ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
நயினாதீவில் இந்த முறை தமிழ்ப் பொலிஸார் கடமை; திருட்டுச் சம்பவங்கள் இல்லை news நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயப் பெருந்திருவிழாவின் போது இந்த முறை அதிக எண்ணிக்கையான தமிழ்ப் பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். பொலிஸார் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமையால் திருட்டுச்சம்பவங்கள் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.தேர்த்திருவிழா அன்று இரு பெண்களின் சங்கிலிகளை அறுக்க முற்பட்ட திருடர்கள் இருவர் அந்தப் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் வகையாக மாட்டிக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்ஆண் பொலிஸார் வேட்டிகளுடனும், தமிழ்ப் பெண் பொலிஸார் சேலை அணிந்தும் ஆலயச்சூழலில் கடமையில் ஈடுபட்டமையால் திருட்டுச்சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. …
-
- 1 reply
- 362 views
-
-
முரளீதரன், சங்ககாராவுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு அரசியல்தான் பேசுகிறீர்கள்.. 17 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் எனது பல நண்பர்களைப் போலவே கிரிக்கெட்டில் என்றும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. இந்தியாவிலும் தமிழகத்திலும் அது மேட்டுக்குடியினரதும் மேல்சாதியினரதும், இன்றைய நிலையில் அது கார்ப்பரேட்டுகளால் முழுமையாக இலாபத்தை முன்வைத்து மட்டுமே நடத்தப்படும் ஊழல் புழுத்த ஒரு தொழில் என்பதுதான் எமது அவதானமாக இருக்கிறது. இது விளையாட்டின் பிழையா எனும் கேள்வி மிக நேர்மையான, பதில் காணவேண்டிய கேள்வி. ஆப்ரிக்க மார்க்சியரான சி.எல்.ஆர். ஜேம்ஸின் கிரிக்கெட்டின் காலனியாதிக்க வரலாறும் அழகியலும் குறித்த எழுத்துக்களை (Beyond A Boundry : C.L.R.James : 1963 -…
-
- 7 replies
- 951 views
-
-
களங்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை கோரிக்கை கொழும்பு, ஜூலை.17: ஐக்கிய நாடுகள் சபையின் களங்கத்துக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பபு சபை மற்றும் நடவடிக்கைக்குழு என்பன இலங்கையை இந்த பட்டியலில் இணைத்திருந்தன. சிறுவர்களை படைகளில் இணைத்தல் உட்பட்ட பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாகவே இந்த பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்காக உறைவிடப் பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்தார். விடுதலைப்புலிகளிடம் இருந்த சிறுவர் படையினர் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம் பிள்ளையான் தரப்பும் தமது சிறுவர் படையை கலைத்து அவர்களை குடுமபங்களுடன…
-
- 1 reply
- 346 views
-
-
வடக்கில் பாரிய தேர்தல் மோசடியை செய்வதற்கு ஈ.பி.டி.பி ஊடாக அரசாங்கம் முயற்சி- ஸ்ரீலங்கா கார்டியன் தகவல்! எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பில் திட்டவட்டமான மாற்றத்தைக் கொண்டுவரக்கூடியதாக பாரிய மோசடியை நடத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்தில் உள்ள ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகளைத் திணிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஈபிடிபிக்குள் இருந்து ஒருவர் தகவல் தந்துள்ளார் என்றும் ஸ்ரீலங்கா கார்டியன் என்ற தெரிவித்திருக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணத்திற்…
-
- 0 replies
- 519 views
-
-
