Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் போது, இந்தியா தமக்குப் பக்கபலமாக இருக்கும் என்று இன்னமும் நம்புவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, தீர்மானத்தின் இறுதி ஆவணம் சமர்ப்பிக்கப்படும் போது, கடைசி நிமிடத்தில் இந்தியா முடிவு எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். “இந்தியா எமக்குப் பக்கபலமாக இருக்கும் என்று இன்னமும் நிச்சயம், நம்புகிறோம். அவர்களின் பதிலுக்காக நாம் காத்திருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20130314107937

  2. இனி, சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது – ஆனந்தவிகடன் அடுக்கடுக்கான போர்க் குற்ற ஆதாரங்களை இலங்கை அரசின் மீது அள்ளித் தெளித்த பின்னாலும், சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான கொள்கையோ, பார்வைகளோ மாறவில்லை. சர்வதேச அழுத்தங்களால்ஏதாவது நல்லது நடக்குமா என ஈழத் தமிழ்ச் சமூகம் திணறி நிற்கும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் இணைய வழி உரையாடல் நடத்தினேன்… : ”ஐ.நா-வின் 22-வது மனித உரிமை அமர்வுகள் ஜெனிவாவில் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் ஈழ மக்களுக்கு நன்மை பயக்குமா?” ”ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேறவே செய்யும் என்றாலும், அந்தத் தீர்மானம் சிறீ…

  3. சிறீலங்கா அரசாங்கம் களியாட்டச் செலவுக்காக ஒன்டரைக் கோடி ரூபா நிதி ஒதுக்கம் மார் 14, 2013 வடகிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில், சிறீலங்கா அரசாங்கம் களியாட்டச் செலவுக்காக ஒன்டரைக் கோடி ரூபா நிதியை செலவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு விமானமொன்றை விண்ணுக்கு அனுப்பி நூற்றாண்டானதை முன்னிட்டு சிவில் விமான சேவைகள் அமைச்சு நேற்று முன்தினம் நடாத்திய நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக ஒருகோடி ஐம்பது இலட்சம் ரூபா செலவாகியதாக உள்ளிடத்து வரவு செலவு அறிக்கைகள் மூலம்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறீலங்காவில் உள்ள பொருளாதாரப் போராட்டத்திற்கு மத்தியில் விமானத்தை வானுக்கு ஏற்றி ஒரு நூற்றாண்டு பூர்த்தி…

  4. மட்டக்களப்பு சிறைச்சாலை மாந்தீவுக்கு மாற்றம்: முரளிதரன் வியாழக்கிழமை, 14 மார்ச் 2013 07:40 -ஏ.எச். அப்துல் ஹுஸைன் மட்டக்களப்பு சிறைச்சாலையை மாந்தீவுக்கு அகற்றுவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது இது மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம் பெற்ற அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், …

  5. காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் குழு இன்று கொழும்பில் முக்கிய சந்திப்புக்களை நடத்தி உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று (13.03.13) முற்பகல் உலக நாடுகள் பலவற்றின் அரசியல் துறை அலுவலர்களை நேரில் சந்தித்த இந்தப் பிரதிநிதிகள் குழு தமது உறவினர்கள் காணாமல் போனமை, தம் கண்முன்னே படையினரிடம் சரணடைந்த பின் இப்போ படையினர் தம்மிடம் அவர்கள் இல்லை எனக் கூறுவது உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறிய தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (13.03.13) முற்பகல் 11 மணிக்கு ஐக்கியநாடுகள் சபையின் கொழும்பு அலுவலக அதிகாரிகளைச் சந்தித்த வடக்கில் காணாமல் போனோரின் பிரதிநிதிகள் குழு அவர்களிடம் முக்கி…

