Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்தகால போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார். மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழுவில், டிமிங்கு பாததுருஹே பிரியந்தி சுரஞ்சனா வித்யாரட்ண மற்றும் மனோ இராமநாதன் ஆகியோர் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 6 மாதங்களில் இந்த ஆணைக்குழு தனது விசாரணைகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள், கடத்தப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த ஆணைக்குழுவுக்கு …

    • 2 replies
    • 438 views
  2. யாழ்.மாநகர சபையில் ஆட்சிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வறிவித்தலை கடந்த யூலை மாதம் 29 ஆம் திங்கட்கிழமை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அறிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி யின் ஆட்சியில் இருக்கும் குறித்த யாழ்.மாநகர சபையானது எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமையுடன் ஆட்சிக்காலம் முடிவடைகின்றது. இந்நிலையில் அதனது ஆட்சிக்காலத்தினை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிவரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதான சிறிலங்கா சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரினை மூலம் அறிவித்தர் யாழ்.மாநகர சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. http://w…

    • 1 reply
    • 338 views
  3. மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மடு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. இதன்போது மடு அன்னையின் திருச்சுரூப பவனியும் நடைபெற்றது. பெருமளவான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர். (படங்கள்: ரொமேஷ் மதுசங்க,எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/78927-2013-08-15-06-48-42.html

    • 1 reply
    • 236 views
  4. ‘முதலில் அவர்கள் கொம்யூனிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கொம்யூனிஷ்ட் இல்லை. பின், அவர்கள் சோசலிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் சோசலிஷ்ட் இல்லை. பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை. பின், அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதனில்லை. பின், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கத்தோலிக்கனில்லை. பின், அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள், அங்கே எனக்காகப் பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை.’ நாசிக்களின் படுகொ…

  5. தேசிய கைப்பணிக் கண்காட்சி 'ஷில்பா 2013', கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கண்காட்சியில், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - நிஷல் பதுகே) http://tamil.dailymirror.lk/--main/79085-2013-08-16-07-53-58.html

  6. பொதநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கம் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். குறித்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பதினைந்து நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகள் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். ஆரம்ப நிகழ்வு நடைபெறும் தாமரைத் தடாக அரங்கம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் உள்ளிட்ட சில இடங்களுக்கு பிரதிநிதிகள் விஜயம் செய்ய உள்ளனர். அமர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து இந்த பிரதிநிதிகள் கண்காணிப்பு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த பிரதிநிதிகள் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTy…

  7. இந்தியாவின் 67 வது சுதந்திர தினம் இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரவத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இந்தியாவின் யாழ்ப்பாண்திற்கான துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் இந்தியக் கொடியினை ஏற்றி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இத்துடன் இந்திய ஜனாதிபதியின் உரை துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வடமாகாணத்தில் புகையிரதப் பாதையினை அமைக்கும் நிறுவனத்தின் அதிகாரிகள், இந்திய வங்கியின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். http://www.sankathi24.com/news/32281/64//d,fullart.aspx

    • 2 replies
    • 606 views
  8. உடலில் உள்ள பாகங்களை இழந்து அல்லது போரில் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகி அல்லது உளவியல் ரீதியான இழப்புக்களுக்கு உள்ளாகி அல்லது தனிமைப்படுத்தப்பட்டு அல்லது போரின் பிறகு வறுமையைச் சுமந்து இப்படி பல துயரம் மிகுந்த பெண்களை கொடுத்த போர் சில வலிய பெண்களையும் உருவாக்கியிருக்கிறது. கண்ணுக்கு முன்னால் கண்ட அவலங்கள்தான் இந்த சமூகத்திற்காக பணியாற்ற வேண்டும் என்கிற உந்துதலைத் தந்தது என்று சொல்லுகிறார் வன்னியைச் சேர்ந்த தவசிறி சாள்ஸ் விஜயரத்தினம். வன்னியில் கிளிநொச்சி நகரத்திற்கு அண்மையில் உள்ள திருநகரில் வசித்து வரும் தவசிறி சாள்ஸ் விஜயரத்தினத்திற்கு ‘என்’ சமாதாத்திற்கான சர்வதேச விருது கிடைத்திருக்கிறது. ஆசிய பிராந்திய நாடுகளில் இருந்து தேசிய மட்டத்தில் கணிக்கக்கூடிய வகையில் சமாதா…

  9. இலங்கையில் தமக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களை சில நாடுகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளன. இவர்களில் முன்னாள் கடற்படை அதிகாரியான லெப்டினட் கமாண்டார் ஒருவர் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுவீடன், சுவிஸர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்று இவர்கள் அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்பட்ட போது, இவர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி அரசியல் தஞ்சம் கோரியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ¨www.globaltamilnews.net

