Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தர்மபுரம் பிரதேச மருத்துவமனையை தரமுயர்த்த நடவடிக்கை (யோகி) கண்டாவளை விசுவடு பிரதேசத்தைச்சேர்ந்த பெருமளவு மக்கள் பயன்படுத்தும் தர்மபுரம் பிரதேச மருத்துவமனையை தரமுயர்த்தி தருமாறு மருத்துவமனையின் நலன்புரிச்சங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் கோரிக்கைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையின் நிலைமையை நேரில் பார்த்து கலந்துரையாடிருந்தார். C தரமாக விளங்கும் மருத்துவமனையை B தரத்து மாற்றி வளங்களை ஏற்படுத்தி தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் போது தெரிவிக்கையில், தருமபுர மருத்துவமனையில் இனிவரும் காலங்களில் குருதி பரிசோதனைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுக…

  2. Published By: RAJEEBAN 01 JUN, 2024 | 10:59 AM இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும்; போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மததீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். இது குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து எங்களின் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையுடன் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் இந்தியாவிற்கு சென்ற நான்கு இலங்கையர்கள் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன அவர்களின் சகாக்கள் கூட விசாரிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். …

  3. 01 JUN, 2024 | 10:41 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (01) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் 42 வயதுடையவரே தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். இவர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்கு சென்ற வழியில் பதுங்கியிருந்த இனந்தெரியாத சந்தேகநபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் சத்தம் கேட்ட போது அவரது மனைவி வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ள வேளை மனைவியையும் தாக்கி அவரிடம் இருந்த தங்க நகைகளையும…

  4. Published By: VISHNU 01 JUN, 2024 | 02:44 AM ( எம்.நியூட்டன்) திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநருக்கு எழுதியுள்ள கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் அக்கறை எடுத்தல் வேண்டும் . சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத் தமிழர்களின் தலையாய கோவிலாகிய திருக்கோணேச்சரத்தை பாதுகாப்பதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடனடி நடவடிக்கை எடுத்…

  5. Published By: VISHNU 01 JUN, 2024 | 02:37 AM யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அகற்றித் தருமாறு பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை நேரில் பார்வையிட்டார். இதன்போது அங்கு காணப்படும் அசுத்தமான சூழலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய பணிப்பாளருடனும் தொடர்பு கொண்டு நிலமைகள் தொடர்பாக பிரஸ்தாபித்தார். https…

  6. பிரதான சந்தேகநபர் “ஜெராட் புஸ்பராஜா” கைது! இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் பேணி வந்துள்ளார். https://athavannews.com/2024/1385080

    • 3 replies
    • 424 views
  7. எரித்தும் அழிக்க முடியாத வடு : யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு. ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளன. 1981 மே 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில்; வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்னையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே31 மற்றும் ஜுன் 1 ஆம் திகதி இரவு; இடம்பெற்றது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இந்த வன்முறைகளின்போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன. இந்நிகழ…

  8. Published By: VISHNU 31 MAY, 2024 | 09:37 PM இன்று 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யத் தீர்மானித்துள்ளது. இந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டின் விலைகளில் மாற்றமில்லை. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோலின் விலை மாற்றமின்றி 420 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுட…

  9. காஸாவில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை கோரி தலைநகரில் போராட்டம்! காஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரியும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் இன்று லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது காசாவில் நடந்த மோதலில் 15,000 குழந்தைகள் மற்றும் 7,500 பெண்கள் உட்பட 36,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். இதில் இலங்கை பலஸ்தீன ஒற்றுமைக் குழு, சோசலிச இளைஞர் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385033

    • 1 reply
    • 363 views
  10. 31 MAY, 2024 | 05:49 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட அதிகமான சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் போசாக்கு குறைபாடான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினரின் கண்டாவளை பிரதேச கள விஜயத்தின் மூலம் 160க்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கு குறைபாடுகளுடன் இனங்காணப்பட்டுள்ளனர். அப்பிரதேசங்களில் வசிப்பவர்களின் வறுமை, தொழிலற்ற நிலை என்பனவே போசாக்கு குறைபாடுகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. அத்துடன், இப்பிரதேசத்தில் இவ்வாண்டில் சுமார் 6 இள வயது …

  11. 31 MAY, 2024 | 03:52 PM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆணையாளர்களை சந்தித்துள்ளமை குறித்து பொதுமக்கள் கவலையடைய தேவையில்லை என தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுயாதீன ஆணைக்குழுவின் உயர் அதிகாரியை அமெரிக்க தூதுவர் சந்திப்பது குறித்து பொதுமக்கள் கவலையடையதேவையில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். அது இரகசிய விஜயமாகயிருந்தால் அமெரிக்க தூதுவர் தான் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட படங்களை பகிர்ந்துகொண்டிருக்கமாட்டார் என சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் ச…

