ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திங்கட் கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் யாழ்.போதனா வைத்தியசாலை காது, மூக்கு தொண்டை சத்திரசிகிச்சை வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அவரது வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வைத்தியரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்தார். வைத்தியரின் கார் கண்ணாடி உடை…
-
- 0 replies
- 323 views
-
-
- மனோ கணேசன் அமெரிக்க, இந்திய எதிர்ப்பு வீரக்கதைகளை சிங்கள மக்கள் மத்தியில் பேசிக்கொண்டு, அரசாங்கம் பின் கதவால் அமெரிக்காவிடம் சமரசம் பேசுகிறது. இந்த பின்கதவு சமரச வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்தான் சுப்பிரமணிய சுவாமி. கொழும்பு, டெல்லி, வாஷிங்டன் என இலங்கை அரசாங்கத்தின் தூதுவராக பணியாற்றும் சுப்ரமணிய சுவாமிக்கு அரசாங்கம் இலங்கை குடியுரிமை வழங்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜெனீவா 2012ம் வருடத்தை போல் இந்த வருடமும் நமது நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு அமெரிக்காவும்,…
-
- 0 replies
- 395 views
-
-
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென இலங்கையை, பிரித்தானியா கோரியுள்ளது. பொதுநலவாய கொள்கைகளான மனித உரிமை மேம்பாடு மற்றம் நல்லாட்சி போன்றவற்றுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானிய சிரேஸ்ட அமைச்சர் பரோனெஸ் சயிடா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid…
-
- 0 replies
- 237 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கும் மக்களின் பாதுகாப்பை இலங்கையில் உறுதிப்படுத்துவது ஐக்கிய நாடுகளின் சபையினது தலையாய கடமையாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார். அரச சர்வதேச ரீதியில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று பிற்பகல் மனித உரிமைகள் பேரவைக் கட்டிடத்தின் 19 ஆம் இலக்க குழு அறையில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போதே ஆணையாளர் நவநீதம் பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தொண்டர்களுக்கும் மனித உரிமைகள் தொடர்பான சாட்சியாளர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அரச சார்பற்ற அமை…
-
- 0 replies
- 202 views
-
-
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் நேற்று இடம்பெற்ற பொதுவிவாதத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளனர்.இந்த விவாதம், சிறிலங்கா குறித்த விவாதமாக இருக்காத போதிலும், சிறிலங்கா நிலைமைகளை சுட்டிக்காட்டி இந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. கனடா சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, சிறிலங்கா தனது தேசிய செயற்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்தவுள்ள சிறிலங்கா, கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகள் மற்…
-
- 0 replies
- 188 views
-
-
இலங்கையில் போருக்கு பிந்திய தமிழர்களின் அவல நிலை குறித்து பத்திரிகையாளர் மொஹூயா சௌத்ரி தயாரித்த 'இலங்கையில் புதைக்கப்பட்ட நீதி' என்ற ஆங்கில ஆவணப்படம் டெல்லியில் நாளை திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆதரவுடன் செயல்படும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) டெல்லியில் கடந்த ம் திகதி கருத்தரங்கம் நடத்தியது. அக்கருத்தரங்கில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான 'சனல் 4' தொலைக்காட்சிக் குழுவினரின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், டெசோ நிர்வாகிகள், சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 50 ஆர்வலர்கள் "சேவ் தி டமில்ஸ்' (தமிழர்கள…
-
- 0 replies
- 235 views
-
-
இன்று டெசோ சார்பில் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி கைதாகியுள்ளார்கள். திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிடிக்கப்பட்ட பதாகையில் பாலச்சந்திரனது பெயர் பாலகிருஷ்ணன் என இடம்பெற்றிருந்தது. எதற்கு போராடுகின்றோம் என்று எதுவும் தெரியாது தலைமை அறிவித்துவிட்டது. தலைக்கு எவ்வளவு தருகிறீர்கள் என கேட்பதோடு மேல எதாவது போட்டுக் கொடுக்கச்சொல்லி வாய் இழிப்பவர்களால் நடத்தப்பட்டால் இப்படித்தான் நடக்கும். வாழ்க டெசோ? http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19503:2013-03-12-17-21-35&catid=1:aktuelle-nachrichten&Itemid=5…
-
- 9 replies
- 807 views
-
-
அமெரிக்கத் தீர்மானம்: சமரசத்துக்கு இன்னமும் வாய்ப்புள்ளது என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான மசோதா விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சமரசம் ஏற்பட இன்னமும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா…
-
- 12 replies
- 959 views
-
-
முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்த விஸ்வரூபம் எடுக்கிறது புதிய அமைப்பு! நட்டாற்றில் விடப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பொன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக உலகின் நாலா பாகங்களிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. இது தொடர்பாக ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற சர்வதேச இளைஞர் பாராளுமன்ற பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் கருத்து தெரிவிக்கையில்; "இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தலின் அவசியம் இன்று எம்மத்தியில் எழுந்துள்ளது. இதனை முன்னெ…
-
