ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143423 topics in this forum
-
[size=2] [size=5]இந்தியாவின், கூடங்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணு உலையை உடனடியாக நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்ட இயக்கம் இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகர்ப் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்த அணு உலையில் வெடிப்புக்களோ, கசிவோ ஏற்படும் பட்சத்தில் அதன் கதிர் வீச்சினால் இலங்கைக்கும் பாரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதனால் அதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியே இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்தியாவின் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் வடமாகாணம் முழுமையாகவும், புத்தளம், திருகோணமலை போன்ற மாவட்டங்களுடன் வேறு சில மாவட்டங்களும் …
-
- 0 replies
- 245 views
-
-
யாழ்பாணத்தை தனிமைப்படுத்தும் நோக்கில் புலிகள் லயன் எயார் பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தினர் - 29 அக்டோபர் 2012 இராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை தனிமைப்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் லயன் எயார் பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த தந்திரோபாயங்களில் ஓர் அங்கமாக இந்தத் தாக்குதலை நோக்க வேண்டுமென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமானத்தின் இடிபாடுகளை மீட்கும் பணிகள் தமது முன்னிலையில் நடைபெற வேண்டுமென மன்னார் நீதவான் அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியதற்காக புலிகளின் தலைவர் பிரபாகரன் தமக்கு கைத்துப்ப…
-
- 1 reply
- 649 views
-
-
2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சத்தில் உள்ளதாக தெரியவருகிறது. இதன் போது இலங்கையில் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாராங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் அரசாங்க படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொளி ஆதாரங்களும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன. இந்தநிலையில் அரசாங்கம் இது தொடர்பில் முழுயான அச்சத்தில் உள்ளது. இதன்அடிப்படையில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது சுமத்தி இருந்து குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை தயார் செய்யும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே திருகோணமலையில் இடம்பெற்…
-
- 1 reply
- 388 views
-
-
போர் காரணமாக 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்! சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 29, 2012 ஆT 11:33 போர் காரணமாக 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.13,14 மற்றும் 15 வயதுகளைக் கொண்ட சிறுமிகள் போருக்கு அஞ்சி தாய்மாராக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு சிறுமிகளுக்கு மிக இள வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்பட்டது. மேற்குலக நாடுகளுக்கு எதிராக செயற்படுவோர் தீவிரவாதிகள் எனவும் ஏனைய ஆயுததாரிகள் விடுதலைப் போராளிகள் எனவும் வகைப்படுத்தும் நூதன அளவீடுகளை மேற்குலக நாடுகள் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மாத்தறை அபெரக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்…
-
- 0 replies
- 346 views
-
-
[size=5]அன்னாசி சுவைக்கும் ஜனாதிபதி...[/size] [size=2][size=4]கொழும்பு – கண்டி வீதி, இம்புல்கொட பிரதேசத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாசிப் பழக்கடையொன்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு அன்னாசிப் பழத் துண்டொன்றை சுவைத்தவாறு மக்களின் குறைகளைக் கேட்டறிவதை படத்தில் காணலாம்.[/size][/size] [size=2][size=3]http://www.tamilmirr...8-17-02-24.html[/size][/size]
-
- 11 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் கடுமையான கடல் கொந்தளிப்பு Bய் ஆM. றிழத் 2012௰௨9 11:18:32 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரிரைச்சலுடன் கடல் அலைகள் கரைக்கு வருதோடு மீனவர்கள் கடலுக்குச்செல்லாமையால் மீன்பிடி தொழில் முற்றாக பாதிக்கப்பட்டடுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். மீனவர்கள் கடலுக்குச்செல்லவேண்டாமென மாவட்ட வானிலை அவதான நிலையமும் மாவட்ட கடற்றொழில் திணைக்களமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதேவேளை இருதினஙங்களாக இம்மாவட்டத்தில் அடை மழை பெய்துவருதோடு கடுமையான காற்றும் வீசிவருவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்களாகியுள்ளது. மேலும் மட்டக்களப்பின் பல வீதிகள் முற்றாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. http://www…
-
- 0 replies
- 492 views
-
-
13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன் - சரத் ஏக்கநாயக்க நாட்டின் இறைமை, ஒருமைப்பாட்டின் பிரகாரம் அரசியலமைப்புக்கு அமைவாக நான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன்’ என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். 13ஆவது திருத்தத்தின் நகல் உண்மையிலேயே மாகாணசபைகளில் அமுல்படுத்தப்படவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த திருத்தம் மாகாணசபைகளுக்கு கொண்டுவரப்பட்டது. வட, கிழக்கில் இந்த முறைமை உண்மையாக நடைமுறையில் இல்லை. தற்பொழுது கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டுள்ளது. எனினும் அங்கும் 13ஆவது திருத்தம் முறையாக அமுல்படுத்துவதில்லை. இது அரசாங்கத்தினத…
-
- 0 replies
- 440 views
-
-
