Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் சிதைவுகளை அகற்ற 2180 கோடி ரூபா செலவு [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 01:31 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஏழு கப்பல்களின் சிதைவுகள் உள்ள போதும் அவற்றில் ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றவே உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்ற இந்தியா 2180 கோடி ரூபாவை செலவிடவுள்ளது. ஆனால் ஏழு கப்பல்களின் சிதைவுகள் அங்கு காணப்படுவதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இவற்றில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கிய சீ டான்சர் என்ற கப்பல் உள்ளடக்…

  2. தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவை எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 08:14 GMT ] [ நித்தியபாரதி ] பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவையானது எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 1044 பயணிகளை ஏற்றிச் செல்லும் கொள்திறனைக் கொண்ட 'ஸ்கொற்றியா பிறின்ஸ்' என்ற பயணிகள் கப்பல் கடந்த யூன் 13ம் திகதியிலிருந்து தனது சேவையை தொடங்கியது. ஆனால், வாரத்தில் இரு தடவைகள் பயணத்தை மேற்கொள்ளும் இக்கப்பல் தனது பயணத்தின் போது ஒவ்வொரு தடவையும் 150 பிரயாணிகளைக் காவிச் செல்வதில் கூட மிகவும் சிரமப்படுகின்றது. இக்கப்பல் சேவையானது தனது ஒட்டுமொத்த கொள்திறனில் 15 சதவீதத்தை மட்டுமே நிரப்ப…

  3. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த இரு படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினர் வசம் [saturday, 2011-07-23 11:45:00] இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த 02 படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த குழுவினர் தற்போது கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட குழுவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=46989…

  4. திருநெல்வேலி தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கை இராணுவத்தினர் மீது 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாளன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வைக் குறிக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதெனலாம். இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.ஈழ இணையம்

  5. ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார் : 23 ஜூலை 2011 தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வேலைப் பளு காரணமாகவோ அல்லது வேறும் காரணிகளினாலோ ஜெயலலிதாவினால் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாவிட்டால் பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்துடன் பேசி பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் எனவும், அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அ…

  6. போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காவிடில் சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துவதென அமெரிக்கக் காங்கிரஸ் முடிவு [Friday, 2011-07-22 08:54:53] வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுக்காவிட்டால் சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துவதென அமெரிக்கக் காங்கிரஸ் நேற்றுத் தீா்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதியுதவிகளும் நிறுத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழுவே இந்தத் தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது. இது தொடா்பான தீர்…

  7. சனிக்கிழமை, 23, ஜூலை 2011 (11:22 IST) ராஜபக்சேவைக் காப்பாற்றுகிறது மத்திய அரசு : பழ. நெடுமாறன் ஈழத் தமிழர், தலித் கிறிஸ்தவர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு மீட்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் ஒன்றிப்பு கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு பேசினார். அவர், ‘’இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து ஐ.நா. சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அக்குழு ராஜபக்சேவை ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவித்தது. அதன் பின்னரும் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை. இ…

  8. கிளி நொச்சி மாவட்டத்தில் அதிக மோசடிகள் இன்று இடம்பெறலாம் என பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முளிவாய்க்காலில் இறந்த மக்களின் வாக்காஉ அட்டைகளை இராணுவத்தின் கஜபாகு ரெஜிமெண்ட் சிப்பாய்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வாக்குகளை பல இடங்களிலும் சிவில் உடைகளில் சென்று போடுவார்கள். இவ்வாறு வாக்கு போடுவதற்காக 52 வாக்குகளை ஒரு சிப்பாய் தனக்கு காட்டியதாக குறித்த இராணுவ அலுவலர் கொழும்பு ஊடகவியலாலர் ஒருவருக்கு கூறியுள்ளார். கிளி நொச்சி மாவட்டத்தில் கூட்டமைப்பு வெல்லுவது கடினம் எனவும் அந்த அலுவலர் கூறியுள்ளார். மேலும் இராணுவம் அண்மையில் பெற்ற குடிசன மதிப்பீடு, புகைப்பட ஆதாரங்கள் எல்லாம் இந்த தேர்தல் மோசடிக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார் கஜபாகு ரெஜி…

