Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது இனவாத சகபாடிகளான அமைச்சர்கள் விமல் வீரவன்ச,சம்பிக்க ரணவக்க ஆகியோரைக் கேட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேவேளை, அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தத் தயராகவிருப்பதாக அறிக்கை விடுமாறு தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ்,கெஹலிய ரம்புக்வெல ஆகியோரையும் ஜனாதிபதி பணித்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதனை எதிர்த்தும் இந்த விடயத்தில் இந்திய அரசின் தலையீட்டைக் கண்டித்தும் …

  2. [Monday, 2011-06-13 15:58:14] தொழிற்சங்கங்கள் மீது அரசாங்கம் விதிக்கும் கட்டுபாடுகள் மற்றும் தலையீடுகள் குறித்த விடயங்களடங்கிய முறைப்பாட்டுக் கடிதமொன்றை ஐ.நாவுக்கு ஆடைத்தொழிற்துறை மற்றும், சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அனுப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கோ வேலை நிறுத்தம் செய்வதற்கோ உரிய அடிப்படை உரிமைகள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதுடன் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் செய்வதனைத் தடுக்கும் நடவடிக்கையானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) உடன்படிக்கைகள் கொள்கைகளை மீறுவதாக உள்ளதெனவும் …

  3. திங்கட்கிழமை, 13, ஜூன் 2011 (13:50 IST) இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மனு இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐநா தலைமையில் சர்வதேச விசாரணை மேற்கொள்வது அவசியம் என்ற தீர்மானத்தை வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மனு முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்காட் லீ, இந்த மனுவை அவையில் கொண்டு வந்துள்ளார் என்றும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த மனு மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்னும் விவாதம் தொடங்கவில்லை. இதனிடையே, ஜூன் 14 ம் தேதி, இலங்கையின் …

  4. மகிந்தவின் நாடாளுமன்ற தெரிவுக்குழு யோசனை காலம் கடத்தும் முயற்சி! - கூட்டமைப்பு நிராகரிப்பு! இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைக்கப் போவதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, இது காலத்தைக் கடத்துவதற்கான உபாயமாக மட்டுமே இருக்க முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் (11.06.11) அலரி …

  5. லெப். கேணலின் மரணம் தொடர்பில் சந்தேகம் Monday, June 13, 2011, 16:30 சிறீலங்கா சிறீலங்கா இராணுவத்தின் 13 ஆவது தேசிய அதிகாரிகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப். கேணல் டி எச் லெனடோறாவின் (50) மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் நாள் சனிக்கிழமை அவர் தம்புள்ளை வீதியில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்துள்ளார். அவர் வீதி விபத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்கா காவல்துறையினர் முதலில் நம்பினார்கள். ஏனினும் அதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. அவர் இறந்து கிடந்த பகுதியில் கண்ணாடிச் சிதறல்களும் காணப்பட்டுள்ளன. பல்கலைக…

  6. [Monday, 2011-06-13 17:10:23] வாடிக்கையாளர்களின் வைப்புகளில் பாதுகாப்புக்கு ஆபத்தான சில நடைமுறைகள் குறித்து பொலிஸ் மோசடி விசாரணை பணியகம் சர்வதேச வங்கிகள் மற்றும் உள்நாட்டு வங்கிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது என மோசடி விசாரணைப் பிரிவின் தலைவர் மக்ஸி புறொக்டர் கூறினார். கொழும்பிலுள்ள வங்கியொன்று, வங்கி ஊழியரின் கவனயீனம் காரணமாக, உரியவரிடம் பணத்தை கொடுக்காமல் வேறு ஆள்மாறாட்டக் காரர் ஒருவரிடம் பணத்தை கொடுத்துவிட்டதாக மக்ஸி புறொக்டர் கூறினார். மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த புகார்களில் ஆளடையாளம் காணுவதில் ஒழுங்குகள் கடைப்பிடிக்காமையால் வங்கிகளிடமிருந்து 7,000,000 ரூபா மோசடியாக பெறப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. வெற்றுக் காகிதத்தில் ஒரு வங்கி வாடிக…

    • 1 reply
    • 715 views
  7. Monday, June 13, 2011, 18:46சிறீலங்கா கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி நபர்களினாலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் திருமதி எஸ்.விஜயராணி உத்தரவிட்டுள்ளார். பல்லேகல …