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இலக்கம் 1 இல் போட்டியிடும் திரு ப.அரியரத்தினம், இலக்கம் 5 இல் போட்டியிடும் திரு த. குருகுலராசா, இலக்கம் 7 இல் போட்டியிடும் திரு சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரை ஆதரித்து வட்டக்கச்சி, இராமநாதபுரம் கல்மடுநகர் ஆகிய பிரதேசங்களை இணைத்து, வட்டக்கச்சி பொதுச் சந்தை வளாகத்தில் நேற்று மாலை 4.00 மணிக்கு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் பிரசாரக் கூட்டம் ஆரம்பமானது. தமிழ் மக்களின் உரிமைக்காக வீழ்ந்து விதையாகிப் போன செல்வங்களுக்கும் தமிழ் உணர்வோ…

    • 2 replies
    • 1.1k views
  11. கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது பொலிஸாரின் அலட்சியப்போக்கு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பொலிஸார் அலட்சியமாக நடந்து கொண்டதற்கான பாதுகாப்பு கமரா காட்சி ஆதரம் அடங்கிய 'டிவிடி' இருவட்டு ஒன்றினையும் இணைத்து ரிசாத் பதியூதின் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். 'பொலிஸார் மக்களை பாதுகாக்க தவறியதை கிரான்ட்பாஸ் மக்கள் நேரடியாக அவதானித்துள்ளனர். அத்துடன், தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் பொலிஸார் இணைந்து செயற்பட்டதாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். அரசாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இது குறித்து கவலை அடைகிறேன். பொலிஸாருக்கு எதிரான குற்றச…

  12. தம்புள்ள, கண்டலம சந்தியிலுள்ள மகா பத்ரகாளி கோவிலை அகற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இந்த கோவிலின் சிலையை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களாக இயங்கி வந்த இந்தக் கோவிலில் இறுதி 13 வருடங்கள் தேர்த்திருவிழாவும் இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையிலேயே தற்போது குறித்த கோயிலை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கோயிலைச் சுற்றி வாழ்ந்து வந்த 25 அப்பாவி தமிழ் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டு அங்கிருந்து அகற்றிய…

  13. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து பாலித கோஹனவை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை அடுத்து அந்த பதவிக்கான உட்தரப்பில் போட்டிகள் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிவிவகார அமைச்சிலும் அதற்கு வெளியிலும் பலர் இந்த பதவியை பெற முயற்சித்து வருகின்றனர். இவர்களில் முன்னணியில் இருப்பவர் ஐக்கிய நாடுகளுக்கான பிரதிவதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா என தெரியவருகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95319/language/ta-IN/article.aspx

  14. யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையில் தனது அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இதனை தெரிவித்தார். மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 10ஆம் பிரிவின் 2ஆம் உப பிரிவின் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் இதனை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தமக்கு தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த யூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார…

  15. இலங்கையிலும் மதசகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி அதி வண. ஜோசப் ஸ்பிட்டேரி அவர்கள் இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்து கரிசனை வெளியிட்டிருக்கின்றார். வரலாற்று சிறப்பு மிக்க மடுமாதாவின் ஆடி மாதத் திருவிழா இன்று காலை திருப்பலிப் பூஜையுடன் நிறைவுபெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஜோசப் ஸ்பிட்டேரி அவர்கள் மற்றும் அநுராதபுரம் ஆயர் நோபட் அந்த்ரானி ஆகியோர் கூட்டாக திருப்பலிப் பூஜை ஒப்புக் கொடுத்தனர். ஜனநாயகம் மேலோங்கியுள்ள நாடுகளிலும்கூட கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதற்காக, அவர்கள் மத ரீதியாக ஒடுக்கப்படுவதாகவும் பாப்பரசரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். மதங்கள் …

  16. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளை ஒழுங்குபடுத்தியிருந்த, ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்க, கடந்தவார இறுதியில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கனடாவுக்குச் சென்றிருந்தனர். இதுகுறித்து, சிறிலங்கா அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள அரச புலனாய்வுப் பிரிவு, இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் நிகழ்வில் பங்கேற்கவே அங்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்காவின்…

