Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்) பெண்கள் உரிமைகள் குறித்து உலகம் எங்கு பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் அந்த உரிமைகள் எந்தளவிற்கு அரசுகளினால் அல்லது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது என்பது கேள்விதான். தற்கால நவீன அரசுகள் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரித்திருந்தாலும் அது எந்தளவிற்கு நடைமுறையில் இருக்கின்றது என்பதும் சந்தேகம்தான். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதை நோக்கினால் அரசுகளின் சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகள் அல்லது நெகிழ்வுத் தன்மைகள்தான் முக்கியம் என்பதை அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கா பிரித்தானியா போன்ற மேலைத்தேச நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் மனிதாபிமானம், ஜனநாயகம் என்ற வரையறைகளு…

  2. 1000 கைதிகளை சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுவிக்க தீர்மானம்! [sunday, 2013-02-03 09:18:58] சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் 65ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகளுக்கு பொது ம்னிப்பு அளிக்கப்பட உள்ளது. பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம், சுங்க மோசடி, பயங்கரவாத தடைச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 27 குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர். இரண்டாண்டு கால சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலம் இரண்டு வாரங்களிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலம் மூன்று வாரங்களினாலும் குறைக்கப்பட உள்ளத…

  3. சிறீலங்காவின் சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் அரசு அறிவிப்பு! பிப் 3, 2013 திருகோணமலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வழமை போன்று இந்த முறையும் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எந்த வித மாற்றங்களும் இடம்பெறாது. தேசிய கீதத்தை இரண்டு மொழிகளிலும் பாட வேண்டுமென ஒர் அமைச்சர் விடுத்த கோரிக்கையை கவனத்திற் கொள்ள முடியாது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளிக்கவில்லை எனவும் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எனினும் தேசிய மொழிக் கொள்கை அமைச்சினால் 2013ஆம் ஆண்டு சுதந்திரதின நிகழ்வில்…

  4. கொழும்பின் 400 வீதிகள் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன 03 பெப்ரவரி 2013 கொழும்பின் 400 வீதிகள் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட 300 வீதிகள் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது. 384 வீதிகளின் பெயர்களை மாற்றம் செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் பெயரிடப்பட்ட வீதிகளின் பெயர்கள் இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளன. சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கைக்கு பொருந்தக் கூடிய வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதிகமாக பிரித்தானிய பெயர்களைக் கொண்ட வீதிகளே இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்தப் பெயர்கள் தற்போதைய இலங்கைக்கு பொருத்தமற்றது எனவும், அது தொடர்பில…

  5. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 115 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு! [sunday, 2013-02-03 08:10:07] அம்பாறை, ஒலுவில் கடல் பிரதேசத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த 115 வெளிநாட்டவர்களை கடற்டையினர் மீட்டுள்ளனர். கடலில் தத்தளித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துமுள்ளார். பங்களதேஷில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுகொண்டிருந்த பங்களதேஷ், மியான்மார் நாடுகளைச்சேர்ந்த 115 பேர் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோதே நேற்று நள்ளிரவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஒலுவில் கடலில் 70 மைல்களுக்கப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த வெளிநாட்டவர்களை நேற்று இரவு 11 மணியள…

  6. 19ஆவது திருத்தம் தொடர்பில் ஆலோசனை By General 2013-02-03 09:08:10 அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது, பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2833

  7. சிறீலங்காவிற்குள் அனைத்துலக சட்டவாளர் குழு நுழையத் தடை! பிப் 3, 2013 தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு செல்லவிருந்த பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சட்டவாளர்கள் குழுவுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதஉரிமைகள் நிறுவகத்தைச் சேர்ந்த இந்தச் சட்டவாளர்களுக்கான நுழைவிசைவு விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து அனைத்துலக சட்டவாளர்கள் சங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. அனைத்துலக சட்டவாளர் சங்கத்தின் கிளை நிறுவனமான மனிதஉரிமைகள் நிறுவகத்தின் சட்டவாளர் குழு நேற்று சிறிலங்கா சென்று 10 நாட்கள் அங்கு தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. இந்தக் குழுவினர் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்த…

