Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டமைப்பு முயற்சி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள தமிழ் கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோரளைப்பற்று மத்தி செயலக பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை யொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பத்திரிகை யாளர் மாநாடொன்றை நடத்தி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்…

  2. "அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்" - இரா.சம்பந்தன் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது தொடர்பான தற்போதைய இழுபறி நிலை தொடரமுடியாது. விரைவில்முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார். அவ்வுரையில் சம்பந்தன் மேலும் தெரிவித்தாவது:- "தமிழரைப் பலவீனப்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை அடையாளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் தான இலங்கை அரசாங்கம் காலத்தை கழித்து…

  3. அல்கொய்தா, ஜிஹாத், தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி இயக்கங்களுடன் தொடர்புடைய பலர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக அடுத்த மாதம் முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இயக்கங்களுடன் தொடர்பு இருக்கின்றமை உறுதிசெய்யப்படுமானால் 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படுமெனவும் தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2623

  4. பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இலங்கையை இடைநிறுத்துவதற்கான நேரம் இதுவென சேர் ரொனால்ட் சன்டர்ஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாயத்தின் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுமே அமைப்பின் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருக்கவேண்டிய நிலையில் இந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தற்போது பாரதூரமாக மீறியிருப்பதாக சன்டர்ஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாயத்தின் விதிமுறைகளின் பிரகாரம் அந்த அமைப்பின் இவ்வாறு விதிமுறைகளை மீறிச் செயல்படும் தரப்பை பொதுநலவாய ஒன்றியத்தின் பேரவையிலிருந்து இடைநிறுத்துவது முதலாவது நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பரில் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/loc…

    • 0 replies
    • 277 views
  5. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் இணைய தளம் ஹெக் செய்யப்படவில்லை என மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையததின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல, இணைய தளம் முடக்கப்பட்டமை தொடர்பிலான தகவல்களை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. இணைய தளம் ஹெக் செய்யப்படவில்லை எனவும், அவ்வாறு எதேனும் சம்பவம் இடம்பெற்றால் தகவல் தெரிவிப்பதாகவும் ஹூலுகல்ல கொழும்பு ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். இதேவேளை, இணைய தளம் ஹெக் செய்யப்பட்டமை குறித்து எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என இலங்கை கணனி அவசர கண்காணிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType…

  6. சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிட்டாது - - ஏ.எச்.சித்தீக் காரியப்பர் இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகசபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது எவ்வித களைப்பும் இன்றி தொடர்ச்சியாகக் கூடி தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. குறுகிய காலத்துக்குள்ளேயே அது தனது அறிக்கையைச் சமர்ப்பித்துச் சாதனையே படைத்தது என்றும் கூறலாம். இவ்வாறானதொரு நிலையில் இன்னொரு பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் மீண்டும் பேசப்படுகிறது. “தேசியப் பிரச்சினை“ என இலங்கை அரசினால் அடையாளப்படுத்த…

  7. அரசியல் கைதிகளுக்கு நியாயம் கிடைக்காமல் போகலாம்: மகேந்திரன் சனிக்கிழமை, 19 ஜனவரி 2013 21:44 பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ்; பட்சத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக காணாமல்போனோர் சம்பந்தமாக குரல்கொடுத்துவரும் அமைப்பின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று நியாயம் பெறுவதற்கான கதவும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் காலத்திற்குள் அடைப்பட்டுவிடும் என்றும் நான் கருதுகின்றேன். காணாமல்போனவர்கள், அரசியல் கைதிகள் ஆகியோர் தொடர்பாகவும் நியாயம…

  8. சனிக்கிழமை, 19 ஜனவரி 2013 21:57 -ஹனீக் அஹமட் தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலிருந்து அந்தக் கட்சியின் உப தலைவரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இன்று காலை வெளிநடப்புச் செய்துள்ளனர். அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது திருகோணமலை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், கட்சியின் உயர்பீடத்தில் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதிகள் யாரும் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தே அவர் வெளிநடப்புச் செய்துள்ளார். இதன்போது தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிண்ணியா நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ், கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர் நிஃமதுல்லா…

  9. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெறவுள்ளது. நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. அத்துடன் சர்வதேச ஜூரிகள் பேரவை உள்ளிட்ட அமைப்புக்கள் இந்த நிலைமை குறித்து மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சுட்காட்டும் என அவர் எச்சரிக்கை விடுத்ததுடன், நிறைவேற்று அதிகார முறைமை பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை ஆக்கிரமித்து வருகின்றத…

  10. அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் 19 ஜனவரி 2013 அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பணிப்புரையின் பேரில் மூவர் அடங்கிய விசேட பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கீழ் கடமையாற்றி வரும் மூன்று துணைச் செயலாளர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். மனித உரிமை, நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் ஆகிய விவகாரங்களுக்கு பொறுப்பான துணைச் செயலாளர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இந்தப் பிரதிந…