திருகோணமலையில் 8,000 ரூபாவிற்கு பொண்ணு வாங்கிய 65 வயது தாத்தா! மனவியை விற்ற கணவன் கம்பி எண்ணவுள்ளார். [sunday, 2011-07-17 14:57:00] திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியை 8,000 ரூபாவிற்கு விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மொறவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நபர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். 35 வயதுடைய அந் நபர் திருமணமானவர். வயோதிபரின் விருப்பத்தை கேட்டவுடன் அவரக்கு ஒரு விபரீத யோசனை தோன்றியது. வயோதிபரிடமிருந்து 8,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது மனைவியை அவருடன் அனுப்பியுள்ளார். தான் வெளியூர் செல்வதாகவும் அதன் காரணமாக முதியவரின் வீட்டில் இருக்கும் படி…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா விவகாரம் குறித்து மன்மோகனுடன் பேசுவார் ஹிலாரி [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 11:02 GMT ] [ கார்வண்ணன் ] இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது. நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை புதுடெல்லி செல்லவுள்ள ஹிலாரி கிளின்ரன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார். இதன்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் மட்டுமன்றி சிறிலங்கா விவகாரம் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் மன்மோ…
-
- 2 replies
- 587 views
-
-
சீனா இராஜபக்சவிடம் நேரடியாக ஒன்பது மில்லியன் டொலர்கள் கொடுத்தது. Chinese Economic Hitmen And The Rajapaksas By Frederica Jansz In an unprecedented move China has given President Mahinda Rajapaksa 9 million USD (approx. one billion rupees) as a grant in March this year to President Mahinda Rajapaksa to use at his discretion. According to highly places sources at the External Resources Department of the Treasury these monies were part of a grant amounting to a total USD 12 million for “enhancing friendly relations and bilateral economic and technical cooperation.” Of which USD 2.0 million was set aside for the flood affected and USD 1.0 million for the Ban…
-
- 4 replies
- 679 views
-
-
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் முன்னர் மகிந்தருக்கு ஆதரவளித்தவர்கள் இப்போது எதிராகத் திரும்பினர். Sunday, July 17, 2011, 9:16உலகம், சிறீலங்கா சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளது.ஒரு காலத்தில் ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிராகத் திரும்பினர் என்று தெரியாமல் சிறிலங்கா வெளிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளது. இவர்களில், குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் அடெனோல்ற் 2004இல் சுனாமிக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தவர். குடியரசுக் கட்சியின் ம…
-
- 4 replies
- 696 views
-
-
வடக்குத் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட குண்டர்களால் நிரம்பி வழியும் யாழ்ப்பாண விடுதிகள் Sunday, July 17, 2011, 8:57சிறீலங்கா வடக்கில் எதிர்வரும் 23ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிலங்கா அரசு குண்டர் குழுக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பரப்புரைகளை மேற்கொள்வதற்கு என்ற பெயரில் தங்கியுள்ள இவர்கள் மூலம், உள்ளூராட்சித் தேர்தலில் குழப்பங்களை விளைவித்து வெற்றி பெறவே ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும்…
-
- 2 replies
- 533 views
-
-
கனடாவில் பேராசிரியர் குணவர்த்தனா மீது வழக்கு - கனடிய தமிழர் பேரவை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் குணரத்தினா பொய் கூறினார் என்பதற்காக - குணரத்தினா கனடிய தமிழர் பேரவை, விடுதலைப்புலிகளின் ஒரு அங்கம் என லக்பிம பத்திரிகைக்கு கூறியமைக்காக ஒரு இலட்சம் டாலர் நட்டஈடாக கோரியுள்ளது - லக்பிம பத்திரிகையும் இவருடன் சேர்க்கப்பட்டுள்ளது Canadian Tamil Congress sues critic for libel The Canadian Tamil Congress is suing a high-profile Singapore-based “terrorism” expert for $100,000 for alleged defamation. The suit, filed a few weeks ago in the Superior Court of Justice in Toronto, claims that Rohan Gunaratna insinuated, in an interview to a Sri Lankan n…
-