    • 1 reply
    • 430 views
  6. செனல் 4 இலங்கைக்கு எதிராக மற்றுமொரு குறுகிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது : 13 மார்ச் 2013 இலங்கையில் நடத்தப்பட உள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இரத்துச் செய்யும் நோக்கில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி , இலங்கைக்கு எதிராக மற்றுமொரு குறுகிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் காரணமாக இப்படியான மாநாடு அங்கு நடத்தப்படக் கூடாது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துகொள்வது நகைப்புக்குரியது எனவும் அதில் கூறப்பட்டது. இதனை தவிர பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர்களான டேவிட் மிலிபேண்ட், மெக்லம் ரிக்கின்ட் ஆகியோரின் கருத்துக்களு…

  7. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இலங்கை அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இரு தரப்புக்கும் இடையில் தரகராகச் செயற்படும் இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட சுப்பிரமணிய சுவாமி,இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்துச் சுதந்திரமான, சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தும் பிரேரணையின் வரைவு தொடர்பாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அதிகாரிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூ…

  8. ஐ.நாவுக்கு தகவல் வழங்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பது ஐ.நாவின் கடமை! நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டு VaakaiTV 14.03.2013 http://www.livestream.com/vaakai ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கும் மக்களின் பாதுகாப்பை இலங்கையில் உறுதிப்படுத்துவது ஐக்கிய நாடுகளின் சபையினது தலையாய கடமையாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார். அரச சர்வதேச ரீதியில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று பிற்பகல் மனித உரிமைகள் பேரவைக் கட்டிடத்தின் 19 ஆம் இலக்க குழு அறையில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போதே ஆணையாளர் நவநீதம் பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் மனித உரிமைகள…

    • 1 reply
    • 352 views
  9. ஜப்பான் - இலங்கை நீண்டகால நல்லுறவின் அடையாளமான இரு யானைக் குட்டிககள் ஜப்பானுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. டோக்கியோ 'தாமா" மிருகக் காட்சி சாலையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் 8 வயதான 'அமரா" மற்றும் 5 வயதான 'விதுர" ஆகிய இரு யானைக்குட்டிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த வைபவத்தில் கலந்துகொண்ட ஜப்பானிய இளவரசி இக்சுகோ டகமாடோ இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=78002&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 543 views
  10. இலங்கை திரும்புகையில் தமிழ் எம்.பிக்கள் ஐவரும் கைதாவாரா; அரசு இரகசியத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான இரகசியத் திட்டம் ஒன்று அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஜெனிவாவில் இருந்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்வதே இத்திட்டம் என்று அரசின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனிவாவில் ஏதாவது கருத்துக்களைத் தெரிவித்தால் அவர்களைக் கைதுசெய்வது என்பதே அரசின் திட்டம் என்று "லக்பிம' சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது. தனிநாட்டுக்கு எதிராக அரச…

    • 5 replies
    • 721 views
  11. தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றிய நிலைப்பாட்டை மத்திய அரசு எப்போது உறுதியாக அறிவிக்கப் போகிறது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கும் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம், ஈழத் தமிழர்களுக்குப் பயனளிக்காது என்றும்; இலங்கையைத் தண்டிக்கும் அளவிற்கு அதிலே தீவிரமாக எதுவும் கூறப்படவில்லை என்றும்; சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். தி.மு.க. அங்கம் வகித்து வரும் டெசோ அமைப்பு, அமெரிக்காவின் தீர்மானத…

  12. அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆயினும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போலவே 70களில் மாணவர்கள், இளைஞர்கள் தமிழீழத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்த வெகுசனப் போராட்டங்களில் இறங்கியபோது போராட்டத்தின் நியாயப்பாடு சாதாரண மக்களிடையே வேகமாகப் பரவியது. அதன் தார்மிக பலம் வலுப…

  13. தமிழர் தாயகத்தில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிறிலங்கா அரசின் எந்தவொரு உள்ளக விசாரணையிலும் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை. அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானம் இனப் படுகொலைக்கு முகம் கொடுக்கு எம் மக்களுக்கு எவ்வித பலனையும் கொண்டுவரப் போவதில்லை பரிந்துரைகள் தமிழ்மக்களுக்கான நீதியை ஒருநாளும் பெற்றுத்தரப்போவதில்லை. இதனை முன் வைத்துக் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் எவ்வித பலனையும் தமிழ் மக்களுக்கு கொண்டுவரப் போவதுமில்லை. உற்றார் உறவுகளையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் ஈழத்தமிழினம் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நியாயமான தீர்வையே எதிர்பார்த்து நிற்கின்றது. நீதியை நிலை நாட்டும் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றே அதனைப் பெற்றுத் தரும் …

