ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=4]இந்தியாவுடன் சீபா எனப்படும் வர்த்தக உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு விரும்பவில்லை என்று இந்திய அதிகாரிகளுக்கு சிறிலங்கா வெளிப்படையாகக் கூறியுள்ளது. புதுடெல்லியில் இருந்த வெளியாகும் “பிஸ்னஸ் ஸ்ரான்டட்” இதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த உடன்பாடு இந்தியப் பொருட்களை சிறிலங்காவின் சந்தைக்கு திறந்து விடும் என்பதால் உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்ளது. எனினும் 2000 மார்ச் தொடக்கம் நடைமுறையில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் புதிய விடயங்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யத் தயாராக இருப்பதாக சிறிலங்கா கூறியுள்ளது. 2010 ஜுனில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்த…
-
- 3 replies
- 406 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் செம்பியன்பற்று கிராமத்தின் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று கிராமத்தின் நடுப்பகுதியில் புதிதாக இராணுவத்தினர் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர். இந்த படைமுகாமில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் கடற்படையினரின் பாரிய முகாமும், 500 மீற்றர் தூரத்தில் இராணுவ தலைமைப்பீட முகாமும் ஏற்கனவே அமைந்துள்ள நிலையில் இப்பகுதியில் இப்புதிய முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது. புதிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் பகுதி மக்கள் செறிந்து வாழும் பகுதியாகும். இப்பகுதி கடற்றொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பகுதியாகும். இந்த நிலையில் அவர…
-
- 0 replies
- 412 views
-
-
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 73 வயது சந்தேகநபர் எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் முன்னாள் கிராம சேவகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை தோப்பூரை சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்தில் 13 வயது சிறுமியை களுவாஞ்சிகுடியில் உள்ள சிறுமியர் இல்லத்தில் இணைக்க பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுமியை இணைக்க சில சான்றிதழ்கள் தேவையாகவுள்ளதால் குறித்த வயோதிபரின் வீட்டில் சிறுமியை பெற்றோர் விட்டுச்சென்றுள்ளனர். இந்நிலைய…
-
- 0 replies
- 548 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு உயிராபத்து நிறைந்த கடற் பயணம் செய்து அகதி அந்தஸ்துக் கோரிய ஈழத் தமிழ் அகதிகள் புதியதொரு நெருக்கடியை எதிர்கொள்கின்றனார். முன்பு அவர்களுக்கு அவுஸ் அரசு மாத்திரம் எதிரியாக இருந்தது. இப்போது இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கூட்டணி அமைத்து தமிழீழ அகதிகளுக்கு மிகப் பெரும் ஆபத்தை உருவாக்குகின்றன. இருபக்கத் தகவல்களின் படி பின்வரும் செய்தி அரங்கிற்கு வந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களைத் திரட்டி படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குத் தனது முகவர்கள் மூலம் அனுப்புகிறது. கடந்த சில வாரங்களாக பெரும் எண்ணிக்கையில் தமிழீழ அகதிகள் அவுஸ்திரேலியாவில் கரை சேர்ந்ததற்கு இது தான் காரணம். தமிழர்களை இப்படிப் பயணம் செய்ய ஊக்குவித்த அதே அரசு “எங்கள் நாட்டு அகதிகளை எங்கள் நாட்டிற்க…
-
- 0 replies
- 475 views
-
-
[size=3] [size=4]பலாலி படைத் தளத்தை அண்டிய பகுதியில் படையினர் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மரக்கறிச் செய்கையையும் பெருமளவில் மேற்கொண்டு, மரக்கறிச் சந்தையில் புகுந்து கொண்டதால் தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.[/size] [size=4]இங்கு பயிரிடப்பட்ட மரக்கறிகள் முன்னர் தெற்கில் உள்ள படைத் தளங்களுக்கும் சந்தைகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் திடீரென இப்போது அச்சுவேலியில் ஆங்காங்கே ஊர்திகளில் கொண்டு வந்து மரக்கறிகளை விற்க ஆரம்பித்திருக்கின்றனர் படையினர். இவர்களின் இந்த நடவடிக்கையால் தாம் உற்பத்தி செய்த மரக்கறிகளைச் சந்தைப்படுத்த முடியாமலுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனால் மக்கள் அச்சுவே…
-
- 0 replies
- 350 views
-
-
[size=3] [size=4]யாழ்.கொட்டடிப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவினரை கைது செய்வதற்காக சென்ற போதே இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலீசார் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு சிறீலங்கா விசேட அதிரடிப்படை சிப்பாய் காயமடைந்ததோடு, இத்தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடைய ஒருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். காயமடைந்த விசேட அதிரடிப்ப…
