ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றில் பெண் பயணியின் களுத்தை நெரித்து தங்கச்சங்கிலியை அறுத்துள்ளார் ஒரு சிங்கள சிபாய்.வெல்லவீதி – கனசிங்கபுர பஸ் நிலையத்தில் இருந்து மினுவாங்கொட நோக்கி பயணித்த பேருந்திலேயே இச் சம்பவம் நடந்துள்ளது. கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பிடுங்கிக் கொண்டு ஓட முயற்சித்த குறித்த இராணுவ வீரரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர். அதன் பின்னர் வெல்லவீதி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து களவாடப்பட்ட இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் இலங்கை இராணுவ தலைமையகத்தில் முதலாவது ஆயுத புலனாய்வு படையில் ´கொப்ரல்´ பதவியில் இருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெல்லவீதி பொலிஸார் மேலதிக …
-
- 0 replies
- 619 views
-
-
வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் மீது சேந்தாங்குளம் பகுதியில் நேற்றிரவு (சனிக்கிழமை) 8.45மணியளவில் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது- சேந்தாங்குளம் பகுதியில் அண்மையில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் நீண்ட காலமாக சனநடமாட்டம் இன்மையால் பல இடங்களில் பற்றைகள் காடு போல மண்டியிருந்தன இதனால் டெங்கு முதலான நோய்கள் பரவும் அபாயம் எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு குறித்த பற்றைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, அது குறித்து பிரதேச சபைத்தலைவர் கடற்படையினருடனர் கலந்துரையாடி இருந்தார். இதற்கு கடற்படையினரும் அனுமதி அளித்திருந்தனர். எனவே குறித்த பற்றைகளை அப்பகுதி மக்கள் நேற்று எரியூட்டினர். இதன்போது அப்பகுதி…
-
- 0 replies
- 458 views
-
-
கடந்த 40 நாட்களில் சுமார் 11 பேர் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற பதிவின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து துரித விசாரணை நடத்துமாறு சிறிலங்கா காவல்துறை அதிபர் என்.கே. இளங்கக்கோன் காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் பிரகீத்எக்நெலிகொட வெளிநாடொன்றில் வசிப்பதாக தமக்கு தகவல் கிடைத்ததாகவும், அதுதொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட…
-
- 0 replies
- 419 views
-
-
தமிழகம் : 'தானே' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவிகளை வழக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான முதற்கட்ட களஆய்வினை தமிழகத்தில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மேற்கொண்டுள்ளது. கடலூருக்கு அண்மித்த குள்ளஞ்சாவடி அம்பலவாணன்பேட்டையில் உள்ள அகதிமுகாமே தானே புயலுக்க பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த அகதிமுகாமில் உள்ள 431 ஈழத்தமிழ் அகதிகளே பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் இவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்குரிய முதற்கட்ட களஆய்வினை மேற்கொண்டுள்ளது. இதேவேளை தானே புயலினால் பாதிக்கப்பட்ட தமிழ…
-
- 0 replies
- 389 views
-
-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான மாட்டுவண்டிச் சவாரி மற்றும் கிளித்தட்டு ஆகிய போட்டிகளை அமைச்சர் அவர்கள் சம்பிரதாயப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் பண்டத்தரிப்பு விளான் பகுதியிலுள்ள சவாரித்திடலில் நடைபெற்றன. http://newjaffna.com
-
- 2 replies
- 1.3k views
-
-
படகு அகதிகளின் கதை ஒஸ்றேலியாவை நோக்கி அகதிகளும் படகுகள் செல்வது என்பது ஒஸ்றேலிய அரசியல் மட்டத்தில் முக்கியமானதொரு விடயமாக இருக்கின்றது. ஒஸ்றேலியாவின் ஊடகங்கள் அகதிகள் விவகாரம் முக்கிய பேசுபொருளாகவும் உள்ளது. இந்நிலையில் இன்று (15-01-2012) ஞாயிற்றுக்கிழமை The Sydney Moning Herald (http://www.smh.com.au/national/without-hope-without-reason-20120113-1pzei.html)ஊடகத்தில் தமிழ் அகதிகள் குறித்தான பதிவொன்று வெளிவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்தில் THE AUSTALIAN (http://www.theaustralian.com.au/national-affairs/immigration/talk-of-betrayal-in-two-year-asylum-saga/story-fn9hm1gu-1226236842438) அகதிகள் தொடர்பில் வெளிவந்த பதிவொன்றின் தமிழாக்கம் …
-
- 0 replies
- 565 views
-
-
தமிழர் தரப்பை சந்தித்த பின்னரே சிங்கள தரப்புடன் பேச வேண்டும் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு வலியுறுத்தல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்எஸ்.எம்.கிருஸ்ணாவின் சிறிலங்காவுக்கான நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழரின் விருப்பை அறிந்த பின்னரே சிறிலங்கா அரசுடன் அமைச்சர் கிருஸ்ணா பேசவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்மைப்பு வலியுறுத்தியுள்ளது. http://naathamnews.com/2012/01/15/tna-india/
