ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
போர்க்குற்றபேர்வழிகள் லிஸ்ட்.. கருத்தெடுப்பு.. உங்கள் எண்ணப்படி, எமக்கு நடந்த ஊழிக்கூத்துக்கு யார் முதல் காரணம்? உங்கள் பதிவையும் இடுங்கோ.. எவ்வளவு காலம்தான் குருட்டு பிண்டமாய் இருப்பது?
-
- 6 replies
- 853 views
-
-
உண்ணாவிரதப்போராட்டத்தின் மீது சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்களே சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க கலந்து கொண்டு வெளியேறியதன் பின்னரே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/58959-2013-02-15-06-05-30.html
-
- 9 replies
- 805 views
-
-
ஈழத்தமிழர் படுகொலை : பன்னாட்டு விசாரணை தேவை ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வைகோ கோரிக்கை http://www.youtube.com/subscription_center?add_user=periyaardk இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும், தமிழ் இன அழிப்பு தொடர்வதும் குறித்து, அனைத்து உலக நாடுகளின் மனசாட்சியின் கதவுகள் தட்டப்படும் சூழலில், ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டம், வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற இருக்கின்றது. 2009 இல், இந்தியாவும், கியூபாவும் முழுமுயற்சி எடுத்து, சிங்கள அரசைப் பாராட்டி மனித உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தது. கடந்த ஆண்டு, இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில், வேறு நாடுகள் தல…
-
- 1 reply
- 561 views
-
-
நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - சுவிட்சர்லாந்து 15 பெப்ரவரி 2013 இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து சமாதான முனைப்புக்களை மேற்கொள்ள தென்ஆபிரிக்கா முயற்சித்து வருவதாகவும், இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் இந்த முயற்சிக்கு நிதி மற்றும் அரசியல் ரீதியான உதவிகளை வழங்கத் தயார் என குறிப்பிட்டுள்ளது. அனைத்து தரப்பினரது பங்களிப்புடன் விரிவாக நடத்தப்படும் பேச்சுவார்த…
-
- 1 reply
- 309 views
-
-
யுத்தத்தின் பின்னரான மீளமைப்பு செய்யும் செயற்பாடுகளில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என்று, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோஹன்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் தலைமையத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின், மோதல்களின் போது, பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பான திறந்த விவாதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான மீளமைப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதிய கால அவகாசத்தை பெற்றுக் கொள்ளவும், சுயாதீனமாக செயற்படவும் இலங்கை அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது. இந்த நிலையில் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது ஆழுத்த…
-
- 1 reply
- 448 views
-
-
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்கினர் : சரவணபவன் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்த இப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பில் ஈ.சரவணபவன் எம்.பி. மேலும் தகவல் தருகையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ர…
-
- 0 replies
- 512 views
-
-
ஐநா குற்றச்சாட்டுக்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்போம் நவிபிள்ளைக்கு கெஹலிய பதிலடி ஐக்கிய நாடுகள் சபைக்கு மதிப்புமிகுந்தவற்றை நிறைவேற்றாவிடினும் அரசாங்கத்திற்கு மதிப்புமிகுந்த அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமாகிய கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஐநா மனித உரிமை கவுன்ஸில் ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற கிடைத்த வாய…
-
- 2 replies
- 477 views
-
-
மனைவியின் மருத்துவ செலவை முழுமையாக செலுத்தி முடிக்கும்வரை, 13 வயது மகளை தனியார் வைத்தியசாலையொன்று தடுத்து வைத்திருந்ததாக தந்தையொருவர் நீதவானிடம் தெரிவித்துள்ளார். தும்மோதர பகுதியை சேர்ந்த கலகெதரகே உபாலி குணதிலக்க என்ற நபரே இவ்வாறு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். இவரது மனைவி தயானி ஹேமமாலா தனியார் வைத்தியசாலை வைத்தியர்களின் கவனகுறைவு காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் உயிரிழந்துள்ளதாக இந்நபர் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உடல்நல குறைப்பாடு காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் வைத்தியசாலையின் கவனகுறைவு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் குறித்த தனியார் மருத்த…
