Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல்வாதிகளில் யாரின் கதையை நம்புவது யாரை நம்பககூடாது என்று மக்கள் திண்டாடும் வகையிலேயே அநேகமான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரனும் அவரது பெறா மகனான கிழக்கு மாகாண முதலமைச்சரும் ரி.எம்.வி.பி கட்சியின் தலைவருமான ஒட்டுக்குழு பிள்ளையானும் ஆளுக்கு ஆள் பிடித்து சாப்பிடுவது போல் மேடைகளில் முழங்குவார்கள். அது மட்டுமா ஒருவொருக்கொருவர் கொலை மிரட்டல் விட்டதாக ஊடகங்களுக்கும் செய்தி சொல்லுவார்கள். மக்களும் இவர்கள் சொந்தத்துக்கப்பால் அரசியலிலும் அவர்களது கொள்கையிலும் உறுதியாக உள்ளார்கள் என்று நம்பி விடுவார்கள். ஆனால் இவர்கள் வெளியில் ஒருவருக்கொருவர் உறைப்பாக காட்ட…

  2. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என்று கைது செய்யப்பட்ட ஐந்து தமிழர்களை ஹேக்கில் அமைந்துள்ள போர்க்குற்ற விசாரணை நீதிமன்றில் முன் நிறுத்தபப்டுவர் என தகவல்கள் கசிந்துள்ளன. விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து தமிழர்களுக்கும் எதிரான வழக்கு நாளை நடைபெறவுள்ளது. . ஒப்ரேஷன் கொனிக் என்ற திட்டத்தின் கீழ் நெதர்லாந்து பொலிஸார் ஐந்து தமிழர்கர்களையும் கைது செய்தனர். இவை உள் நாட்டு சட்டதிட்டங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டிய நிலையில் குறித்த ஐவரும் நாளைய தினம் தெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள போரக்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் முன் நிறுத்தபப்டுவார்கள் என அறிய முடிகின்றது. . இந்த ஐவருள் ஒருவரான ஆர்.ஸ்ரீரங்கம் என்பவரின் சட்டத்தரணி விக்டர் கோப்,…

  3. தமிழீழ விடுதலைப் புலிகளை, கடாபிக்கு எதிரான லிபிய போராளிகளுக்கு ஒப்பிட்டு, நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றதில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான 5 இலங்கையர்களின் வழக்கு நேற்றைய தினம் ஹேக் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பிரதிவாதிகள் தரப்பில் வாதிட்ட பிரபல சட்டத்தரணி, தமது தரப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே நிதி திரட்டியதாக சுட்டிக்காட்டினார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும், அவர்கள் கடாபிக்கு எதிரான போராட்டக் குழுவுக்கு ஒப்பான விடுதலைப் போராளிகள் எனவும் தெரிவித்தார். எதிர்வரும் மூன்று வாரங்களில் விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளா அல்லது …

  4. [ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2011, 00:08 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் குறித்து சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அது சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, நேற்றுமாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார். வடக்கில் துணை ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஈபிடிபி பலமான ஆயுதக் குழுவை வைத்துள்ளதாகவும் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார். அதற்க…

    • 3 replies
    • 1.4k views
  5. இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் இலங்கைக்கு குழப்பம்! Friday, September 16, 2011, 11:59 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்துவருகிறது. ஜெனிவாவிலோ அல்லது புதுடில்லியிலோ இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு ஐ.நாவில் விவாதத்துக்கு வரும் போது வெளியிடப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai.com/?p=26771

  6. சிறிலங்காவில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். . இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதுஷிகா, தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். . அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோளாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். . மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்…

  7. அரசுடனான பேச்சுகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியம் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது. எவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு இணங்கினோம் என்பதை விரைவில் அறியத்தருவோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச்செயலர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவந்த பேச்சுகள் அண்மையில் முறிவடைந்தன. 10ஆம் சுற்றுப் பேச்சுகள் கடந்த மாதம் 04ஆம் திகதி நடைபெற்றன. இதன் போது இதுவரை நடந்து முடிந்த பேச்சுகளில் எந்தவித முன்னேற்றமுமில்லை. எனவே, நாம் முன்வைக்கும் மூன்று கோரிக்கைகளுக்கு அரசு இரண்டு வாரங்…

