ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
ஆடம்பரகாரான 'றோல்ஸ் றொய்ஸ் கோஸ்;ட்' இறக்குமதி செய்யப்பட்ட விதம்பற்றி விசாரணை நடத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட கார் தொடர்பில் றோல்ஸ் றொய்ஸ் நிறுவனத்தின் பட்டியலில் குறிப்பிடப்பட்ட விலைக்கும் சுங்கம் வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்ட விலைக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதனால் இதுபற்றி விசாரணை நடத்தவேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த ஆடம்பர வாகனம் 175000 அமெரிக் டொலர் பெறுமதியானது. என வாகன இறக்குமத…
-
- 1 reply
- 504 views
-
-
ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்யும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை: ஆளுநர் உரையில் ரோசய்யா Posted by: Mathi Published: Friday, February 1, 2013, 11:17 [iST] சென்னை: இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசு மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துவதாக சட்டசபையில் ஆற்றிய உரையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் முதலாவது தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்: தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நில அபகரிப்பு முறைகேடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்துக்கான காவிரி நதிநீ…
-
- 2 replies
- 745 views
-
-
த.தே.கூ. பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே காணப்படும் இன உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாகவும், அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வதாகவும் தெரிவித்து அதனை தோற்கடிக்க அனைத்த மக்களும் ஒன்றுபடுமாறு வவுனியா நகரத்தில்; இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்ட பேரணி வவுனியா பசார் வீதியிலிருந்தும், வவுனியா மன்னார் வீதியிலிருந்தும் இரு வேறு பேரணிகளாக ஆரம்பமாகி வவுனியா அரசாங்க …
-
- 8 replies
- 537 views
-
-
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நோக்கம் தனக்கு இல்லையெனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒருவரை பிரதமராக நியமித்தால் தான் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பிரதமர் தி.மு.ஜயரத்ன குறிப்பிட்டார். 'பிரதமர் பதவி எனக்கு சொந்தமானது அல்ல. பிரதமர் நியமனம் ஜனாதிபதியின் சிறப்புரிமை ஆகும். ஓர் அரசியல் நியமனம் ஒரு 'கோட்' போன்றது. இது எந்த நேரத்திலும் அகற்றப்படக்கூடியது. அரசியல் வழியில் வந்த பதவியில் இருந்தாலும் இல்லாவிடினும் எனக்கு மக்களுக்கு சேவை செய்ய முடியும். நூன் இளைப்பாறும் எண்ணத்தில் இல்லை. நான் எனது 60 வருட அரசியல் வாழ்வின்போது நாட்டுக்காக என்னால் இயன்றளவுக்கு சேவையாற்றவுள்ளேன்' என்று பிரதமர் ஜயரத்ன கூறினார். ஜனாதிபதி ராஜபக்ஷ, என்ன தீர்மானம் எடுத்தாலும் …
-
- 2 replies
- 457 views
-
-
மன்னார் படுக்கையில் இயற்கைவாயுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம்: அதிகாரி வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013 10:21 மன்னார் படுகையில் எண்ணெயைவிட இயற்கைவாயு காணப்படும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக மன்னார் படுக்கையில் பெற்றோலிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் கெய்ன் லங்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆய்வுகளிலிருந்து எரிவாயு காணப்படும் சாத்தியம் அதிகமானதாக இருந்தாலும் எண்ணெய் காணப்படும் சாத்தியத்தையும் நிராகரிக்க முடியாது என கெய்ன் இந்தியா மற்றும் கெய்ன் லங்காவின் பணிப்பாளர் சுனில் பாரிதி கூறினார். மன்னார் படுக்கையில் ஆய்வுக்காக தோண்டப்பட்ட 'டொறடோ' எனும் கிணற்றில் இயற்கைவாயு படிவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கெயன் லங்கா 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தெரிவித்திருந்தத…
-
- 1 reply
- 388 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை அரசியலமைப்பிற்கு அமைவானது. இலங்கை அரசியலமைப்பிற்கு அமைவான செயன்முறைகளை பின்பற்றி அந்த விவகாரம் மேற்கொள்ளப்பட்டதனால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசருக்கு தங்களுடைய ஆதரவை வழங்குவதாக யூரிகள் சர்வதேச பேரவை தெரிவித்துள்ளது. யூரிகள் சர்வதேச பேரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரேரணையானது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் தேவையான சகலதும் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையாலும் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குற்றப்பிரேரணை தொடர்பில் அரசியலமைப்பில் விதிக்கப்பட்ட செயன்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. பிழையான, பக்கச்சா…
