Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரசுரித்தவர்: NILAA August 29, 2 மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களிடையே மர்ம மனிதன் என்ற பீதியை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே தூண்டி விட்டதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியிருப்பது அரசியலில் அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (29.08.2011) பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி விநாயகமூர்த்தி முரளிதரன் களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் வெல்லாவெளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கான சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் வெளியிட்ட இக்கருத்து தொடர்பாக தமது அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ள மாவட்ட பாராளுமன்ற …

  2. மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும்-நக்கீரன் கோபால்!(படங்கள்) Published on August 29, 2011-9:59 pm முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நிறைவேற்றவிருக்கும் தூக்கு‌த் தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகிய மூன்று பேர் சென்னை கோயம்பேடு பேரு‌ந்து நிலையம் அருகே இ‌ன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இரு‌ந்து வரு‌கி‌ன்றன‌ர். இவ‌ர்களு‌க்கு அ‌ர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌‌ள், நடிக‌ர்க‌ள், இய‌க்குந‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு தர‌ப்‌பி‌னர் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அதில் நக்கீ…

  3. Started by akootha,

    ஏன் கூடாது? ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி என்று பலவாறாக அரசுக்குக் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் சில நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டன. பல நாடுகள் தூக்குத் தண்டனையை நிறுத்தும் எண்ணத்தில் உள்ளன. இந்தியாவிலும் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, மரணதண்டனை கீழமை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்டாலும், மேல்முறையீட்டில் இந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுவதால், இந்தியாவில் பெரிய அளவில் இதற்கான போராட்டங்கள் எழவில்லை…

    • 0 replies
    • 653 views
  4. தூக்குமேடை தயார்! மருத்துவப் பரிசோதனையும் முடிந்தது???? Published on August 29, 2011-3:43 pm வேலூர் சிறையில் தூக்குத்தண்டனை கைதிகளை தூக்கிலிடுவதற்கென்று என்று தனியாக பணியாளர்கள் எவரும் இல்லை. இறுதியாக 1983ம் வருடம் மனைவி,மற்றும் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக சென்னையை சேர்ந்த சேட்டு என்ற சந்துரு தூக்கிலிடப்பட்டார். அப்போது தண்டனையை நிறைவேற்ற சென்னையில் இருந்து ஒரு காவலர் வேலூர் வந்து தூக்கிலிடும் பணியை நிறைவேற்றினார். இதற்கு பின்னர் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறைச்சாலையில் தூக்கு தண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது சிறை அதிகாரிகள் தூக்கு மேடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் சிறையில் உள்ள தூக்கு மேடையில் ஒரே நேரத்தில் 2 பே…

  5. 29 ஆகஸ்ட் 2011 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல்போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என யுனிசெப் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 1800 சிறுவர் சிறுமியர் காணாமல் போனதாகவும் இதில் 600 சிறுவர் சிறுமியர் குடும்பங்களுடன் மீள இணைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. ஏனையவர்கள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை என யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வீதமான சிறுவர் சிறுமியரை இறுதியாக அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 64 வீதமான சிறுவர் சிறுமியரை தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் ஈட…

  6. Started by தமிழரசு,

    வீர மகள் காஞ்கிபுரம் ஓரிக்கையையே உனக்கு தலை வணங்கிறோம் ஏனெனில் செங்கொடி என்ற வீர மகளை சுமந்தவள் நீ ஆதலினால் தமிழ் பெண்கள் வீரர்கள் என்று உணர்த்தியோர்களில் நீயும் ஒருத்தி உன் உறவுகளின் விடுதலைக்காக உன்னை தீயுக்கு இரையாக்கிய வீர சுடரே உனக்காக கவிதை எழுதும் என் கைகள் தீயாய் எரியுதம்மா உன் வீரத்தையென்னி பல கனவுகள் சுமந்த பருவத்தில் தீயாய் வெந்தாய் உணருமா அந்த சுயநலவாதிகள் உணருமா அந்த கொலைக்காரி அவள் பெண்ணா! அல்லது???? மனித பிணம் ருசிக்கும் மனித மிருகமா? வீர மகள் செங்கொடியே உணக்கு இவ்வுலக தமிழ் மக்கள் வீர அஞ்சலி செலுத்துவதை தவிர வேறு! ஏனெனில் நாங்கள் எல்லோரும் சிறைக்கைதிகள் சொந்த நாட்டிலும் சிறை…