  8. [ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2011, 07:11 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதாரத் தடையை அமுல்ப்படுத்தக் கோரும் தனி உறுப்பினர் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கான அனுமதியை புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் மறுத்ததனால் வியாழனன்று அ.இ.அ.தி.மு.க புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளது. சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதாரத் தடையை இந்திய மத்திய அரசு அறிவிப்பதனைத் துரிதப்படுதும் நோக்கில் அ.இ.அ.தி.மு.க வின் புதுச்சேரி சட்டசபைத் தலைவரான அன்பழகன் வழங்கிய அறிவிப்பிற்கு பதிலளிக்காமல் சபாநாயகர் வேறு விடயங்கள் குறித்து விளங்கள் கோரினார். "இது தெளிவுபடுத்தப்படாவிட்டால் கோரிக்கைகள் தொடர்பாகத் தான் தொடர்ந்தும் கருத்துக் கூ…

  9. [Friday, 2011-09-16 10:37:34] இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் பொது நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐநா நிபுணர் குழுவினர் வெளியிட்ட அறிக்கையானது ( தருஸுமன் அறிக்கை ) சட்டவிரோதமாக ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்பட்டதாக வலய நாடுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை கவுன்ஸிலின் 18வது கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாது அவசரமாக குறித்த அறிக்கை மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்பட்டமை குறித்து வலய நாடுகள் கொள்கை அடிப்படையில் ஒன்றுசேர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். தருஸுமன் அறிக்கையை தயாரிக்க தகவல் பெறப்பட்ட விதம் குறித்து இதுவரை ஆ…

  10. இன்னமும் யுத்த சூழலில் தான் நாம் இருக்கின்றோம். இராணுவத்தின் அதிகரித்த பிரச்சன்னத்தை நான் அடியோடு வெறுக்கின்றேன். ஏன் மக்களும்தான் வெறுக்கின்றார்கள். இவ்வாறு கூறியுள்ளார் மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசேப்பு.. அவசர கால சட்டம் நீக்கப்பட்டது என்பது நல்லது தான் ஆனால் வடக்கு கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னம் அதைவிட கொடியது. இராணுவத்தின் ரோந்துப்பணிகளால் பெண்களின் பாதுகாப்பு எப்போதுமே கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் எப்போதுமே பீதியில் வாழ்கின்றார்கள்.. யுத்தம் முடிந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்த பின்னர் கிட்டத்தட்ட 6000 கைதுகள் வடக்கு கிழக்கில் நடந்துள்ளன. இது யுத்தகாலத்தின் தொகையினை விட அதிகமாகும். இராணுவத்தினரை மீழப்பெறவேண்டும் இல்லையேல் யுத்த சூழலில் பீதியுடன் தான் மக்கள்…

  11. மன்னார் ஊர்வலத்தை புலனாய்வுத்துறை பதிவு; அச்சத்தில் கிராம மக்கள் Friday, September 16, 2011, 11:52 மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்களால் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற் கொள்ளப்பட்ட மௌன ஊர்வலத்தைப் புலனாய்வுத் துறையினர் படம் பிடித்துள்ளதால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரைக் கூட மிச்சம் விடாது டிஜிற்றல் கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புலனாய்வுத் துறையினர் மக்களோடு மக்களாகக் கலந்து கொண்டு சகல விடயங்களையும் பதிவு செய்துள்ளனர்.இதனால் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள…

  12. திருமலை பெண்கள் கல்லூரி வளாகத்தில் மனித எச்சங்கள்; விசாரணைகள் ஆரம்பம் Friday, September 16, 2011, 11:54 திருகோணமலை நகரிலுள்ள பிரபல மகளிர் பாடசாலையான மெதடிஸ்த கல்லூரி வளாகத்தில் நேற்றுமாலை மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த மனித எச்சங்கள் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் புதையுண்டிருக்கலாம் என்று திருகோணமலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.டி.படுகே தெரிவித்துள்ளார்.குறித்த பெண்கள் கல்லூரியின் வளாகத்தில், குழி ஒன்று தோண்டிக்கொண்டிருந்த வேளையில் மேற்படி மனித எச்சங்கள் கண்டுபிடிக் கப்பட்டன.இதனையடுத்து குறித்த இடத்துக்கு வருகைதந்த திருகோணமலை நீதிமன்ற நீதிவான் யூ.எல்.ஏ. அஸ்வர், மீட்கப்பட்ட எச்சங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு கண்டி, பேராதனை…