-
- 0 replies
- 378 views
-
-
விழிப்புலனற்ற மாணவன் மரதன் ஓடி சாதனை வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013 10:47 தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில், விழிப்புலனற்ற மாணவன் ஒருவர் 8 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவனே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இன்று காலை 6 மணிக்கு சுன்னாகம் மருதனார்மடத்தில் இருந்து தெல்லிப்பழை வரையான 8 கிலோ மீற்றர் தூரத்தை இவர் எந்தவித தடையும் இன்றி தனது கண்களை கறுப்பு துணியால் கட்டியவாறு ஓடி முடித்துள்ளார். 2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தினால் தனது பார்வையை இழந்த இந்த மாணவன், சுன்…
-
- 7 replies
- 543 views
-
-
ராஜபக்சக்களின் கணக்கு - வன்னியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிமல் 01 பெப்ரவரி 2013 சரணடைந்தவர்கள் பற்றிய பிரச்சினை என்பது வெறுமனே புலிகளுடைய பிரச்சினை மாத்திரமல்ல. அது மக்களுடய பிரச்சினையாகவும் உள்ளது. புலிகள் சரணடைந்த பொழுது லட்சம் மக்களும் படைகளிடம் சரணடைந்தனர். விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் பல பொதுமக்களும் கொண்டு செல்லப்பட்டார்கள். யுத்தம் முடிந்து இலங்கை அரச படைகளினால் அவர்களின் வாகனங்களில் இவர்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் வீடுகள் ஒவ்வொன்றிலும் இன்னும் காத்துக் கிடக்கிறது. மகிந்த ராஜபக்சவி…
-
- 0 replies
- 622 views
-
-
சவூதியில் துன்புறுத்தலுக்குள்ளான பணிப்பெண் வைத்தியசாலையில் சிகிச்சை திருகோணமலையின் மிகவும் பின் தங்கிய கிராமமொன்றிலிருந்து பணிப்பெண்ணாக வெளிநாடு சென்று பல்வேறு துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குள்ளான 20 வயது யுவதி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருகோணமலை பொது வைத்தியசாலையின் உளநலப் பிரிவில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட இந்த யுவதி சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த நேரத்தில் பல்வேறு விதமான நெருக்குதல்களுக்கும் தாக்குதல்களுக்கும் தான் அவ்வீட்டு எஜமானியினால் உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தனது தலை முடி வெட்டப்பட்டதாகவும் தனது உடலின் பல பாகங்களில் தீயினால் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார். கைகளில் இது தொடர்…
-
- 2 replies
- 431 views
-
-
மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக சிவில் சமூகம் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டுக்கான நாடுகளின் மனித உரிமை நிலைமை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முக்கிய மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இன்னமும் தீர…
-
- 2 replies
- 526 views
-
-
நட்டாற்றில் நாம்; பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரிடம் கேப்பாபிலவு மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படாமல் நாங்கள் நட்டாற்றில் தவிக்கவிடப்பட்டுள்ளோம். மீள்குடியமர்வு என்ற பெயரில் எம்மைக் காட்டுக்குள் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு நேற்று வியாழக்கிழமை தம்மைச் சந்திக்க வந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் அலஸ்ரயர் பேர்ட்டிடம் தமது அவலங்களை எடுத்துக் கூறினார்கள் கோப்பாபிலவு மக்கள். இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் நேற்றுத் தமது முதல் பயணமாக முல்லைத்தீவுக்குச் சென்றார். அங்கு அவர் முள்ளியவளையில் இலங்கை இளைஞர் நல்லிணக்க நம்பிக்கை நிதியத்தைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இ…
-
- 3 replies
- 539 views
-
-
மருத்துவர் சிவசங்கரின் கைது தொடர்பாக மாங்குளம் பொலிஸாரிடம் அறிக்கை பெறப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார். கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி கொக்காவில் இராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்ததாக மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மருத்துவர் சிவசங்கர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இராணுவத்தினரால் மருத்துவருக்கு எதிராக முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் மருத்துவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தினை அறிக்கை மூலம் சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்தமைக்கு ஏற்ப மாங்குளம் பொலிஸ் அத்தியட்சகரினால் மனித உர…
-
- 0 replies
- 484 views
-
-
