ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
-யொஹான் பெரேரா நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சி…
-
- 0 replies
- 627 views
-
-
அழுத்தம் கொடுக்கும் நாடுகள் எம்முடன் இணைந்து செயற்பட்டால் இலங்கையின் முன்னேற்றங்களை அறியலாம் : கோத்தாபாய இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , ‘யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும் அரசியல், இராஜதந்திர சவால்கள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 471 views
-
-
ஜனாதிபதியுடனான கூட்டத்திற்கு கூட்டமைப்புக்கு அழைப்பில்லை திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013 11:25 -சுமித்தி தங்கராசா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். நாளை செவ்வாய்க்கிழமை நயினாதீவுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதுடன், சுன்னாகம் மின்நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி முன்னிலையில் யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டமும் அன்றையதினமே நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் டில்கோ சிற்றி ஹோட்டலிலேயே இந்த கூட…
-
- 1 reply
- 350 views
-
-
மலையக மாணவருக்கு அநீதி! சாதனைகளுக்கு தோள்தட்டிக் கொடுக்க யாருமில்லை கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல மாணவர்களுள் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் பாலச்சந்திரன் சாய்பிரசாத் எவ்வித ஊக்குவிப்புகளும் இன்றி ஒரம் கட்டப்படுவதாக தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரத்தின் சொந்த நிதியீட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்களை பரிசாக வழங்கிவைக்கும் நிகழ்வு…
-
- 0 replies
- 379 views
-
-
நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகவிருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணையவுள்ளன. இது தொடர்பிலான உடன்படிக்கையில் குறிப்பிட்ட 12 கட்சிகளின் தலைவர்களும் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, நவ…
-
- 3 replies
- 762 views
-
-
ஜனாதிபதியின் வருகயை முன்னிட்டு யாழ். நகர் துரித கதியில் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. நாளை ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் இவர்கள் பல முக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர். துரையப்பா விளையாட்டு அரங்கில் ஜனாதிபதி தலைமையிலான குழு வந்து இறங்குகிறது. அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலை உட்பட ஜனாதிபதி செல்லவுள்ள முக்கிய இடங்களும் துரித கதியில் காப்பெற் இடப்பட்டு வீதியின் இரு மருங்குகளும் சுத்தம் செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. வைத்தியசாலையின் உட்புற வெளிப்புற சுழலில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் நிறைந்து காணப்பட்டனர். அவர்கள் தமக்கான கடமைகளை இன்றுதான் செவ்வனே செய்கிறார்கள் போல் தெரிகிறது. சுற்று…
-
- 0 replies
- 330 views
-
-
யாழ்ப்பாணத்தில் உயர்பாகாப்பு வலயம் என்று ஏதுமில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியஇ வடக்கு காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யான பிரசாரம் செய்து வருகிறது என்று தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 4000 ஏக்கர் காணிகளில் 1500 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். பலாலியில் பத்தாயிரம் ஏக்கர் காணியை படையினர் கைப்பற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டானது அடிப்படையற்றது. யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று எதுவும் கிடையாது. ய…
-
- 1 reply
- 422 views
-
-
சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது என அண்மையில் சிறிலங்கா அதிபர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதிபர் தனது இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என முன்னர் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்த போதிலும் கூட, கடந்த திங்களன்று சிறிலங்காவில் இடம்பெற்ற இதன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ச "இனங்களின் அடிப்படையில் வெவ்வேறு நிர்வாகங்களை உருவாக்குவதானது நடைமுறையில் சாத்தியமற்றது" என குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா அதிபரின் இந்த அறிவிப்பானது, அதிபர் ராஜபக்சவினதும் ந…
-
- 0 replies
- 316 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுவதாக கலைஞர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபாகரனை கைது செய்யச் சொன்னார் கடந்த எட்டாம் திகதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டதோடு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ம…
-
- 0 replies
- 199 views
-
-
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை ஐ.நா. தடுக்கத் தவறியதைக் கண்டித்து உலகம் முழுவதும் உள்ள ஐ.நா. அலுவலகங்களை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப் போவதாக 'மே 17' இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் அதனை தடுப்பதற்கு ஐ.நா. சபை எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இலங்கைப் போரில் ஐ.நாவின் பணிகள் குறித்து மீளாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன. அதில் ஐ.நா இழைத்த தவறுகளை பொதுச் செயலாளர் பான்கி மூன் ஏற்றிருந்தார். இந்த நிலையில் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதன் மூலம் அதற்கு ஐ.நாவும் துணைபோயுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ள 'மே 17' இயக்கம், அதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. தம…
-
- 0 replies
- 270 views
-
-
