ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சிறிலங்காவின் செயலால் பிளவுபட்டிருக்கும் பொது நலவாய நாடுகள். இவ்வாறு கூறியவுடன் சிறிலங்காவிற்கு அவ்வளவு பலமா என யோசிக்ககூடும்.இருக்கலாம் ஏனென்றால் நடப்பு தசாப்தத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையினை செய்துவிட்டு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு போல தன்பாட்டில் குஜாலாக படுத்திருக்கின்றது சிறிலங்கா. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உட்பட பல சக்திவாய்ந்தவர்களினால் கூட அசைக்க முடியாத மன்னனாக உள்ளார் மஹிந்த. அண்மைக்காலமாக பொது நலவாய நாடுகளின் செயற்பாட்டிலும் மேற்குலகிற்கு எதிரான செயற்பாட்டினால் இந்த கட்டமைப்பிற்குள்ளும் பிளவு ஏற்படத்தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பொது நலவாய நாடுகளின் உறுப்பு நாடுகளில் நிலவுகின்ற மனித உரிமை மீறல்கள் தான். பொது நலவாய நாடுகளில் கனடா, அவுஸ…
-
- 0 replies
- 608 views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை குறித்த நிபுணர் ஜிம் மெக்டொனால்ட், வெள்ளை மாளிகையிடம் வலியுறுத்தியுள்ளார். ஜிம் மெக்டொனால்ட் சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் கடயைமாற்றி வருகின்றார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டுமெனக் கோரி மகஜர் ஒன்றையும் அவர் வெள்ளை மாளிகையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் மேற்கொண்…
-
- 0 replies
- 747 views
-
-
பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 44 பேரும் நேற்று முன்தினம் 50 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் ருக்கோன், லிவர்பூல் வீதி போன்ற இடங்களில் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய தேடுதலின் போது இலங்கையர்கள் பலர் சட்ட விரோதமாக விசா முடிவடைந்த நிலையில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானிய குடியுரிமை சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்…
-
- 0 replies
- 593 views
-
-
[sunday, 2011-10-02 12:02:46] யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப்பதிவு கெடுபிடியால் பொதுமக்கள் பலர் கதிகலங்கி உள்ளதுடன் பெரும் சிரமங்களையும் எதிர் நோக்கியுள்ளனர். எந்த விதமாக அறிவித்தலுமின்றி கிராம சேவையாளர் ஊடாக விநியோகிக்கப்படும் படிவங்களைப் பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் அதனை நிரப்பிக் கொடுப் பதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர். காரணமின்றி மேற்கொள்ளப்படும் இந்தப் பதிவுகள் தொடர்பாக பொதுமக்கள் கிராம சேவையாளரிடம் விளக்கம் கேட்கும் போது அவர்களும் உரிய முறையில் பதில் அளிப்பது கிடையாது. காரணம் கிராம சேவகர்களுக்கும் இதற்கான பூரண விளக்கம் உயர் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பதே ஆகும். விண்ணப்பப் படிவங்களை நிரப்பி கையளிக்கும் …
-
- 0 replies
- 636 views
-
-
Published By பெரியார்தளம் On Sunday, October 2nd 2011. Under பெரியார் திராவிடர் கழகம், முதன்மைச்செய்திகள் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 20 -ம் தேதி முதல் தொடர்ச்சியான “மரண தண்டனை ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டங்களை” பெரியார் திராவிட கழகம், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.இதன் அமைவாக இன்று (1 .10 .11 சனிக்கிழமை ) மாலை, கரூர் உழவர் சந்தை முன்பு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, பொது செயலாளர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விடுதலை ராசேந்திரன் “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னமும் புதிராக உள்…
-
- 0 replies
- 506 views
-
-
Oct 2, 2011 / பகுதி: செய்தி / ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் சிறீலங்கா காவல்துறைக்கு பயிற்சி! பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் பயிற்சி வழங்கப்பட்ட 26 சிறீலங்கா காவல்துறையினர் தமது பயிற்சிகளை நிறைவுசெய்துள்ளார்கள். வெகுஜன சேவையை விருத்தி செய்வதற்கான பயிற்சியொன்று பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியைபெற்ற காவற்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இந்த பயிற்சியினை முடித்த சிறீலங்கா காவல்துறையினர் நாட்டில் 9 மாகணாங்களில் செவைசெய்யவுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். http://www.pathivu.com/news/18645/57//d,article_full.aspx