    • 5 replies
    • 505 views
  11. சிறிலங்கா: இரண்டு தலைமை நீதியரசர்களின் கதை [ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 09:18 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக தனது ஆலோசகர்களில் ஒருவரான மோகன் பீரிசை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். மோகன் பீரிஸ் முன்னர் சிறிலங்காவின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியிருந்தார். இவர் அண்மைய ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார். இவருக்கு முன்னர் தலைமை நீதியரசராகப் பணியாற்றிய சிராணி பண்டாரநாயக்க மீது சிறிலங்கா அரசாங்கத்தால் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அரசாங்கத்தை விமர்சித்தமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், தான் இவ்வாறான எவ்வித குற்றங்களிலும் ஈடுபடவில்லை என சிராண…

  12. முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் ஏனைய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை விவகார பிரதிநிதி கதரீன் அஸ்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. துறைகளுக்கு இடையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுதவதன் மூலம் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் மட்டும் அ…

    • 0 replies
    • 522 views
  13. யாழ் பல்கலை மாணவர்கள் புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு இல்லையென நிருபணமானால் மட்டுமே விடுதலை - எஸ்.பி 19 ஜனவரி 2013 கைதுசெய்யப்பட்ட யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணைகளின்போது நிருபிக்கப்பட்டால்இ அவர்களுக்கான புனர்வாழ்வு தொடரும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அவ்வாறு தொடர்புகள் இல்லையென நிருபணமானால் அவர்கள் விடுதலைசெய்யப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார். மொரட்டுவப் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலைத் திட்டமிட்டு முன்னிலை சோசசலிச கட்சியிரேன நடத்தினர் என்றும் அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்நாட்டு மக்களைக் கொன்று குவித்து சொத்துக்களை அழித்த பயங்கரவாதி வேலுப்பிள்ளைப் பிரபாகரன் எனவும்இ அ…

  14. சவூதி அரேபியாவிடமிருந்து ஒரு செப்புக் காசு கூட வேண்டாம்! எனது மகளை படுகொலை செய்த சவூதி அரேபியாவிடமிருந்து எனக்கு ஒரு செப்புக் காசு கூட வேண்டாம் என்று ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் பணத்தைப் பெற்று ரிசானாவை அகெளரவப்படுத்தாதீர்கள் என அவர் மேலும் கூறியுள்ளார். தனது மகளை படுகொலை செய்த சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்தோ அந்நாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபரிடமிருந்தோ பண உதவியைப் பெறுவதற்கு தாம் தயாராக இல்லையென ரிசானாவின் தாயாரான அகமட் செய்யது பரீனா தெரிவித்தார். இப்போது எங்கள் குடும்பத்துக்காக வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்குப் பல அமைப்புக்கள் முன்வந்துள்ளன என்றும், சவூதி அரேபியாவிலிருந்து எங்களுக்கு கொடுக்கப்படும் ஒரு செப்புக்காசைக் கூட எடுத்துக்…

  15. வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்திய அனைவரும் காளிதேவியின் சாபத்துக்குள்ளாகியுள்ளனர். ஆலய வளாகத்தில் அடாவடியில் ஈடுபட்ட அமைச்சர் மேர்வினுக்குத் தாம் வகித்த பதவியை இராஜிநாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆலயக் கதவை இழுத்து மூடிய ஹசித்த மடவல கொல்லப்பட்டுள்ளார். தடையுத்தரவு பிறப்பித்தவர்களும் தற்போது இல்லை. இவ்வாறு முன்னேஸ்வரம் காளிகோயிலின் பூசகர் மகேந்திரன் குருக்கள் தெரிவித்தார். வேள்வி பூசையை அமைச்சர் மேர்வின் தடுத்து நிறுத்தியுள்ள விவகாரம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: முன்னேஸ்வரம் காளி கோயிலில் கடந்த செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவிருந்த வேள்வி பூசையை மேர்வின் தலைமையிலான குழு, நேரடியாக…

  16. -ஹேமந்த் கிளிநொச்சி பிரதான தபாலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாரம்பரியக் கைத்தொழில், சிறுகைத்தொழில் முயற்சியாண்மை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இணைந்து தபாலகத்தை திறந்து வைத்தனர். பின்னர் தபால் சேவையினை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யுத்தத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த இந்தத் தபால் நிலையம் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 50 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் தலைமைத் தபால் நிலையம் இதுவாகும். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வடபிராந்திய தபால் அத்தி…

