ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
மரணத்தை ஏற்படுத்துகின்ற ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை மேற்கொள்வதை தமிழ் மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்தரேலியாவிற்கு கடற்பயணம் செல்கின்ற மக்கள் உயிருடன் போய் சேருகிறார்களா என்பதைக் கூடத் தெரிந்துகொள்ள முடியாத நிலையி;ல் இத்தகைய பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ள்hர். நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான சூழலை இங்கு இல்லாததன் காரணமாகவே மக்கள் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் அவுஸ்திரேலியா செல்கின்றனர் என்பதை தாங்கள் உணர்ந்துள்;ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம…
-
- 1 reply
- 348 views
-
-
அண்மையில் பேச்சுவாரத்தை ஒன்றை நடத்துவதற்காக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தன்னைச் சந்திக்க இந்தியத் தூதுவர் தாமதமானதால் ஆத்திரமடைந்த அமைச்சர், தூதரக அலுவலகத்தில் குழப்பகரமாக நடந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்தியத் தூதரக அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னதாக மலையக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் சிலரும், திகாம்பரம் எம்.பியின் பிரதிநிதிகள் சிலரும் இந்தியத் தூதகரத்திற்குச் சென்று இந்தியத் தூதுவருடன் பேச்சு நடத்தியுள்ளனர். அமைச்சர் தூதரகத்திற்குச் செல்லும் சந்தர்ப்பத்திலும் இந்தப் பேச்சு தொடர்ந்துள்ளது. அமைச்சர் தூதகரத்திற்கு சென்றவுடன் தன்னை வரவேற்க வந்திருந்த அதிகாரியிடம், தன்னை உடடியாக சந்த…
-
- 1 reply
- 545 views
-
-
இலங்கைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையினை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சந்தித்து பேசவுள்ளது. இந்தச் சந்திப்புக்கான ஏற் பாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறித்த கலந்துரையாடலின்போது இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள பங்கம் குறித்தும் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து நீதிக்குப் புறம்பான முறையில் அரசாங்கம் தன்னைச் சிறையிலடைத்தமை பற்றியும் தான் எடுத்துரைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம கருத்து வெளியிடுகையில், நவந…
-
- 0 replies
- 298 views
-
-
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. விடுதியை நடத்திச் சென்ற முகாமையாளர் ஒருவரும் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.sankathi24.com/news/32075/64//d,fullart.aspx
-
- 0 replies
- 345 views
-
-
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். நேற்று முன்தினம் சனிக்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 20 பேர் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நிலையளில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர். பின் கடற்படையினர் விசாரனைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைன்னார் பொலிஸார் விசாரனைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 20 மீனவர்களையும் இம்மாதம் 16ம் திகதி வரை விளக…
-
- 0 replies
- 302 views
-
-
வடமாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள அதன் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர், ஏனைய வேட்பாளர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இதனையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன என்று கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரி…
-
- 0 replies
- 289 views
-
-
கடந்த 01ஆம் திகதி இராணுவத்தினரால் வெலிவேரியவில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான துப்பாக்கிக்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26356
-
- 7 replies
- 597 views
-
-
-எஸ்.தியாகு 'மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது, வசதிபடைத்தவர்களுக்கே எல்லா உதவிகளையும் வழங்கி வருகின்றது. சாதாரண மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் ஆட்சியை மாற்ற முடியாவிட்டாலும் அதற்கான ஒரு ஆரம்பமாக இந்த தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கு கல்வி, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதென்றால் அது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் தான் என்பதை யாரும் மறக்க முடியாது' என்றும் அவர் நினைவூட்டினார். மத்திய மாகாண சபை தேர்தலை முன்னிட்டு ஐக்கிய…
-
- 0 replies
- 327 views
-
-
-சுமித்தி தங்கராசா ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சார்ந்த குழுவினர், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடவுள்ளனர் என்று கட்சியின் நம்பத் தகுந்த தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், விஜயகலா மகேஸ்வரன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்யவில்லை என்றும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், வட்டுக்கோட்டை பகுதியிலிருந்து சிலரை தெரிவு செய்து சுயேட்சையாக களமிறக்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 295 views
-
-