    • 0 replies
    • 400 views
  17. இந்த பகுதி குடும்பி மலையை காட்டுகிறது உண்மையில் இது தொப்பிகலை அல்ல தொப்பிகலை வேறு இது 2006 ல் யுத்ததிற்கு முன்பு இருந்த இயல்பு காட்சி. இன்றைய தொப்பிகலை அன்று குடும்பி மலையாய் இருந்த கண் கவர் காட்சிகள் யுத்தத்திற்கு முன்னர் மிகவும் செழுமையும் அழகும் நிறைந்த இவ் இடம் இன்று பாலைவனமாகாத குறையில் உள்ளது பெயரை மாற்றி குதுகலிக்கும் அரசு அங்குள்ள குடிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து அழித்து சின்னா பின்னமாக்கியுள்ளது பல வகையில் வழமுள்ள நிலப்பரப்புக்களை காடு வளர விட்டு அழகு பாற்பதில் குறியாயிருக்கும் பாதுகாப்பமச்சின் செயலர் மக்களின் வயிற்றுப் பிளைப்பைப் பற்றி சிந்திக்காமல் நடிப்பது விந்தையானாலும் பாவத்தின் கூலி இவரையும் சாரும் www.irruppu.com

  18. யாழ்.கொட்டடிப் பகுதியில் அமைந்துள்ள படை படை முகாமிற்குள்ளாக பாரிய பௌத்த கோயிலுடன் கூடிய புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுவதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய படைமுகாம்களை அமைத்திருந்த இராணுவத்தினர் அவற்றை தற்போது விடுவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிற்கு பின்னால் உள்ள காணியில் இராணுவத்திற்;கான புதிய படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைமுகாமில் மறைப்பு செய்யப்பட்ட நிலையில் வீதிக் கரையோரமாக கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது ஒரு பௌத்த விகாரை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாரிய புத்தர் சிலையுடன் இந்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றதோட…

  19. தமிழ் மக்கள் ஒன்றிணைவதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் மாகாண சபைத் தேர்தலை பிரயோசனப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்ற பின்னர், 13வதுஅரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் உள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதை சர்வதேசமும், இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்து க…

  20. மாகாணசபைத் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் - இந்தியா அடுத்த மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நம்பகமான முறையிலும் நடைபெறும் என நம்புவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அண்மைய அரசியல் வளர்ச்சிகள் நல்லிணக்கம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். இலங்கையில் ஒரு நீடித்த அரசியல் தீர்வை இலங்கையிடம் இருந்து இந்தியாவும் சர்வதேச நாடுகளும் எதிர்பார்த்துள்ளன. தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் ஒரு அர்த்தமுள…

  21. வடக்கு தேர்தலில் வெற்றி பெற முடியாது - ரில்வின் சில்வா அரசாங்கம் தனது தேவைகளுக்காக மக்கள் பிரச்சினைகளை பயன்படுத்திக் கொள்வதாக ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்களைப் போன்றே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்களின் பிரச்சினைகளை தனது தேவைகளுக்காக அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக்கைள வேறும் தரப்பினரிடம் ஒப்படைக்கும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை அமைப்பதாகத் தெரிவித்துள்ளார். காலத்தை வீரயமாக்கும் நோக்கில் இந்த பாராளுமன்ற…

  22. இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கைகள் உயர்வடைந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. சிறுவர் திருமணங்கள் மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்வதனால் பெண்கள் தங்களது கல்வி வாய்ப்பை இழப்பதுடன், பாரியளவு சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது. கர்ப்பகால நோய்கள், சிசு மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாகத் தெரிவித்தள்ளது. குறைந்த வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் சிறுமிகள் பல்வேறு துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக நேரிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. 18 வயதுக்கு குறைந்த பெண்கள் கருத்தரித்தல் பாரிய சுகாதார மற்றும் சமூகப…

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், அமெரிக்கா ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தல் பரப்புரைக்கு புலம்பெயர் தமிழர்களிடம் நிதி திரட்டுவதற்காக கனடா சென்றிருந்த, சம்பந்தனும், சுமந்திரனும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரியதாகவும், இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவர்கள் அமெரிக்க ராஜங்கத் திணைக்களத்தில் யாரை சந்தித்துப் பேசினர் என்ற விபரம் தெரியவில்லை என்றும் அந்த வட்…

  24. கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியற்றவர்களாக எம்மக்களை ஆளாக்கிய அடுக்குமுறைகளுக்கு துணைபோகும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை அறியும் ஆற்றல் அற்றவர்களாக எம்மக்களை ஆளாக்குவதற்கும் துணைபோவது ஏன் என்பதை நாம் விழங்காதுவிடின் அவர்களது நிகழ்ச்சி நிரலின்கீழ் நாமும் ஒரு நிகழ்வாக இடம்பெறுவோம். "...அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது. இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்து…

    • 2 replies
    • 1.5k views
  25. "எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு" எனும் தொனிப்பொருளிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. சுத்தமான தண்ணீரை பெற்றுத்தருமாறு கோரி வெலிவேரிய பகுதியில் மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவத்தினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலை கண்டித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/78851-2013-08-14-14-34-35.html

    • 2 replies
    • 234 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.