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிக்கு அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்திய மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானது தானா என்பதை ஆராய்ந்துவரும் நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் சுவிட்சர்லாந்தில் தற்போது வசித்துவரும் விஜயரட்னம் சிவநேசன் விடுதலைப்புலிகள் சார்பாக நீடிப்பினை எதிர்த்து மனு சமர்ப்பிக்கலாம் என்று இன்று உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் 1992 முதல் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீத…
-
- 0 replies
- 374 views
-
-
[size=3] [size=1]தந்தை செல்வா என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன் சுமார் 30 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்துவருகிறார்.[/size][/size] [size=3]இலங்கையிலிருந்து யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் நாடு திரும்புவதில் எந்தவிதமான பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகளும் இல்லையென்று இந்தியாவில் இலங்கை அகதிகளின் நலன்சார் விடயங்களில் ஈடுபட்டுவரும் தொண்டுநிறுவனமான ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் (ஆஃபர்) தலைவர் எஸ்.சி. சந்திரஹாசன் கூறுகிறார்.[/size] [size=3]தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிச்சென்றுள்ள இலங்கை அகதிகள் 6 ஆயிரம் பேர் வரையில் தமக்கு அங்கு பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதாக உணரவில்லை என்றும் அவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்ச…
-
- 4 replies
- 551 views
-
-
அமெரிக்காவின் தடையை மீறி ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் - கொள்வனவு செய்ய சென்ற இலங்கையின் கப்பல்கள் தடுத்து வைப்பு! [ஸுன்டய், 2012௰௨8 08:16:42] ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. எனினும் அமெரி…
-
- 5 replies
- 799 views
-
-
[size=4]விடுதலைப் புலிகள் சார்பில் வாதிடுவதற்கு சுவிஸ் தமிழருக்கு தீர்ப்பாயம் அனுமதி[/size] [size=4][ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:45 GMT ] [ அ.எழிலரசன் ][/size] [size=4]இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது தொடர்பான வழக்கில் வாதாடுவதற்கு, சுவிற்சர்லாந்தில் உள்ள அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவருக்கு நீதிபதி வி.கே.ஜெயின் அனுமதி அளித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானதா என்பதை நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம், ஆராய்ந்து வருகிறது. நேற்று முன்தினமும், நேற்றும் கொடைக்கானலில் தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது. …
-
- 0 replies
- 730 views
-
-
இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து இலங்கை அரசுடனான இந்திய உறவுக்கு பாலமாக விளங்கிய கிருஸ்ணா தற்போது, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதததை இந்திய பிரதமரிடம் கையளித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இலங்கை விவகாரம் குறித்து கருத்துரைத்தார். அவர் அதன்போது, இலங்கையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய மத்திய அ…
-
- 5 replies
- 839 views
-
-
[size=2] [size=4]2006ஆம் ஆண்டு திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவர் மற்றும் மூதூரில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 17பேரின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்தன. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன இந்த வழக்குகளை மீளவும் ஆரம்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்தன. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டது. …
-
- 1 reply
- 739 views
-
-
[size=4]இலங்கையிலிருந்து பிரிட்டன் வந்துள்ள ஆளுங்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளம்-பிரதிநிதிகள் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் பிரிட்டன் வந்துசென்ற இந்தத் தூதுக்குழுவினர் இரண்டாவது கட்டமாக புலம்பெயர் தமிழர்கள் சிலருடன் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.[/size] [size=4]பிரிட்டனில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாகக் கூறும் இந்தத் தூதுக்குழுவினர், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை,அரசியல் தீர்வுத் திட்டத்தை துரிதப்படுத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி அரசு…
-
- 0 replies
- 779 views
-
-
அமெரிக்கா இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் ஈரான் மீது பிரயோகித்துள்ள பொருளாதாரத் தடையினால் நட்பு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நட்பு நாடுகள் பாதிக்காத வகையில் தடைகள் விதிக்கப்பட வேண்டும் அல்லது அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமெரிக்காவிடம் கோரியுள்ளார். ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கை பாரியளவு எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&l…
-
- 9 replies
- 671 views
-
-
எமது நாட்டில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும் என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மஹாத்மா காந்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அனைத்து நாடுகளும் பெருமிதம் கொள்ளக் கூடிய வகையில் இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைவரது பங்களிப்பும் அவசியமானது. குறிப்பாக பெரும்பான்மை மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும். அதன்பட…
-
- 0 replies
- 582 views
-
-
தமிழகம் எதிர்த்தாலும் சிறிலங்கா படையினருக்கான பயிற்சி தொடரும்! – கோத்தாவுக்கு சிவ்சங்கர் மேனன் உறுதி! சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 28, 2012 ஆT 19:03 சிறிலங்கா படைத்தரப்பினருக்கு இந்திய மத்திய அரசு பயிற்சி வழங்குவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் ஒரணியில் திரண்டு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தமிழக அழுத்தங்கள் சிறிலங்கா படையினருக்கான பயிற்சி நடவடிக்கைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என புதுடில்லி உறுதியாகத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்ற சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்…
