Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் "துவிச்சக்கரவண்டி ஒன்று இல்லாமல் எதையும் செய்ய முடியாது" [ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 08:24 GMT ] [ நித்தியபாரதி ] நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக கைவிடப்பட்டிருந்த 40,000 வரையிலான துவிச்சக்கரவண்டிகள், சொந்த இடங்களுக்கு மீளக் குடியேறிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "இந்த மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் மிகவும் தேவைப்பாடுடைய ஒன்றாகும். இதன் காரணமாகவே மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியவுடன் துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளோம்" என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதியுத்தமானது 2009,மே,18 ல் முடிவிற்கு வந்த போது, முல்லைத்தீவு …

  2. தமிழ்நாடு போன்று வாக்காளரை விலைபேசும் 'தந்திர அரசியல்' யாழ்ப்பாணத் தேர்தலிலும் ! [ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 08:13 GMT ] [ நித்தியபாரதி ] தமிழ்நாட்டில் தேர்தல் காலத்தில் வாக்காளர்களை விலைக்கு வாங்க கையாளப்பட்ட தந்திரங்கள் இப்போது யாழ்ப்பாணத் தேர்தல் களத்திலும் கையாளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக சிறிலங்கா அரசாங்கம் இலவசமாக புடவை மற்றும் சாரம் என்பனவற்றை வழங்கி வருகிறது. யாழ். மாவட்டத்தில் சமுர்த்தித் திட்டப் பயனாளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6000 பேருக்கு இலவசமாக புடவை மற்றும் சாரம் என்பன வழங்கப்படுகின்றன. இவை தவிர நீரிறைக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் கருவிகள், தையல் இயந்திரங்கள், மாணவர்களுக்கான பாடசாலை கருவிகள் என்பன…

  3. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை [Friday, 2011-07-15 11:44:31] இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரவிக்கிறது. இதற்கமைய எட்டு படகுகளினூடாக நாட்டின் எல்லையை கண்காணிக்கும் பணி முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் எட்மிரல் தயா தர்மப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த படகுகளில் உள்ள அதிகாரிகள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் படகுகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். சோமாலிய கடற் கொள்ளையர்கள் இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசிப…

  4. விமானப்படை அதிகாரியின் மனைவி, மகன் கடத்தல்: விடுவிக்க ஐந்து இலட்சம் ரூபா கப்பம் கோரல் [Friday, 2011-07-15 09:01:34] மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவரின் மனைவியும் அவரது பத்து வயதான மகனும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனா் எனத் தெரிய வருகிறது. பிரத்தியேக வகுப்பொன்றுக்குச் சென்ற தனது மகனும் அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தனது தனது மனைவியும் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்ட விமானப்படை அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பிள்ளையை விடுவிப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாவை, தாயின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யுமாறு இனந்தெரியாத ஒருவர் நேற்றிரவு தொலைபேசி ஊடாக தெரிவித்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்…

  5. கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான் [Friday, 2011-07-15 11:26:10] இந்தோனேசிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான் இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழர்கள் மீது சிங்கள இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்துக்கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப…

  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம். [Friday, 2011-07-15 11:23:02] எதிர்வரும் இருபத்துமூன்றாம் திகதி, வடக்கில் இடம்பெற இருக்கின்ற உள்ளராட்சித் தேர்தலை, சிறீலங்கா அரசு அதிமுக்கியமாகக் கருதி, அதை வெற்றிகொள்ளும் வெறியுடன் முழுவீச்சில் தனது செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. இத்தேர்தலில் கணிசமான வெற்றியைச் சம்பாதித்துக்கொள்வதின் ஊடாக பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என, ராஜபக்ச அரசு கருதிச் செயற்படுகின்றது. கடந்த காலங்களில் அதிகம் கவனிக்கப்படாத உள்ள+ராட்சித் தேர்தலை எதிர்கொள்ள, இம்முறை சிறீலங்கா அரசின் அமைச்சுப்பரிவாரங்கள் வடக்கு நோக்கி படையெடுத்துள்ளன. சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவும் வடக்கு சென்று ஐந்து நாட்கள் தங்கிநின்று,…