இந்திய புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனராம் லக்ஷர் ஈ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு யாழ்ப்பாணத்தில் முகாம் அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு யாழ்ப்பாணத்தில் முகாமை அமைந்து, அதன் ஊடாக இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத் தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர். அத்துடன் இந்த அமைப்பு தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பிரதேசங்களிலும் முகாம்களை அமைக்க தயாராகி வருகிது எனவும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பாய் நகரில் இந்த அமைப்பை பாரிய தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருந்தது. http://www.globa…
-
- 0 replies
- 318 views
-
-
தடுப்பில் உள்ள போராளிகளை விடுவிப்பதாக கூறியும், மிரட்டியும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை ஒன்றினை மஹிந்த அரசு தயாரித்து வருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் கொழும்பு வரவுள்ள நிலையில் அவருக்கு விடுதலைப்புலிகளின் போர்க்குற்ற அறிக்கை ஒன்றினை புதிதாக வழங்கவும், பொது நலவாய தலைவர்களின் மா நாட்டில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுமே இந்த வாக்கு மூல அறிக்கை தயாராகி வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே இன்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் ; முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, வள்ளிபுரம் பிரதேசத்தில் இயங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா என்று அழைக்கப்படும் இரு சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பில் கடமையாற்றிய பொல…
-
- 0 replies
- 254 views
-
-
நாட்டின் நீதிச்செயற்பாடுகளை கோத்தபாய கட்டுப்படுத்துவதாக ஆங்கில இணையம் ஒன்று கூறியுள்ளது. கொழும்பு டெலிகிராப் எனும் ஆங்கில ஊடகமே மேற்கண்டவாறு கூறியுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ ஒரு பிரகடனப்படுத்தாத அரசாங்கம் ஒன்றை தானே நடத்திவருவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிசைப் பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ச நீதித்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும், இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் ஊடாக உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார் என்று விவரித்துள்ளதுடன் அதன்படியே செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டுவருகின்றது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த ஊடகம் தெரிவிக்கையில், தற்போது பிரதம நீதியரசரா…
-
- 0 replies
- 323 views
-
-
வீதியை மறித்து, நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் பொதுமக்களைக் கலைப்பதற்கு ஆயுதம் தாங்கிய இராணுவத்தைப் பயன்படுத்துவதும், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிர்ப் பலி ஏற்படுவதும் ஜனநாயக ஆட்சி இருக்கும் நாடொன்றில் இடம்பெறும் சம்பவங்கள் அல்ல என சிரேஷ்ட இராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க... http://tamilworldtoday.com/?p=26406
-
- 4 replies
- 418 views
-
-
யாழ்.குடாநாட்டில் தற்போது 13 ஆயிரம் படையினரே நிலைகொண்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ள கருத்தை தம்ழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முற்றாக நிராகரித்துள்ளார். யாழ். குடாநாட்டில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு அளித்துள்ள வாக்குறுதியின்படி யாழ்.குடாநாட்டில் மக்களின் வீடுகள், காணிகள் அனைத்திலுமிருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார். யாழ். அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த தனியாருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் காணிகள…
-
- 1 reply
- 338 views
-
-
சுத்தமான குடிநீர் கேட்டு பொதுமக்கள் கடந்த வாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இராணுவம் நடத்திய தாக்குதலில் கிறிஸ்தவ தேவாயலத்தின் சுவர்களிலும் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளமைக்கான சாட்சிகள் வீடியோ காட்சிகளாக வெளிவந்துள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=26442
-
- 1 reply
- 424 views
-
-
குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் அரியாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரியாலை பூம்புகார் 3ஆம் வட்டார பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்த குப்பைகளை காணி உரிமையாளர் தீ முட்டிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த இப்பகுதியில் 2010ஆம் ஆண்டில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.http://goldtamil.com/?p=4105
-
- 0 replies
- 357 views
-
-
திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிண்ணியாவிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தாக்குதலில் காயமடைந்த மூன்று மீனவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய கிண்ணியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள் http://goldtamil.com/?p=4093
