Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவே, கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் மீதான சேறு பூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரால் உரையாற்றப்பட்ட உரை திரிபுபடுத்தி சிங்கள நாளிதழ்களில் வெளிவந்ததைத் தொடர்ந்தே, தமிழ் ஊடகங்களிலும் இது தொடர்பில் செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன் எந்த ஊடகமும் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்தி உண்மை தன்மையை வெளிக்கொண்டு வரவில்லை. மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் உறுப்பினர்களும், தலைவரும் பிழையான வழியில் செல்வதாகவும், தமிழ் மக்களுக்கு தற்போது மாற்று சக்தி…

  2. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 60 ஆயிரத்து 784 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 22 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 5 ஆயிரத்து 25 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 168 பேர் 100 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 3 ஆயிரத்து 136 வீடுகள் முற்றாகவும் 7 ஆயிரத்து 694 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2218

  3. மூன்று தசாப்தகாலம் நீடித்த ஆயுதப் போராட் டம் வன்னி போருடன் முடிபுக்கு வந்தது என்று இலங்கை அரசு கருதுமாக இருந்தால், அரசு உடனடியாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். எனினும் அரசு அதனை செய்யவில்லை. போர் முடிந்துவிட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியமில்லை என்ற கொள்கை மிகவும் ஆபத்தானது. உண்மையில் போர் முடிபுற்ற பின்புதான் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என் பதில் இலங்கை அரசு தீவிரம்காட்டியிருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யாமல் இன்னொரு விடுதலைப் போராட்டம் பற்றி தமிழ் மக்கள் நினைக்காத வகையில், தமிழ் மக்களின் மனங் களை ஜடத் தன்மை ஆக்க வேண்டும் என அரசு நினைத்தது. அந்த நினைப்பின் காரணமாகவே இன்று வரை இனவாதம் மக்கள் மனங்களில் வளர்ந்து வருகிறது. இந்த ந…

    • 0 replies
    • 528 views
  4. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது உறவுகளுக்காகவும், உடன் பிறப்புகளுக்காகவும் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் அதனை அவர்கள் தமது வீடுகளில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யும் வரை ஏனைய மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துள்ளனர். இதனால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? என்று அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலை வளாகத்திலும், மாணவர் விடுதிகளிலும் விளக்கேற்றி உள்ளனர். புலிகள் இயக்கப் பதாதைகளும் காணப்பட்டன. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர்…

  5. சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணிகளையோ ஊர் வலங்களையோ தடுக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜ பக்ஷ. "ஊர்வலங்களையும் பேரணிகளையும் தடுப்பது ஜனநாயகத்துக்கு மாறான செயலாக இருப்பதால் அரசை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும்'' என்றார் கோத்தபாய ராஜபக்ஷ. முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். "இன்று இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளை வழங்கப்படவில்லை என்று சர்வதேச அழுத்தங்கள் எமக்கு கொடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பில் பௌத்தர்களைவிட முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் விகிதாசாரம் கூடியுள்ளதை பிறநாட்டு தூது…

  6. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன ரீதியாக செயற்பட்டதாகத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையின் போது இன ரீதியாக செயற்பட்டதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றிய மாணவர்கள் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர். சட்டக்கல்லூரி பரீட்சைகள் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டுமென 2004ம் ஆண்டு பிரதம நீதியரசர் பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் உரிய முறையில் சட்டக் கல்லூரிக்கான அனுமதிகள் மேற்கொள்ளப்படவில்லை. இன ரீதியான அடிப்படையில் மாணவர் …

  7. நீரில் மூழ்கும் வவுனியா - மூன்றடிக்கு மேல் வெள்ளம் December 23, 2012, 7:58 am|views: 358 தமிழீழத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால், வவுனியா மாவட்டத்திலுள்ள பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பாவற்குளத்தின் ஆறு வான் கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமி நகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நிலை ஏற்பட்டுள்ளது. கல்லாறு ஆற்றுப் பகுதி மற்றும் செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏ9 வீதியினால் சிறிய ரக வாகனங்கள் இன்று கா…

    • 3 replies
    • 935 views
  8. நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் சபாநாயகருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கவில்லை. அறிவிப்பொன்றையே விடுத்துள்ளது என்று எதிரணிகள் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.சுமந்திரன் ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர். சுமந்திரன் எம்.பி கருத்து தெரிவிக்கையில், சட்டத்தரணியான பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். தெரிவுக்குழுவுக்கும் சபாநாயகருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கவில்லை. அழைப்பொன்றையே விடுத்துள்ள…