-
- 0 replies
- 511 views
-
-
பாவத்தைப் பண்ணிவிட்டு பரம்பொருளின் காலைக் கழுவினால் காப்பாற்றுவாரா? 'மாட்டார்� என்கிறது இந்து தர்மம்! மயான பூமியில் இருந்து இன்னும் ஓலக் குரல் நின்றபாடு இல்லை. கொக்கரிப்பு அதிகமாகக் கேட்கிறது. கடந்த 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, தன்னுடைய மனதில் கொஞ்சமும் ஈரம் இல்லை என்பதை மகிந்த ராஜபக்ச காட்டிவிட்டார். திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக் கடற்கரையில் நடந்த விழாவில் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய ராஜபக்ச, "இனத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரித்து ஓர் இனத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. நாட்டின் அனைத்துச் சமூகங்களும் சம உரிமையுடன் வாழ்வதே இதற்குத் தீர்வாகும். இனவேறுபாடுகளைப் போலவே மத வேறுபாடுக…
-
- 1 reply
- 2k views
-
-
தமது கடற்படையினர் இலங்கைக் கடற்பரப்பை பயன்படுத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.ஈரான் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பை பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே ஈரானும் சர்வதேச கடற்பரப்பை பயன்படுத்திக்கொள்ள உரிமை இருப்பதாக ஈரானிய கடற்படைத் தளபதி ஹபிபுல்லாஹ் சய்யாரி தெரிவித்துள்ளார்.சர்வதேச கடற்பரப்புக்களை ஈரான் பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். சூடான், ஜெத்தா, இலங்கை மற்றும் லடாக்கியா போன்ற நாடுகளின் கடற்பரப்புக்களை ஈரான் கடற்படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எதிரிகளை தோற்கடிக்கவும், தேசத்தைப் பாதுகாக்கவும் எந்த இடத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அ …
-
- 3 replies
- 833 views
-
-
சம்பந்தனை சந்திப்பதற்கு விரும்புகிறார் ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்திப் பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஜெனிவாவில் எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிக்கவும், பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தாமல் விடுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்குடனுமே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கண்சிகிச்சை ஒன்றுக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். கடந்த மாதம் 5 ஆம் திகதி சம்பந்தனின் பிறந்தநாள் அன்றைய தினம் அவர் இந்தியாவில் இருந்தார். ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் …
-
- 5 replies
- 689 views
-
-
'இலங்கையில் உள்ள அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகப்பகுதியில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை சர்வதேசம் உருவாக்கி இலங்கைக்கு எதிரான சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இலங்கை அரசாங்கதினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் இதுவரை எவ்வித…
-
- 2 replies
- 753 views
-
-
தமிழர்களுக்குள் முரண்பாடுகளை வளர்க்க இரணைமடுக் குளத்தை அரசியலாக்கும் சிறீலங்கா! பிப் 15, 2013 தமிழ் மக்களை தங்களுக்குள் முட்டிமோத வைத்து அவர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இன்று சிங்கள தேசம் முயற்சியெடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் தங்களுக்குள் முட்டி மோதினால் அவர்கள் சுதந்திரத்தைப் பற்றியோ, தன்னாட்சி அதிகாரம் பற்றியோ சுயநிர்ணய உரிமை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள். அப்போது ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற தனது கொள்கையை முன்னெடுத்து தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்கலாம் என்று சிங்களம் நம்புகின்றது. இதற்காக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த சிங்களம் முற்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே கிளிநொச்சி இரணைமடு தண்ணீர்ப் பிரச்சினை…
-
- 0 replies