  13. வாய்ப்புற்று நோயால் இலங்கையில் நாளாந்தம் மூன்று பேர் பலி! Published on September 16, 2011-7:49 am வாய்ப்புற்று நோய் காரணமாக இலங்கையில் தின மும் சுமார் மூவர் உயிரிழப் பதாக தேசிய புற்றுநோய் கட் டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத் தின் பல்வைத்திய மருத்துவ நிபுணர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். வாய்ச் சுகாதாரம் தொடர்பான சர்வதேச தினத்தையொட்டிய செய்தியாளர் மாநாட்டில் விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுகாதாரதுறை பதிலமைச்சர் லலித் திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் அமரசிங்க மேலும் கூறுகையில், வாய்ப்புற்று நோய்க்கு வெற்றிலை மெல்லுதலே மூல காரணியாக உள்ளது. ஆயினும் இலங்கையில் 35 சதவீதமானோர் வெ…

  14. டிசம்பர் 15இல் பொன்சேகா தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு! Published on September 16, 2011-3:42 am இரண்டாவது இராணுவ நிதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சிறைத்தண்டனை ஆகியவற்றிற்கு எதிராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நிறைவடைந்தது. வழக்கின் தீர்ப்பு எதிரவரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என மேன்முறையீட்டு நிதிமன்றம் குறிப்பிடுடள்ளது.ஜனாதிபதியின் நடவடிக்கைக்குி எதிராகவன்றி இராணுவ நிதிமன்றத்தினால் வழங்கப்பட்ட சிறைத்ததண்டனையை மாற்றுமாறு போரியே மேன்முறையீட்டு நீதிமனறத்திடம் வலியுறுத்தியதாக சரத்பொன்சேகா சார்பில் ஆஜரான ஜனாதிபித சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டார். அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரங…

  15. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை 16 செப்டம்பர் 2011 தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று ஆரம்பிக்கப்படும் பேச்சுவார்த்தையின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஏற்கெனவே கையளித்திருந்த தீர்வுத் திட்ட ஆலோசனைகள், சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா ஆகியோருடைய காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்ட ஆலோசனைகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் ஆலோசனைகள் என்பவற்றை ஆய்வுக்கெடுத்து அதனூடாக ஒரு தீர்வைக்காணலாம் என்ற புரிந்துணர்வின…

  16. பிளேக்கிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கினார் டக்ளஸ் [ புதன்கிழமை, 14 செப்ரெம்பர் 2011, 11:14 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கில் துணை ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிளேக், துணை ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள…

  17. தாயகத்தில் தொடரும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து ஐ.நா.சபை முன்றலில் முற்றுகையிடப் போகும் பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு அனைத்து ஜரோப்பிய தமிழ் மக்களையும் அணி அணியாக திரளுமாறு தமிழக தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,திரைப்பட நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்தியராஜ் அவர்கள் மற்றும் மே 17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்களும் விடுத்துள்ள அழைப்பு செய்தி தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல தலைவர்களினதும் தமிழ் உணர்வாளர்களினதும் அழைப்பு செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அவை தொடர்ச்சியாக இணைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். …

  18. அமெரிக்காவின் Massachusetts State Houseசில் 'சிறிலங்காவின் கொலைக்களம்' சனல்-4 ஆவணப்படம் திரையிடப்படுகின்றது ! [Wednesday, 2011-09-14 10:43:59] சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனக்கருவறுப்பின் சாட்சியமாக விளங்கியுள்ள, சிறிலங்காவின் கொலைக்களம் எனும் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படும் அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சியாளர் மாளிகையில் திரையிடப்படுகின்றது. Amnesty International ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கெடுப்புடன் செப்ரெம்பர் 14 புதன்கிழமை திரையிடப்படவுள்ள இவ்ஆவணப்படம் குறித்தான முன்னறிவிப்பாக மாநிலத்தின் முக்கிய ஊடகங்களில் விவரம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. …