    • 0 replies
    • 617 views
  9. ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட இரும்புத் தகடு அகற்றப்பட்டது news ஜனாதிபதியால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காலி புதிய பஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட் டிகமவினால் நேற்றுமுன்தினம் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலை இந்த இடத்துக்குச் சென்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்து ஹெட்டிகம, இரும்புத் தடுப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரும்புத் தடுப்பை அகற்றுமாறு வலியுறுத்தி, காலி பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் கடந்த புதன் கிழமை தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறித்த இரும்பு தடுப்பால…

    • 2 replies
    • 745 views
  10. மட்டக்களப்பு சிறையில் கைதிகள் மீது தாக்குதல்! கைதிகள் உண்ணாவிரதம்! Published on July 23, 2011-10:44 am மட்டக்களப்பு சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக கைதிகள் தெரிவித்துள்ளனர். நேற்றுக்காலை வழக்கம்போல சிறைக் கைதிகள் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அங்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருந்ததனால் இது பற்றி சிறைச்சாலை அதிகாரிகளிடம் பேசுவதற்காக மூன்று அரசியல் கைதிகள் சென்றபோதே, அதிகாரிகளால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் மிக மேசமாகவும் தரைக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்ததாகவும் தாக்குதலுக்குள்ளான அரசியல் கைதி…

  11. வெள்ளிக்கிழமை, யூலை 22, 2011 இலங்கை ராணுவ வீரர்களுக்கு குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் தி.க., நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் குன்னூரில் போராட்டம் நடத்தினர். . இதனால் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது. குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் முன்பு நாம் தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுதது போலீசாருககும் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் இயக்கத்தினர் 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%A…

  12. அநுராதபுரத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களிடையே மோதல்:ஒருவர் சுட்டுக் கொலை [saturday, 2011-07-23 10:37:34] அநுராதபுரத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் உள்கட்சி வன்முறை காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சுவரொட்டிகளை ஒட்டும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=46983&category=T…

  13. 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று : 23 ஜூலை 2011 வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வெறுமனே நடமாடி திரியவேண்டாம் - தேர்தல் ஆணையாளர் 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று : 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 2 ஆயிரத்து 226 வாக்களிப்பு நிலையங்களில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 20 அரசியல் கட்சிகள், 72 சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த 5 ஆயிரத்து 688 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 875 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.ஒரு மாநகர சபை, 9 நகர சபைகள், 55பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது…

  14. வடக்கின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்றுவரை 3 லட்சத்து 96 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகம் news இன்று இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வட பகுதியில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 358 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் இன்று மாலை 4 மணிவரையும் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் அஞ்சல் நிலையங்களுக்கு சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். யாழ்ப்பாணம் பிராந்தியம் மற்றும் வவுனியா பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர்கள் நேற்றுக் காலை இவ்வாறு தெரிவித்தனர்.வட பகுதியில் ஒத்திவைக்கப்பட்ட 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் நடைபெறவுள்ள 16 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக …

  15. திருமலையில் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை நீக்கம்! Published on July 23, 2011-9:14 am திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறையிலிருந்து வந்த மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார். இறக்கக்கண்டி, குச்சவெளி, இக்பால்நகர், பாலையூற்று போன்ற பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது படையினரிடம் பாஸ் பெற்றுச் செல்லும் நடைமுறை இதுவரை காலமும் இருந்து வந்தது. இந்தப் பிரச்சினையை அப்பகுதிகளுக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டு வந்தனர். அமைச்சர் ரிஷாத் பதியூதீன் இவ்விடயத்தை உடன் பொருளாதார அபிவிருத்தி அமை…

  16. கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் ஆயுதமுனையில் பறிமுதல்! Published on July 23, 2011-6:46 am கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் ஆயுததாரிகளால் ஆயுதமுனையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம் உட்பட்ட கிராமங்களுக்கு நள்ளிரவிற்குப் பின்னர் முகம்மூடிகள் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் சென்றநபர்கள் ஆயுத முனையில் வலுகட்டாயமாக வாக்குச் சீட்டுக்களை மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து சென்றுள்ளனர். இதனைவிடவும் கிளிநொச்சியின் பெருமளவான பின்தங்கிய கிராமங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகின…

  17. அமைச்சர் ஆறுமுகன் தலைமையிலான குழுவினர் தாக்குதல்: 15 பேர் காயம் _ 7/23/2011 11:44:37 AM அமைச்சர் ஆறுமுகன் தலைமையில் தலவாக்கலை தோட்டத்துக்குச் சென்ற 80 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு ஒரு மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதலை மேற்கொண்டவர்களில் பெரும்பாலானோர் குடி போதையில் இருந்தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32836