-
- 0 replies
- 617 views
-
-
ஈரான் மீதான மேற்குலக அழுத்தம் : அபாயத்தில் சிறிலங்கா அதிகரித்து வரும் ஈரான் மீதான மேற்குலக நாடுகளின் அழுத்தங்களால் அதிகம் பாதிக்ககூடிய நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா உள்ளதென ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எண்ணெய் இறக்குமதியில் ஈரானை சிறிலங்கா பெரிதும் நம்பியிருப்பதால் இந்த அபாய நிலை ஏற்படுமென ரொய்ஸ்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. http://naathamnews.com/2012/01/15/iran-sri-lanka/
-
- 0 replies
- 675 views
-
-
தமிழர்கள் மட்டும் காணாமல் போன இலங்கையில் தற்போது சிங்கள, முஸ்லீம் மக்களும் காணாமல் போகின்றனர்! - The Economist இலங்கையில் தற்போது காணாமல் போவோர் பட்டியலில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் கூட இடம்பெறுவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு வெளிவரும் The Economist சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 09ஆம் திகதி அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜா மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவமானது அங்கு வாழ்வோர் ஆபத்தில் இருப்பதையே குறித்து நிற்பதாக இச்சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விகாரம் தொடர்பில் இச்சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். கொழும்பில் கடந்த 09ஆம் திக…
-
- 1 reply
- 642 views
-
-
"பாரம்பரிய மீன்பிடி உரிமை என்ற வாதத்தைக் கைவிட இந்தியா சம்மதம்" இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய ரீதியான உரிமை இருப்பதாக கூறிவந்த இந்திய தரப்பினர், தற்போது அந்தக் கோரிக்கயை விட்டுக்கொடுத்துள்ளதாக இலங்கை மீன்பிடித்தறை அமைச்சர் ராஜித சேனரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையே மீன்பிடி தொடர்பில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்திய, இலங்கை தரப்புகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் சனிக்கிழமையன்று கொழும்பில் நடந்தது. இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய மீன்பிடித்துறை அமைச்சின் கூட்டுச் செயலர்கள் உள்ளிட்ட தரப்பினர், தமிழ்நாடு ஆந்திர மாநிலங்களின் மீன்பிடித்துறை ஆணையர்கL, இந்திய கடற்படை மற்றும் கடல்எல்லைக் கா…
-
- 0 replies
- 562 views
-
-
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தனது தைப்பொங்கல் திருநாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தனது தைப்பொங்கல் திருநாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமன் தெரிவித்துள்ளார். மேலும் தைப்பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ இறைவனை வேண்டி நிற்பதாக அவரது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி, பிரதமர் மன்மோகன்சிங், உப ஜனாதிபதி ஹமீட் அன்சாரி ஆகியோர் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர். தைப்பொங்கள் திருநாள் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், தேசத்துக்கு வளங…
-
- 1 reply
- 983 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அமெரிக்காவின் நான்கு இராஜதந்திரிகளும்இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஏ லரோக்கோ, ஆபிரிக்கா, மத்தியகிழக்கு, தென் ஆசியா வர்த்தகத் திணைக்களத்திற்கான துணைச் செயலாளர் ஹொலி வினியார்ட், தென், மத்திய ஆசியாவிற்கான பிரதித் துணைச் செயலாளர் அலிஸா அய்ரெஸ் , அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை,ஜனநாயக மற்றும் தொழில் விவகார பிரதித் துணைச் செயலாளர் தோமஸ் ஓ மேலியா ஆகியோரே இலங்கை வருகின்றனர். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அரச, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களைச் சந்திப்பதுடன் சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடவுள…
-
- 6 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச தலைவராக செயற்பட்டு வந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடுகளில் நிதி சேகரித்து கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பீ. ஆனந்தராஜா என்பவரை கைதுசெய்ய சர்வதேச காவற்துறையினர் ஊடாக சிகப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆனந்தராஜாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நீதிமன்றத்தை புறக்கணித்து வருகிறார். இந்த நிலையில், சந்தேக நபர் இன்றி, விசாரணைகளை முன்னெடுப்பதா, இல்லையா என்பது குறித்து ஏப்ரல் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவ…
-
- 1 reply
- 656 views