  7. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கருணை மனுவை, ஜனாதிபதி நிராகரித்து விட்டதால், மூவரையும் செப். 9ம் தேதி தூக்கிலிட, சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி கைதிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கைதிகளை தூக்கிலிடுவதற்கான முன்னேற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். …

  8. முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 3 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சரியாகத்தான் கூறியுள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இ…

  9. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் தண்டனையை நிறுத்தக் கோரி, புதிய தமிழகம் கட்சியினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முருகன், சாத்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 9ம் தேதி வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பாலு, புவனா மற்றும் கோபி ஆகியோர் தங்களது உடல் மீது திடீ…

  10. தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயார் – பிரதமர் 29 ஆகஸ்ட் 2011 தேசிய அரசாங்க மொன்றை உருவாக்குவதன் மூலம் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையில் தேசிய அராசங்கமொன்றை அமைப்பதற்கு தயார் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தால் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று தசாப்த காலமாக யுத்தம் இடம்பெற்று வந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய அரசாங்கமொன்று அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் இதுவரையில் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித அழைப்பையும் விடுக்கவில்லை என குறிப்பிடப்படுகிற…

  11. சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 3 பேரும் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்டனர். எனவே கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்கள் மனுவை மறுபரிசீலனை செய்து தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்?: முன்னதாக தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய்காந்த், நான் சின்ன வயதில் இரு…

  12. 29.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110 ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை. எனவே ச…

  13. முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோர் மீது திணிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையினை ரத்துசெய்து அவர்களது உயிர்வாழ்தலை உறுதிப்படுத்தக் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ஜவகர்லா நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். ஈழதேசம் செய்தியாளர் : புலிமறவன். http://www.eeladhesam.com/index.php?option

  14. கிறீஸ் பேய்களின் உள் நோக்கம் என்ன? இதில் உள்நோக்கம் இருக்கின்றதா? வெறும் வதந்தியா? அல்லது திருடர்கள் கொள்ளைகாரர்கள், கொலையாளிகள் ஆகியோரின் பேரில் அவற்றைவிட மிகப்பெரிய திட்டம் ஒன்றை மேற்கொள்பவர்களினால் முன்னெடுக்கப்படும் கருத்தியலா? அல்லது இராணுவ முகாம்களையும் கடற்படை முகாம்களையும் அகற்றுவதற்கான வேலைத்திட்டங்களா? லிபியா, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றவை போன்ற திட்டமா? என்பது குறித்து நாங்கள் சிந்தித்து பார்க்கவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது மற்றும் தருஷ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்தும் நாம் சிந்த…

    • 0 replies
    • 685 views
  15. [Monday, 2011-08-29 10:10:05] காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செங்கொடி என்ற வீரத் தங்கை , தூக்கு தண்டனை பெற்று இருக்கும், முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தனது உயிரை அர்ப்பணித்து மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார். சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்கமுடியும் . அவ் வகையில் தன், இனத்துக்காக, உயிரை கொடுத்த தமிழ்,வீரமங்கை செங்கொடிக்கு யேர்மன் அனைத்து ஈழத்தமிழர்கள் சார்பில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை வீர வணக்கத்தை மிக உணர்வோடு இவ் வேள…

  16. நல்லூர் தேர்பவனியில் திருடர்களின் கைவரிசை: ரூபா 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் அபகரிப்பு. நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்ற வேளை சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களின் தங்கச் சங்கலிகளை அபகரிக்க முற்பட்ட பெண்கள் இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பொலிஸாரும் தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தோரும் ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதிகமானோர் சிவில் உடைகளில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் நான்குக்கும் மேற்பட்ட தாலிக…

  17. [ திங்கட்கிழமை, 29 ஓகஸ்ட் 2011, 04:46 GMT ] [ தா.அருணாசலம் ] லிபியாவின் தலைநகர் திரிபொலி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், புரட்சிப்படையினர் அமைத்துள்ள இடைக்கால தேசிய சபை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது. சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய நட்பு நாடாக லிபியா இருந்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், லிபிய அதிபராக இருந்த கேணல் கடாபிக்கும் இடையில் மிகநெருங்கிய நட்புறவும் இருந்து வந்தது. லிபியாவுக்காக குரல் கொடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கம் அங்கு புரட்சிப்படையினர் கை ஓங்கத் தொடங்கியதும் அடக்கி வாசிக்கத் தொடங்கியிருந்தது. திரிபொலியின் வீழ்ச்சியடைந்து பல நாட்களாகியுள்ள போதும் சிறிலங்கா அரசாங்கம் எந்தக் கரு…