  8. ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின் போது இலங்கை சார்பான இராஜதந்திய முயற்சிகளில் அமைச்சர்களுக்கு முக்கிய பாத்திரம் வழங்குவதை அரசாங்கம் தவிர்க்கவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மனித உரிமை பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தில் இலங்கையின் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் எனவும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இலங்கை தொடர்பிலான இன்ன…

  9. வலி. வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை 150 மீற்றர் தூரம் வரை முன்னகர்த்தும் பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த புதன்கிழமை முதல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முன் நகர்வால் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள் மீண்டும் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கியுள்ளன. வலி. வடக்கில் 24 கிராமசேவையாளர் பிரிவுகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன. இந்த 24 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி நிரந்தரப் பாது காப்பு வேலிகள் முதலில் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த புதன்கிழமை முதல், தொண்டமானாறு தொடங்கி காங்கேசன்துறை வரையான நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்கு உள்ப…

  10. இந்திய கடற்படைக்கென கட்டிவரும் நீருந்து விசைப் படகுகள் இலங்கையில் பரிசோதனை பிப் 2, 2013 இலங்கையின் சோலாஸ் மரீன் (Solas Marine) நிறுவனம் இந்திய கடற்படைக்கென கட்டி வரும் 80 நீருந்து விசைப் படகுகளில் 15 படகுகள் இலங்கையில் பரிசோதனை செய்யப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. அவற்றில் முதற் தொகுதி கடந்த டிசம்பர் மாதம் இந்திய கடற்படைக்கு வழங்கப்படவிருந்தது. ஆனால், அது சில மாதங்கள் தாமதமடைந்துள்ளது. நீருந்து இயந்திரங்களைக் கொண்ட அந்த வேக இடைமறிப்புப் படகுகள், இந்திய கடற்பரப்பில் ஊடுருவல் இடம்பெறுவதையும், கடற்கொள்ளைகள் இடம்பெறுவதையும் தடுக்க உதவியாக இருக்குமென இந்தியா கருதுகிறது. http://www.sankathi24.com/news/26473/64//d,fullart.aspx

  11. நாவற்குழியில் இந்திய வீட்டுத்திட்டத்தில் சிங்களவர்களை குடியேற்ற ஒட்டுக்குழு தலைவர் டக்ளஸ் நடவடிக்கை பிப் 1, 2013 நாவற்குழியில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த காணியை ஆக்கிரமித்து அதற்குள் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு அந்த காணிகளை நிரந்தரமாகப் பெற்றுக்கொடுத்து அதற்குள் அனைத்து வசதிகளுடனும் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் கொதிப்படைந்துள்ள நாவற்குழி மக்களைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது டக்ளஸ் ஈடுபட்டு வருகின்றார். தனியே சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்காமல் சில தமிழ்க் குடும்பங்களுக்கும் காணிகளை வழங்கினால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கலாம் என்பதால் நாவற்கு…

  12. முஸ்லீம்கள் சுயாட்சியைக் கோருவார்கள் என்பதனாலேயே சிங்கள - பௌத்த கடும்போக்காளர்கள் எதிராக செயற்படுகின்றனர் - ஹக்கீம் [Friday, 2013-02-01 12:49:58] முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் 'வெறுக்கத்தக்க நடவடிக்கைகள்' முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வகையான நடவடிக்கைகளில் நாட்டில் வாழும் சிங்கள - பௌத்த கடும்போக்காளர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக ஈடுபடுவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதையும் நீதி அமைச்சர் என்ற வகையில் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். …

  13. அலுகோசுக்கான பயிற்சி ஆரம்பம் சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013 10:43 புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு அலுகோசுக்கான (தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்) பயிற்சி வெலிக்கடை மற்றும் போகம்பறை ஆகிய சிறைச்சாலைகளில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கான முதல் 14 நாட்கள் பயிற்சி வெலிக்கடை சிறையிலுள்ள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஆரம்பமாகும். அவர்கள் இருவருக்கான நியமன கடிதங்களும் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்த வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் இவ்விருவம் நீர்கொழும்பு மற்றும் பிட்டிபன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவிக்கு ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியிரு…