வெளிநாட்டு எலிகள் கொழும்புக்கு படையெடுப்பு By A.L.Nifraz 2013-02-11 09:34:43 கொழும்பில் வெளிநாட்டு எலிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார். எனவே தொற்று நோய்கள் பரவும் ஆபத்திருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாநகரில் எலிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் உணப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களின் மூலமே வெளிநாட்டு எலிகள் இங்கு படையெடுத்துள்ளன. கொழும்பு துறைமுகம்,…
-
- 4 replies
- 641 views
-
-
R. K. RADHAKRISHNAN The house of an Indian Consulate official in Jaffna was ransacked on Friday, a day after miscreants stormed the Bank of Ceylon building in Chennai. Officials confirmed the attack and told The Hindu that a formal protest has been lodged. Ironically, Indian High Commission here lodged the protest soon after the Sri Lankan Demarche over the attack on the Bank of Ceylon. The Jaffna Consulate officials are under the close watch of the Sri Lankan Armed Forces, and there have been instances of intimidation in the past. In this instance, miscreants entered the house through a rear window of the house in broad daylight. The official was at the Cons…
-
- 7 replies
- 835 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ள முயற்சி 11 பெப்ரவரி 2013 சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் கடன் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடன் பெற்றுக்கொள்வது குறித்து ஏற்கனவே சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தக் கடன் n;தாகைப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சர்வதேச நாணய நிதியத்திடம் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் 2.5 பில்லியன் அமெ;ரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளது.இந்த ஆண்டின் இறுதிக்…
-
- 1 reply
- 303 views
-
-
உலக புகைப்பட போட்டியில் மட்டக்களப்பு மாணவனது புகைப்படம் தெரிவு: [Friday, 2013-02-08 09:20:54] உலக வங்கியினால் நடத்தப்பட்ட உலக புகைப்பட போட்டியில் தென்னாசிய பிரிவில் மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அனுப்பி வைத்த புகைப்படம் தென்னாசிய பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரு படங்களில் ஒன்றாகும். உலக அளவில் 6பிரிவுகளா இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் தென்னாசிய பிரிவிலேயே இம்மாணவன் அனுப்பி வைத்த புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக வீதி ஓரத்தில் தேங்காய் விற்கும் சிறுவன் ஒருவனை படம் பிடித்து அனுப்பிவைக்கப்பட்டபோது அப்படம் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. http://seithy.com/bre…
-
- 18 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழா! நீ தமிழனாகப் புறப்பட்டு வா, ஜெனிவா போர்க் களத்திற்கு! [Monday, 2013-02-11 09:42:32] 'எனக்கு உலக நாடுகள் எங்கும் எதிர்ப்புக்கள் இருக்கின்றது. அதற்காக நான் அஞ்சப் போவதில்லை' என்று திருப்பதியில் வைத்து மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உண்மையில், இது ராஜபக்ஷவின் அச்சத்தின் வெளிப்பாடே. பாரிய பொருளாதார வீழ்ச்சியும், அரசுக்கு எதிரான மக்களது கொந்தளிப்பும் மகிந்த அரசுக்கு உள்நாட்டில் பலத்த நெருக்கடிகளை உருவாக்கிவரும் நிலையில், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசுமீது அமெரிக்கா கொண்டுவரும் கண்டனத் தீர்மானத்திலிருந்து இந்தியாவின் கரம் பற்றிக் கரையேறும் தனது இறுதி முயற்சியும் தோல்வியைக் கண்டதனால் சிங்கள அதிபர் கலங்கித்தான் போயுள்ளார். ஜெனிவாவில் அமெரிக்கா கொண்…
-
- 0 replies
- 362 views
-
-
மகிந்த திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்! ஜன 31, 2013 மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எதிர்வரும் 8-ம் நாம் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் செல்கிறார். அங்கு புத்த கயாவில் வழிபாடு நடத்தி விட்டு அதே விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணி குண்டா செல்கிறார். பின்னர் கார் மூலம் திருமலை செல்கிறார். அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு கொழும்பு திரும்புகிறார். மஹிந்த ராஜபக்ஷ வருகையையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சிறீலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திருமலை சென்று தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ் பொலிஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதியின் தரிசன…
-
- 26 replies
- 2.7k views
-
-
முள்ளிவாய்க்காலில் தங்கத்தை தோண்டியெடுப்பதில் சிறீலங்காப் படை அதிகாரிகளுக்குள் மோதல் பிப் 11, 2013 முள்ளிவாய்க்காலில் தங்கத்தை தோண்டியெடுப்பதில் கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் உள்ளிட்ட 4 சிறீலங்காப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படை அதிகாரிகளுக்குள் மோதல் இடம்பெற்றுள்ளது. கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ஒருவர் தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றனர். பாரா 3 கப்பலின் சிதைவுகளை அண்டிய கடற்கரையில் அவர்கள் நிலத்தை தோண்டினர். அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள, படையின் 29வது பற்றாலியன் படையினர் அதை அவதானித்து அவர்களிடம் விசாரித்தனர். தன்னை அடையாளம் காட்டிய லெப்கேணல், அந்த இடத்தில் விட…
-
- 0 replies
- 580 views
-
-
சென்னையில் இலங்கை வர்த்தக மையங்கள் தாக்கப்படக் கூடும் - இந்திய ஊடகங்கள் 11 பெப்ரவரி 2013 சென்னையில் உள்ள இலங்கை வங்கி கிளை தாக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அங்குள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் வர்த்தக மையங்கள் தாக்கப்படக் கூடும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை வங்கி கிளையை தாக்கியவர்கள், அங்கிருந்த ஊழியர்கள் மீது கற்கள் மற்றும் பொல்லுகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 7 ஆம் திகதி நடந்தது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக கட்சிகளை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்திய கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இவ்வ…