  8. தமிழீழ இறைமை சம்பந்தமான பொதுசன வாக்கெடுப்புஅன்புள்ள நண்பர்களே!ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பைச் சேர்ந்த நாம் ஜனாதிபதி திரு. ஒபாமாவிற்கும் இராசாங்கச் செயலாளர் திருமதி. கிலின்டனுக்கும் ஐ. நா. சபைச் செயலாளர் நாயகம் திரு. பான் கி மூன் அவர்களுக்கும் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் நிரந்தரத் தூதுவர்களுக்கும் ஒரு மனுச் சமர்ப்பிக்கவுள்ளோம். இந்த மனு, தமிழர்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமை நிர்ணயிக்கப் படவேண்டுமா எனும் வினாவிற்கு விடை கண்டறியும் ஒரு பொதுசன வாக்கெடுப்புக்கு வழிவகுத்து ஆதரிக்குமாறு அமெரிக்காவைக் கோருவதாகும்.இதே போன்ற ஒரு பொதுசன வாக்கெடுப்பு சமீபத்தில் தென் சூடானில் நடைபெற்றது. தென் சூடான் மக்கள் தங்களுக்குத் தனிநாடு அமைவதற்கு அ…

  9. எங்கள் பற்றிய பேச்சுக்கள் எங்களுக்கே இரகசியமா? எம் பற்றிய-எம் இனம் பற்றிய விவகாரம்தான் பேசுகிறார்கள். ஆனால் அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. இந்த நிலையில்தான் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளன. ஈழத்தமிழர்களின் விவகாரம் குறித்து இருவகைப் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. அதில் ஒன்று இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் நடத்தும் பேச்சு. மற்றையது இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தும் பேச்சுவார்த்தை. இதில் இரண்டு பேச்சுவார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவையாயினும் பேசும் தரப்பில் இருக்கக்கூடிய அதிகாரத்தன்மை வேறுபட்டுள்ளதைக் காணமுடியும். அதாவது இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுக்கும் அதிகாரம்…

  10. உயர் பொருளாதார வளர்ச்சி இலங்கையில் சாத்தியம் இல்லை _ வீரகேசரி இணையம் 6/12/2011 1:42:31 PM Share நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக இலங்கை அரசு எதிர்பார்த்திருந்த உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அடைவது சாத்தியம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை கடந்த ஆண்டில் எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியினை கண்டது. இதனை 2011, 2016இல் முறையே 8.5வீதம், 9.5 வீதம் மூலமாக அதிகரித்து, சராசரியாக எட்டு சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி வீதத்தினை பதிவு செய்ய இலங்கை அரசு எதிர்பார்த்திருந்தது. எனினும் இது 2011, 2012, 2013இல் முறையே 7.5வீதம், 6.8வீதம், 6.4வீதம் என எட்டு சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியி னையே இலங்கையால் பதிவு செய்ய முடியும் என உலகவங்கி கடந்த வா…

  11. கிளிநொச்சி கரச்சி பகுதியில் இன்று அதிகாலை அடிகாயங்களுடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தனது வழமையான காவல் கடமைக்காக கரச்சி காவல் நிலையத்திலிருந்து சென்ற இவர் இன்று அதிகாலை அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கரச்சி பகுதியில் இன்று அதிகாலை இச்சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை எடுத்து சென்று கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்த போதுதான் அது காவல்துறையை சேர்ந்த ஒருவரின் சடலம் என்பதை அடையாளம் கண்டுகொண்டதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் காவல் கடமைக்காக இரவு வேளையில் செல்வதாக இருந்தால் தனியாக சென்றிருக்க வாய்ப்பில்லை …

  12. [ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 09:32 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றது உண்மையோ-பொய்யோ, அதுபற்றி சிறிலங்கா அரசாங்கம் விசாரிக்க வேண்டும். அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளாலும், மனிதஉரிமை அமைப்புகளாலும் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளை முறியடிக்கின்ற முதல் நடவடிக்கையாக சிறிலங்கா இராணுவத்தின் போர்க்கருத்தரங்கு அமைந்திருந்தது. உண்மையான கள நிலவரத்தை …

  13. [ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 08:57 GMT ] [ தி.வண்ணமதி ] "ஆயுத மோதல்கள் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் போர் சார் நடவடிக்கைகள் அனைத்தையும் குற்றவியல் நடவடிக்கைகள் என்றோ அன்றி பயங்கரவாதச் செயற்பாடுகள் என்றோ குற்றம் சுமத்திவிடமுடியாது" என்ற ஐ.நாவின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கான சிறப்புத் தூதுவர் கலாநிதி Kalliopi K. Koufa வினது கூற்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The sunday Leader உடகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பேட்டியுடன் இணைந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, தமிழீழ விடுதலைப் புலி…