  19. கர்ணனின் உயிர் பிரிந்தது ஏன்? செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணன் போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கின்றான். அவனின் உடல் முழுவதும் அம்புகளின் துளை. சில அம்புகள் அவன் மீது அன்பு கொண்டவை போல அகல மனமின்றி இருந்தன. போர்க் களத்தில் கிடக்கின்ற கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த கொடை -தர்மம் உயிரைக் காப்பாற்றுகிறது. கர்ணனைக் கொல்லாமல் எதுவும் சாத்திய மாகாது என்பதை உணர்ந்த கண்ணன் திட்டம் தீட்டுகின்றான். போர்க் களத்தில் ஆவி அகத்தோ, புறத்தோ என்று புரியாமல் கிடக்கின்ற கர்ணனிடம் நீ செய்த புண்ணியத்தைத் தா என்று மாயக் கண்ணன் கேட்க, கர்ணன் தன் உடலைத் தைத்துக் கொண்டிருக்கும் அம்பை எடுத்து அதன் வழியே பாயும் குருதியால் தன் புண்ணியத்தை கண்ணனிடம் கொடுக்க, அந்தக் கணமே கர்ணனின் உயிர் பிரிக…

  20. [Thursday, 2011-09-15 20:40:44] அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஒரு மோசடிக்காரர் என குற்றஞ்சாட்டியுள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. யாழில் ஈ.பி.டி.பி ஆயுதக் குழு இயங்கி வருவது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் என பிளேக் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். பிளேக் குறிப்பிட்ட சில நாட்களாக உள்நோக்கத்துடனேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் ஈ.பி.டி.பி பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அவ்வகையில் உள்நோக்கம் கொண்டதுடன் உண்மைக்குப் புறம்பபானது எனத் தெரிவித்த அமைச்சர்பிளேக் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு மோசடி…

  21. நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இளம் பெண்யாழ் ஆனைக்கோட்டைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பெரிய குளம் கண்டாவளையை சேர்ந்தவரும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாககொண்டவரான 19 அகவையுடைய பார்த்தீபன் விசாலினி என்பவரே உடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த பெண்ணின் கணவர் வெளியில் சென்றிருந்த வேளை நேற்று முன்னாள் பிற்பகல் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளர். பெண்ணின் கையில் கீறல் காயங்கள் இருப்பதால் இவரது மரணத்தில் ஐயம் ஏற்பட்டுள்ளது. http://www.tamilthai.com/?p=26745

  22. சர்வதேச விசாரணை உடன் தேவை இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப் பட்டுள்ள படி சர்வதேச விசாரணைக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இறுதிப் போரின் போது 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமை போர்க்குற்றம் என்று அறிக்கை கூறுகின்றமையால் அது குறித்து முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமைகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். சர்வ தேச விசாரணைக்கு மனித உரிமை சபை உடனடியாக உத்தரவிட…

  23. புரட்டாதி 15, 2011 – வியாழக்கிழமை, காலை 07.08 ஜெனீவாவில் உள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருக்கும் சமவேளை, நியூ யோர்க்கில் உள்ள ஐ நாவின் பீடத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்கெடுக்க வரும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும், மாபெரும் ஒன்றுகூடலொன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.இந்த ஒன்றுகூடல் நியூ யோர்க் ஐ நா உயர்பீடத்துக்கு முன்னால் செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர், அமைச்சரவைச் செயலர் சுகிந்தன் மற்றும் நா.த.அரசின் மதியுரைஞர் குழுவில் பங்காற்றிய பேராசிரியர் கரன் பார்கர் அம்மையார் ஆகியோர், ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரின் தொடக்க…

  24. Sep 16, 2011 / பகுதி: செய்தி / தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவி ஐந்து நாள்களாக வீடு திரும்பவில்லை! தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி கடந்த ஐந்து நாள்களாக வீடு திரும்பவில்லையென அம்மாணவியின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த மாணவியே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் தனிப்பட்ட முறையில் எங்காவது சென்றாரோ அல்லது எவராவது கடத்திச் சென்றார்களா என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். http://www.pathivu.com/news/18432/57//d,a…

  25. 2012 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில், மூலதனம், புனரமைப்பு செலவினங்களில் அதிகளவான நீதி ஒதுக்கீடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் துறைகளுக்கே ஒதுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்து வருடத்திற்கான செலவுகள் 22 ஆயிரத்து 300 கோடி ரூபா என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சுக்கு 19 ஆயிரத்து 800 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ், வரும் திவி நெகும வேலைத்திட்டத்திற்காக 440 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது. வீதி அபிவிருத்தி, நிதி, திட்டமிடல் அமைச்சுக்கு மாத்திரம் சுமார் 300 லட்சம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.