  14. இந்திய முன்னாள் பிரதம நீதியரசருக்கு விஸா மறுப்பு சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013 10:20 0 COMMENTS இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மாவுக்கு அரசாங்கம் நுழைவு விஸா வழங்க மறுத்துள்ளது. இவர் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவிருந்தார். இதனால் அவரது கொழும்புக்கான பயணம் தடைப்பட்டுள்ளது. அவர் கொழும்புக்கு நேற்று விஜயம் செய்யவிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58159-2013-02-02-04-51-48.html

  15. மகிந்த நெருங்கிய சகா என இனம் காணப்பட்டுள்ளார் A senior Sri Lankan government official is suspected by Australian authorities of being personally "complicit" in the people-smuggling trade, directly undermining Canberra's attempts to stop the surge in asylum-seeker boats. The Australian can reveal that Australia's intelligence agencies have identified the official, who has a high profile and is known to be close to President Mahinda Rajapaksa. The agencies believe he is responsible for authorising numerous boats in the past 10 months, fuelling the surge of asylum-seekers from Sri Lanka that has threatened to overwhelm Australia's detention system. The intelligen…

  16. வீடமைப்பு திட்டத்தில் தலையிடாவிடின் இனவிரிசல் ஏற்படும் - இந்தியாவிற்கு நல்லெண்ண எச்சரிக்கை : மனோ கணேசன் இந்திய அரசின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி நிலைமைகளில் இந்திய அரசு உடனைடியாக தலையிட வேண்டும். இந்த திட்டம் மூலம் கட்டப்படும் வீடுகளை பெறுகின்ற பயனாளிகள் பாதிக்கப்பட்ட மக்களாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் நோக்கங்களை முன்னிறுத்தி நடைமுறையாகி, இறுதியில் இந்த உதவி திட்டம் இனங்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்தும் உபத்திரமாக முடிந்துவிடக்கூடாது. எனவே இத்திட்டம் நடைமுறையாவதை கண்காணிக்கும் அதிகாரத்தை நிதி உதவி செய்யும் இந்திய அரசு கேட்டு பெற வேண்டும். நல்லது செய்ய வந்து, இந்தியா கஷ்டத்தில் விழுந்து விடக்கூடாது. இத…

  17. புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய மற்றுமொரு நபர் யார்? February 1, 2013, 11:02 am|views: 612 தமிழீழ விடுதலைப் புலிகளை பின்னடைவுக்குள் தள்ளும் சர்வதேசத்தின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கியதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதில் அமெரிக்காவுக்கு புலிகள் தொடர்பான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களும் வழங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கான ஆதரத்தையும் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. http://wikileaks.org/cable/2004/06/04COLOMBO966.html தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுடன் தொடர்பினை பேணினாலும், திரு.சம்பந்தன் அவர்கள் அமெரிக்கா தூதுவராலயத்துடன் நீண்ட காலமாக…

  18. வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டமே இலங்கையில் சிவப்பு மழைக்கு காரணம் - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்! [saturday, 2013-02-02 21:32:49] பொலன்னறுவை - அரலகங்கவில பிரதேசத்தில் அண்மையில் கிடைக்கப்பெற்ற விண்கல்லின் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்த சிவப்பு மழையிலும் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான உறுதிப்பாடுகள் தென்படுவதாக நாசா நிபுணர் தெரிவித்துள்ளார். சிவப்பு மழை மற்றும் விண்கல் பகுதிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நாசா நிறுவனத்தின் நிபுணர் பேராசிரியர் சந்ரா விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவருடன் பேராசிரியர் ரிச்சட் பீ ஹுவர் ஆகியோர் நேற்று மாலை சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்கவை சந்தித்துள்ளனர். அதன்போது…

  19. இந்திய மீனவர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக போராட்டம் நடுக்கடலில் நடத்த நேரிடும் - டக்ளஸ் தேவானந்த 02 பெப்ரவரி 2013 இந்திய மீனவர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக போராட்டம் நடுக் கடலில் போராட்டம் நடத்த நேரிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மீனவர் பிரச்சினைகள் n;தாடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போராட்டம் நடத்துவதனைத் தவிர வேறு வழியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் நாள் தோறும் இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.தமிழக மீனவர்களின் அத்து மீறல்களினால் உள்நாட்டு மீனவர்களி; வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டி…