- 13 replies
- 937 views
-
-
மட்டக்களப்பில் ஒட்டுக்குழு கருணாகுழுவுக்குள் கடும் மோதல்- ஒட்டுக்குழு கருணாவை விமர்சித்தவர் மீதும் தாக்குதல்! Sunday, July 17, 2011, 15:00சிறீலங்கா மட்டக்களப்பில் ஒட்டுக்குழு கருணாகுழுவுக்குள் கடும் மோதல் உருவாகி உள்ளதாகவும், அதன் உச்சக்கட்டமாக நேற்று முன்னர் ஒட்டுக்குழு கருணாவுடன் இணைந்து செயற்பட்ட யூலியன் என்பவரை கருணா தலைமையில் சென்ற குழு கடுமையாக தாக்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு கரடியனாற்றில் கல்வாடி வைத்திருக்கும் ( கற்களை உடைத்து தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்வது) யூலியன் என்பவரை பிரதியமைச்சராக இருக்கும் கருணாவும் அவருடன் சென்ற வீரா, மற்றும் ரவி என்பவர்கள் கடுமையாக தாக்கியதாகவும், இதனையடுத்து யூலியன் என்பவர் கரடியனாறு கா…
-
- 0 replies
- 810 views
-
-
இலங்கையின் கொலைக்களம் : படைப்பாளிகளின் பார்வை 17 ஜூலை 2011 விழுதுகள் விசேட நிகழ்ச்சி நாகார்ஜூனன் http://youtu.be/-s0X5j_TI4Q தமிழ்ச்செல்வன் http://youtu.be/5PlHQNjpSOA ஜெயமோகன் http://youtu.be/P_fSAwCJgUU நாஞ்சில் நாடன் http://youtu.be/nGtBRmnGMcM நாகார்ஜூனன் இலண்டனிலிருந்து கலந்து கொள்கிறார். அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் செயலாற்றிவரும் நாகார்ஜூனன் தத்துவம் படித்தவர். தமிழக சிறுபத்திரிக்கை இயக்கம் தோற்றுவித்த முக்கியமான கோட்பாட்டாளர். நளிர் எனும் பெயரிலான இவரது இரு தொகுதி எழுத்துக்களை தமிழகத்தின் ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஈழமக்களின் விடுதலையில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர…
-
- 0 replies
- 809 views
-
-
மாறுவேடம் பூண்டு தமிழ்நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா அமைச்சரும், ஆளும்தரப்பு அரசியல்வாதிகளும் [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 05:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அனைத்துலக இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அமைச்சர் மற்றும் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டுக்கு இரகசியமாகச் சென்று வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 9ம் நாள் தொடக்கம் 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளில் இருந்தும் 1000 வரையிலான தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். சிறிலங்காவில் இருந்தும் சுமார் 150 எழுத்தாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இவர்களில் அரசியல்வாதிகளும் அடங்க…
-
- 0 replies
- 748 views
-
-
தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர் தாயகம் திரும்ப விருப்பம் - ஐநா தகவல் [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 08:08 GMT ] [ அ.எழிலரசன் ] பல ஆண்டு காலங்களுக்குப் பின்னர் தற்போது அரம்பிக்கப்பட்டுள்ள இந்திய – சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையின் மூலம், தென்னிந்திய முகாங்களில் வாழும் சிறிலங்காத் தமிழ் அகதிகள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையராலயம் [uNHER] வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "தென்னிந்திய முகாங்களில் வாழும் சிறிலங்கா அகதிகள், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவை மூலம், தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்ற எண்ணிக்கை, தற்போது மிக மெதுவாக உய…
-
- 0 replies
- 425 views
-
-
தமிழர்களைப் பிச்சைக்காரர் நிலைமைக்குள் பிடித்துத் தள்ளியது மஹிந்த ராஜபக்ஷ அரசுதான்: பஸிலுக்குச் சரவணபவன் சாட்டை [sunday, 2011-07-17 11:25:45] தமிழர்களை மிக மோசமான பிச்சைக்காரர் நிலைமைக்குள் பிடித்துத் தள்ளியது மஹிந்த ராஜபக்ஷ அரசுதான். முள்ளிவாய்க்காலிலும், பின்னர் தடுப்பு முகாம்களிலும் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கிய இந்த ஜனாதிபதியின் சகோதரர்தான் சொல்கிறார் பிச்சைக்காரன் தன் புண் ஆறாமல் பார்த்துக்கொள்வது போல சில அரசியல் கட்சிகளும் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாமல் இருப்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்று. இனப் பிரச்சினை தொடர வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் விரும்பவில்லை.அரசுதான் விரும்புகிறத…