-
- 0 replies
- 364 views
-
-
[size=4][/size] [size=4]அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் தனது பங்கை சரிவரச் செய்யவில்லை என்பதை ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியிடம் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.[/size] [size=4]ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க தூதுக்குழு யசூஷி அகாஸியை புதன்கிழமை சந்தித்தது. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.[/size] [size=4]கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாமை, சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்தாமை ஆகியவற்றை ஐ.தே.க. சுட்டிக்காட்டியதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித…
-
- 0 replies
- 310 views
-
-
[size=4]மாலைதீவுப் படையினருக்கு இலங்கையில் பயிற்சிகளை தருவிப்பது தொடர்பில் பேச்சு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி அளிப்பது தொடர்பில் - இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் வாகிட், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size] [size=4]இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார துறைகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]கல்வி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்…
-
- 0 replies
- 177 views
-
-
காகம் காட்டுவதாகக் கூறி இரண்டரை வயதுக் குழந்தை மீது பாலியல் குற்றம் புரிந்த தந்தை By Nirshan Ramanujam 2012-08-24 10:10:19 தனது இரண்டரை வயது மகளை தினமும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த ஜோர்தான் நாட்டுப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, ஜோர்தான் நாட்டுப் பிரஜையான யூசுப் மொஹமட் அல் முவர் என்பவர் இலங்கைப் பெண்ணை மணம் முடித்து கொழும்பில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. இச் சந்தேக நபர் தனது மகளை காகங்களைக் காட்டுவதாகக் கூறி தினமும் வீட்டின் மேல்மாடிக்கு அழைத்துச் செல்வதை வழமையாகக் கொண்டுள்ள…
-
- 1 reply
- 638 views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி சீன நிதியுதவியில்; இலங்கை அரசு தீர்மானம் இலங்கை சீனாவின் பக்கம் சாயும் போக்கைக் கடைப்பிடிப்பதால் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படும் இவ்வேளையில், சீனாவின் நிதியுதவியுடன் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணியின் கீழ் துறைமுகத்தின் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் சீன வங்கியொன்றின் உதவியுடன் பூர்த்திசெய்யப்பட்டமை தெரிந்ததே. இந்த நிலையில், துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக சீன எக்சிம் வங்கி 600 மில்லியன் டொலரையும், சீன அரசு சலுகைக் கடனா…
-
- 0 replies
- 642 views
-
-
போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபி மான சட்டங்கள் மீறப்பட்டன - ஆங்கில உரை இணைப்பு [size=3]24 ஆகஸ்ட் 2012[/size] போரின் பின் உறுதியளிக்கப்பட்டவை காற்றில் பறந்தன - பாராளுமன்றில் சம்பந்தன் [size=3]போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டன. போருக்கு பின்னர், இலங்கை அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் இடையில்; கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும், போர் நடைபெற்ற போது நடந்தவற்றை ஆராயந்து பார்க்கவும் உறுதியளிக்கப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன நேற்று முன்தினம் 22.08.12 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்…
-
- 0 replies
- 520 views
-
-
கருணாவை கொழும்பில் தரையிறக்கியமை குறித்து ரணிலுக்கு தெரியாது [size=4]– தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்[/size] [size=3]24 ஆகஸ்ட் 2012[/size] [size=3]கருணா எவ்வாறு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.[/size] [size=3]இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[/size] [size=3]2004ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் திகதி இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்தத் தகவல்…
-
- 0 replies
- 650 views
-
-