- 361 views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு செல்லும் படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பிப் 15, 2013 விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து விலகி திருணமாகி குடும்பங்களுடன் வாழ்ந்துவரும் உறுப்பினர்களின் வீடுகளுக்கு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் சென்று விபரங்களை திரட்டியதால் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, புச்சாங்கேணி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர் குடும்பங்களின் விபரங்களை திரட்டியதுடன், அப்பகுதி கிராம சேவகருடாகவும் முன்னாள் விடுதலைப் புலிகளின் விபரங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து …
-
- 0 replies
- 352 views
-
-
வடக்கு, கிழக்கில் கொட்டுகிறது மழை; வெள்ளத்தால் 65,000 பேர் பாதிப்பு வடக்கு, கிழக்கில் பெய்துவரும் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 13,903 குடும்பங்களைச் சேர்ந்த 63,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாகப் பெய்து வருகின்ற அடை மழையினால் பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் திருக்கோயில், மண்முனைபற்று, வெல்லாவலி, காத்தான்குடி, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலுமே இவ்வாறு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. முல்லைத்தீவில் 980 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 225 பேரும் வவுனியாவில் 480 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 781 பேரும், கிளிநொச்சியில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேரும் வெள்ள…
-
- 0 replies
- 710 views
-
-
பொதுமக்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை சிறிலங்கா இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதை எதிர்த்து நாளை தெல்லிப்பளையில் 20,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினிப் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் இந்த மக்களுக்குச் சொந்தமான நிலங்களை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார். 'இப்பட்டினிப் போராட்டமானது 13 இடம்பெயர்ந்த முகாங்களில் வாழும் மக்களால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதற்கு நாங்கள் எமது ஆதரவை வழங்கவுள்ளோம். சிறிலங்கா இராணுவத்தால் தமது நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து இந்த மக்கள் இப்போராட்டத்தை நடாத்தவ…
-
- 2 replies
- 235 views
-
-
பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி ஊர்வலம் (பழுளுல்லாஹ் பர்ஹான்,அதிரன் ) அனர்த்த முகாமைத்துவ பெண்கள் அமைப்பு, கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியன இணைந்து இன்று மட்டக்களப்பு நகரில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வூர்வலம் மட்டக்களப்பு நகரச் சுற்று வட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு-திருகோணமலை வீதி இணையும் சுற்றுவட்டம் வரைக்கும் சென்று முடிவுற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து பெண்களுக்கான கௌரவமான வாழ்க்கையை இந்நாட்டிலே உருவாக்குவோம், வெளிநாட்டுப் பணிப்பெண்களின் தொழில் உரிமை வாழ்…
-
- 0 replies
- 331 views
-
-
மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் சிறிலங்காவுக்கு எதிரான எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் பணியகத்துக்கான மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை இந்தியா ஆதரித்தது. மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீளவும் அந்த நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும். மத்திய அரசு எப்போதும் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் நலனைப் ப…
-
- 20 replies
- 1.3k views
-
-
TNA புலிகளின் வழியைப் பின்பற்றுகின்றது – டக்ளஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றி செயற்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாட்டைப் பற்றி பொய்யான தகவல்களை புலிகளைப் போன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பல நாடுகளுக்கு விஜயம் செய்து, பொய்யான பிரச்சாரங்களை செய்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும், அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பா…
-
- 4 replies
- 776 views
-
-