  20. நளினி - முருகன் சந்திப்பு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி இன்றைய தினம் அவரது கணவன் முருகனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த நளினி மற்றும் முருகனுக்கு இடையே சந்திப்பு இடம் பெற்று வருகிறது. வேலூர் ஆயுதப்படை பிரதி காவற்துறை மா அதிபர் தலைமையிலான குழு முருகனை வேலூர் சிறைக்கு அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  21. வன்னியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சென்.ஜோன்ஸ் கல்லூக்யில் கல்விகற்கும் 450 மாணவர்களுக்கு கல்வி வசதிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக, ஏ.வி.மனோகரன் இசைக் குழுவினரால் இசை நிகழ்ச்சியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூக்யிப்ல் நடைபெறவுள்ளது. கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாக சென்.ஜோன்ஸ் கல்லூக்யில் கல்விகற்று வரும் மேற்படி மாணவர்களில் 150பேர் விடுதியிலும் மிகுதிப்பேர் வீடுகளிலும் இருந்து கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு கல்வி வசதி, உணவு வசதிகளை இது வரை காலமும் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் கவனித்து வந்தது. இந்நிலையில் மேற்படி மாணவர்களின் மேலதிக தேவைகளுக்காக மேற்படி இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா தெரிவித்தார். http:…

    • 0 replies
    • 307 views
  22. இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளான 2 சிறுவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி! [saturday, 2013-02-02 09:55:04] கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இரு சிறுவர்கள் நேற்று சீருடையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது: கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில் வழிபாடு முடித்து 8 வயது, 10 வயதான இரு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து ஓட்டோ ஒன்றில் வந்த சீருடையினர் சிறுவர்களை அவர்களின் வீட்டின் முன்பாக வைத்து கைத்தொலைபேசியைத் திருடியதாகக் கூறி மிரட்டியுள்ளனர். எனினும் தாம் அதனைத் திருடவில்லை எனச் சிறுவர்கள் கூறியுள்ளனர். இதன் பின்னர் …

    • 2 replies
    • 324 views
  23. காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு உதயம்:- 01 பெப்ரவரி 2013 காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது. இந்த அமைப்பின் அங்குராபர்ணக் கூட்டம் கிளிநொச்சியில் இன்று (01.02.13) இலங்கைநேரம் 10.30ற்கு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இருந்து தெரிவித்துள்ளார். இந்த வேளையில் கூட்டம் நடைபெற இருந்த பகுதியை அடைந்த படையினர் மிரட்டும்பாணியில் அங்கு ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்ட பலரது ஆள் அடையாள அட்டை விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். எனினும் கலந்து கொண்ட 200 வரையிலான காணாமல் போனோரின் உறவினர்களில் சிலர் சற்று பயந்து கலங்கிய போதும் பெரும்பாளானவர்கள் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையி…

  24. எனக்காக உயிரை பணயம் வைத்து செயற்பட்டவர்களை கைவிட்டு வெளிநாடு செல்ல தயாரில்லை! - ஷிராணி [Friday, 2013-02-01 17:11:45] நம்பிக்கையில்லாத தீர்மானம் தொடர்பில் உயிரை பணயம் வைத்து செயற்பட்டவர்களை கைவிட்டு விட்டு தமது உயிரை மாத்திரம் காப்பாற்றிக் கொள்வதற்கான எந்த தேவையும் தமக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். பல வெளிநாடுகளில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் முக்கிஸ்தர் ஒருவரிடம் இதனை கூறியுள்ளார். தன்னை ம…

  25. | வெள்ளிக்கிழமை, 25, ஜனவரி 2013 (23:45 IST) இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் பழ.நெடுமாறன் அறிவிப்பு இலங்கையில் நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்–இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்–இ ப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் இந்த மாதம் 30–ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் உள்ள இல ங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று போர்க்குற்றம்–இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் சார்பில், சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில், தமிழ் ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். http://www.nakkheeran.in/Users/frmNews.a…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.