  14. இலங்கையில் சிறார் தொழிலாளர் இலங்கையின் சிறார்களில் 18 வீதமானோர் சிறார் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதாக சிறார் தொழிலாளர்கள் குறித்து ஆராய்ந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள். சர்வதேச மட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூஉன் 12 ஆம் திகதி சிறார் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இலங்கை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளரான எஸ். விஜயச்சந்திரன் அவர்கள், இலங்கையில் குறிப்பாக மலையகப் பகுதியில் பெருந்தோட்டங்களில் 29.1 வீதமான சிறார்கள் தொழிலாளர்களாக இருப்பதாகவும் கூறினார். பெருந்தோட்டங்களிலும், அதனையடுத்து கடந்த பல தசாப்தங்களாக போர் நடந்த வடக்கு கிழக்கிலும், தலைநகர் கொழும்பை அண்…

    • 2 replies
    • 406 views
  15. ஈராக்கில் 30 இலங்கையர்கள் உண்ணாவிரதம் _ வீரகேசரி இணையம் 6/13/2011 3:51:55 PM ஈராக்கில் இலங்கையர்கள் 30 பேர் உண்ணாவிரதம் இருப்பதாக தூதரகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 19 மாதப் பாக்கிச் சம்பளப்பாக்கியைப் பெற்றுத்தரும்படி குறித்த இலங்கையர்கள் இவ்வாறு உண்ணாவிரதமிருக்கின்றனர். ஈராக்கின் அரசியல் நிலைவரப்படி இவ்விடயம் தொடர்பாக நேரடியாகத் தலையிட முடியாதிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது. இதேவேளை இவர்கள் சட்டரீதியாக அங்கு பணிக்கமர்தத்ப்பட்டவர்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கில் இலங்கைத் தூதரகமோ அல்லது தொடர்பான அதிகாரிகளோ இல்லாத நிலையில் இவ்விடயம் தொடர்பாக நேரடியாக எதுவும் மேற்கொள்ள முடியாதிருப்பதாக வெளிநாட்டு வேலை வ…

  16. [ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 08:23 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தமிழ் வகுப்புகள் கடந்த வெள்ளியன்று ஆரம்பமாகியுள்ளன. சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தமிழ் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆறு மாதங்கள் நடைபெறவுள்ள இந்தத் தமிழ் வகுப்பில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து அமைச்சர் விமல் வீரவன்ச, அத்துரலிய ரத்னதேரர் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். முதலாவது பிரிவில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் கற்பிக்கப்படவுள்ளது. இவர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இரண்டு மணிநேரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தமிழ் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதின…

    • 1 reply
    • 451 views
  17. [ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 08:08 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல்சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று பிற்பகல் 3.15 மணியளவில் தூத்துக்குடி வ.ஊ.சி துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்தியாவின் கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கொடி அசைத்து முதலாவது பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்தச் சேவையில் ஈடுபடவுள்ள ஸ்கொட்டியா பிறின்ஸ் என்ற பயணிகள் கப்பலில் 1044 பேர் பயணம் செய்ய முடியும். இதில் 307 அறைகள் உள்ளன. ஆரம்பத்தில் இந்தக் கப்பல்சேவை வாரத்தில் இரண்டு நாட்கள் இடம்பெறும். இந்தக் கப்பலில் பயணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக 40 கப்பல் பணியாளர்கள் பணியாற்றுவர். மேலும் 25 பணியாளர்கள் க…

  18. Monday, June 13, 2011, 14:27சிறீலங்கா இராணுவத்தினரால் கூட்டாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாராஸ்வாமியை விடுதலைப் புலிகளின் முக்கிய புலனாய்வுப் பிரிவு உறுப்பினராக நேற்றைய திவயின பத்திரிகை சித்தரித்துள்ளது. கிருஷாந்தியின் கொடூர மரணத்துக்குக் காரணமான இராணுவச் சிப்பாய்களின் நேர்காணலை வார இறுதி திவயின இரிதா சிங்களப் பத்திரிகை நேற்றுப் பிரசுரித்திருந்தது. சமன் கமகே என்பவர் பிரஸ்தாப நோ்காணலை மேற்கொண்டிருந்தார். கிருஷாந்தி குமாரஸ்வாமி விடுதலைப் புலிகளின் முக்கிய புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் என்றும் அவர் ஏலவே ஒரு தடவை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மேலிட அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டவர் என்றும் பிரஸ்தாப சிப்பாய்கள் தெரிவித…