[size=2] [size=4](ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம். றம்ஸான்) புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் உத்தரவிற்கமைய தெஹிவளையிலுள்ள பள்ளிவாசலொன்றை மூடி விடுமாறு முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவருமான ஆசாத் சாலி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஏ.எம். ஜெமீலை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் சாய்ந்தமருது பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது. கல்முனை மாநகர மேயர் சிராஷ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற …
-
- 3 replies
- 784 views
-
-
[size=4]கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகளே இலங்கையில் பயங்கரவாதத்திற்கு வழிவகுத்த பிரதான காரணி என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறினார். பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவாக முடியாத நிலையிலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதை அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார். "1973, 1974, 1975 ஆம் ஆண்டுகளில் இது நடந்தது. அரசாங்கம் இதை மனதில் கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார். த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், வடபகுதி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாத நிலையால் பெரும் குழப்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்ததாகவ…
-
- 5 replies
- 772 views
-
-
[size=4]இலங்கை தமிழர் பிரச்னைக்காக, பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்து இருந்த தி.மு.க., வினர், அந்த ஆர்ப்பாட்டத்தை சொல்லாமல் கொள்ளாமல் ரத்து செய்து விட்டனர். இலங்கை தமிழர் பிரச்னைக்காக சென்னையில், டெசோ மாநாடு நடத்தி முடித்துவிட்ட கையோடு, டில்லியிலும் அதன் தொடர்ச்சியை காட்டுவதற்காக நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க.,- எம்.பி.,க்கள் குழு சந்தித்தது. அந்த சந்திப்பின்போது, இலங்கை பிரச்னை குறித்தும், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும் எடுத்துரைத்தனர். பின்னர் இதே பிரச்னைகளை முன் வைத்து, அடுத்த நாள் (நேற்று) காலையில் பார்லிமென்ட்டில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணா போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. [si…
-
- 0 replies
- 653 views
-
-
[size=2][/size] [size=2][size=4]சுமார் 20 - 30 தொன் எரிபொருளுடன் பாணந்துறை கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலொன்று மூழ்கிவருவதாக மேர்சன்ட் ஷிப்பிங் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரட்ன கூறியுள்ளார். வழக்கொன்றின் காரணமாக நான்கு வருடங்களாக இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்.எஸ். தேர்மோபிலே சியெரா எனும் இக்கப்பல், கிரேக்க நாட்டிலுள்ள கப்பல் நிறுனமொன்றுக்கு சொந்தமானதாகும். கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவின்கீழ் பாணந்துறை கடற்பகுதியில் இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. கப்பலிலிருந்து பெரும்பாலான எரிபொருள் அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், இக்கப்பல் மூழ்கியுள்ளதால் எஞ்சிய எரிபொருளை அகற்றுவது கடினமாகும் அஜித் செனவிரட்ன கூறினார். இக்கப்பலுக்கான பராமரிப்ப…
-
- 2 replies
- 702 views
-
-
ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது சிங்கள கடற்படையினர் அந்த வழியாக 3 குட்டி படகுகளில் ரோந்து வந்தனர். அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த வேலாயுதம், வழிவிட்டான் ஆகியோரின் படகுகளில் ஏறினர். பின்னர் அவர்கள் படகில் இருந்த மீனவர்களை அடித்து உதைத்தனர். இங்கு ஏன் மீன் பிடிக்க வந்தீர்கள்? என்று கூறி படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலுக்குள் எறிந்தனர். மேலும் படகுகளில் இருந்த பொருட்களையும் கடலில் வீசினர். பின்னர் மீனவர்களை விட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் உயிருக்கு பயந்து உடனடியாக கரைக்கு திரும்பினர். கரை திரு…
-
- 1 reply
- 858 views
-
-
[size=3][/size] [size=3][size=4]யாழ். வல்லிபுரக்கோவில் அருகில் இருக்கும் இராணுவ காவலரண் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைக்குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று பகல் இரண்டு மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. துன்னாலை- வல்லை - தொண்டமானாறு B417 வீதியில் இருக்கும் இராணுவ காவலரண் மீதே இந்த கைக்குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. எனினும் குறிப்பிட்ட குண்டு வெடிக்கவில்லை என இராணுவ தரப்பில் கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சந்தேகநபர்கள் காவலரண் அருகில் இருக்கும் ஒரு பிரபல்ய உணவகத்துக்கு 1:30 மணியளவில் வந்துள்ளனர். அங்கு குளிர்பானத்தை வாங்கி குடித்து விட்டு, வெளியில் சிறிது நேரம் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். பின்பு அ…