  14. வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர் விடயங்கள் தொடர்பாக வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவரும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவனை தொடர்புகொண்டு வினவிய போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரளித்த பதில்களும் வருமாறு….. தற்போதைய நிலையில் வலிகாமம் வடக்கில் உள்ள மீள்குடியேற்ற நிலைமைகள் எவ்வாறு உள்ளன? அரசாங்கம் கூறுவது போன்று மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டார்களா? வீடுகள் இடித்து அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றனவே….இவை பற்றி? ] அரசாங்கம் கூறுவது போன்று வலி வடக்கில் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட வலயங்கள் எனக் கூறப்படும்; மீள்குடியேற்றப்பட வேண்டிய பிரதேசங்களில் மூன்றிலொரு பகுதிய…

  15. ஆயுத வழியிலான ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதில் இருந்து எம்மை அடிமை கொள்ள நினைக்கும் சிறீலங்காவின் செயற்பாடுகளுக்கு நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் எதிர்ப்பினால்தான் இன்னும் எம்மீதான முழு அளவு இனச்சுத்திகரிப்பை சிறீலங்கா மேற்கொள்ள முடியாது நிற்கின்றது. தங்களது நியாயமான வேண்டுதல்களான இறையாண்மைமிக்க சுயாட்சி, மற்றும் ஏனைய அனைத்து விடயங்களுக்காக நாங்களும் ஏங்கி நிற்கின்றோம். எதிர்காலப் பாதை என்ன என்று இடை நடுவில் விடப்பட்ட ஏதிலிகளாய் எங்கள் வாழ்க்கை தொடருகின்றது. கசாப்புக்கடைக் கடாக்களாக சிங்கள பேரினவாதம் நினைக்கும்போது அறுக்கக்கூடிய, அழிக்கக்கூடிய ஏதிலிகளாக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைக்குள் நாட்கள் கழிகின்றன.மானத்தோடு வாழும் கனவோடு உள்ள நாம் தங்களின் வேகத்தோடு எம்…

  16. இந்தியா மீது அறிவிக்கப்படாத போரை நடத்துகிறது இலங்கை: பாஜக தலைவர் இந்தியா மீது இலங்கை அறிவிக்கப்படாத போரை நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக காவல்துறையினரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இத்தகைய தாக்குதல் இல்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் துன்புறுத்தப்படுவதில்லை. இலங்கை மீனவர்கள் கூட இந்திய எல்லைக்குள் வரும் போது அவர்களை தாக்கியதாகவோ, துன்புறுத்தியதாகவோ எந்த புகாரும் இல்லை. தமிழக மீனவர்கள் த…

    • 1 reply
    • 591 views
  17. ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பல் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர்.(படங்கள்:சுதத் சில்வா) http://tamil.dailymirror.lk/--main/60658-2013-03-13-14-41-03.html

    • 3 replies
    • 715 views
  18. இலங்கையில் தமிழ் மக்களின் மீது தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் தொடர்வதால் அங்கு விசேட கண்காணிப்பாளர் ஒருவர் அனுப்பப்பட்டு உண்மை நிலைவரம் கண்டறியப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின்போது வலியுறுத்தின. இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடும்போக்கை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவை கோரியுள்ளன. அரச சார்பற்ற பிரதிநிதிகள் நேற்று மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டன. இந்தியாவில் இயங்கும் பசுமைத் தாயகம் அமைப்பு, சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, சர்வதேச கல்வி அபிவிருத்தி ஆகிய அமைப்புக்களே இலங்கை விடயத்தை முக்கியமாக சுட்டிக்காட்டிப் பேசியுள்ளன. சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவானது இ…