-
- 0 replies
- 532 views
-
-
[size=3]ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்டோபர் 2012 20:55 [/size] [size=2][size=4]'கடல்கடந்த நாடுகளிலிருந்து செயற்படும் சில புலி உறுப்பினர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது' என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 'இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். சில உறுப்பினர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களே நிதி திரட்டல், பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயற்பாடுகளில் கடல்கடந்த நாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர்' என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற இளம் தலைவர்கள் சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்த…
-
- 0 replies
- 625 views
-
-
[size=2] [/size] [size=2][size=4]By V.Priyatharshan 2012-10-28 20:39:34[/size] [size=4]வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்கள் அடிக்கடி விசாரித்து குடும்பவிபரங்களை சேகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில், வடக்கில் குறிப்பாக யாழ்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மீளக்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்களும் இராணுவத்தில் உயர்நிலையில் உள்ள அதிகாரிகளும் அடிக்கடி விசாரித்தும்…
-
- 0 replies
- 460 views
-
-
[size=2][size=4]இலங்கை யுத்தத்துடன் தொடர்புடைய போராளிகள், தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவுக்கு வருகின்றனர். இவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இவ்வருடம் புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற முன்னாள் போராளிகள் அறுவர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் அறுவர் அந்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிகாரிகளினால் மேலம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களைத் தாக்கிவிட்டு மீன்பிடிப் படகொன்றில் புகலிடக் கோரிக்கையாளர…
-
- 0 replies
- 496 views
-
-
[size=2][size=4]அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 14பேரையும் நாளை திங்கட்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் 14பேரும் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை தங்காலை மேலதிக நீதவான் ரஞ்சன் விஜேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பிதுள்ளார். தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்தியதாகவும் நடுகடலில் வைத்து சிலரை கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்திச் சென்றதாகவும் மேற்படி நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்ப…
-
- 0 replies
- 547 views
-
-
மகிந்தவின் நாமத்தை உச்சரித்தால் சகல பிரச்சினைகளும் தீரும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் சபையில் சொன்னாலும் சொன்னார். அவர் சொல்லி வாய் மூடும் முன் அநுராதபுரம் மல்வத்து ஓய பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்றிற்கு இனவாதிகள் தீ வைத்து விட்டார்கள். அதிலும் இஸ்லாமிய சகோதர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கால கட்டத்தில் பெருநாள் பரிசு என இதை செய்து தந்துள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் அவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.அனுராதபுரம் மல்வத்து ஓய மத்ரஸா கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நா…
-
- 0 replies
- 338 views
-
-
முன்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த திரு. எரிக் சொல்கெய்ம் அவர்கள் அண்மையில் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது அபாண்டமாகப் பழிசுமத்தியது தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எமது கடமையாகும். அந்த நேர்காணலில், தாம் ஒழுங்கமைத்த சரணாகதி ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் விடுதலைப் புலிகளின் தலைமை வீண் பிடிவாதம் பிடித்ததால்தான் தமிழ்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டதென்று திரு. எரிக் சொல்கெய்ம் கூறியிருக்கிறார்.வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து எமது மக்கள் நாளாந்தம் …
-
- 0 replies
- 430 views
-
-
[size=4]By Hafeez 2012-10-28 17:18:54 அரசையும், நீதித்துறையையும் மோதவிட்டு ஆட்சியை கவிழ்த்துவதற்கு சதிகாரக் கும்பலொன்று திட்டமிட்டு வருவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். சட்டவாக்கம், நீதி, நிர்வாகம் முதலான முத்துறை அதிகாரங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற சதிகார கும்பலொன்று மேற்கொள்ளும் ஒரு திட்டமே அண்மைய பணிப் பகிஷ்கரிப்புகளுக்குக் காரணம் என்றார். உடுநுவரையில் ‘திவிநெகும்’ வேலைத்திட்டத்தின் நான்காம் கட்டப் பணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள் போன்றவர்களை தூண்டி விட்டு மேற்படி சதிகாரர்கள் இலா…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இடம்பெற்ற போதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. எதிர்வரும் 29-ம் திகதி ஆரம்பமாகவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ம் திகதி நடைபெறும் சட்டமன்ற வைர விழா தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் பற்றி விவாதிக்கப்படும் போது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் …
-
- 1 reply
- 751 views
-