-
- 0 replies
- 636 views
-
-
[size=4]அதிகளவு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருடாந்தம் புகலிடம் வழங்கப்படுவோரின் எண்ணிக்கை 20000 மாக உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தற்போது அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் 13750 பேருக்கு புகலிடம் வழங்கப்படுகின்றது.[/size] [size=4]40 வீதம் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிர்வரும் காலங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்க்பபடுகிறது. கடந்த மூன்று தசாப்த காலத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்கும் எண்ணிக்கையை 40 வீதத்தினால் உயர்த்திய முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.[/size] http://youtu.be/A4O-Ho3YATg [si…
-
- 1 reply
- 511 views
-
-
[size=3]இலங்கையில் தொடருந்தில் பயணம் செய்த பிரான்ஸ் பெண்ணும் காமுகரின் வெறித்தனத்திற்கு தப்பவில்லை:- 22 ஆகஸ்ட் 2012 உலகில் பெண்கள் சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இலங்கை தெரிவு செய்யப்படலாம்???? [size=3]கொழும்புக்கும், பதுளைக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பெடிமெனிகே தொடருந்தில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.[/size] [size=3]தொடருந்தின் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதுடன் அவரை தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.[/size] [size=3]குறித்த பிரான்ஸ் நாட்;டு பெண் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் இரு…
-
- 25 replies
- 2.5k views
-
-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குபின் முரணானதுமான விவரங்களையேத் தந்துள்ளார். இலங்கையில் போர் நடந்த போது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியத் தலைவரான கருணாநிதி அதில் அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசை மீறி ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்சினைகளில் தீர்வு காணமுடியும் என்பதில் அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் தான் உணர முடியும் என…
-
- 2 replies
- 636 views
-
-
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன்தான் உலகத் தமிழினத்தின் தலைவன் என சொல்லுங்கள் நான் ஏற்று கொள்கின்றேன் தமிழருவி மணியன் ஆனால் பறந்த பேச்சு. http://thaaitamil.com/?p=29823 http://youtu.be/Ok00MJrbxOs
-
- 0 replies
- 647 views
-
-
அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களின் இன்றைய நிலையை காட்டுகின்ற புகைப்படங்கள் இவை. போருக்கு பின்னர் இந்த இடங்கள் பிரபல சுற்றுலாத் தலங்களாக மாறி விட்டன. சிங்கள இராணுவத்தின் கடை http://thaaitamil.com/?p=29740
-
- 0 replies
- 680 views
-
-
புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கும் இராணுவத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாணவிகள் பேருந்தில் செல்கின்ற போது இராணுவத்தினர் கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கின்றனர். இராணுவ சீருடையில் பேருந்தில் ஏறும் இவர்கள், ஏற்கானவே பெண்களிடம் கொடுப்பதற்காக சிறு சிறு துண்டுகளில் தமது தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்தில் பயணிக்கும் பெண்கள் மற்றும் மாணவியருக்கு அருகில் விரும்பி சென்று நிற்கும் இராணுவத்தினர், அவர்களிடம் வலிய பேச்சைத் தொடங்குவதாகவும் சில வேளைகளில் கை, கால்களினால் சுர…
-
- 0 replies
- 468 views
-
-
[size=4]மாணவிகளுக்கு ரெலிபோன் நம்பர் எழுதிக் கொடுக்கும் சிங்கள இராணுவம்; புதுக்குடியிருப்பில் தொடரும் அவலம் மாலை நேர வகுப்பிற்குச் சென்று வரும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கும் சிங்கள இராணுவத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச மாணவர்கள் மாலைநேர வகுப்பிற்கு செல்வதற்காக பேருந்தில் சென்கின்ற போது இவ்வாறு இராணுவத்தினர் கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கின்றனர். இலவசமாக செல்வதற்காக இராணுவ சீருடையில் பேருந்தில் ஏறும் இவர்கள் ஏற்கானவே பெண்களிடம் கொடுப்பதற்காக சிறு சிறு துண்டுகளில் தமது தொலைபேசி இலக்கங்கள…
-
- 0 replies
- 644 views
-