-
- 0 replies
- 312 views
-
-
பிப்ரவரி 12-இல் ஈழத் தோழமைச் சுடர் ஏந்தல்; மார்ச் 4-இல் சிங்கள அரசை எதிர்த்து அறப்போர்! வைகோ அறிக்கை சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள், இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர். நெஞ்சைப் பிளக்கும் ஈழத் தமிழர் படுகொலை அவலக் காட்சிகள் காணொளிகளாக, உள்ளத்தை உருக்கும் புகைப்படங்களாக மக்கள் விழிகளையும் உள்ளங்களையும் கண்ணீரோடு ஈர்க்கும் வகையில், பரப்புரை செய்கின்றனர். பிரெஞ்சு தேசம், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளின் 54 நகரங்களில் ஈழ விடியலுக்கான கருத்துப் பரப்புரை செய்தவாறு ச…
-
- 0 replies
- 386 views
-
-
இரணைமடுக் குளத்து நீரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப கிளிநொச்சி விவசாயிகள் கடும் எதிர்ப்பு யாழ்மாவட்டத்துக்கு இரணைமடுக் குளத்து நீர் வியோகத் திட்டத்திற்கு கிளிநொச்சியிலுள்ள கமக்காரர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. வன்னியில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுபோக நெற்செய்கைக்கு நீர் போதுமானதாக இல்லாத காரணத்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் சில ஏக்கர் காணிகளிலேயே நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் எவ்வாறு யாழ். மாவட்டத்திற்கு நீரைக் கொண்டு செல்ல முடியுமென்றும் கமக்காரர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. கடந்த ஆறாம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயரதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலிலேயே கமக்காரர் அமைப்புகள் இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளன. இரணைம…
-
- 5 replies
- 702 views
-
-
இலங்கையில் மாநாட்டினை நடத்துவது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [ ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013, 11:03.37 AM GMT ] பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடாத்தக் கூடாது என பல சர்வதேச நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இலங்கையில் மாநாட்டினை நடத்துவது என்பது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகின்றது. இதுதொடர்பில் உடனடியாக வழக்கொன்றினை தொடுப்பது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. குடிசார் உரிமைகள் அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக ஒப்பந்தம் மூலமும் (ICCPR), சித்திரவதை …
-
- 1 reply
- 576 views
-
-
ஹலாலை பூதாகரமாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலாலில் ஒன்றுமே இல்லை - பிரதமர் ஹலாலை பூதாகரமாக்கி அதிலிருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலாலில் ஒன்றுமே இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்தமான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார். கம்பளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் இன மற்றும் மதங்கள் மூலமாக இனங்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வை ஒழிக்க முற்படும் சக்திகளுக்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார். நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் பின்பு இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு வருகின்றது. சமாதானம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே இச்சந்தர்ப்பத்தில் இனங்களுக்கு மத்தியில் பகை…
-
- 0 replies
- 396 views
-
-
தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் மார்க்ஸ் உரையாற்ற அதிகாரிகள் அனுமதி மறுப்பு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழகப் பேராசிரியர் அ.மார்க்ஸ், நினைவுப் பேருரை ஆற்றவிருந்த போதிலும் அங்கு வந்த குடிவரவுகுடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் இவரது உரையை செவிமடுக்க வந்த அரசியல்வாதிகள், கல்விமான்கள், மதகுருமார்கள் மற்றும் பார்வையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது; இலங்கை புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தலைவரான என்.சண்முகதாசனின் 20 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை தமிழ்ச் சங்க மண்டபத்தில் நினைவுப் பேருரையும் நூல்வெளியீடும் நட…
-
- 5 replies
- 669 views
-
-
யாழ்குடாநாட்டிற்கான இரு நாள் விஜமொன்றை மேற்கொண்டு எதிர்வரும்; 12ம் திகதி யாழ். மகிந்த யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார். இதன்பிரகாரம், 12ம் திகதி காலை 10.00 மணிக்கு சுன்னாகத்தில் அமையப் பெற்றிருக்கும் யாழ்.ஒளி மின் உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். தொடர்ந்து காலை11.00 மணிக்கு யாழ்.மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றங்கள், தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான ஆய்வு நிகழ்வில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்வில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, மாகாண மற்றும் மத்திய அரசின் துறைசார் அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்வர்.அன்றைய தினம் மதியம் நயினாதீவுக்குச் செல்லும்…
-
- 3 replies
- 615 views
-
-
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை, இந்தியாவின் உளவு அமைப்பான 'ரோ" வின் தலைவர், ஆலோக் ஜோசி சந்தித்துள்ளார். இந்திய விருந்தினர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்ததாக எமக்கு கிடைத்த உறிதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் எவையும் வெளியாகவில்லை. இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த ஜனாதிபதி, இந்தியாவின் எந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்திருக்காத நிலையிலேயே, 'ரோ" உளவு அமைப்பின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 7 replies
- 1.3k views
-