  9. சிறிலங்கா இராணுவத்தினரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் குறித்து கவனமாக ஆராயப்பட வேண்டும் என்று அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்துலக அகதிகள் பாதுகாப்புத் தேவைப்படுவோர் தொடர்பாக அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம், வழிகாட்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தில்: சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஒருபாலுறவுச் சேர்க்கையாளர்கள் போன்றோர், அனைத்துலக அகதிகள் பாதுகாப்புத் தேவைப்படக் கூடியவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதேவேளை, சிறிலங்கா இராணுவத்தினரின் விண்ணப்பங்களை மிக கவனமாக ஆராய வேண்டும் என்றும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் அறிவுரை வழங்க…

    • 0 replies
    • 445 views
  10. யாழ் பல்கலைக்கழக மாணவர் கைதைக் கண்டித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் பிரெஞ்சு மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் கூட்டறிக்கை: [sunday, 2012-12-23 09:59:10] நவம்பர் 27ம் திகதி, யாழ் பல்கலைக்கழகத்தினுள் உள்நுளைந்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், மாணவர்களைக் கைது செய்து தடுத்துவைத்திருக்கும் சிறீலங்கா அரச படைகளின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தும், மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பிரான்சிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய மாணவர் அமைப்புக்கள் மற்றும் சொலிடாரித்தே தமிழீழம் என்ற பிரெஞ்சு அமைப்பு மற்றும் தமிழர் நடுவம் ஆகியன இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் கைதுகள் குறித்தும்,…

  11. யாழ். பல்கலைக்கழக மாணவருக்கு 50 புதிய மோட்டார் சைக்கிள்கள்? எவ்வாறு கிடைத்தது என படையினர் விசாரணை புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு 50 புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் புலிகளுக்கு ஆதரவான உள்ளூர் தமிழ் அரசியல்வாதி ஒருவரும் இனம்காணப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவிகள் லண்டனில் உள்ள புலிகளின…

    • 0 replies
    • 320 views
  12. கிளிநொச்சியில் 4வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்கள காமுகன் Published on December 23, 2012-8:26 am · கிளிநொச்சியில் 4 வயதுச் சிறுமி மீது சிங்கள காமுகன் ஒருவன் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான். கிளிநொச்சிக்கு வரும் சிங்கள முஸ்லீம் வியாபாரிகள் அப்பாவி தமிழ் மக்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிவதாகவும், அம்மக்களிடம் கொள்ளையடித்து செல்வதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். சிங்கள இராணுவத்தினர் அவர்களுக்கு துணையாக இருப்பதால் யாரும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முதல் காரைநகருக்கு வந்த முஸ்லீம் இரும்பு வியாபாரிகள் ஊனமுற்ற தமிழ் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்போது விடுதலை செய்யப்பட்ட …

  13. சி.ஐ.டியின் 3 மணிநேர விசாரணையின் பின்னர் யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கத் தலைவர் விடுதலை Published on December 23, 2012-2:57 am · No Comments யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அ.இராசகுமாரனை நேற்று வவுனியாவுக்கு அழைத்த பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸார்3 மணிநேர விசாரணையின் பின்னர் அவரை விடுவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து தெரியவருவதாவது:யாழ்.பல்கலைக்கழக நிலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்று தேவைப்படுவதால் அது தொடர்பாகக் கதைப்பதற்கு வவுனியாவுக்கு யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரனை வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸார் தொலைபேசி மூலமாக நேற்றுமுன்தினம் மாலை அறிவித்திருந்தனர்.…

  14. மரண தண்டனையை ரத்து செய்யும் வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்கவில்லை 23 டிசம்பர் 2012 மரண தண்டனையை ரத்து செய்யும் வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் போது மரண தண்டனை ரத்து செய்யப்படுவதனை ஆதரித்து 111 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்ததுடன், 34 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. சட்டவிரோத படுகொலைகள், நீதிக்குப் புறம்பான தண்டனைகள் தொடர்பான வரைவுத் திட்ட யோசனை வாக்கெடுப்பிலும் இலங்கை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மரண தண்டனை ரத்து தொடர்பிலான ஆதரவு வரவேற்கப்பட வேண்டியது என சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்த…

  15. சர்வதேசத்திற்குள் நுழையும் மேலும் இரு போர்க்குற்றவாளிகள் December 23, 2012, 4:46 am|views: 170 சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் இரு அதிகாரிகள் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பிரேஸில் நாட்டுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராகவும் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இஸ்ரேலுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழீழத்தின் மீதான இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களைப் படுகொலை செய்து, போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.paristamil.com/tamilnews/view-news-MjM5NDczMjQ4.htm#.UNakMW_8L2s