-
- 0 replies
- 347 views
-
-
கொழும்புத் தேர்தலில் புலம்பெயர் புலிகளின் நிதியாம்! புரளிய கிளப்பும் சிவாச்சாரியார் Sunday, October 2, 2011, 9:24 ஏணியாக இருப்போம் என்று மார்தட்டும் வேட்பாளர்கள் கொழும்பு மாநகர சபை தேர்தலில் அப்பாவி சேரிப்புற வாக்குகளை அபகரிக்க சமய, சமூக நிறுவனங்களுக்கு, பெரும் நிதித்திட்டங்களுக்கு நிதி வழங்குவோம் என்ற வாக்குறுதியானது புலம்பெயர் புலிகளின் நிதியா? பாதுகாப்பு புலனாய் வுத்துறை மற்றும் அரசாங்கம், தேர்தல்கள் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச இந்துமத பீடத் தலைவர் “தேசபந்து” சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையும், மார்தட்டும் இனத்துவேஷ அரசியல் நடிப்பையும் காட்…
-
- 0 replies
- 794 views
-
-
இலங்கை போக இனி விசா தேவை... Sri Lanka to introduce online prior approval for visa 29 September 2011, 12:19 am Department of Government Information, Sri Lanka (Embedded image moved to file: pic31196.jpg)Sri Lankan Immigration authorities are to introduce a system called “Electronic Travel Authorization – ETA” in order to grant prior approval for visa via online for foreign nationals instead of the presently implemented ‘on arrival visa’ at the ports of entry.. The new system will be introduced on September 30, under the auspices of Defence Secretary Gotabhaya Rajapaksa with the participation of several distinguished guests includi…
-
- 36 replies
- 3k views
-
-
3 பேர் உயிரை காப்பாற்ற உண்ணாவிரதம்: பழ.நெடுமாறன் Saturday, October 1, 2011, 20:16 3 தமிழர்கள் உயிர்கள் காக்கப்பட வேண்டும். மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகமெங்கும் அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
-
- 1 reply
- 784 views
-
-
சர்வதேசத்தை திசைதிருப்ப போராளிகளின் விடுதலையை பயன்படுத்துகிறது கொழும்பு! - இராஜதந்திர வட்டாரம் தகவல் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் விடுதலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த 1,800 விடுதலைப் புலிகளின் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் நேற்று (30.09.11) விடுதலை செய்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ வாசல்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள் முன்னிலைய…
-
- 0 replies
- 679 views
-
-
ஜனாதிபதி மஹிந்த, சவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராகவும் இரண்டு வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை தொடங்குவதற்கு முன்னர்,; மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்திலுள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முதலாவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவி சார்பிலும், சுதந்திரபுரத்தில் படையினரின் ஆட்டிலறித் தாக்குதலில் கொல்லப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
[saturday, 2011-10-01 20:30:20] யாழ். குடா நாட்டில் 60,000 குடும்பங்களுக்கு இன்னமும் நிரந்தர வீடுகள் இல்லாமல் மர நிழல்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வாழ்வதாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் யாழின் வீடமைப்பு திட்டங்கள் எனும் விஷேட மாநாடு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்: யாழ். மக்கள் வீடுகள் இல்லாமல் மிக கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். உயர் பாதுகாப்பு பகுதிகளில் 25,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியின் மூலம் 13,350 வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிர…
-
- 1 reply
- 842 views
-
-
படித்துப் பெரியவனாகி பாட்டியைப் பராமரிக்க வேண்டும்! - போரின் போது பெற்றோர், சகோதரியை இழந்த சுரேஸின் விருப்பம் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது தனது வலது கையை இழந்துள்ள 12 வயதான சுரேஸ் எனும் சிறுவனின் உறுதி தளராத நம்பிக்கை குறித்து Alertnet எனும் இணையத்தளம் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இச்சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக இவ்விணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இந்த இணையத் தளத்தில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் இருந்த 69…