- 3 replies
- 451 views
-
-
போர்க்குற்றமல்ல திட்டமிட்ட படுகொலை http://youtu.be/DCcE2e1zKdI
-
- 2 replies
- 592 views
-
-
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் புதிய அனல் மின் உற்பத்தி நிலையம் ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் புதிய அனல் மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பான் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அனல் மின் நிலையத்தினூடாக 500 மெகா வோர்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதாகவும் இந்த நிலையம் 2018 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம். எம். சீ. பேர்டினன்டஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் போது இது தொடர்பில் ஆராயப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 80 வீதம் எரிபொருள் மூலமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு கூட…
-
- 0 replies
- 340 views
-
-
ஐ.நா பிரேரணை தொடர்பில் தமிழ் மக்களிடையே குழப்பம்! - கூட்டமைப்பு நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பு!! ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைமீது அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளது. இன்னும் சில நாட்களில் இலங்கை மீதான தீர்மானம் குறித்த விவாதங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்குமுன்னர் பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்கா கடந்த வாரம் ஜெனிவாவில் வெளியிட்டது. அதில் போர்க்குற்றம் தொடர்பில்…
-
- 0 replies
- 659 views
-
-
ஜெனிவாவில் இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார் மஹிந்த சமரசிங்க! - பதிலுரை மட்டுமே நிகழ்த்துவார்!! ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஜெனிவா விரைந்துள்ள மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அங்கு இராஜதந்திர மட்டத்திலான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார் எனத் தெரியவருகின்றது. எனினும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இம்முறை அவர் பதிலுரையை மாத்திரமே நிகழ்த்துவார் என்றும் அறியமுடிகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவென ஜெனிவா சென்றிருந்த இலங்…
-
- 0 replies
- 543 views
-
-
ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர் By V.Priyatharshan 2013-03-12 23:23:35 ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை. பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் ஹலாலுக்கு எதிராக செயற்பட்டுவரும். பௌத்தர்களும் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்தார். ஹலாலை நிறுத்துவதாக ஜம்இய்யதுல் உலமா சபை நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தது. ஆனால் அது பொய்யாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பொதுபல சேனாவின தலைமையகமான சம்புத்தத்வ ஜெயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அ…
-
- 1 reply
- 636 views
-
-
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து போர்க்குற்றவாளி ராஜபக்ச அரசுக்கெதிராக ஆஸி. அரசாங்கம் செயற்படவேண்டும் என வலியுறுத்தி அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பராவில் பாராளுமன்றத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் உட்பட 500 க்கும் அதிகமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்ததில் கலந்துகொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள், சென்ட்டர்கள் இதற்கு ஆதரவளித்து பங்குகொண்டிருப்பது முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிரின…
-
- 0 replies
- 693 views
-
-
முஸ்லிம் மக்களும் மஹிந்த அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்! – சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த வருடம் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தவேளை அதைக் கண்டித்துப் பெரும் எடுப்பில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய முஸ்லிம் மக்கள் இந்த வருடம் அமைதியாக இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களும் மஹிந்த அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கையில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் 'ஹலால்' தொடர்பில் மஹிந்த அரசின் அடிவருடிகளால் விடுக்கப்படும் மிரட்டல்களால் முஸ்லிம் மக்க…
-
- 6 replies
- 650 views
-
-
இந்தியாவின் சொல்லை மீறி வாக்கெடுப்பைக் கோரும் சிறிலங்கா – கொழும்பு ஆங்கில நாளேடு [ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 00:18 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள தீர்மான வரைபு தொடர்பாக அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள மறுத்துள்ள சிறிலங்கா, தோல்வி நிச்சயம் என்ற போதிலும், வாக்கெடுப்பைப் கோருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 5 பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்தின் மீது சிறிலங்கா வாக்கெடுப்பை நடத்தக் கோராது போனால், அது அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பின்றி ஒருமனதாக ஏற…
-
- 0 replies
- 599 views
-
-