-
-
ஐரோப்பா வாழ் ஈழத்தமிழ் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலாக 'நீதிக்காய் ஒன்றுபடுவோம்' எழுச்சி நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் ஒர் அங்கமாக லண்டனில் இருந்து ஜெனீவா வரைக்குமான நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம் தொடங்குகின்றது. இம்மாதம் 28 ஆம் திகதி லண்டனில் இருந்து தொடங்கும் இந்த நடைப்பயணம் ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத் தொடர் தொடங்கின்ற நாளான பெப்ரவரி 27 ஆம் திகதி ஜெனீவா ஐ.நா முன்றலில் நிறைவடையவுள்ளது. நடைப்பயணம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை பின்வருமாறு, கடந்த வருடம் மார்கழி மாதம், அமெரிக்காவின் 'பப்லோ' நகரில் நிறைவுபெற்றிருந்த நாடுகட…
-
- 1 reply
- 505 views
-
-
போர் முடிவடைந்து விட்டதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசாங்கம், தமிழீழ மண்ணில் அகலக் கால் பதிக்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. வட தமிழீழம் யாழ்ப்பாணம் மண்டைதீவில் பொதுமக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் பாரிய கடற்படை முகாம் தொடர்ந்தும் விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படை முகாமுக்கான தனிப்பட்ட பாதை அமைப்பு பணிகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.போருக்குப் பின்னர் மண்டைதீவு அம்மன் ஆலயத்தை அண்மித்ததாக ஆலயத்தின் தீர்த்தகேணியையும் உள்ளடக்கி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பாரியளவு கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் அமைந்துள்ள நிலம் முழுமையாக பொதுமக்களுக்குச் சொந்தமானவை. இந்த நிலையில் கடந…
-
- 1 reply
- 674 views
-
-
2011 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட தரநிலைகளில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழுவின் அறிக்கையின் படி மாவட்ட தரநிலைகளை சரிப்பார்க்கும் போது பிழைகள் ஏற்படவில்லை என்றும், இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை சீட்டுக்களுக்கு இறுதி செய்யும் போதே தவறு நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தவறு பரீட்சை திணைக்களத்தினாலேயே சிறிது காலத்தில் தீர்க்கப்பட்டதாகவும் அந்த விசாரணை குழு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், பரீட்சை திணைக்களத்தினால் அவ்வாறு சரி செய்யப்பட்டதன் பின்னர் வெளியிட்ட உத்தேச பெறுபேறுகளில் எந்த தவறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக…
-
- 0 replies
- 384 views
-
-
தென் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிஜி தீவின் நீதிபதியாக, இலங்கையின் தமிழரான பிரபாகரன் குமாரரட்ணம் நியமனம் பெற்றுள்ளார். பிஜியின் ஜனாதிபதி Ratu Epeli Nailatikau மற்றும் பிஜியின் பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டதாக “தெ பிஜி டைம்ஸ் ஒன்லைன்” செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பட்டதாரியான பிரபாகரன், இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஸ்ட அரச சட்டவாதியாகவும் கடமை புரிந்துள்ளார். அத்துடன் இலங்கையின் உயர் நீதிமன்றத்திலும் சட்டத்தரணியாக பிரபாகரன் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai...newsite/?p=3268
-
- 1 reply
- 954 views
-
-
கொழும்பு இன ஆய்வு என்ற அரசசார்பற்ற நிறுவனம் இலங்கையில் வாழும் பெருபாலான தமிழர்கள் ஈழம் என்ற தனிநாட்டுக்கு விரும்பம் தெரிவித்துள்ளதாக கூறி, கொழும்பு இன ஆய்வு என்ற அரசசார்பற்ற நிறுவனம் தயாரித்துள்ள அறிக்கை ஒன்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப்புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது. மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் உள்ள 60 வீதமான சிங்கள மக்கள் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வன்னி இராணுவ நடவடிக்கையை நிறுத்த ஐக்கிய நாடுகள் அமைதிப்படை அழைக்கப்பட வேண…
-
- 3 replies
- 1k views
-
-
இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல் என்ற கடப்பாட்டில் இருந்து முழுமையாகத் தவறிவிட்டது அரசின் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு. என குற்றஞ்சாட்டியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. சிறிலங்கா அரசின் பக்கசார்பான நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்துடைப்பு அறிக்கைக்கான கூட்டமைப்பின் கருத்து தொடர்பான பதில் அறிக்கை தற்போது தயாராகிவருகிறது. அந்த பதில் அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகிறது. 105 பக்கங்களைக் கொண்டதாக இந்தப் பதில் அறிக்கை கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நாளை பொங்கல் தினத்தன்று அல்லது மறுநாள் இந்த அறி…