  18. பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல முயன்ற மகிந்தவின் மகன்! மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபச்சவையே இவர் சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்காநியூஸ்வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து. இதன் பொழுது வேகமாக செயற்பட்ட மகிந்த மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார். அதோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோ…

  19. சீகிரியா கோட்டைக்குள் நுழையும் இரு இரகசிய வாயில்கள் கண்டுபிடிப்பு _ வீரகேசரி இணையம் 7/22/2011 4:02:21 PM 4Share காசியப்ப மன்னனின் பலம் வாய்ந்த கோட்டையாக விளங்கிய சீகிரியாவுக்கு பயணிப்பதற்காக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கிழக்கு மற்றும் வடக்கு இரகசிய வாயில்கள் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் காசியப்ப மன்னன் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கட்டிடங்களின் இடிபாடுகள், படிக்கட்டுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிட இடிபாடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சீகிரியா வேலைத் திட்டத்தின் முகாமையாளர் வஜிரபர் மினென்டஸ் தெரிவித்தார். சீகிரியாவைச் சுற்றியுள்ள பாரிய காட்டின் சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் பலவந்தமாக நாமலிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்: தோ்தலில் இருந்து விலகினால் இலட்சம், இலட்சம் தருவதாகப் பேரம் [Friday, 2011-07-22 09:18:24] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து வாங்க அரச தரப்பு முயற்சிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச வேட்பாளர் 4 பேரை பலவந்தமாக அழைத்துச் சென்ற, நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகுமாறும் அதற்காக லட்சம் லட்சமாக பணம் கொடுப்பதாகவும் மிரட்டி உள்ளார் என்றார் சிறீதரன். கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடக்கிறது. பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக…

  21. Friday, 22 July 2011 03:16 ஈழத்திற்கு எதிரான போர் இந்தியாவுக்கும் எதிரானதே - உருத்திரகுமாரன் ஈழப்போர் சாரம்சத்தில் இந்தியாவுக்கு எதிராக சிங்களர் நடத்தும்போர்தான். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்த வரலாற்று அம்சத்தை புரிந்துகொண்டு இனியாவது இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றவேண்டும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'இந்தியா டுடே' இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் விபரமாவது, கேள்வி. தமிழ்நாட்டில் தற்போது மாறிக்கொண்டிருக்கும் ஈழ ஆதரவுச் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பதில். மிகவும் உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது. உண்மையான கவனத்தைச் செலுத்தக்கூடிய வலுவான தலைவர் ஒ…

  22. சர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ரஸ்யாவுடன் ஒப்பந்தம் : 22 ஜூலை 2011 சர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு, போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட சர்வதேச குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட விவகாரங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைக் பரிமாறிக் கொள்வது தொடர்பிலும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் பேச்சுவ…

  23. அமெரிக்கத் தீர்மானம் ஜனநாயகம் அற்றதாம்! Published on July 22, 2011-9:43 pm இலங்கையின் உள் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் அமெரிக்காவினால் முன்மொழியப்படும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை அரசாங்கம் இன்று கூறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போதான ரத்தக்களறிகள் தொடர்பாக பொறுப்புடைமையை வெளிப்படுத்தத் தவறினால் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவிகளை தடைசெய்யப்பட வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கருத்து கேட்டபோது, அமெரிக்கா இத்தகைய தடையை கொண்டுவந்தால், அது அவர்கள் போதிக்கும்…

  24. நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் விடிந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தல். தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்துவிட்டன. பொதுநிலையில் நிற்போர், எல்லோரும் வாக்களியுங்கள் என்ற கோரிக்கையையும் தேர்தல் சுமுகமாக நடந்தேற வேண்டும் என்ற ஆசீர்வாதத்தையும் சமயோசிதமாகக் கூறி தேர்தல் பற்றிய தங்கள் கருத்தை நிறைவுசெய்து கொண்டுள்ளனர். தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வதற்கான வழியாக அவர்கள் இதைக் கருதியிருக்கலாம். அதில் நியாயமும் இருக்கவே செய்கிறது. அதேநேரம் ஊடகங்கள் தத்தம் கருத்துக்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எடுத்துக்கூறியுள்ளன. அத்தகைய கருத்துகளுக்குள் சார்புநிலையும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஊடகங்கள் எந்தெந்தப் பக்கம் சார்ந்தவையோ அவை தத்தம் சார்பு நிலைக்கேற்ப கர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.