ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
தலைமறைவுப் போராளி தலை நிமிர்வான் நாளை-அவன் விடியலையே மீட்காமல் விடியாது எங்கள் காலை பொங்குதமிழ் 2011 வெல்வது உறுதி இசைத்தட்டில் வரலாறு சொல்லும் பாடல்களும் அவை உருவாக்கம் பெற்ற விதமும் இணைப்பு. http://youtu.be/fA3sVfu32lM http://youtu.be/-F1F1HapyIo http://youtu.be/5vfG3bG1WEU http://youtu.be/ApBOI6ZdLA8 http://youtu.be/_kkIQ6muFTE http://youtu.be/D82GUvbpIN8 http://youtu.be/RSyMCTZ5sac http://www.eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்திய கடற்படையினர் கலந்துக்கொள்ளும் விசேட போர் பயிற்சிகள் இன்று 18 செப்டம்பர் 2011 திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பம் : இந்திய கடற்படையினர் கலந்துக்கொள்ளும் விசேட போர் பயிற்சிகள் இன்று திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகிறது. சிலிநெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்படையின் போர் பயிற்சிகள் 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இந்த போர் பயிற்சியானது இலங்கையின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் பாரியளவிலான போர் பயிற்சி என இந்திய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர், டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு சொந்தமான 4 கப்பல்கள் இந்த போர் பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ளன.இலங்கையுடன் ராஜதந…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு கொடுக்க இருந்த ஆடு மாடுகளை மேர்வின் அடாத்தாக கடத்திக்கொண்டு சென்றார். இதனைப்பொலிசார் வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்தனர். அதன் பின்னர் பத்திரகாளி அம்மன் சாபம் இட்டாலும் என்பதற்காக புத்த பகவானிடம் போய் முறையிட்ட மேர்வினின் ஆட்கள் இப்போ புத்தருக்கு 1500 போதி பூசை செய்கின்றார்களாம். . இது குறித்து தெரியவருவதாவது; . மேர்வின் சில்வாவுக்கு ஆசிர்வாதம் கோரி நாடு முழுவதும் 1500 போதி பூஜைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர் அவரது அடியாட்கள். முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெறவிருந்த மிருக பலிபூஜையை தடுப்பதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா தலையிட்டதால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சாபங்களை நீக்குவதற்காக இத்தகைய போதி பூஜைகளுக்…
-
- 1 reply
- 935 views
-
-
[sunday, 2011-09-18 11:06:47] இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் அரசுக்குத் தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த இணங்கியமை தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ். நகரில் நேற்றையதினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகம் என்பவற்றைக் கூறித்தான் கூட்டமைப்பினர் வாக்குகளைப் பெற்றனர். அதன் பின்னர் இப்போது அரசுடன் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண இணங்குவது என்பது துரோகம…
-
- 1 reply
- 513 views
-
-
இது நாம் அமைதியாக இருக்கும் நேரம் இல்லை. சுவிஸ் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டதொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு பலம் சேர்க்கும் முகமாக ஒன்று படுவோம். நாம் எம் இனம் பட்ட துன்பங்களை மறந்துவிட்டோமா? குழந்தைகள், இளையோர்கள், கர்ப்பிணி பெண்கள் என கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டீர்களா? இன்னமும் சித்திரவதையை அனுபவித்து கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டீர்களா? அன்றே சொன்னோம் சர்வதேசம் கேட்க்கவில்லை, இன்று அவர்கள் கேட்க்கும் தருனத்தில் நாம் அமைதி காப்பது சரியா? நாம் எமது மண்ணிற்காகவும், உறவுகளுக்காகவும் செய்யவேண்டிய கடமைகள் உள்ளன. எமது காலத்தின் கடமை உணர்த்து பொங்குதமிழராய் வாரீர்...19.09.2011 அன்று முருகதாசன் திட…
-
- 0 replies
- 488 views
-
-
வடமேற்கு லண்டன் 075 5033 6408 கீழ்க்காணும் முகவரிகளில் இருந்து மாலை 6.00 மணிக்கு Colindale Costcutter & Tirupati / Royal Food & wine Lady Margret Road Luxmy Cash & Carry / Lady Margret Supper Store, Southall The Broadway Tamilini Cash & Carry, Hounslow Kayan News Agent Alperton Ealing Road Vahizan Disc World Vimco 293 Whippendell Road Watford தென்மேற்கு லண்டன் 075 5033 6414 கீழ்க்காணும் முகவரிகளில் இருந்து மாலை 6.00 மணிக்கு Best food Supper market Croydon Vanniyan New Malden Mitcham Halfords வடகிழக்கு லண்டன் 075 3518 6315 கீழ்க்காணும் முகவரிகளில் இருந்து மாலை 6.00 மணிக்கு Walthamstow Sri Katpagavin…
-
- 0 replies
- 638 views