  7. சிறையில் அடைக்க உத்தரவிட்டவர் என்றோ ஒருநாள் முழந்தாளிடுவார்: பொன்சேகா _ 7/15/2011 12:07:12 PM Share அரசாங்கத்தின் கொள்கை நாளுக்கு நாள் மாறுபட்டு செல்கின்றது. என்னை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதிலும் முரண்பட்ட கருத்துக்களே இருக்கின்றன. இவ்வாறான நிலையில் என்னை சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டவர் என்றோ ஒரு நாள் முழந்தாளிடுவார் என்று முன்னாள் இராணுவத்தளபதி தெரிவித்தார். கன்னங்களில் படரும் தேமலுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக சரத்பொன்சேகா கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனியார் வைத்தியசாலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், கன்னங்களில் படரும் தேமலுக்கு சிகிச்சையளித்ததுடன் அவரைப் பீடித்திருந்த தொண்ட…

  8. யாழ் தீவகத்தில் தபால்மூல வாக்களிப்பில் தில்லுமுல்லு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 15 ஜூலை 2011 யாழ் தீவகத்தில் தபால்மூல வாக்களிப்பில் தில்லுமுல்லு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தபால்மூல வாக்களிப்புகள் 2 தினங்கள் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் தீவகப் பகுதிகளில் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அரச அதிகாரிகள் மட்டத்தில் இதனை மறைத்து விட முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீவகப் பகுதிகளின் கட்டுப்பாடு தொடர்ந்தும் ஈபிடிபியிடமும் கடற்படையிடமுமே இருக்கின்றது. இந்த நிலையில் யாழ்க் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து கணிசமான ஆசிரியர்கள் தீ…

  9. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை : 15 ஜூலை 2011 ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், .. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை : ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தைய…

  10. யாழ் குடாவில் அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் மீனவர்களை ஏமாற்றி பகற்கொள்ளை அடிக்க முயற்சி:- 15 ஜூலை 2011 2 கோடி ரூபாவுக்கு மேல் ஏப்பம் விட திட்டம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ் குடாவில் அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் மீனவர்களை ஏமாற்றி பகற்கொள்ளை அடிக்க முயற்சி:- யாழ் மாவட்டத்தில் புதிது புதிதாக சங்கங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. தெற்கின் குழாம் யாழ்ப்பாணத்தில் படையெடுத்துள்ள நிலையில் மீண்டும் உள்ளுராச்சித் தேர்தலில் அமைச்சர்கள் சுருட்டிக்கொள்ள முற்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சுயேட்சைக் குழு ஒன்று பொதுமக்கள் அனைவரிடமும் தமது கட்சிக்கான அங்கத்துவத்திற்காக 20 பணம் ச…

  11. அக்னி பரீட்சையாகும் யாழ். தோ்தல் களம்: மனித உரிமை ஆணைக் குழு அதிகாரிகளை அனுப்புமாறு கோரிக்கை [Friday, 2011-07-15 08:30:22] யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளைஅனுப்ப வேண்டும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்வதாகவும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். …

  12. யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் சிறிலங்கா அரசு வழங்கிய வாக்குறுதிகள் குறித்து அல் ஜெஸீராவில் ஒளிபரப்பான ஆய்வரங்கம் Top News [Friday, 2011-07-15 10:00:46] சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் சென்ற நிலையில் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் தற்போதைய நிலைவரம் குறித்து அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஆய்வரங்கம் ஒன்று ஒளிபரப்பியுள்ளது. The Stream என்ற இந்த ஆய்வரங்கத்தில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகியன தொடா்பில் சர்வதேச சமூகத்துக்கு வழங்கி இருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசு நிறைவேற்றுகின்றதா? என்பது குறித்துவிவாதிக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=46520&category=TamilNews&language…

