Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்கள் நலன்புரி நிலையங்களில் - படையினருக்கு ஹோட்டல் திறக்கிறார் மகிந்த பிப் 10, 2013 வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மயிலிட்டியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலையும் மகிந்த நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வலி.வடக்கில் மயிலிட்டிப் பகுதி கடந்த 23 வருடங்களாகப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இங்கிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி மயிலிட்டியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த "யோக்கட்' தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த மாத இறுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலியில் படையினர…

  2. -ரி.லோஹித் 'இலங்கையில் இன்று பத்திரிகைச் சுதந்திரம் அற்ற சூழலில் இனப்பற்றோடு, விடுதலை உணர்வுகளோடு உழைத்துவரும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல நீதி நியாயாத்திற்காகக் குரல் கொடுத்து வரும் சிங்கள ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 'சிவராம் நினைவுப் பணிமன்றம்' ஏற்பாடு செய்த ஐந்தாவது நினைவுக் கருத்தரங்கு சுவிஸ் சூரிச் மாநகரில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. ஊடகவியலாளர் கனகரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு 'இனப்பிரச்சினையும் சமகால அரசியலும்'…

  3. இலங்கையின் வடக்கே யாழ். மாநகராட்சி மன்றத்தின் சபையை விசேடமாகக் கூட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 8 பேர் சபை முதல்வரிடம் அவசர கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். யாழ். மாநகர சபை கடந்த நான்கு வருடங்களாக ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் கூட்டுக் கட்சியாகிய ஈபிடிபி கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் கூடிய தலைமையில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் சபைக்குச் சொந்தமான காணிகள் நடைமுறைக்கு மாறாக வர்த்தகத் தேவைகளுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விவாதிப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அந்த சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்திருக்கின்றார். கடந்த நான்கு வருடங்களாக பல காணித் துண்…

    • 0 replies
    • 240 views
  4. உள்நாட்டு காணிகளை, வெளிநாட்டவர்கள் இலகுவாக கொள்வனவு செய்ய முடியாத வகையில், காணி கொள்வனவு சட்டம் உடனடியாக சீர்த்திருத்தம் செய்யப்படவுள்ளது. காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். தம்புல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை தற்போது அரச நிர்வாக அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/53097

    • 0 replies
    • 506 views
  5. சிறீலங்காவில் மரணதண்டனை கைதிகள் பாரிய நோய்தாக்கத்திற்கு! பிப் 10, 2013 சிறீலங்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 200 கைதிகளுக்கு பாரிய நோய்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 304 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200 பேருக்கு பாரியளவிலான நோய்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி போகம்பறை வெலிக்கடை போன்ற சிறைகளில் இந்த கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கண் பார்வையின்மை இருதய நோய்கள் நீரிழிவு மன நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பெரும் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

  6. படையினரின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில் இடம்பெறும் உண்ணாவிரதத்தில் ரணில்! [sunday, 2013-02-10 10:12:53] படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள வலி.வடக்குப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகிறார். ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனும் இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்கிறார். வலி.வடக்கு மக்களின் வாழ்விடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியும், படையினரால் வீடுகள் இடித்தழிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை வலி.வடக்கு மக்கள் மீள்குடியமர்வுக் குழு நடத்தவுள்ளது. வலி.வடக்…

  7. தேங்காய்கள் திருடிய சிறுமியை நீதிமன்றில் ஆஜர்படுத்தியமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு! [sunday, 2013-02-10 08:09:58] இலங்கையில் பள்ளிக்கூடத் தேவைக்காக 8 தேங்காய்கள் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 13 வயதுச் சிறுமியை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தவறு என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நாட்டின் அமைச்சரவை கூடி ஆராய்ந்ததுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விசாரணை நடத்துமாறு நீதியமைச்சுக்கும் கல்வியமைச்சுக்கும் உத்தரவிட்டிருந்தார். 18 வயதுக்குட்பட்ட ஒருவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது, திருட்டுப் பொருளின் பெறுமதி ஐயாயிரம் ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அவரை நீதிமன்றத்தின் முன்னால் ஆஜர்படுத்தாமல் மீடியேஷன் போர்ட் …

  8. வானிலிருந்து விழுந்த மர்மப் பொருளால் பத்தரமுல்லையில் பரபரப்பு வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 11:04 பத்தரமுல்லை, ஜயந்திபுர பகுதியில் வானிலிருந்து மர்மப் பொருளொன்று விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது விண்கல்லாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58499-2013-02-08-05-36-19.html