  12. 31 MAY, 2024 | 05:55 PM புலம்பெயர் தமிழர்கள் அரசியல்நிகழ்ச்சிநிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். காசா நெருக்கடி குறித்து மேற்குலக நாடுகள் அலட்சியமாக உள்ளன என தெரிவித்துள்ள அவர் சர்வதேச ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஐக்கியநாடுகள் சபை எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச சட்டங்களில் தீவிர மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் மோதல் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டு;ம் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அலிசப்ர…

    • 1 reply
    • 282 views
  13. Published By: DIGITAL DESK 3 31 MAY, 2024 | 02:58 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட 04 பிரதிவாதிகளை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கையளிக்க முடியாது மற்றும் பராமரிக்க முடியாது என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனை…

  14. Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 02:59 PM இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் கிறிஸ்டபர் மக்லெனனை சந்தித்தவேளை இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜயவர்த்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கை வருவாய் ஈட்டல் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இலங்கை பொருளாதார இராஜதந்திரத்திற்கு கொடுத்துள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து வெளிவிவகார செயலாளர் எடுத்துரைத்துள்ளார்…

  15. Published By: DIGITAL DESK 7 31 MAY, 2024 | 02:54 PM யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது, கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு, நெடுந்தீவு, எழுவை தீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்தன. பொருளாதார நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே குறித்த சேவையினை நிறுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. படகு சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில், யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப…

  16. Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 12:36 PM கொழும்பில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்ட்டமை தொடர்பில் டிரையல் அட்பார் விசாரணையிலிருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொடவை விடுவிப்பதற்கான முயற்சிகளிற்கு எதிராக காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் கடற்படை தளபதியால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவின் மீதான விசாரணை எதிர்வரும் மூன்றாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2008-2009 இல் 11 இளைஞர்களை …

  17. 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302863

  18. Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 11:38 AM இலங்கையில் மேலதிகமாக உள்ள வெடிமருந்துகளை உக்ரைனிற்கு விற்பனை செய்வதற்கு போலந்து இடைத்தரகர்களை பயன்படுத்துகின்றது என வெளியாகியுள்ள தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. இவ்வாறான தகவல்களில் எந்த உண்மையிலும் இல்லை ஆதாரங்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். எனினும் காலவதியான வெடிமருந்துகள் இராணுவத்தின் முகாம்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் இந்த வெடிமருந்துகள் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமானவை இல்லை தனியாருக்கு சொந்தமானவை என தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இவ…

  19. Published By: DIGITAL DESK 3 31 MAY, 2024 | 11:33 AM இலங்கை பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை (corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுப்பெற்ற எட்மிரல் வீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே …

  20. Published By: VISHNU 30 MAY, 2024 | 11:42 PM வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள CT ஸ்கான் இயந்திரம் கடந்த சிலமாதங்களாக பழுதடைந்துள்ளமையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதுடன் அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். வவுனியா பொது வைத்தியசாலையில் ஒரேயொரு CT இயந்திரம் மாத்திரமே உள்ளது. அது கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் CT ஸ்கான் எடுக்கவேண்டிய நோயாளர்கள் அனுராதபுரம், பொலனறுவை மற்றும், யாழ் போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அங்கு கொண்டுசெல்லப்படும் ஒரு நோயாளிக்காக நோயாளர்காவுவண்டியில் ஒருவைத்தியர் தாதியர் சிற்றூழியர் ஆகியோர் பயணிக்கவேண்டும். …

  21. Published By: VISHNU 31 MAY, 2024 | 03:10 AM இலங்கையில் முதல் முதல் மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலைய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ம் இந்தியாவின் புனித கங்கைகளின் தீர்த்தம் இலங்கையிலுள்ள புனித கங்கைகளின் தீர்த்தங்கள் கொண்டு இந்தியாவின் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் இந்தியா, இலங்கையிலுள்ள பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளது என அகில பாரத சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார் பக்த அடியார்கள் அழைப்பு விடுத்துள்ளார். …

  22. யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்லத் தடை! உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்டத்தில் அகழப்படும் சுண்ணாம்புக் கற்களை எவ்வித அனுமதியும் இன்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தொடர்பாக …

  23. சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்! சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “நண்பா, போதைக்கும், புகைத்தலுக்கு முற்றுப்புள்ளிவைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திண…

  24. Published By: VISHNU 30 MAY, 2024 | 08:40 PM படைத் தரப்பினருக்காகக் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்காலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எம்.எஸ் சாள்ஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழுவின் அனு…

  25. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 30 MAY, 2024 | 04:10 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/ar…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.