  19. சதீஸ் என்ற கைதி தனது விடுதலையின் நாளுக்காகக் காத்திருக்கிறான். 29வயது நிரம்பிய இவன் ஒரு முன்னாள் போராளி. 2008இல் தென்னிலங்கையில் கைதுசெய்யப்பட்டு குடும்பமாக சிறு குழந்தை மனைவி உட்பட சிறைவாசத்தை அனுபவித்து வருகிறான். தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் பேரைப்போல் இவனும் ஒருகாலம் போராடியிருக்கிறான். இந்தக் கைதியின் கைதுபற்றி 2008இல் வந்த பத்திரிகைச் செய்தியிது…. பணமிருந்தால் மட்டுமே ஒருவனின் வாழ்வை முடிவு செய்யும் உரிமைமிக்க இன்றைய காலத்தில் பணம் இல்லை ஆகையால் விடுதலையின்றி மனவுளைச்சல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கும் உடல்நலம் உடற்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். 5வயது நிரம்பிய அவனது மகன் `அப்பா எப்ப வருவீங்கள்…? என்ற கேள்விகளோட…

    • 6 replies
    • 923 views
  20. வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை, இன்று மாலை மத்திய அமைச்சர் வாசன் ஆரம்பித்து வைக்கிறார். இதற்கான கட்டண விபர ங்கள், விதி முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.“பிளமிங்கோ லைனர்ஸ்' என்ற தனியார் நிறுவனம் சார்பில், ஸ்காட்டியா பிரின்ஸ் பயணிகள் கப்பல் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கும் இயக்கப்படவுள்ளது. இருவழித் தடத்திலும், மாலை 6 மணிக்கு புறப்படும் இக்கப்பல், மறுநாள் காலை 8 மணிக்கு (14 மணிநேரம்) மறு முனையை சென்றடையும். ஆரம்பத்தில், வாரம் இருநாட்கள் இயக்கப்படவுள்ள இச்சேவை, பின் வாரம் முன்று முறையாக அதிகரிக்கப்படவுள்ளது. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட…

  21. பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்சேவை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே அதை வரவேற்று அறிக்கை விட்டேன். இப்போது முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். டெல்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். …

  22. 13 ஜூன் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் தேவ அபிரா “ஊடக சுதந்திரம் எப்பொழுதும் பணக்காரர்களாலும் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் அழுத்தத்திற்குள்ளாகியே வந்துள்ளது. தணிக்கை தடை மரண அச்சறுத்தல் மரணம் என அந்த அழுத்தங்கள் பல வழிகளில் தோன்றுகின்றன.”- Janet Heard சனவரி 8 எங்கள் வீட்டில் ஒரு கொண்டாட்டநாள். எனது மகனின் பிறந்தநாள் அது. புலம் பெயர்ந்து வாழும் சோனாலி சமரசிங்கவை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். இதன் பின்பு சனவரி 8 என்பது இன்னுமொன்றை நினைவுபடுத்தும் நாளாகவும் மாறிவிட்டது. 2009 ம் ஆண்டு சனவரி எட்டாம் திகதியே சோனாலியின் கணவரான லசந்த விக்கிரமசிங்க சண்டே லீடர் காரியாலயத்தை நோக்கிச் செல்லும் போது கொழும்பில் கொல்லப்பட்டார். …

  23. இனக்கொலை செய்த ராஜபக்சே குற்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு என்று வைகோ பேசினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் போர்க்குற்றவாளி இல்லை. இனக் கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கும் உண்டு. அதனுடன் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தவர்களுக்கும் உண்டு. இந்திரா காந்தி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டவர். ஆனால் சோனியா காந்தி அப்படிப்பட்டவராக இல்லை. சிங்களர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, விமானப் பாதைகள் அமைத்துக் கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ராஜபட்சேவைச் சந்தித்து தமிழர்களுக்…

  24. திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் வரவேற்றது திமுக. அப்போது பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், காவிரிப் பிரச்னையில் தமிழகத்தை திமுக வஞ்சித்துவிட்டது என்று வேண்டுமென்றே பேசி விஷத்தைக் கக்க வேண்டிய அவசியம் என்ன? இலங்கைத் தமிழர்களுக்காக நான் எதைச் செய்தாலும் அதை ""கபட நாடகம்'' என அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா. 1956 ல் சிதம்பரம் திமுக பொதுக் குழுவில் அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை நான்தான் முன்மொழிந்தேன். 24.8.1977 ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பிரமாண்ட பேரணி நடத்தியது திமுக. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் பிரச்னையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறு க…

  25. இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கைக்கு எதிராக அந்த நாட்டின் மீது பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உலக நாடுகளிடையே இந்தியா ஆதரவு திரட்ட வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கருத்தும், அதேபோல, சீனா இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்ற கருத்தும் ஏற்கத்தக்கவையல்ல. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா பேரவையில் இந்தியா கொண்டு வந்த பொருளாதாரத் தடை தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.