-
-
[sunday, 2011-09-18 11:27:57] முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம், புலிகளைத் தோற்கடித்து விட்டோம். இனி இந்த நாட்டில் யுத்தம் இல்லை என்று கூறிக் கொண்ட சிறிலங்கா அரசானது பாதுகாப்புக்கான நிதியையும் தற்போது அதிகரித்துள்ளமை தெரிந்ததே. அவ்வாறு பாதுகாப்புக்கு என ஒதுக்கப்பட்ட நிதியானது இன்று எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பதற்கு இந்தக் காட்சிகள் சாட்சியம் கூறுகின்றன என சிங்கள நாளேடு ஒன்று கடற்படையினரது கழியாட்ட நிகழ்வினை மிகக்கடுமையாக விமர்ச்சித்துள்ளது. கீழே நீங்கள் காண்பது விமானப் படை அதிகாரிகள் குடும்பத்தின் களியாட்ட விழாக் காட்சியைத்தான் இவையனைத்துச் செலவுகளையும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சே பொறுப்பேற்றிருந்தது. இவ்வாறு வ…
-
- 0 replies
- 959 views
-
-
ஜனாதிபதி நியூயோர்க் விஜயம் செவ்வாய்க்கிழமை உரையாற்றுவார் _ வீரகேசரி இணையம் 9/18/2011 10:06:00 AM ஐக்கிய நாடுகள் சபையின் 66 பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்தவுள்ளார் நியூயோர்க் செல்லும், ஜனாதிபதி அங்கு, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளிவுறவு அமைச்சர்கள் உட்பட்ட பலரை சந்திக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33866
-
- 1 reply
- 781 views
- 1 follower
-
-
சாவகச்சேரி, கல்வயலில் நடந்தது என்ன? கிறீஸ் பூதம் கதை சொல்லும் இராணுவம் Sunday, September 18, 2011, 10:17 எங்கள் முகாம் பகுதியை அண்டி அடர்ந்த பற்றைக்காடு. அங்கே மறைந்து ஒளிந்திருந் தான் நிர்வாணக் கோலத்தில் இளைஞன் ஒருவன்.அவ்வழியே வந்த படையினரைக் கண்டு பதுங்கியிருந்த இளைஞன் தலைதெறிக்க ஓடினான். இராணுவமுகாம் பகுதியை நோக்கியே அவன் ஓடினான். இவ்வாறு கிறீஸ் பூதம் பாணியில் நேற்றைய தினம் காலை சாவகச்சேரி, கல்வயல் பகுதியிலுள்ள 11 ஆவது இராணுவத் தளத்துக்கு அருகில் நடந்த சம்பவத்தை விவரித்தார் அதன் பொறுப்பதிகாரி கேணல் ஹேமரத்ன.இந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர் எமது படையினர். இளைஞனின் பெயர் இராமையா காண்டீபன் (வயது 26). சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரை நாம் சாவகச்ச…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
அடுத்த வருட மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அறிக்கையும் ஐ.நா. அறிக்கையும் சமர்பிக்குமாறு கோரிக்கை Sunday, September 18, 2011, 10:30 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள 19வது மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும்,…ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையை 16 சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவராக உள்ள உருகுவேயின் Laura Dupuy Lasserre விடம் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் 16 அரச சார்பற்ற அமைப்புகளும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளன. 20…
-
- 0 replies
- 758 views
- 1 follower
-
-
மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா, இலங்கைக்கு காலக்கெடு 18 செப்டம்பர் 2011 மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் சாதகமான அபிவிருத்தியை எட்ட வேண்டுமென பிரித்தானியா அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு காத்திரமான தீர்வுகளை இலங்கை முன்வைக்க வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசாங்கம் உரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தவறினால் ஏனைய உலக நாடுகள…
-
- 0 replies
- 655 views
- 1 follower
-
-
"ஆழ ஊடுருவும் படையணிகளை பாதுகாப்பு வலயத்தினுள் நான் அனுப்பினோம்" அமெரிக்க அதிகாரியிடம் ரகசியத்தைப் போட்டுடைத்த மகிந்த ! வன்னியில் நடைபெற்ற இனவழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் , அங்கிருந்த பாதுகாப்பு வலயங்கள்மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அதே நேரம், புலிகளின் மண் அனணையை உடைத்து மக்களை வெளியேறச் செய்யும் நோக்குடன் பாதுகாப்பு வலயங்களுக்குள் தமது நீண்டதூர உளவு ரோந்து அணிகளை (ஆழ ஊடுருவும் படையணி) தாம் அனுப்பியதாக இலங்கையின் சனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமாகிய மகிந்த தன்னைச் சந்தித்த முக்கிய அமெரிக்க அதிகாரியிடம் கூறியிருக்கிறான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்து, விடுதலைப் ப…
-
- 2 replies
- 2.3k views
-
-
