண்ணும் மையம் அமைக்கப்பட்டிருக்கும் யாழ்.மத்திய கல்லூரியினில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்;திப்பில் அவர் இத்தகவலை வெளியிட்டார். அனந்தி சசிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் அங்கு சென்றிருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் ஏறுமாறாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். இதற்கு பதிலளித்த அவர் 'முதலில் எம்மை நம்புங்கள். நாங்கள் பக்கசார்பற்று விசாரணைகளை மேற்கொள்வோம். சம்பவ இடத்திற்கு அதிகாலை வேளை…
-
- 0 replies
- 536 views
-
-
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்! - விடுதலைப் புலிகள் அறிக்கை!! மாகாணசபை முறைமை என்பது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையாது என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வடமாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்துவோம் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ம.அப்புமாறன் என்பவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'எம்மினம் தாங்கொணா சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து பாரிய அழுத்தங்களை எம்மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்த…
-
- 5 replies
- 769 views
-
-
வவுனியா மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்தியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து வாக்கு சாவடிகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாமாவட்டத்தில் 70ஆயிரம் தமிழர்களின் வாக்குகளும் 12ஆயி;ரம் வாக்குகளுடன் சிங்களமக்களும் 8ஆயி;ரம் வாக்குகளுடன் முஸ்லீம் மக்களும் வாக்குகளத்தில் குதித்துள்ளார்கள். 200ற்கு மேற்பட்ட வாக்கு சாவடிகள் வவுனியாவில் காணப்பட்டுள்ளது இந்த வாக்கு சாவடிகள் அனைத்திலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலதிக தேவைக்காக மேலும் காவல்துறையினர் பலர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று யாழ்ப்பாணத்திலும் வாக்குபெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் யாழில் காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பில் …
-
- 0 replies
- 425 views
-
-
தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசமான வட தமிழீழத்தில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு இராணுவமும் சிறிலங்கா அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை முறியடித்து இங்கு ஒரு தமிழ்த் தேசிய அரசை நிறுவ தமிழ் மக்கள் முன்வரவேண்டுமென்று யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு மாகாண சபை இராணுவத்தின் பிடிக்குள் செல்லுமாயின் அது தமிழ் மக்களின் இருப்புக்கும் எதிர்காலத்திற்கும் பாரிய கேள்விக்குறியாக அமையும். இந்த நிலமையை ஏற்படுத்த வேண்டாமென்றும் யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை எச்சரித்துள்ளது. இதனால், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வடக்கில் தனித் தமிழ் அரசை நிறுவி தமிழ் மக்களின் ஒற்றுமையை உலகறியச் செய்யுமாறும் …
-
- 0 replies
- 513 views
-
-
வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) மீது இனவாதத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்றவேண்டும் என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று அதிகாலை 12.20 (20-09-2013) மணியளவில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீது சிங்கள இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பியினர் ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள். இது திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும். திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் ஒரு பெண் என்…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழால் இணைவோம் என்ற தாரக மந்திரத்துடன் த ஹிந்து தமிழ் பதிப்பை ஆரம்பித்து இருக்கின்றது...... ஆரம்பகாலங்களில் எல்லாம் 1980 90 களில் மாலினி பார்த்த சாரதி போன்ற பத்திரிக்கை ஜாம்பவான்கள் ஹிந்து வில் பணியாற்றிய காலத்தில் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக தான் ஹிந்து இருந்தது இன்பாக்ட் புலிகளை ராஜீவ் காந்தியை சந்திக்க வைத்ததிலும் மாலினி போன்றோரின் பங்கு மிகப்பெரியது பின்பு ராஜீவ் காந்தியின் கொலை அதனால் ஏற்ப்பட்ட மாற்றங்கள் என்று ஹிந்துவும் தனது பாதையை மாற்றி இலங்கை தமிழருக்கு எதிராகவே செய்திகளை போட்டு வருகின்றது எது எப்பிடி இருப்பினும் புதிய தமிழ் பதிப்புடனாவது ஈழத்தமிழருக்கும் சேர்த்து குரல் எழுப்பும் பத்திரிகையாக ஹிந்து இருக்கட்டும் புதிய தமிழ் பதிப்பிற்கு வாழ்த…
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இன்று அதிகாலை 1.00 மணியளவில் தொல்புரம் வளக்கம்பரையில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் (எழிலன்) அவர்களது வீட்டினை சுற்றிவளைத்து உள்நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர். அத்தாக்குதலில் அனந்தியின் ஆதரவாளர்கள் எண்மர் காயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவத்தை அறிந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ…
-
- 0 replies
- 464 views
-
-
மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்ல நீங்கள் தயாரா? என்ற அச்சுறுத்தலுடன் கூடிய சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. இரு தடவைகள் சிந்தியுங்கள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்ல நீங்கள் தயாரா? தமிழ் தேசிய கூட்டமைப்புக்கா உங்கள் வாக்குகள்? மேற்கண்டவாறு எழுதப்பட்ட சுவரொட்டிகள் பல இடங்களில் ஓட்டபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளன. ஆனால் நேற்று இரவு இந்த சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.வேட்பாளர்களின் சுவரொட்டிகளை கிழிக்கும் பொலிசார் இந்த சுவரொட்டிகளை கிழிக்காமல் விட்டு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sank…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் அனந்தி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மற்றும் இதன் போது தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.21ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வன்முறையின்றி சுதந்திரமாகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீ…
-
- 0 replies
- 780 views
-