  19. இலங்கைத்தீவினுள் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது அரச மற்றும் அரச ஆதரவு குழுக்களின் கேலிக்கூத்துக்கள். வழமைக்கு மாறாக இந்தவருடம் சற்று தணிந்திருந்த இந்த கேலிக்கூத்துக்கள் மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட நிலையில் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படுள்ளது. இன்று(12-03-2013) முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியினில் வழமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆள்பிடிக்கும் நடவடிக்கைகளை காலை முதல் படைத்தரப்பு மேற்கொண்டிருந்தது. வழமைபோன்று வீதியினூடாக செல்லும் வாகனங்கள் கூட வழி மறிக்கப்பட்டு பயணிகள் இறக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படனர். இந்நிலையில் எதிர்பார்த்த இலக்கினை அடைய முடியாத நிலையில் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை கொண்…

  20. வடக்கு-கிழக்கு இராணுவமயம் மட்டுமல்ல சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றமை நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வவுனியாவில் 'நாமல்' பெயரில் கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் எதற்கு என்று முஸ்லிம் - தமிழ் அமைப்பின் தலைவர் அஸாத் சாலி கேள்வி எழுப்பினார்.அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கிற்கு நான் சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் எவ்வளவு அடக்கு முறைக்குள் …

  21. தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார். இதனை நேரில் பார்த்த சாட்சிகள் தன்னிடம் கூறியதாக பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன‘ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் ஏனையோர் வெள்ளைக்கொடிகளுடன் சிறிலங்கா படையினரிடம் சரணடைய முற்பட்டபோது, பொல்லுகளால் தாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர். “நான் சிங்களவர், தயவுசெய்து என்னைக் கொல்…

  22. புதிய ஜனநாயகம் – மார்ச் 2013 இதழில் வெளியான கட்டுரை ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் (2009-ஆம் ஆண்டு மே மாதம்) இலங்கையின் இனவெறி பாசிச, பயங்கரவாத அரசும் இராணுவமும் நடத்திய ஈழத் தமிழின அழிப்புப் படுகொலைகள் மிகக் கொடூரமாகவும் வக்கிரமாகவும், மனிதத் தன்மைகள் சிறிதுமற்றதாக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள்தாம் என்பதை நிரூபிக்கும் ஏராளமான ஆதாரங்கள் ஏற்கெனவே தொடர்ந்து வெளிவந்துள்ளன. இந்த போர்க் குற்றங்களை நடத்திய இலங்கை அரச பயங்கரவாதிகள் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை, கடும் தண்டனை என்பதற்கு பதிலாக “மனித உரிமை மீறல்கள்” என்ற நீர்த்துப்போன பெயர் சூட்டி குற்றவாளிகளே விசாரித்து, நிவாரணம் தேடிக் கொள்ளச் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு நிறைவேற்றி ஓராண்டா…

  23. உதயகார்த்திக்:தேசிய பாவனைக்காக நுகரப்படும் பொருட்களில் ஹலால் இலட்சினையை நீக்கி ஜெம்இய்யத்துல் உலமா சபை சிறப்பான தொரு நாடகமொன்றை நாட்டில் அரங்கேற்றியுள்ளது. அத்துடன், சில பௌத்த மதகுருமார்களின் பின்னால் நின்று கொண்டு நாட்டின் மரபினை சிதைக்க முற்படும் ஜெம்இய்யத்துல் உலமா சபை தொடர்ந்தும் ஷரியா சட்டத்தினை நாட்டில் ஸ்தாபித்து நாட்டில் பிரிவினை வாதத்தினை ஏற்படுத்துகின்றது. ஆதலால் சிங்கள பௌத்த நாடான இலங்கையின் மரபுகளையும் கலாசாரத்தினையும் பாதுகாக்கும் வகையில் ஹலால் முற்று முழுதாக நாட்டிலிருந்து விலக்கப்படவேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொட ஹத்தே ஞான சாரதேரர் தெரிவித்தார். கொழும்பு 5 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜெயந்தி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.