ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் பிரிட்டன் தமிழர்கள் பேரவையின் மனித உரிமைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் க. நிர்மலன் (இடமிருந்து 4-வது). உடன் (இடமிருந்து) வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் நிர்வாகி ஹென்ட்ரிட்டா பிரிஸ்கோ, தென்காசி மக்களவை உறுப்பினர் பி. லிங்கம், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரிட்டன் தமிழர்கள் பேரவையின் மனித உரிமைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் க. நிர்மலன் வலியுறுத்தினார். இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்ட…
-
- 0 replies
- 323 views
-
-
மொஹான் பீரிஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் தள்ளுபடி இலங்கையின் புதிய தலைமை நீதிபதி மொஹான் பீரிஸுக்கு எதிராக தொடுக்கப்பட்டு, முன்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட மோசடிக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்றை, மீண்டும் விசாரிக்குமாறு தொடுக்கப்பட்ட மனு ஒன்றை இன்று, செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் , சட்ட மா அதிபராக இருந்த போது, சுங்கவரி மோசடி தொடர்பான வழக்கொன்றில், தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக, வழக்கை சட்டவிரோதமான முறையில் வாபஸ் பெற்றதன் மூலம் அரசுக்கு சுமார் 600 மிலியன் இலங்கை ரூபாய்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது. எனவே இந்த வழக்கை வாபஸ் பெற்றதன் மூலம், அவர் அரசியல் சட்டத்தை மீறிச்செயல்பட்டார் என்…
-
- 0 replies
- 264 views
-
-
இலங்கைப் பாதுகாப்புப் படையினர் , விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியிருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை ஒன்றில், 2006லிருந்து 2012ம் ஆண்டு வரை, இலங்கை அரசின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட்தாக்க் கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை கிரிமினல் விசாரணைகளை நட்த்தவேண்டும் என்றும் அது கூறுகிறது. இலங்கை படையினரால் நட்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் 2006க்கு பி…
-
- 13 replies
- 1.2k views
-
-
ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதன் மூலம் இந்தியா நல்லதொரு நண்பனை (இலங்கையை) இழக்கப்போகின்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கை மனித உரிமை விவகாரம் ஜெனிவாவில் சவாலுக்கு உட்படுத்தப்படுமானால் இந்தியாவும் பொறுப்புக்கூறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பிரேரணையை ஆதரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட முக்கிய நாடுகள் தீர்மானித்துள்ளன. குறிப்பாக, இந்தியா எடுத்துள்ள முடிவானது இலங்கைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய…
-
- 2 replies
- 436 views
-
-
இன்று மலேசியா தலை நகரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரம் தமிழர் உதவும் கரங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பல அமைப்புக்களும் பெருந் திரளான மக்களும் கலந்து கொண்டனர். தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகனை சிங்களப் பயங்கரவாத அரசு 12 வயது சிறுவனை காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதை மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள பாலச்சந்திரனின் மரணச் செய்தி அறிந்து தமிழர் உதவும் கரங்களும் மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும் சில அரசியல் கட்சிகளும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் காவல் துறை குறுகிய நேரத்தில் கலைந்து செல்லவேண்டும் என்று இட்ட கட்டளையால் பொது மக்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல் துறையின் அராஜகத்தால் இரு …
-
- 1 reply
- 355 views
-
-
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக மேஜர் ஜெனரலொருவர் அந்த நாட்டு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டள்ளார். ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரலான ஹாசிம் குர்ஷியே இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாத முற்பகுதியில் தனது நியமன கடிதத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளார். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக செயற்பட்ட சீமா இலாஹி பலூச் கடந்த டிசெம்பர் 15ஆம் திகதி தனது பதவி காலம் நிறைவடைந்தமையினால் நாடு திரும்பினார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரலான ஹாசிம் குர்ஷி நியமிக்கப்பட்டள்ளார். இதேவேளை, பாகிஸ்தான் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய ஒய்வுபெற்ற கேர்ணல் பசீர் வலி முஹம்மட், இலங…
-
- 1 reply
- 338 views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் நாளை 28 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவிற்கு பயணமாகவிருக்கின்றனர். மார்ச் மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் ஜெனிவா பயணமாகவுள்ளனர். அத்துடன் பிரபாகரனின் 12 வயது மகன் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டது மற்றும் இனப்படுகொலையைக் கண்டித்து இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ராணுவ வீரர்கள், டாக்டர்கள், எழுத்தாளர்களை கொலை செய்யும் இலங்கை அரசை விசாரித்து நீதி வழங்கக்கோரி இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி. ராஜா, தா. பாண்ட…
-
- 0 replies
- 417 views
-
-
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் சொந்த நிதியில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கட்டப்பட்ட மூன்று கட்டிடம் பாடசாலை அதிபரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. இந்த கட்டிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. (படங்கள்:சுதத் சில்வா) http://tamil.dailymirror.lk/--main/59632-2013-02-26-14-36-54.html