  13. சண்டிலிப்பாய் பகுதியில் வீடற்றவர்களின் விபரம் இராணுவத்தால் சேகரிப்பு _ 7/15/2011 10:55:56 AM Share சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடற்ற வறிய குடும்பங்களின் விபரங்கள் இராணுவத்தினரால் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நிரந்தர வீடற்ற வறிய, வன்செயல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதற்காக இராணுவத்தினர் வீடுகளை கிராம அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தமது காணி உறுதிகள் மற்றும் வீடு இல்லை என்பது தொடர்பான கிராம அ…

  14. வீட்டுத்த தோட்டங்களின் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவமயமாகும் யாழ் குடாநாட்டு விவசாயம்:- 15 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வீட்டுத்த தோட்டங்களின் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவமயமாகும் யாழ் குடாநாட்டு விவசாயம்:- வீட்டுத்த தோட்டங்களை அபிவிருத்தி செய்ய படைத்தரப்பு முனைப்புக் காட்டி வருகின்றது. தற்போது படையினரின் முழுக் கவனமும் அதன்மீது திரும்பியிருப்பதாக யாழ் மாவட்ட இராணுவத் தலைமை கூறுகின்றது. இன்று யாழ் நகரில் சிவில் நிர்வாகக் காரியாலயத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. யாழ் நகரில் படையினரின் முயற்சியால் வீடுகளுக்கு வீட்டுத் தோட்டங்களை அமுல்ப்படுத்தும் திட்டம் ஒன்றைத் தாம் அமுல்ப்படுத்தியிருப்பதாக படை அதிகாரிகள் ஊடகவியலாளர் மாநாட்…

  15. சிறிலங்காவைப் புறக்கணிக்கும் மேற்கு ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் [ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 01:17 GMT ] [ தா.அருணாசலம் ] மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடையத் தொடங்கியுள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றிய 2011 ஜுன் மாதப் புள்ளிவிபரங்களில் இருந்து பிரித்தானியாவில் இருந்து சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜன் மாதம் பிரித்தானியாவில் இருந்து 5188 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனா…

  16. தென் சூடானின் சுதந்திர விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டுள்ளது ! [Thursday, 2011-07-14 12:11:14] தென் சூடானின் சுதந்திர விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தென் சூடான் அரசின் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவாகாரத்துறை துணை அமைச்சர் கனகாந்திரம் மாணிக்கவாசகர், பிரதமர் அலுவலக பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தென் சூடானின் சுதந்திர நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர். புதியதொரு நாட்டின் பிறப்பிற்கு ஏனைய அரச பிரதிநிதிகளுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் சாட்சிகளாக இணைந்திருந்தனர். தென் சூடான் சட…

  17. இராணுவம் தேர்தல் பணியில் ஈடுபடாது-தேர்தல் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்-யாழ்.வந்த பிரதித்தேர்தல் ஆணையர் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-14 10:29:02| யாழ்ப்பாணம்] தேர்தல் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, தேர்தல் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.மொகமட் தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் யாழ்.தேர்தல் முறைப்பாட்டு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக இங்கு…

    • 0 replies
    • 350 views
  18. சீனா, ரஷ்யா உட்பட; உலக கம்யூனிஸ்டுகளிடம் ஈழத் தமிழருக்கு ஆதரவுதிரட்டுகிறது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரசுரித்தவர்: Sukkran July 14, 2011 சீனா, ரஷ்யா உட்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் விளக்கி, தமிழருக்கு ஆதரவு திரட்டும் பணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்துள்ளது. இதுவரை 49 நாடுகளுக்கு உண்மையை விளக்கி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல. அது மனித குலத்துக்கு எதிரான போர் என்பதை உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு விளக்கி வருகிறோம் என்று உதயனுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் தா.பாண்ட…