  16. நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த இளைஞர் புலி அமைப்பு திட்டம்: திவயின பதட்டம்! [sunday, 2012-12-23 08:20:50] இளைஞர் புலி அமைப்பு என்ற ஓர் பயங்கரவாத இயக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இனவாத பத்திரிக்கையான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. புதிய இளைஞர் புலி அமைப்பின் தலைவராகக் கருதப்படும் சுரேஸ் குமார் என்பவர் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஸ் குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தயாரிப்புப் பிரிவில் கடயைமாற்றியுள்…

  17. கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு தினமான எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் அமைதிப் பேரணியும் ஒன்றுகூடலும் பாரிசில் இடம்பெறவுள்ளது. Place Gambetta, 75020 Parisஇல் ஆரம்பமாகும் பேரணி 341rue des Pyrénées, 75020 Paris இல் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தின் முன்பாக நிறைவடையும். அன்றையதினம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது. கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழை…

    • 6 replies
    • 756 views
  18. இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதன்படி 211 படைத்தளத்திற்கு வருகை தந்திருந்த அவரை வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரேரா வரவேற்றிருந்ததுடன் அங்கு இடம்பெற்ற உயர் மட்ட சந்திப்பில் படைத்தலைமையகத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் வடக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், புகையிரத பாதை புனரமைப்பு, வீதிகள் புனரமைப்பு, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் மீள்குடியேறியோருக்கான செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வவுனியா பூந்த…

  19. சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முழுமையான கடப்பாடு இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்துக்கும் இருப்பதாக இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காப் படைகளின் பரந்துபட்ட மூலோபாய அறிவு, அனுபவம், ஒழுக்கம் மற்றும் திறமை ஆகியவற்றை பாராட்டிய இந்திய இராணுவத் தளபதி, இவை இருநாட்டுப் படைகளுக்கும் கற்றுக் கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில், விடுதலைப் புலிகளுக்கு எ…

  20. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 44 ஆம் நாள் நினைவு தினமான 21.12.2012 வெளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணி வரைமாபெரும் ஒன்றுகூடல் லண்டனில் உள்ள பிரான்சு தூதரகம் முன்பாக இடம்பெறவுள்ளது. கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா Tel : 020 3371 9313 www.tcc-uk.com email : info@tcc-uk.com

  21. சபாநாயகரும் தெரிவுக்குழு உறுப்பினர்களும் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை விசாரிக்கும் நியாயாதிக்கம் தனக்கு இருப்பதாக அறிவித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளான சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்களை எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவியல் பிரேரணையினை விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தினை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண…

  22. இலங்கையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட சீனர்கள் கைது! [saturday, 2012-12-22 09:02:26] இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனர்களை கைது செய்யும் நோக்கில் குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று விசேட தேடுதல் வேட்டை ஒன்றை நடாத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சிலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி செல்லிடப் பேசி விற்பனை செய்தல், கடன் அட்டை மோசடிகளில் ஈடுபடல் உள்ளிட்ட…

  23. சிறிலங்கா கிரிக்கற் அணிக்கெதிரான புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஒஸ்திரேலியாவின் பிரபல எழுத்தாளர் Thomas Keneally தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள Keneally இப் புறக்கணிப்புப் போராட்டம் சரியானது எனவும் இப்போராட்டத்திற்கு தனது ஆதரவு இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார். இக்கிரிக்கற் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஏற்கனவே சிட்னி அமைதி அறக்கட்டளைத்(Sydney Peace Foundation ) தலைவர் Stuart Rees அவர்கள் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி Julian Burnside, சிறிலங்காவுக்கான முன்னாள் ஒஸ்திரேலியத் துணைத் தூதுவர் Bruce Haigh; நோர்வேயைச் சேர்ந்த பட தயாரிப்பாளர…

    • 2 replies
    • 569 views
  24. மாணவர்களின் கைதினை வன்மையாகக் கண்டிக்கிறோம்! சிங்கள ஆக்கிரமிப்புப் படை முற்றாக வெளியேற்றப்படுவதே ஒரே வழி! - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [saturday, 2012-12-22 19:47:43] தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சிங்களப் படைகள் வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலக மட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழ…

  25. வன்னியில் 2009 ல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களைப் படுகொலை செய்து போர்க்குற்றங்களைப் புரிந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேலும் இரு அதிகாரிகள் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இலங்கை இராணுவத்தைச் சோ்ந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பிரேஸில் நாட்டுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராகவும், மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இஸ்ரேலுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறியவந்துள்ளது. http://tamil24news.com/news/?p=35664

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.