-
- 0 replies
- 456 views
-
-
கத்தரிக்காய் விதையும் பொலித்தீன் கூடாரங்களும் தமிழினத்தின் பிரச்சினைக்கான தீர்வல்ல: தேவை அரசியல் தீர்வே [sunday, 2011-07-17 11:48:05] வடக்கு கிழக்கு மக்களுக்கு இப்பொழுது காணி அதிகாரம் தேவையில்லை கத்தரிக்காய் விதை மட்டும் கொடுத்தால் போதும், பொலிஸ் அதிகாரம் தேவையில்லை பொலித்தீன் கூடாரங்களைக் கொடுத்தால் போதும் என்ற நினைப்புடன் தான் தற்போதைய அரசாங்கம், அதன் அமைச்சர்களும் உள்ளனர். அப்படியாயின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களையும், தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த ஐம்பதாயிரம் இளைஞர் யுவதிகளையும், எண்பத்தொன்பதாயிரம் விதவைகளையும், இருபத்தையாயிரம் அங்கவீனர்களையும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்தழிவுகளையும் சந்தித்து அறுபத்தொரு வருடங்களுக்க…
-
- 0 replies
- 375 views
-
-
ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டுவது போன்றது என்று தமிழர் களம் அரிமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பாவலரேறு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ மண்ணில் நடந்து வருகிற ஓர் இன அழிப்புக் கொடுமைகளின் ஒரு பகுதி. இப்படித்தான் தமிழினம் அங்கு காலாகாலமாக அழிக்கப்பட்டு வருகிறது என்பதை உறங்கிக் கிடந்த உலகிற்கு உசுப்பிச் சொன்ன ஓர் நிகழ்வு. அறுபது ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கிற அக் கொடுமைகள் ஈரா…
-
- 0 replies
- 473 views
-
-
இலங்கையில் அதிகளவு லஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன – பிரித்தானியா 17 ஜூலை 2011 இலங்கையில் அதிகளவு லஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் முதலீடு செய்துள்ள மற்றும் செய்ய உத்தேசித்துள்ள பிரித்தானிய வர்த்தக நிறுவனங்கள் லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடு தொடுர்பான பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்கள், காவல்துறை, வருமான வரி இலாக, சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட சகல துறைகளிலும் லஞ்ச ஊழல் மோசடி இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் அநேகமான பொ…
-
- 0 replies
- 387 views
-
-
சில தமிழ் ஊடகங்களால் வடக்கு அபிவிருத்தி பாதிப்பாம் அழுகிறார் அமைச்சர் டக்ளஸ் news சில தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகள் காரணமாக வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் இடம் பெறும் அபிவிருத்திச் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் சில தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன. இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா. மண்டைதீவில் நேற்று நடைபெற்ற தண்ணீர் தாங்கிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் புனரமைக்கப்பட்ட நீர் குழாய்களை மீளக் கொண்டு சென்று விட்டனர் எனத் தவறான செய்திகள் தமிழ் ஊட…
-
- 0 replies
- 332 views
-
-
வடக்கில் முதலீடு செய்வதற்கு 5 வெளிநாட்டு கம்பனிகளுக்கு அனுமதி அமைச்சர் பஸில் கூறுகிறார் news யாழ். மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கட்டியெழுப்பவும், இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் வகையிலும் அச்சுவேலியில் பெரும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்படும். மேலும் ஐந்து வெளிநாட்டு கம்பெனிகள் தொழிற்சாலைகளை வடபகுதியில் அமைப்பதற்கும் ஜனாதிபதி அங்கீகாரம் அளித்துள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேசங்களில் பல்வேறு பாதை சீர்திருத்தப் பணிகளுக்கான அடிக்கற்களை நட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், புலமைப்பரிசில்கள், விவசாயிகளுக்கான விவசாய உபகரண…