  19. Jul 15, 2011 / பகுதி: செய்தி / யாழ்.நோக்கிச் சென்ற பேருந்து ஈரற்பெரியகுளத்தில் குடைசாய்ந்து 16 பயணிகள் காயம்! கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஈரற்பெரியகுளத்திற்கு அண்மையில் இன்று நண்பகல் வீதியை விட்டுவிலகி குடைசாய்ந்துள்ளது. இதனால் 16 பயணிகள் காயமடைந்து வவுனியா மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.com/news/17406/57/16/d,article_full.aspx

  20. ரவிராஜ், ஜோசப் பரராசசிங்கம் ஆகியோரை பயங்கரவாதிகளே கொன்றனராம்! அடித்துக் கூறும் ரிசாத்.. சாந்த புஞ்சி ஹேவாவை தேடுகிறார். [Thursday, 2011-07-14 21:43:23] தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களான ரவிராஜ்,ஜோசப் பரராஜ சிங்கம் ஆகியோரை பயங்கரவாதிகளே படுகொலை செய்ததாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்த புஞ்சி ஹேவா மீதான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,சாந்த புஞ்சிஹேவா வன்னி மாவட்ட மக்களுக்கு ஆற்றிய சேவைகளை யாரும் மறந்து விடமுடியாது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் பல பணிகளை முன்னெடுத்தார். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மு…

  21. வடக்கே வசந்தம் வீசவில்லை. ஆதிவாசிகள் என்ற நினைப்பிலேயே அரசும், அரசின் கையாட்களும் செயற்படுகின்றனர்:- 14 ஜூலை 2011 ஆனந்தசங்கரி நம் நாடு ஓரு சுண்டக்காய் நாடு. அதில் ஒரு சிறு பகுதியே வட மாகாணமாகும். வடமாகாணத்தின் ஒரு சிறு பகுதியிலேயே உள்ளுராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மக்களை இஷ்டம் போல் செயற்பட்விடாது, நாம் எல்லோரும் ஆதிவாசிகள் என்ற நினைப்பிலேயே அரசும், அரசின் கையாட்களும் செயற்படுவது வேடிக்கையானதும் வேதனையை தரும் விடயமாகும். வடக்கே வசந்தம் வீசவில்லை. மாறாக அமைதிப்புயல் வீசுகின்றது என்று ஐனாதிபதிக்கே நான் பலதடவை கூறியுள்ளேன். உண்மையும் அதுவே. நடந்து முடிந்தது போர் அல்ல. போர் என்பது இரு நாடுகளுக்கு இடையில் நடப்பது. இது உள்ளுர் கிளர்ச்சியை அடக்க அரசு அதனை போ…

  22. இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே – கருணா 14 ஜூலை 2011 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய நாட்டின் ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார். அனைத்து தமிழர்களும் ஜனாதிபதிக்கு நன்றி பாராட்ட கடமை பட்டுள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இல்லாமல் செய்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடடுள்ளார். தமிழ் மக்களின் சகல பிரச்…

  23. கதிர்காம முருகன் ஆலய உற்சவ விழாவிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பக்தர்களின் பேரூந்து தாக்குதலிற்கு உள்ளாகியது. . வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சிங்கள கடையர்களினால் சியாம்பலாண்டுவ பகுதியில் வவத்து நேற்று புதன்கிழமை இரவு கல் வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் பயணம் செய்த தமிழ் பக்தர்கள் பலர் காயமுற்றதுடன் பேரூந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. ஈழ நாதம்

  24. பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா – கலாநிதி ராம் சிவலிங்கம், பிரதி பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும். திடகாத்திரமான, சாமர்த்தியமான எமது செயல்கள் யாவும் சிங்கள தேசத்தை திணற வைக்கவேண்டும். ஜனநாயக நாட்டின் சர்வாதிகாரி என்ன செய்வது,ஏது செய்வதென்று தெரியாது தடுமாறவேண்டும். எமது ஒவ்வொரு முன்னெடுப்பும் சிங்கள அரசுக்க…

    • 1 reply
    • 474 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.