-
- 0 replies
- 206 views
-
-
ஐ.நா மனித உரிமைக் கழகத்திற்கு கனடிய அரசு தலைமைப் பொறுப்பேற்று சிறிலங்காவில் நடந்த படுகொலைகளுக்கு முடிவு காண வேண்டும் - வலுக்கிறது கோரிக்கை!! http://ekuruvi.com/New%20Democrat%20Foreign%20Affairs%20critic%20Paul%20Dewar CANADA MUST PUSH FOR STRONG RESOLUTION ON SRI LANKA AT UN HUMAN RIGHTS COUNCIL OTTAWA New Democrat Foreign Affairs critic Paul Dewar is calling on the Government of Canada to take leadership at United Nations Human Rights Council and push for a strong resolution for accountability in Sri Lanka. “The international community as a whole failed to prevent atrocities and widespread violations of human rights against Tamil civilians in S…
-
- 0 replies
- 364 views
-
-
இன்று ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில், காணாமற்போனவர்களின் உறவுகளும் அடுத்த வாரமளவில் சாட்சியம் அளிக்க உள்ளனர். அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன. ஜெனிவா மனித உரிமைகள் குறித்த ராஜதந்திர சமர்க்களத்தில் இலங்கை விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசுக்கு எதிராகச் சாட்சியமளிப்பதற்கு காணாமற்போனோரது உறவினர்களும் ஜெனிவாவுக்கும் செல்லவுள்ளனர். இவர்களை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகள் சிலவும் மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கு இந்தக் குழுவில் காணாமற்போனோர்க…
-
- 3 replies
- 598 views
-
-
ஜெனீவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும் 25 பெப்ரவரி 2013 தமிழ் தேசிய மக்கள் முன்னணி எச்சரிக்கை:- ஜெனீவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும் என் எச்சரித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை கூட்டமைப்பு தவறாக நம்பிக்கை வழங்கி ஏமாற்றுவதாகவும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ஜ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதீத எதிர்பார்ப்புக்கள் இறுதியில் ஏமாற்றத்தையளிப்பதாகவே அமையும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்தேசிய கூ…
-
- 2 replies
- 756 views
-
-
-சுமித்தி தங்கராசா யாழில் நாய்க்கடிக்கு இலக்காகிய 30 பேர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு புள்ளிவிபரத் தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரையிலான 30 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாய் கடிக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதேவேளை,கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களின் கடிக்கு இலக்காகியவர்கள் தாமதிக்காது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2010ஃ2011 ஆம் ஆண்டுகளில் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்…
-
- 10 replies
- 603 views
-
-
சிறீலங்கா அரசுக்கு விழுந்தது பேரிடி-பொதுநலவாய அமைப்பின் இணையத்திலிருந்து இலங்கையின் அனுசரனை இலச்சினை நீக்கம்! பொதுநலவாய அமைப்பு தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இதுவரை காட்சிப்படுத்தியிருந்த 'CHOM 2013, SriLanka" இலங்கையின் அனுசரனை இலச்சினையை நீக்கிவிட்டு, 'CHOGM 2011 ,AUSTRALIA" என்ற இலச்சினையை காட்சிப்படுத்தியுள்ளனர். பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கடந்த பெப்ரவரி 10-13 திகதிகளில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அச்சமயம், திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் தலைவர்களின் மாநாடு வருகிற நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் சர்மாவை மேற்கோள் காட்டி உத்தியோகபூர்வ அறிக்கையொன்று வெள…
-
- 3 replies
- 853 views
-
-
அரசாங்க இணையத்தளத்தில் புலிகள் ஊடுருவல் செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013 14:02 ஊடக மற்றும் தகவல்கள் அமைச்சின் இணையத்தளங்களை தாக்குவது 'கணினிமுறை பயங்கரவாத நடவடிக்கை' என கூறியுள்ள அரசாங்கம் வெளிநாடுகளில் எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இணையங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சுமத்தியுள்ளது. ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதனால் இந்த கணினிமுறை தாக்குதல் நடைபெறும் நேரம் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஊடக அமைச்சின் செயலாளர் ஷரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அவர்கள் பல முனைகளில் தொழிற்படுகின்றனர். அவற்றில் இதுவும் ஒன்றாகும். …
-
- 6 replies
- 742 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் இவ்வாறு யாழ். சிவில் சமூகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா “எங்களுக்கும் இதயம் இருக்கிறது. இதற்குமேல் எதையும் சொல்ல விரும்பவில்லை” என்று பதிலளித்தார். யாழ். சிவில் சமூகத்துக்கும் இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தாவுக்கும் இடையில் நேற்று மாலை யாழ். நகரிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது யாழ். சிவில் சமூகத்தினரால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. வலி.வடக்கில் மக்கள் இன்னமும் மீள்குடியமர அனுமதிக்காததால் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் துன்பப்…
-
- 11 replies
- 699 views
-
-
-
- 12 replies
- 1.6k views
-
-