  9. இலங்கையுடன் உள்ள நட்புறவிற்காக தமிழர்களின் உணர்வுகளை சிதைக்க முடியாது - இந்திய தகவல்துறை அமைச்சர்! [saturday, 2013-02-09 07:42:55] இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் விடயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை இந்திய அரசாங்கம் உணர்கிறது. அந்த உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டிய தார்மீகக் கடமையாகும். இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது இந்தியா, அதற்கு ஆதரவளித்தன் மூலம்…

    • 5 replies
    • 807 views
  10. தமிழர் மீது கரிசனை - திவாரி இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் உணர்வற்ற நிலையில் இருப்பதாக கருத முடியாது என்று, இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவேரி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் தொடர்பிலும், அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும், இந்தியாவில் ஊடகங்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மக்கள் இந்தியாவின் பிரஜைகள் என்ற வகையில், அவர்களின் உணர்வுகள் மதிக்கத்தக்கன. இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா நெருங்கிய உறவினை கொண்டுள்ளது என்பதால், இலங்கை தமிழர்களின் பிர…

  11. இலங்கையின் நிர்வாகத்தில் தலையிட விசேட குழு? ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013 01:36 இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் அடிப்படையிலேயே மேற்படி குழுவை நியமிப்பதற்கான யோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளி…

    • 7 replies
    • 1.2k views
  12. மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டால் விரைவில் மூவருக்கும் ரகசியமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58596-2013-02-09-13-01-36.html

    • 3 replies
    • 809 views
  13. இனப்படுகொலை நடந்தபோது தடுக்காத கருணாநிதி இப்போது நாடகமாடுகிறார்! இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை தடுக்காமல் இன்று ராஜபக்ஷவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ, நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார். திமுக உடன் கூட்டணியா? இலங்கை பிரச்னையில் அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவோடு கை …

  14. வறக்காபொல நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணம் சிஹல ராவய அமைப்பினர் இன்று பிற்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாகவும் அவர்களுடைய உணவகங்களில் உணவு உண்ணுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதாக எமது வாசகர் ஒருவர் தெரிவித்தார். வறக்காபொலை நகரில் சுமார் 25 பிக்குமார் சகிதம் இருநூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். முஸ்லிம்களின் உணவகங்களில் உண்ண வேண்டாம், ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுகளை வாங்க வேண்டாம் உள்ளிட்ட தகவல் அடங்கிய http://www.virakesari.lk/article/local.php?vid=2949

  15. முறைப்பாட்டாளரே விசாரணை நடாத்தி தண்டனை வழங்கும் ஆசியாவின் ஆச்சரியம் இலங்கையில் - சோபித தேரர் [Friday, 2013-02-08 09:13:04] நிறைவேற்று அதிகார முறைமை ஏன் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டுமென கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் அமைப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனையுடன் புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்க வேண்டும். நிறைவேற்று அதிகார முறைமையினால் நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பும், அரசியல் முறைமையும் பலவீனமடைந்துள்ளன. முறைப்பாட்டாளரே விசாரணை நடாத்தி தண்டனை வழங்கும் ஆசியாவின் ஆச்சரியம் இலங்கை…

  16. இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஜெயலலிதா ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு, இன்று முதல்வர் சட்டப் பேரவையில் பதில் உரை அளித்தார். அதில் அவர் இலங்கை பற்றி கூறியதாவது, இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து இங்கே சில உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்த அரசைப் பொறுத்த வரையில், இடம் பெயர்ந்து இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலை ஏற்படும் வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்; இலங்…

  17. Print this இனியாவது மத சுதந்திரம் பாதுகாக்கப்படுமா என பார்க்கலாம்! மத சுதந்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் வெவ்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் வாழ்வதாகவும், மத ஸ்தலங்களில் நிகழும் சம்பவங்கள் தொடர்பில் இனி முறைப்பாடுகள் செய்ய முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விசேட பிரிவு 2013.02.10 காலை 8 மணி தொடக்கம் 24 மணிநேரங்களும் செயற்படும் என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எனவே இனி மத ஸ்தலங்களில் அல்லது மதம் குறித்து ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் பொது மக்கள் 0113182904 மற்றும் 01131…