-
- 0 replies
- 312 views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது : 04 ஆகஸ்ட் 2013 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த சம்பவத்தின் பின்னணியில் இராணுவம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் நினைவிடம் ஒன்று இருந்ததுடன் போருக்கு பின்னர் அதனை இராணுவத்தினர் முற்றாக சேதப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் வல்வை நகர சபைக்கு சொந்தமான பூங்காவை புனரமைத்து, நகர சபை மக்களின் பாவனைக்கு வழங்கியிருந்தது. இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்த இராணுவத்தினர் குறித்த பூங்க தமக்குரியது எனவும் அதனை தமக்கு வழங்குமாற…
-
- 4 replies
- 654 views
-
-
கண்டி மாவட்ட தேர்தல் கள நிலைமைகள் புரியாமல் இதொகா கண்டியில் 32 தமிழ் வேட்பாளர்களை போட்டியிட வைத்து தமிழ் வாக்குகளை சிதறடிகின்றது. இதனால் கண்டி மாவட்டத்தில் இந்த முறை மாகாணசபை தமிழ் பிரதிநிதித்துவம் சிலவேளை பறி போனால் அதற்கு இதொகாவே காரணமாக அமைய போகின்றது. தமிழ் இன உணர்வுடன் சப்ரகமுவ மாகாணத்தில் நாம் செய்த உதவிக்கு இதுதான் பிரதியுபகாரமா என ஆறுமுகன் தொண்டமானிடம் நான் கேட்க விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், கண்டி மாபேரிதென்னவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார். இங்கு மனோ கணேசன் மேலும் கூறியதாவது, கண்டியில் இப்போதும் கடைசியாக மாகாணசபையில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் இருந்தது. இந்த உண்மையை இதொகா திட்டமிட்டு மறைத்து பொய் பி…
-
- 0 replies
- 403 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் எட்டி உதைத்தாலும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மகிந்த தரப்பின் காலை நக்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதற்கு மகியங்கணை பள்ளி வாசல் சம்பவம் உதாரணமாகும். மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் புனித ரமழான் மாதத்தில் பன்றியின் உடற்பாகங்களை சிறிலங்கா அரச தரப்பினர் வீசியுள்ளனர். ஆனாலும் மகிந்த ராசபக்சவின் காலையே றிசாத் பதியுதீன் ரவுப் ஹக்கீம், அதாவுல்லா போன்றவர்கள் நக்கிக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை மகியங்கணை சம்பவத்தை கண்டித்து தாங்கள் தந்தை செல்வாவின் வழியில் சாத்வீக போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைமையமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள…
-
- 2 replies
- 585 views
-
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் புகையிர நிலையத்திற்கு அருகிலுள்ள வைரவர் ஆலய மண்டபத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடவிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=26223
-
- 5 replies
- 669 views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி தமக்கு வாக்களிக்கச் செய்வதற்காகவும், நவநீதம்பிள்ளை மற்றும் சர்வதேசத்திற்கு பொய்யான தோற்றப்பாடுகளை காண்பிப்பதற்காகவுமே, இராணுவத்தினர் அவசரமாக யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளை விடுவித்துள்ளனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்று நடைபெற வேண்டுமாயின், இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். http://www.radarnews.com/
-
- 2 replies
- 845 views
-
-
காணி, பொலிஸ் அதிகாரங்கள் விரைவில் நீக்கப்படும் - பிரதமர் உறுதி [saturday, 2013-08-03 09:22:11] இலங்கையில் உள்ள 9 மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும் என இலங்கை பிரதமர் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சகைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட இலங்கை பிரதமர் ஜெயரத்ன நிருபர்களிடம் கூறியதாவது; இலங்கையில் உள்ள 9 மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார். இம்மாகாணங்களின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க ஏதுவாக, 13வது சட்ட திருத்தத்தில் திருத்தங்கள்…
-
- 2 replies
- 1k views
-
-
மாகாணசபைத் தேர்தலின் பின் அமைச்சரவை மாற்றத்தின் போது ஹக்கீமின் அமைச்சர்பதவி பறிபோகுமா??? 04 ஆகஸ்ட் 2013 ஆயின் நுவரெலியாவில் தனித்துப் போட்டியிடும் தொண்டாவின் அமைச்சுப் பதவியையும் பறிப்பாரா மஹிந்த??? மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பின்னர் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர். அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி அல்லது பிரதி…
-
- 1 reply
- 628 views
-
-
வன்னி மாவட்டத்தில் விவசாய கடன்களை பெற்ற விவசாயிகள் தமது கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அவர்களுக்கு எதிராக குறித்த வங்கிகள் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விவசாய அமைச்சர் மஹிந்த ஜாப்பா அபேயவர்த்தனவின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த காலங்களில் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக வங்கிகளில் விவசாய கடனை பெற்றுள்ளதோடு, வங்கிகளில் நகைகளை ஈடுவைத்து பணத்தை பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் எதிர்பாராத விதத்தில் கடந்த காலங்கள…
-
- 2 replies
- 567 views
-