  18. இன்று (28-08-2011) பிரான்சில் TROCADERO – மனித உரிமைச் சதுக்கத்தில் Amnesty International – France ஒத்துழைப்புடன் நா.த.அரசாங்கத்தின் போர்குற்றம் – இனப்படுகொலை – மனிதஉரிமைகள் விவகார அமைச்சகத்தின் ஏற்பாட்டில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று பாரிஸ்சில் நடடத்தப்பட்டது. பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை நிறுத்தக் கோரும் இந்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்களது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் கலந்துகொண்டனர். மூவரது மரண தண்டனை தொடர்பில், பிரான்சில் உள்ள Amnesty International – France / Ensemble Contre la Peine de Mort / Fiacat.fr / Acat France உட்பட பல மரண தண்டனைக்கு எதிரான அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கவனத்துக்கு நா.த.அரசாங்கத்தினால் நேரடியாக கவனத…

  19. தோழர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி இன்று காலை சேலம் மாநகரில் வழக்குரைஞர்கள் தமயந்தி, கீதா, பிரபா, தமிழ்மணி ஆகியோர் பட்டினிப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். [show as slideshow] http://www.periyarthalam.com/?p=639

  20. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் மற்றும் பா.ம.க. நிறுவனர் தோழர் இராமதாசு இணைந்து நடத்திய மரண தண்டனை ஒழிப்பு மாநாடு காணொளி http://www.periyarthalam.com/?p=636

  21. மூவர் தூக்குத்தண்டனையை இரத்து செய்யக்கோரி கோவையில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்துக்கட்சியினர் இணைந்து இன்று காலை தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். http://www.periyarthalam.com/?p=630

  22. சம்பூர் அனல்மின்நிலைய உடன்படிக்கைக்காக இந்திய குழு வருகிறது! Published on August 29, 2011-6:06 am · சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பான உடன்படிக்கையில் ஸ்ரீலங்காவுடன் கைச்சாத்திட இந்திய அரசின் தூதுக்குழு செப்டம்பர் 5இல் கொழும்பு வரவிருப்பதாக கொழும்பு அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 7 வரை கொழும்பில் தங்கியிருக்கும் இந்தியக்குழுவிற்கு அந்த நாட்டின் மின்துறை அமைச்சின் செயலாளர் தலைமை வகிப்பார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குழுவின் விஜயத்திற்கான திகதிகள் இன்னும் இந்திய அரசினால் ஊர்ஜிதப்படத்தப்படவில்லை என்றும் செய்தியில் தெரிவக்கப்பட்டுள்ளது. இந்தியத்தூதுக்குழு திருகோணமலை மாவட்டத்தில் மூதூ…

  23. போர்க்குற்ற விசாரணை; சவாலை எதிர்கொள்ள தயாராகிறது இலங்கை; கொரியா புறப்பட்டார் பீரிஸ்! Published on August 29, 2011-6:39 am · இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இரண்டு வார இராஜதந்திர வெளிநாட்டுப் பயணமாக நேற்றுக் கொரியாவுக்குப் புறப்பட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அடுத்த மாத நடுப்பகுதியில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் விவாதத்துக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கும் இலங்கை அரசு, அதனை எதிர்கொள்வதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அமைச்சர் பீரிஸின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடர் செப்டெம்பர் 12ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ச…

  24. அமெரிக்கா கொடுத்த அழுத்தமே அவசரகாலச் தடைச் சட்டம் நீக்கம். 28 வருடங்களாக இலங்கைத் தீவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா இந் நடவடிக்கை ஒரு சாதக மனப்பாண்மையை வளர்க்கும் செயலென பாராட்டியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான திருவாட்டி விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. எங்களின் தென்னாசியாவிற்கான இராஜதந்திரச் செயலரான றொபேட் ஈ.பிளேக் அவர்களை ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை இலங்கை செல்லவும் வைத்துள்ளது எனத் தெரிவித்துள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.