-
- 0 replies
- 360 views
-
-
கப்பல் சேவை மூலம் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதிகள் – ஐ.நா! Published on July 17, 2011-6:57 am No Comments இந்தியா – இலங்கை இடையே தொடங்கப்பட்டுள்ள புதிய கப்பல் போக்குவரத்தால், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஐ.நா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.அகதிகள் ஆணையரகத்தின், இலங்கை பிரதிநிதி மைக்கேல் ஜ்வாக் கூறியதாவது, இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு, சமீபத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே, சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த புதிய போக்குவரத்து மூலம், இந்தி…
-
- 0 replies
- 481 views
-
-
எங்கட யாழ்ப்பாணத்தில என்ன மோனே நடக்குது! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-17 10:43:34| யாழ்ப்பாணம்] பெரியவர் ஒருவர் நேற்று வலம்புரி அலுவலகத்திற்கு வந்தார். ஆசிரியரைச் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.சந்திப்பு நடந்தது. மோனே எங்கட யாழ்ப்பாணத்தில் இப்ப என்ன நடக்குது என்று கேட்டார். அவரின் கேள்விக்கான அர்த்தம் புரியவில்லை ஆயினும் தமிழ்ப்பண்பாடு,விழுமியம் என்பதில் பெரியவர் நிறைந்த அக்கறை கொண்டிருந்ததை உணர முடிந்தது. அட மோனே! யாழ்ப்பாணத்தில் இப்ப என்ன நடக்குது என்று மீண்டும் கேட்டார். ஐயா உங்களின் கேள்வியின் எல்லை எது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது இருக்கிறது என்றோம். யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்தியில ஒரு பெண்பிள்ளையை கத்தியால வெட்டிக் கொலை செய்தது, …
-
- 0 replies
- 779 views
-
-
மகிந்தவுடன் ரணிலின் உறவு வலுக்கிறது.. வடக்கில் எதிர் பரப்புரை கைவிடப்பட்டது! அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்க ரணில் ஆதரவு. [sunday, 2011-07-17 10:23:15] சிறிலங்கா அரசின் இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிட ஐதேக தீர்மானித்துள்ளது. சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த் மற்றும் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு எதிராகவே ஐதேக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது. 20 ஆயிரம் தொன் தரமற்ற பெற்றோலை டுபாயில் இருந்து இறக்குமதி செய்த விவகாரத்தினால் ஆயிரக்கணக்கான வாகனங்களின் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. அத்து…
-
- 0 replies
- 420 views
-
-
வடக்குத் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட குண்டர்களால் நிரம்பி வழியும் யாழ்ப்பாண விடுதிகள் Sunday, July 17, 2011, 8:57 சிறீலங்கா வடக்கில் எதிர்வரும் 23ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிலங்கா அரசு குண்டர் குழுக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பரப்புரைகளை மேற்கொள்வதற்கு என்ற பெயரில் தங்கியுள்ள இவர்கள் மூலம், உள்ளூராட்சித் தேர்தலில் குழப்பங்களை விளைவித்து வெற்றி பெறவே ஆளும்கட்சி திட்…
-
- 0 replies
- 245 views
-
-
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் முன்னர் மகிந்தருக்கு ஆதரவளித்தவர்கள் இத்போது எதிராகத் திரும்பினர். Sunday, July 17, 2011, 9:16 உலகம், சிறீலங்கா சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளது.ஒரு காலத்தில் ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிராகத் திரும்பினர் என்று தெரியாமல் சிறிலங்கா வெளிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளது. இவர்களில், குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் அடெனோல்ற் 2004இல் சுனாமிக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தவர். குடிய…
-
- 0 replies
- 276 views
-