-
- 0 replies
- 726 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் அடங்கியதாக பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர்களால் வெளியிடப்பட்டிருந்த முத்திரைகள் தொடர்பாக இலங்கை அரசு கடந்த சில நாட்களாக தமது மன ஆறுதலுக்காகவும் சிங்கள இனவாத கும்பல்களை திருப்த்திப்படுத்துவதற்காகவும் தமிழர்களை குழப்பும் விதமாகவும் சில பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு ஆங்கில ஊடகத்தில் பிரான்ஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை கொண்ட முத்திரையை வெளியிட்ட அமைப்பில் உள்ள ஒருவர் மீது பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு தமிழ் மக்களை குழப்ப சிங்கள அரசின் கீழ் இயங்கும் அந்த ஆங்கில ஊடகம் துணை போயுள்ளது. ஆனால் இதே செய்திய…
-
- 0 replies
- 459 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை விசாரிப்பதற்கு அனைத்துலக ரீதியிலான ஒரு சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கக் கோரியும் அது தொடர்பான விவாதம் ஒன்றை பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தக் கோரியும் இந்த இணைய விண்ணப்பம் (E-Campaign) ஆரம்பிக்கப்படுகின்றது. 100 000 கையெழுத்துக்களை பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்புவதன் மூலம் இது தொடர்பான விவாவத்தை பாராளுமன்றத்தில் நடாத்துவதற்குரிய முன்னெடுப்பை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும். எனவே தயவுசெய்து கீழ் காணும் இணைப்பில் அழுத்தி உங்கள் கையெழுத்தை இடுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதனை அனுப்பி இப் போராட்டம் வெற்றி பெற தயவுசெய்து உதவுங்கள். இணையத்திற்கான இணைப்பு..http://epetitions.direct.gov.uk/peti…
-
- 3 replies
- 934 views
-
-
எதிர்வரும் காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை !–மஹிந்தவின் தங்கை நிரூபமா இந்திய மண்ணில் இனி கால் வைக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சகோதரியும், பிரதி அமைச்சருமான நிரூபமா ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ காரணங்களுக்காக இந்தியாவிற்கு செல்லப் போவதில்லை. அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கணவருக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். இதன் காரணமாக இனிமேல் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு விஜயம் செய்கின்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ…
-
- 0 replies
- 607 views
-
-
கொழும்புக்குக் கூற வேண்டியது பற்றி கிருஷ்ணாவுக்கு நன்றாகத் தெரியும் உறுதியான நம்பிக்கையில் தமிழ்க் கூட்டமைப்பு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அரச தரப்பு சந்திப்புகளுக்கு அப்பால் எதிரணி கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேசவுள்ளார். நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பை வந்தடையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்றைய தினமே சந்திப்புகளை ஆரம்பிக்கவிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.எம். கிருஷ்ணா இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதுடன், …
-
- 0 replies
- 625 views
-
-
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களின் போது தென்ஆபிரிக்காவின் அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.குறிப்பாக தென் ஆபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின பரிந்துரைகளை கவனத்திற் கொண்டு இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்க முடியும்என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு நூறு ஆண்டுகள பூர்த்தியாவதனை முன்னிட்டு நடத்தப்பட்ட விசேட நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தென் ஆபிரிக்க தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்…
-
- 1 reply
- 524 views
-
-
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பிற்கு மிடையிலான பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாடுகளை அரசாங்கம்நடைமுறைப்படுத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரத்தயார் என கூட்டமை ப்பு எம்.பி. அரியநேத்திரன் தெரி வித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு இணக் கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதையடுத்து கருத்துத் தெரி வித்த அரிய நேத்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை யில் இருந்து விலகவில்லை. தொடர் ந்தும் பேச்சு நடத்தும் என தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றமை தொடர்பில் அவரிடம் வினவிய போது, தம…
-
- 0 replies
- 638 views
-