கனேடிய தமிழ் மக்களின் பூரண பங்களிப்பில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மயிலாம்பாவெளி C REP சிறுவர் இல்லம் 2013 மாசி 09 திகதி சனிக்கிழமை அன்றுதிருமலை மறைமாவட்ட ஆயர் வண கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கலால் திறந்துவைக்கப்பட்டது. சிறுவர் இல்ல கட்டிட நிர்மானத்துக்கு ஆதரவுதந்துதவிய கனேடிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு 2013 மாசி 10 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 733 Birchmount Rd, Scarborough, Ontario இல் அமைந்திருக்கும் கனடாகந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மாலை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறுவர் இல்லத்திறப்புவிழா காணொழி காண்பிக்கப்பட்டதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது. C REP அமைப்பினால் தொடர்ந்து மேற்கொள…
-
- 0 replies
- 545 views
-
-
இலங்கையில் கொழுந்துவிட்டெரியும் தேசிய இனப்பிரச்சினைத் தீயை அணைக்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின், இந்திய இராணுவம் மட்டுமல்ல, அமெரிக்க, சீன இராணுவமும் இலங்கை விவகாரங்களில் தலையிடும். ஏகாதிபத்திய தலையீடு, அடக்குமுறை, இனவாதம் முதலான மூன்று காரணங்களை அடிப்படையாகக் கொண்டே அரசு மக்களை அச்சுறுத்துகிறது. நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, தனிநபரின் தேவைகளுக்காக நாட்டில் எவரும் நாடகமாட முடியாது என்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அஸாத் ஸாலி நிலையத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான அமைப்பின் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு – நாட்டில் …
-
- 0 replies
- 555 views
-
-
தனக்கு எதிராக உலகம் ஒன்று திரண்ட பயம், மகிந்தாவின் கண்களில் தெரிகிறது - ஆனந்தவிகடன் [ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013, 06:39 GMT ] [ அ.எழிலரசன் ] தனக்கு எதிராக உலகம் ஒன்று திரண்ட பயம், மகிந்தாவின் கண்களில் தெரிகிறது. கோயில் கோயிலாக அலைவதும் அதற்காகத்தான். எல்லாம் அறிந்த ஆண்டவன் இதனை அறிய மாட்டானா? இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் 20-பிப்ரவரி -2013 வார இதழில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் முழுவிபரம்: ரத்த வெறிக்கு ஏன் ராஜ மரியாதை? - ப.திருமாவேலன் ஓவியம்: ஹாசிப் கான் பாவத்தைப் பண்ணிவிட்டு பரம்பொருளின் காலைக் கழுவினால் காப்பாற்றுவாரா? 'மாட்டார்’ என்கிறது இந்து தர்மம்! மயான பூமி…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கை அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை! [Thursday, 2013-02-14 21:17:24] தமிழகத்தில் விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமில் அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 38 வயதுடைய சிவஞானசீலன் என்பரே தூக்கிட்டுக் கொண்டவராவார். திருமணமான குறித்த நபர் தனது மனைவி கவிதாவுடன் குடித்துவிட்டு வந்து தினமும் கலகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவஞானசீலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=76055&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 348 views
-
-
குடாநாட்டு மக்களின் வரிப்பணம் அவர்தம் சுகாதார நலனுக்குப் பயன்பட வழிகாட்டிச் செல்வாரா ஜனாதிபதி? கடந்த ஆறு மாத காலமாக திறக்கப்படாதிருந்த யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒருவாறாக விடிவு கிடைக்கின்றது. அத்தியாவசிய தேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள வைத்தியசாலையைக் கூட, ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக மூடப்பட்டிருந்ததும் ஆசியாவின் அதிசயங்களில் ஒன்றுதான். இந்த வைத்தியசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க வராமலிருந்திருந்தால், கடந்த செப்ரெம்பெர் மாதத்திலிருந்து வைத்தியசாலை இயங்கத் தொடங்கியிருக்கும். அத்துடன் நாட்டு மக்களின் முதுகில் மேலும் வரிச்சுமை அதிகரித்திருக்காது. ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வதால் சில வேலைகள் நடக்கின்றன. அவர் பயணிக்கும் வீதிகள்…
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களுடைய தனித்துவம், சுயநிர்ணய உரிமை, இறையாண்மை போன்ற விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்களுடைய உரிமைகளை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்காகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடன் இங்குள்ள தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயம் மற்றும் ஜேர்மன் மாநாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்…
-
- 1 reply
- 265 views
-