'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்களை அனுப்பும் நோக்கத்தில் உள்ளார்' என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமையாளரின் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் இலங்கை வந்திருந்தனர். ஆனால், விசேட அறிக்கையாளர்களை அனுப்புவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. பதிலுக்கு போர் முடிந்த பின் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களை நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்து நேரடியாக காணவேண்டுமென வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தி வருகின்றது. 'ஆரம்பத்தில் இவ்வாறுதான் ஒழுங்கு செய்யப்பட்டது. முதலில் நவநீதம்பிள்ளையின் அல…
-
- 1 reply
- 325 views
-
-
வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே காணப்படும் இன உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாகவும், அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வதாகவும் தெரிவித்து அதனை தோற்கடிக்க அனைத்த மக்களும் ஒன்றுபடுமாறு வவுனியா நகரத்தில்; இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்ட பேரணி வவுனியா பசார் வீதியிலிருந்தும், வவுனியா மன்னார் வீதியிலிருந்தும் இரு வேறு பேரணிகளாக ஆரம்பமாகி வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையினை வந்தடைந்தன. பேரணியில் கலந்து கொண்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தமது கைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பே …
-
- 0 replies
- 288 views
-
-
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி குறைப்பு வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013 09:15 -ஒலிந்தி ஜயசுந்தர இலங்கை சட்டக் கல்லூரியானது சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனூடாக, சட்டக்கல்லூரிக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 309 இலிருந்து 551 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58069-2013-02-01-03-48-51.html
-
- 0 replies
- 342 views
-
-
பிச்சை எடுப்பதால் மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பாதித்து வந்த பெண்ணொருவர் கொழும்பு-நீர்கொழும்பு ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செயயும் போது இவரிடமிருந்து 1800 ரூபா வரை இருந்துள்ளது. இது அவர் ஒரு மணித்தியாலத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணமாகும் என ரயில் திணைக்கள ஊழியர்கள் கூறினர். இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் களனி விஹாரையில் போயா தினத்தில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது. தனது வயிற்றுப்பகுதியிலுள்ள ஒரு கட்டியை காண்பித்து மக்களின் அனுதாபத்தை பெற்று பிச்சை எடுத்துவருவதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இந்த கட்டியை சிகிச்சையின் மூலம் அகற்றியிருக்கலாம் தானே என பொலிஸார் கே…
-
- 4 replies
- 955 views
-
-
யாழில் 8 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த 65 தாத்தா கைது By Priyarasa 2013-01-31 10:00:49 யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, குறித்த பாடசாலையில் கடமையாற்றும் காவலாளியொருவர் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். சம்பவத்துடன் தொடர்புடைய 65 வயதுடைய காவலாளி நீண்டகாலமாக பாடசாலையில் கடமையாற்றியுள்ளார். சம்பவத்தைக் கேள்வியுற்ற ஏனைய மாணவர்களின் பெற்றோர் உடனடியாக பாடசாலைக்கு வருகை தந்ததுடன் காவலாளியை தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெ…
-
- 5 replies
- 718 views
-
-
ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ள இலங்கை மில்லியன் கணக்கில் செலவிட தீர்மானம் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை சமாளிக்க, மில்லியன் கணக்கான ரூபா செலவில் பொது உறவு முகவர் அமைப்புகளை பணிக்கு அமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு உதவ, நிபுணர் குழு மற்றும் பொதுஉறவு முகவர் அமைப்புகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை இலங்கை வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம உறுதிப்படுத்தியுள்ளார். ஜெனிவாவில் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்…
-
- 6 replies
- 788 views
-
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக வரலாற்றில் கொடிய இனவெறித் தாக்குதல்களால் நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுகளுள் ஒன்றுதான், இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத, ராஜபக்சே அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலை ஆகும். நெஞ்சைப் பிளக்கும் ஈழத்தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம், இப்பொழுதுதான் மெல்லமெல்ல உலகத்தின் மனசாட்சியைத் தட்டத் தொடங்கி இருக்கின்றது. ஆனால், நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க இந்திய அரசு வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது. இத்தனைக் கொடுமைகளையும் ஏவி உள்ள ராஜபக்சேவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து, அவனுக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல முயற்சிக்கிறது. அந…