வட - கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களையோ புகைப்படங்களையோ எவருக்கும் வழங்கக்கூடாதென அவர்களது குடும்பங்களுக்கு படைத்தரப்பு அச்சுறுத்த தொடங்கியுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு இலங்கை அரசினது இனப்படுகொலைகள் தொடர்பான ஆவணங்கள் சென்றடைவதை தடுக்கும் வகையிலேயே இப்புதிய தடைகள் அமுல்படுத்தபட்டு வருவதாக நம்பப்படுகின்றது. கடந்த காலங்களில் காணாமல் போனோரது வீடுகளுக்கு நேரடியாக செல்லும் படை அதிகாரிகள் இத்தகைய தகவல்கள் எதனையும் வழங்கக்கூடாதென கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து செல்வதாகவும் அவர்களது குடும்பங்கள் கூறுகின்றன. விசேடமாக காணாமல் போனோரது புகைப்படங்களையோ அவர்கள் பற்றிய விபரங்களையோ பகிர்ந்துகொண்டால் தம்மால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து அவர்கள் உயிருடன்…
-
- 0 replies
- 485 views
-
-
கடந்த 20.02.2013 புதன்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணிக்கு லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கி ஆரம்பமான தமிழ் இளைஞர் சத்தி அவர்களின் நடைபயணம் இன்று 7 வது நாளாகவும் 343 கிலோ மீற்றர்களை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 4:00 மணிக்கு பிரான்ஸ் DEIPPE துறைமுகத்திலிருந்து பிரான்சுக்குள் தனது நடைபயணத்தை தொடர்ந்த சத்தி அவர்கள் தற்போது பிரான்ஸின் PROVINS என்ற நகரத்தை தாண்டி சென்றுகொண்டிருக்கின்றார். கடுமையான குளிரிலும், பனிப்பொளிவிலும் திரு.சத்தி அவர்கள் உறுதி தளராது தனது இலக்கு நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டுவருவ்அது வியப்பை தருவதாக அவருக்கு உதவியாக சென்றுகொண்டிருக்கும் உதவியாளர்கள் தெரிவித்தனர். மிகவும் குறுகிய கால எல்லைக்குள் தனது நடைபயணத்தை மு…
-
- 0 replies
- 331 views
-
-
எஞ்சியுள்ள விடுதலை புலி இயக்கத்தின் நன்கு திட்டமிடப்பட்ட தந்திரோபாயங்களினால் தாம் எமாற்றப்படுவதை சர்வதேச சமுதாயம் அறியாதுள்ளது என இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இறுதியாக சனல் - 4 தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட படங்கள் விடுதலை புலி இயக்கத்தில் எஞ்சியுள்ளவர்களின் குழுக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெரும் செல்லாக்கு இருப்பதை காட்டியுள்ளது என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார். இந்த படங்கள் உண்மையானவை எனில் எப்போதே அவற்றை வெளியிட்டிருக்க வேண்டும். இவர்கள் இதை சட்ட அமுலாக்கல் நிறுவனங்களிடம் பொருத்தமான சான்றுகளுடன் விசாரணைக்கென வழங்கியிருக்க வேண்டும். ஆனால் முன்னர் எதுவும் செய்யாத அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்…
-
- 5 replies
- 676 views
-
-
கஃபீர் இனப் பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே. காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை. அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள். இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூ…
-
- 12 replies
- 1.5k views
-
-
ஹலால் சான்றிதழை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் : அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் தொடர்பில் எற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு முடிவுகட்டும் வகையில் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையே பிளவுகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. உலமா சபை இதன் மூலமாக நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை. எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாகப் பொறுப்பேற்பதுடன் சகல சமூகங்களும் ஏற்று…
-
- 4 replies
- 693 views
-
-
மூதூர் தன்னார்வ தொண்டு பணியாளர்கள் கொலை விசாரணை குறித்து விளக்கமளிக்கப்படும் - சிங்கள அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது 2006ம் ஆண்டு மூதூர் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர் படுகொலை மற்றும் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை ஆகிய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் அறிந்து கொள்ள எவரேனும் விரும்பினால் அதற்கான விளக்கங்களை வழங்கத் தயார் என இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடரும் என கடந்த மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கை அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரம் குறித்து மேற்குலக இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க ரணில் முடிவு! நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விரிவான விளக்கங்களை அளிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்களை இன்னும் சில தினங்களில் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பாரெனத் தெரியவருகிறது. ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள தறுவாயில் எதிர்க்கட்சித் தலைவர், மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்திக்கவுள்ளமை குறித்து அரச வட்டாரங்கள் அதிருப்தி…
-
- 1 reply
- 587 views
-
-
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திடீர் மாற்றம்; புதிய பேச்சாளராக எச்.பி. சிறிவர்தன நியமனம் உனடியாக அமூலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன்படி புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ஜி.எம்.எச்.பி. சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய பிரிசாந்த ஜயகொடி திடீர் மாற்றம் செய்யப்பட்டதனையடுத்து புதிய ஊடகப்பேச்சாளராக சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் ஜி.எம்.எச்.பி. சிரிவர்தன பொலிஸ் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தார் என்பது…
-
- 0 replies
- 452 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இலங்கையில் இனப் பிரச்சினைக்கான உரிய தீர்வினை இதுவரையில் அந்நாட்டு அரசு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்களுக்கான துணைச் செயலாளர் எஸ்தர் பிரிம்மர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரின் 2வது நாள் உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் …
-
- 0 replies
- 311 views
-