இன்று தமிழ்மக்களின் தலைவர்கள் என்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு சுயநிர்ணய உரிமை பற்றி தளம்பல்கள் இருக்கின்றது. சுயநிர்ணய உரிமைபற்றி பேசவேண்டிய இடங்களில் சிலர் மௌனம் காக்கின்றார்கள். சுயநிர்ணய உரிமை, தாயகம், தேசியம் என்ற கோட்பாடுகளுக்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் பேச்சுவார்த்தை மேடைகளில் தேசிய அபிலாசைகளை மனம்திறந்து பேச சில தலைவர்கள் வெட்கப்படுகின்றார்கள். மதில்மேல் பூனையாக இருக்கின்றார்கள். இவ்வாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்காக இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியுடைய ஒரு தொகுதி நூல்களை பிரதேச சபையிடம் சம்பிரதாய முறையில் கையளிக்…
-
- 0 replies
- 900 views
-
-
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான வேலைத்திட்டம் இந்தியாவால் தயாரிக்கப்பட்டுவிட்டது? 17 செப்டம்பர் 2011 விமல் அரசாங்கத்தில் இருந்து விலகுவாரா? இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கும் முன்னார், அமைச்சர் விமல் வீரவங்ச அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்காக இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் 16 வேட்பாளர்களின் தோல்வியை காரணமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசியல் தீர்வானது தமக்கு சாதமாக முறையில் அமைந்திருந்தால், தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிப்பது எனவும் வீரவங்ச தீர்மானித்துள்ளார். அரசாங்கத்தின் அதிகார பரவலாக்கல் தொடர்பான வேலைத்திட்டம் இந்தி…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் இராஜ தந்திரியான பாலிகக்கார ஒருமுறை கூறி இருக்கின்றார் வெளியார் தீர்வுகள் தவிர்க்க முடியதனவாக “external prescriptions become inevitable” போகலாம் என்று. இந்த பீதி மஹிந்த இராஜபக்ஷவிற்கும் உண்டு.. அதனால்தான் மஹிந்த இந்த முறை ரொபேர்ட் பிளேக்கினை சந்தித்ததும், பிளேக்கிற்கு எதிர்ப்பு காட்டாமல் விட்டதும் ஆகும் என்றாலும் பிளேக்கினை புறக்கணிக்கும் வேலையினை இந்த முறை தனது வளர்ப்பு நாய்களான டக்ளஸ் மற்றும் கருணா ஊடாக தமிழ் பிராண்ட் போட்டு செய்து முடித்துள்ளார். இது பிளேக்கிற்கு புரியாத விடயம் அல்ல. . அடுத்து 40 நாட்களுக்கும் முன்னர் கூட்டமைப்புடன் பேச முடியாது அவர்கள் தமிழர்களின் பிரதி நிதிகள் என ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய மஹிந்த இப்போ அலரி மாளிகையில்…
-
- 1 reply
- 910 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
குற்றச்சாட்டு Posted by சோபிதா on 17/09/2011 இலங்கை விவகாரங்களில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை (நவநீதம்பிள்ளை) ஒருதலைப்பட்சமாக தமிழர் தரப்புக்குச் சாதகமாக நடந்துகொள்கிறார் என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் அரசு, இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீமூனுக்கு எழுத்து மூலம் முறையிடுவது என்று தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டம் ஜெனிவாவில் நடந்தபோது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை, இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி இருந்தார். இது அரசுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.நா. பொதுச் செயலாளரால் மனித உரிமைகள் சபைக்கு நி…
-
- 1 reply
- 671 views
-
-
யாழ். சாவகச்சேரியில் மர்ம மனிதன் எனக் கூறி சிறிலங்கா இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் பிடிகடகப்பட்டு சாவகச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆயினும் இச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் நாடகமாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பலாலி படைத்தலைமையக ஊடகப்பிரிவினர் இன்று குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்க்கு அழைத்துச் சென்று விளக்கமளித்தனர். இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இராணுவத்தினர் தெரிவித்ததாவது. சாவகச்சேரி பருத்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்திக்கு சுமார் 500மீற்றர் தொலைவிலுள்ள 11வது படையணி முகாமிற்க்கு அருகில் பற்றைக் காடு நிறைந்த பகுதி ஒன்றில் இன்று காலை 8 மணியளவில் இளைஞன் ஒரு…
-
- 0 replies
- 831 views
-
-
இலங்கையின் வன்னியில் இலங்கைப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இறுதிப்போர், 21 ஆம் நூற்றாண்டின் படுகொலை நிறைந்த இரகசிய போராகும். இந்த கருத்தை சிட்னி தே மோனிங் ஹெரல்ட் செய்திதாளில் Antony Loewenstein என்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையின்படி, இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளால் கேடயங்களாக வைக்கப்பட்ட பொதுமக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தியதாக செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்தநிலையில் செய்தியாளர்கள்,மற்றும் மனிதாபிமான பணியாளர்கள்; மற்றும் சுதந்திரமான பார்வையாளர்கள் எவரும் பிரவேசிக்காத நிலையில் 21 ஆம் நூற்றாண்டின் பாரிய இரகசிய படுகொலை போராக வன்னிப்போரை செய்தியாளர் Antony Loewenstein கு…