சர்வதேச மன்னிப்புச்சபை மன்மோகனிடம் மகஜர் கையளிப்பு 14 இலட்சம் மக்கள் கையொப்பமிட்ட மனுவொன்றை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கையளித்துள்ளது. இந்த மனுவில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் சுயாதீனமான ஒரு அமைப்பினால் விசாரிக்கப்படவேண்டும் என்றும் கூறியியுள்ளது. இலங்கை அரசாங்கம் தான் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்படாது தப்பித்துக்கொள்ளும் நிலைமையை மாற்றவேண்டும் என்றும் பிரதமரிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு இந்திய அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என்றும்…
-
- 2 replies
- 448 views
-
-
டெசோபந்த் 90 சதவித ஆதரவு இல்லை.இயல்பு வாழ்க்கை எந்தவித பாதிப்பும்மில்லை.[வீடியோ] டெசோ அமைப்பின் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தி.மு.க., நடத்திய மாநில அளவிலான் பந்த்க்கு தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப்படவில்லை. 10 சதவிதமான ஆதரவே இருந்தது . அந்த 10 சதவிதமான வணிகர்களும் 11 மணிக்கு பின்னர்கடைகளை திறந்துள்ளனர். அங்கங்கே நடந்த கல்வீச்சில் அரசு பஸ்கள் சேதமடைந்தன. பஸ்கள்,ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முழுமையாக செயல்பட்டன. சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகள் திறந்து இருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்…
-
- 4 replies
- 483 views
-
-
போருக்குப் பிந்திய வட இலங்கையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள காணி பிரச்சினைகளுக்கு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய நகரங்களில் அரசாங்கத்தினால் விசேட காணி அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு நாள் விஜயமாக வடபகுதிக்குச் சென்றிருந்த காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இந்த அலுவலகங்களைத் திறந்து வைத்திருக்கின்றார். யாழ் மாவட்டத்தின் காணி பிரச்சினைகளை யாழ் காணி அலுவலகமும், கிளிநொசசி, முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி பிரச்சினைகளை கிளிநொச்சி காணி அலுவலகமும் கையாளும் வகையில் இந்த அலுவலகங்களுக்கென புதிய ஆளணியினரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தேவ…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், சிறிலங்கா அரசுத் தலைவரிடம் கேள்வியெழுப்புங்கள் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , ஜப்பானிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் வட கொரியா தொடர்பில், ஜப்பான் கொண்டுவரவுள்ள தீர்மானத்தினை சுட்டிக்காட்டி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கான ஆதரவினைக் ஐ.நா மனித உரிமைச் சபையில் வலிறுயுத்துமாறும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கட்டளையின் கீழ் போரின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும், 70 000 முதல் 1 00 000 தமிழர்கள்…
-
- 0 replies
- 360 views
-
-
சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமானதொரு அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு தரப்புக்களிடம் இருந்தும் வலுத்து வரும் நிலையில் 'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்: தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் ' எனும் கையேடுடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இக்கையேடு ஐ.நா மனித உரிமைச் சபை வளாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா தொடர்பில் அமரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ஒன்றினை சபையில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் இக்கையேடானது அனைத்துலக விசாரணைக்கான தேவை வலியுறுத்தி நிற்கின்றது. நா.த.அரசாங…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகக் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகாவது மத்திய அரசு இலங்கைக்கு எதிரா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத் தமிழர் இன்னல் தீரவும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களோடு இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரியும், "டெசோ" இயக்கத்தின் சார்பில் பெப்ரவரி திங்கள் 8ம் தேதியன்று கறுப்புடை அணிந்து என் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், மார்ச் திங்கள் 5ம் த…
-
- 6 replies
- 430 views
-
-
இராணுவத்துக்கு காணி கொடுக்க மறுத்த முள்ளியவளை மக்கள் கைது! முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மத்தி கிராமவாசிகள் ஆறு பேர் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து அந்தக் கிராமத்தில் பெரும் அச்சமும் பீதியும் உருவாகியுள்ளது.இங்குள்ள ஏனைய கிராமவாசிகளும் நாளை புதன்கிழமை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கிராமவாசிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முள்ளியவளையில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் காணியைத் தருமாறு இராணுவத்தினரும், வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையிலேயே ஆறு குடும்பஸ்த்தர்கள் நேற்றும் இன்றுமாகக் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில…
-
- 0 replies
- 275 views
-
-
அமெரிக்காவை திட்டி பயனில்லை பரிந்துரைகளை நிறைவேற்றவும் - திஸ்ஸ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை நிறைவேற்றியிருந்தால் ஜெனீவாவில் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமருக்கு இரு தடவைகள் எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஐநா செயலாளர் நாயகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அமெரிக்காவை திட்டித் தீர்க்காமல் பரிந்துரைகளை நிறைவேற்றினால் அபாய நிலை ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 2 replies
- 443 views
-