  18. தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தால் நானும் இதையேதான் செய்வேன்! - மனோ கணேசன் 'தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தால் நானும் இதையேதான் செய்வேன். அதைத் தான் இன்று தமிழக தலைவர்கள் செய்கிறார்கள்' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 'சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக இன்று தமிழகம் கட்சி பேதம் இல்லாமல் எழுந்துள்ளது. ஆளும்கட்சி முதல்வர் ஜெயலலிதா, பிரதான எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந் மற்றும் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், நெடுமாறன், திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட பெருந்தொகையானோர் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக கடும் எதிர்ப்புகளை முன்னெடுக்கின்றனர். இந்த கட…

  19. சிறிலங்கா அதிபருக்கு புத்த கயா மட்டும் தான் புனிதமான இடமா? [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 05:16 GMT ] [ அ.எழிலரசன் ] புத்தகாயாவை புனிதமான இடம் என்று கூறி பதிலளிக்க மறுத்த கேள்விக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதியில் பதில் அளித்துள்ளார். இன்று அதிகாலை திருப்பதியில் வழிபாடுகளை முடித்து ஆலயத்தை விட்டு வெளியே வந்த சிறிலங்கா அதிபரிடம், இந்தப் பயணத்துக்கு கிளம்பியுள்ள கடும் எதிர்ப்புகள் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அதற்கு அவர், “இந்தியா போன்றதொரு ஜனநாயக நாட்டில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது” என்று பதிலளித்தார். அடுத்து தமிழர்களை இனப்படுகொலை செய்தான குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் கேள்வ…

  20. நேசக்கரம் நடாத்தும் ‘நாளைய விஞ்ஞானிகள்’ ‘ஓவியம்’ போட்டி கண்காட்சி தாயக மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் Brightfuture Nesakkaramஅமைப்பின் கல்விக்குழுவினர் மாபெரும் ‘போட்டி கண்காட்சி’ஒன்றினை நாடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். திறமையான மாணவர்களின் கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்து எதிர்காலத்தில் அவர்களை நாட்டின் முன்னணியாளர்களாக வளர்த்தெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இப்போட்டி கண்காட்சியில் அனைத்து தமிழ் மாணவர்களையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். கண்காட்சி தலைப்பு ஓவியம் – ‘நுளம்பு பெருக்கத்தை தடைசெய்வோம்’ நாளைய விஞ்ஞானிகள் – ‘ மனித வலு சம்பந்தமான கண்டுபிடிப்புக்கள்’ உங்கள் கண்டுபிடிப்புக்கள் , ஓவியங்களை 05.04.2013 இற்கு முன்னர் கீழ்வரும் முகவர…

    • 7 replies
    • 708 views
  21. கலைந்து போன கனவுகள் கனவுகள் சில வேளைகளில் கலைந்து போகக் கூடியது. சில வேளைகளில் நிஜமாக நடக்கக் கூடியது. ஆனால் ஈழத்தமிழர்களின் கனவுகள் எந்த வேளைகளிலும் நிஜமானதாக தெரியவில்லை "கடைசி சண்ட முடிஞ்சு வரேக்க என்ர அப்பா ஆமீட்ட சரணடைஞ்சவர் என்றோ ஒரு நாள் அப்பா வருவார்" என்று கூறிய பிஞ்சுக் குழந்தையின் ஆசைகள் இன்று நிறைவேறாத கனவு போல மாறிவிட்டது. இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிடுங்கப்பட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள், தங்களின் உணர்வுகள் அழிக்கப்பட்டாலும் பரவாயில்லை உயிர்களை காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் நிலமை இற்றை வரைக்கும் மறைக்கப்பட்ட உண்மையாகவே இருந்து வருகின்றது. சிறிலங்கா பாத…

  22. இனவழிப்பு செய்த மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார். கொழும்பில் இருந்து விமானத்தில் செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் வழிபாடு நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். இரவு பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார். பின்னர் ரேணிகுண்டாவுக்கு காரில் செல்கிறார். அங்கு இருந்த விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் …

  23. சென்னையில் பறந்த சிங்க கொடி சற்றுநேரத்தில் அகன்றது சென்னை தியாகராயர் நகரில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி ஒன்றில் திடீரெனப் பறந்த சிங்கக் கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தியாகராயர் நகரில் தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற ஹோட்டலில் இன்று காலை இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல்…

  24. ஆட்சியைப் பாதுகாக்கவே இனவாதத்தை தூண்டுகிறது அரசு; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசு முயற்சித்து வருகிறது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசு இனவாதத்தைத் தூண்டி வருகின்றது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை இந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் சபை, சர்வதேச நாணய நிதியம் என பல்வேறு வழிகளிலும் அரசு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.