  17. ஐநாவில் பொய் கூறியவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்- மங்கள சமரவீர குற்றச்சாட்டு Published on January 17, 2013-10:38 am · ஐக்கிய நாடுகள் சபையில் பொய் கூறிய ஒருவரை மகிந்த ராசபக்ச பிரதம நீதியரசராக நியமித்துள்ளார் என ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை எதிர்த்த சட்டவுரைஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். விசேடமாக சட்டவுரைஞர் வெலியமுனவை தாக்குவதற்காக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த டொல்பின் சந்தன என்பவர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை ஒரு விபத்…

  18. -சி.குருநாதன் 'இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் உள்ள இழுபறி நிலையை தொடர விட முடியாது. விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்' என்று கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 'தமிழ் மக்களின் பிறப்புரிமையை எவரும் பறிப்பதை அனுமதிக்க முடியாது. அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்;. சமமான மக்களாக வாழ்வதற்கு அதிகாரம் தமிழ் மக்களின் கைகளுக்கு வருவது அவசியம்' என்றும் அவர் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலை தனது வாசஸ்தலத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உள்ளூராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணயம் மற்றும் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார். இது தொட…

  19. இலங்கை அரசின் கொடூர அடக்குமுறைகள் தொடர்ந்தால் புதிய போராளிக் குழு உருவாகுவதை தவிர்க்க முடியாது. என்று நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புலிகளுக்கு எதிரான மஹிந்த ராஜபக்ஷவின் தாக்குதல் இப்போது சர்வதேச சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக வெடித்திருக்கிறது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் இதைப் பற்றி விசாரனை செய்து கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் நெடுங்காலமாக பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அதனால் அவர்கள் தமது உரிமைகளைக் கோரினர். அவர்கள…

  20. கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் காந்தன் இன்று காலை இந்தியாவிற்கு தப்ப முயற்சித்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் பாலியல் சாதனங்களை தனது அலுவலகத்தில் வைத்திருந்தார் என்றும் வெடி மருந்துகளை வைத்திருந்தார் என்றும் இவர் மீது குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=18481:2013-01-19-13-57-02&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  21. -எஸ்.கே.பிரசாத் யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டத்தின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்;டப்பட்டுள்ளன. 'நாளைய தீர்ப்பு' இனால் உரிமம் கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் 'கட்டளை' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக மருதனார்மடம், சுன்னாகம் போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களிலேயே இவை ஒட்டப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57125-2013-01-17-11-51-10.html

  22. இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போன செய்தியாளர் ஏக்னலிகொட சம்பந்தமான வழக்கு விசாரணைகளில் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சந்தியா ஏக்னலிகொட கருத்து வெளியிட்டார். 2010 ஜனவரியில் இருந்து காணாமல் போயுள்ள தனது கணவருக்காக சந்தியா தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். காணாமல்போன தன் கணவர், வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்துவருவதாக 2011ல் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் மொஹான் பீரிஸ் கூறியிருந்ததை சந்தியா சுட்டிக்காட்டினார். ஆனால் 2012ஆம் ஆண்டு ஏக்னலிகொட சம்பந்த…

    • 0 replies
    • 353 views
  23. கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தனக்கும் எதிரான விமர்சனங்களின் பின்னணியில் படைப்புலனாய்வாளர்களே இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், படைப்புலனாய்வாளர்களின் கருத்துக்களும், விமர்சனங்களும் மக்களுடையவை அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 12ம் திகதி (சனிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டதுடன், கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான கடந்த 16ம் திகதி நகரில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான விமர்சனங்களடங்கிய துண்ட…

  24. ஜனாதிபதி மார்ச் மாதம் ஜப்பான் விஜயம் சனிக்கிழமை, 19 ஜனவரி 2013 02:05 -கெலும் பண்டார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. ஜப்பானில் புதிய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அங்கு முதன்முறையாக விஜயம் செய்யவிருக்கின்றார். ஜனாதிபதி கடந்த டிசெம்பர் மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்யவிருந்தார். எனினும், அந்த விஜயம் மார்ச் மாதம் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கு இரண்டாவது தடவை விஜயம் செய்யவிருப்பதுடன் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு அங்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57225-2013-01-18-1…

    • 2 replies
    • 227 views
  25. சிறிலங்காவில் மரக்கறிகளின் விலை என்றுமில்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து, இந்தியாவில் இருந்து அவற்றை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி மற்றும் பருவகால வெள்ளத்தை அடுத்து சிறிலங்காவில் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளன. இந்தநிலையில், மரக்கறிகளின் விலையை குறைக்க, இந்தியாவில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்யுமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை நம்பமுடியாத அளவுக்கு உயரக்கூடும் என்று தம்புள்ள பொருளாதார நிலையத்தின் வர்த்தகர் சங்கத் தலைவர் எக்கநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, உள்ளூர் மரக்கறிகளின் உற்பத்தி சந்தைக்கு வரும் வரையில், இந்தியாவில் இருந்த இறக்குமதி செய்வதன் மூலமே அவற்றின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.