-
- 5 replies
- 759 views
-
-
தேசிய கீதத்தை தமிழ் சிங்களத்தில் கலந்து பாடுவோம்: வாசு யோசனை வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013 02:48 0 COMMENTS -கெலும் பண்டார தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கலந்து பாடுவதற்கான யோசனையொன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும் கலந்து பாடுவதற்கான இந்த யோசனை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக்கீதத்தை திருகோணமலையில் நடைபெறவிருக்கின்ற 65 ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்…
-
- 15 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கும் – அமெரிக்கா [ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 00:49 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள புதிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பில் இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், “இந்தத் தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்…
-
- 11 replies
- 678 views
-
-
போலி BTF அமைப்பை தடைசெய்துள்ள பிரித்தானியா வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013 21:16 கடந்த பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் அரசியல் அமைப்பாக செயற்பட்டு வரும் BTF அமைப்பை சீர்குலைப்பதற்கு சில விசமிகள் BTF அமைப்போடு ஒத்த அமைப்பொன்றை உருவாக்கி அதை பிரித்தானியாவில் சட்டபூர்வமாக பதிந்தும் உள்ளனர். இது தொடர்பான செய்தியை உயர்வு இணையம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியிட்டிருந்தது. BTF அமைப்பிலிருந்து பிரிந்த சிலரே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதோடு தாமே உண்மையான BTF அமைப்பு என்றும் சில விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.இதற்கு இன்னுமொரு தமிழ் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் ஆதரவு கொடுத்து வருகின்றமை ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையான BTF அமைப்பினர் பிரித்…
-
- 1 reply
- 548 views
-
-
கட்சியின் அனுமதியின்றி அமைச்சுப் பதவி பெற்ற பஷீரை இடைநிறுத்த முஸ்லிம் காங்கிரஸ் முடிவு? - அவசரமாகக் கூடுகிறது உயர்பீடம்! சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் அவசரமாக நாளை வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில், கட்சியின் அனுமதியின்றி அமைச்சுப் பதவியைப் பெற்ற கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வியூகங்கள் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இதுதொடர்பில் கட்சியின் மிக முக்கியமான சிலர் நேற்று முன்தினம் கூடி ஆராய்ந்துள்ளதாக நம்பரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதன் பிற்பாடே கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தியாவிலிருந்தவாறு செயலாளர் நாயகம் ஹசனலியுடன் தொடர்பு …
-
- 2 replies
- 416 views
-
-
பிரித்தானிய பொதுநலவாய செயற்பாட்டு அமைச்சர் எலஸ்டயார் பட் இலங்கை வந்துள்ளார். இன்று (31) அதிகாலை அவர் இலங்கை வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார். அவர் இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பார். எலஸ்டயார் பட்டுடன் மேலும் இரு பிரித்தானிய பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இந்த பிரித்தானிய குழு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரசின் உயர்மட்ட உறுப்பினர்களை சந்திக்கவுள்ளது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=34268
-
- 3 replies
- 525 views
-
-
வலி.வடக்கில் 23 வருடங்களாக தேசியபாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப்பகுதி மக்கள் மீள் குடியமர்வதற்கு அனுமதி மறுத்துவரும் படையினர், தற்போது அந்தப் பகுதியில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்முறை ரீதியான விவசாய நட வடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாது தாம் அந்தரித்து வரும் நிலையில் படையினரின் இந்த நடவடிக்கை தம்மை மேலும் விசனமடையச் செய்வதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். மக்கள் இதுவரை மீளக் குடியமராத மயிலிட்டிப் பகுதியில் படையினர் அண்மையில் "யோக்கட்' தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அவர்கள் தொழில்முறை ரீதியான விவசாய நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளமை, அந்தப் பகுதியில் மீளக்குடியமரக் காத்திருக்கும் மக்கள் ம…
-
- 0 replies
- 364 views
-