-
- 0 replies
- 766 views
-
-
சர்வதேச விசாரணைக்கு எதிரான துருப்புச் சீட்டாக நல்லிணக்க ஆணைக்குழுவை அரசு பயன்படுத்துகிறது: மன்னிப்புச் சபை போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணைக்கு எதிரான பிரசாரத்திற்கான துருப்புச் சீட்டாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏறழத்தாழ இரு வருடங்களாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆணைக்குழு அடிப்படையில் குறைபாடுகளைக் கொண்டது எனவும் அட்டூழியக்காரர்களுக்கு தொடர்பான பொறுப்புடைமையை அது வழங்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் இணையத்தளத்தில் அச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஸரிபி, இது தொடர்பாக கூறுகையில…
-
- 0 replies
- 483 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று அவசரமாக ஜெனிவா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜெனிவா சென்றிருந்த சிறிலங்கா அரசின் உயர் மட்டக்குழு நேற்று கொழும்பு திரும்பியுள்ள நிலையிலேயே ஜி.எல்.பீரிஸ் ஜெனிவா சென்றுள்ளார். ஜெனிவா மாநாட்டுக்காக சிறிலங்கா அரசாங்கம், அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, மற்றும் நாடாளுமன்ற உறப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்திருந்தது. அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டதால், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்…
-
- 1 reply
- 921 views
-
-
யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலிய பாராளுமன்றில் வட்டமேசை மாநாடு. Saturday, September 17, 2011, 10:38 இலங்கைமீது யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வட்டமேசை மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென அறியக்கிடைக்கிறது. எதிர்வரும் 20ம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை வலியுறுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் தொடர்பான விவரங்கள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ், சர்…
-
- 2 replies
- 837 views
- 1 follower
-
-
இந்தியா எம்மை காப்பாற்றவேண்டும்; விலாங்கு மீன் போல் இந்தியா செயற்படுமாக இருந்தால் இந்தியாவுடனான உறவில் கடும் நெருக்கடி ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளது ஜாதிக ஹெல உறுமைய. . ஜாதிக ஹெல உறுமைய மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் உள்ள கட்சி. மஹிந்தவின் சில கொள்கைகளை இவர்கள்தான் கூறுவார்கள் ஏனென்றால் மஹிந்த நேரடியாக கூறினால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதேயாகும். . தற்போதைய அழுத்தங்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது. உள் நோக்கங்களுடன் செயற்பட்டு நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு துணை போனால் இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் முறிக்கப்படும் என எச்சரித்துள்லனர் இந்த மஹிந்தவின் எடுபிடிகலான ஹெல உறுமை…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்! Published on September 17, 2011-1:57 am முதல்முறையாக மொஸ்கோவுக்கான விமானப் பயணத்தை ஸ்ரீ லங்கன் எயார்வேஸ் விமான சேவை இன்று (17) ஆரம்பிக்கிறது. இதன்படி கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கும் மொஸ்கோவின் டோம்டெடோவோ விமான நிலையத்துக்கும் இடையே வாராந்தம் இரு சேவைகள் இடம்பெறும். ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூஎல் 531 விமானம் இன்று காலை 7.20 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சரித்திரபூர்வமான முதலாவது மொஸ்கோ பயணத்தை ஆரம்பிக்கிறது. இன்றைய பயணத்தில் கலந்துகொள்ளும் பிரமுகர்கள் பட்டியலில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதுவர் விலாடிமிர் பி. மிக்யாலோவ், திருமதி மிக்யாலோவ், ஸ்ரீ லங்கன் விமான சேவ…
-
- 1 reply
- 506 views
- 1 follower
-
-
இலங்கைமீது யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வட்டமேசை மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென அறியக்கிடைக்கிறது. எதிர்வரும் 20ம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை வலியுறுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் தொடர்பான விவரங்கள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ், சர்வதேச ஜூரிகள் சபையின் தலைவர் ஜோன் டோவ்ட், நியூ சௌத் வெல்சின் முன்னாள் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். h…
-
- 0 replies
- 836 views
-