-
- 1 reply
- 625 views
-
-
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுவரும் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையர் என்ற ரீதியில் ஓரணியிலிரந்து அவற்றை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவுடன் தேசிய அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அநேகமாக அழைப்பு விடுக்கக் கூடும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்தார். தேசிய ரீதியாக அதிவிசேடமான பொது விடயமொன்றை மையப்படுத்திக்கொண்டு குறித்த ஒரு காலப்பகுதிக்கு …
-
- 1 reply
- 765 views
-
-
[saturday, 2011-10-01 19:42:05] ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம்பர் 27,28ஆம் நாட்களில் இலங்கைத்தீவில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களிற்கு, அனைத்துலக நாடுகளின் நடவடிக்கை குறித்தும் இலங்கைத் தீவில் இறுதி யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்தும் பிரான்சு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குகளில் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இராஜவரோதயம் சம்பந்தன், திரு…
-
- 0 replies
- 730 views
-
-
சவேந்திர சில்வா எதைக்கூறினாலும் தனது அனுமதி இன்றி யாரும் பிரசுரிக்க கூடாது என கோத்தபாய ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சவேந்திரசில்வா தனது வழக்கு தொடர்பில் தனக்கு சாதகமான செய்திகளை ஊடகங்களில் பிரசுரிக்குமாறும் கூடுதலான ஆதரவு தருமாறும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக பிரிவிற்கு கூறியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தினை கோத்தா பெரிதுபடுத்தவில்லை என்றும் அத்துடன் வழக்கு தொடர்பில் புதிய கருத்துக்கள் எதுவும் பிரசுரிக்கவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனிடையே ஷவேந்திர சில்வா தனது நீதிமன்ற அழைப்பாணையை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால் மஹிந்த இராஜபக்ஷ அழைப்பாணையினை பெறாது அமெரிக்காவில் இருந்து தப்பி ஓடி வந்துள்ளார். விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான க…
-
- 2 replies
- 1k views
-
-
உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக கனடா, இலங்கையை பலிக்கடவாக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து, இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு அரசியல் நலன்களை அடைவதற்காக இவ்வாறு சர்வதேச ரீதியில் பிரிதொரு நாட்டின் மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் அ…
-
- 1 reply
- 923 views
-
-
சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர்கள் : அதிர்ந்த சர்வேந்திர சில்வா (Video in ) Friday, September 30, 2011, 13:32 சமீபத்தில் அமெரிக்காவில் தங்கியுள்ள சர்வேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டமை யாவரும் அறிந்ததே. 58ம் படைக்கு தளபதியாக இவர் இருந்த கால கட்டத்தில் யுத்தக்குற்றங்கள் இழைத்தார் என இவர்மேல் வழக்கு தொடரப்பட்டு நஷ்ட ஈடும் கோரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு விடுத்த அழைப்பாணையின் பிரதியை சர்வேந்திர சில்வாவின் வீட்டிற்குச் சென்று சிலர் வழங்கியுள்ளனர். நியூயோர்க்கில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வசித்துவரும் அவர் வாசல்ஸ்தலதைத் தட்டி அங்கே இருந்த அவரது உதவியாளிடம் இந்த அழைப்பாணையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. இதனை இவர் இனி மறுக்க …
-
- 7 replies
- 1.7k views
-
-
இந்த நாடு எம் அனைவரினதும் நாடு - கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி 30 செப்டம்பர் 2011 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தாயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இருபது மாத காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 1800 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்கும் விசேட நிகழ்வு ஒன்று, அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண…
-
- 3 replies
- 821 views
-
-
[ சனிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2011, 03:13 GMT ] [ தா.அருணாசலம் ] அதிகரித்து வரும் அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க முன்னாள் போராளிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அலரிமாளிகையில் வைத்து நேற்று 1800 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவை இலக்கு வைத்து நடத்தப்பட்டதே என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளையோ, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு உள்ளிட்ட அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளையோ பார்வையிட அனுமதிக்காத சிறிலங்கா அரசாங…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெதர்லாந்தில் 5 தமிழருக்கான வழக்கு நேற்று இடம் பெற்றது இவ்வழக்கில் தமிழர் தரப்பில் வாதிட்ட பிரபல வழக்கறிஞர் திரு.விக்ரர் கொப்பே அவர்கள் மிக ஆணித்தரமான பல விடயங்கள் முன்வைத்து வாதாடியிருந்தார். மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்அமர்வில் பெருமளவில் தமிழ் மக்கள் வருகைதந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய விசாரணையின் போது பல முக்கிய விடயங்களை எடுத்துக்காட்டி வாதிட்ட திரு. விக்ரர் கொப்பே அவர்களால் தனது கட்சிக்காரர்கள் தரப்பில் சில முக்கியமான தீர்மானங்களை முன்வைப்பதற்கு 30 நிமிடங்கள் மேலதிகமாக வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் 3பேர் அடங்கிய நீதிபதிகளால் முற்றாக நிராகரிக்கப்பட்டது. இந்த முடிவை சற்றும் எதிர்பாராத திரு. விக்ரர் கொப்பே அவர்கள் தனது …
-
- 0 replies
- 1k views
-
-
பங்கு பரிவர்த்தனை உள்ளக செயற்பாட்டு முரண் காரணமாக அமெரிக்காவில் தண்டனையினை எதிர்கொள்ளவுள்ள ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு நிதி உதவி அளித்ததற்கான எந்தச் சான்றுகளும் இல்லை என எவ்.பி.ஐ. தனது விசாரணையில் கூறியுள்ளது.இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரபல கோடீஸ்வரரான அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக “வானிட்டி பெயார்” என்னும் சஞ்சிகை தகவல் வெளியிட்டிருந்தது தெரிந்ததே. http://www.tamilthai.com/?p=27488
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைப் பொலிஸாருக்குப் பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸாரால் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸாரால் பயிற்சியளிக்கப்பட்ட 26 இலங்கைப் பொலிஸாரும் தமது பயிற்சியைப் பூரணப்படுத்திய நிலையில் நேற்று வெளியேறினர். இது தொடர்பான வைபவம் நேற்று பொலிஸ்மா அதிபர் என் கே இளங்கக்கோனின் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரித்தானியாவின் இலங்கைககான உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீ கலந்து கொண்டார். குறிப்பிட்ட 26 இலங்கைப் பொலிஸாருக்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் நாட்டின் ஒன்பது மாகாணங்களில் முதல் கட்…
-
- 0 replies
- 648 views
-
-
கேள்விக் குறியாக மாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு. Pழளவநன டில: ழn ளுநி 29இ 2011 வெற்றி பெற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை மறப்பது ஒரு வழமையான அரசியல் பாரம்பரியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு விதிவிலக்கல்ல. கூட்டமைப்பின் அண்மைக்கால நகர்வுகள் அதன் கையாலாகாத் தன்மையை மாத்திரமல்ல ஈழத் தமிழர் நலனுக்கு எதிரான போக்கையும் காட்டுகின்றன. மே 1977ல் அமோக வெற்றி பெற்றவுடன் தமிழ் ஜக்கிய விடுதலை முன்னணி வாக்குறுதிகளை மறந்து வங்குறோட்டு நிலைக்குச் சென்று விட்டது. அதே பாணியில் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் முயற்சிகளில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்வுகளை மேற்கொள்கிறது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் சி.க சிற்றம்பலம் கூட்டமைப்பின…
-
- 0 replies
- 973 views
-
-
தேசிய கூட்டமைப்பின் மீது சந்தேகம் கொள்ள வேண்டாமாம் - சம்பந்தன் சொல்கின்றார் செப் 24இ 2011 குழவெ ளணைந: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று - தமிழ் பத்திரிகை ஆசிரியர்களிடம் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தவாரம் தமிழ் பத்திரிகைகளில் கூட்டமைப்பு தொடர்பாகவும் அவர்கள் அரசுடன் நடத்தும் பேச்சுக்கள் தொடர்பாகவும் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்தே - தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் முகமாக இரா சம்பந்தன் தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்தார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வு திட்டம் ஒன்றிற்கு வரலாம் என தாம் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு த…
-
- 0 replies
- 784 views
-