ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
சிறிலங்கா படைத்தரப்பின் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலர் படைத்தரப்பினரால் மீண்டும்; கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் போது சுமார் 12,000 போராளிகள் சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்தனர். இவர்களில் சுமார் 6,000 பேர் வரை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இவ்வாறு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் சிறிலங்காப் படைத்தரப்பினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத் தகவலை சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றத்தில் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். இப் போராளிகளில் பலர் தற்போதும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக இன…
-
- 0 replies
- 593 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேயின் பதவிக்காலம் நிறைவடைந்து அவர் இன்றிரவு நாடு திரும்புவதாக சிறிலங்காவின் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவரின் பதவிக்கால நிறைவை முன்னிட்டு நேற்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நீல் பூனேக்கும் இடையில் பிரியாவிடை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின் போது இலங்கையின் தற்கால நிலைமை குறித்தும், வெள்ளப் பாதிப்புகள் குறித்தும் மற்றும் தான் சந்தித்த சவால்கள் குறித்தும் நீல் பூனே சிறிலங்கா ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, நீல் பூனே தனது பதவிக் காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பினை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அ…
-
- 0 replies
- 538 views
-
-
Feb 9, 2011 / பகுதி: செய்தி / ஓய்வூதியமின்றி இராணுவப் படையினரை பணி நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சி ஓய்வூதியம் வழங்காது 60,000 இராணுவப் படை வீரர்களை பணி நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மரக்கறி விற்பனை செய்தல், கழிவுகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலைமை அரசாங்கத்தினால் படையினருக்கு ஏற்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் நடத்…
-
- 0 replies
- 623 views
-
-
கிறிஸ்மஸ் தீவில் கைதிகள் மோதல்! இலங்கைத் தமிழருக்கு படுகாயம்! புதன், 09 பெப்ரவரி 2011 20:13 ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுப்பு முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளான கைதிகள் இடையே நேற்று நள்ளிரவு இடம்பெற்ற மோதலில் இலங்கைத் தமிழ் கைதி ஒருவர் படுகாயம் அடைந்து உள்ளார். இலங்கைத் தமிழ் கைதிகள் எட்டுப் பேருக்கும், ஈராக் மற்றும் குவைத் கைதிகளுக்கும் இடையில் இம்மோதல் இடம்பெற்று இருந்தது. தமிழ் கைதிக்கு வாயில் பலத்த அடி விழுந்து இருக்கின்றது. சில பல்லுகள் விழுந்து விட்டன. இவருக்கு தடுப்பு முகாமில் இருந்த சிகிச்சை நிலையத்தில் சிக்கிச்சை வழங்கப்பட்டது.பி மேலதிக சிகிச்சைக்காக பேர்த் நகர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு உள்ளார். …
-
- 0 replies
- 610 views
-
-
மகிந்தவின் அமெரிக்கப் பயணமும் உள்ளுராட்சி தேர்தல்களும் February 9, 2011 போர்க்குற்ற புற்று நோய்க்கு வைத்தியம் செய்யப் போன கதை.. ஆயுதக் குழுக்கள் சிறீலங்கா அரசியல் வானில் மங்கத் தொடங்குகின்றன.. போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்வினையை இங்கிலாந்தில் சந்தித்த மகிந்த ராஜபக்ஷ அதற்குப் பின் தன் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ சகிதம் அமெரிக்கா போய் வந்துள்ளார். அவர் அமெரிக்கா போனது புற்றுநோய்க்கு வைத்தியம் செய்ய என்ற வதந்தி ஒன்று பரப்பவிடப்பட்டது.. தனக்கு புற்றுநோய் இல்லை என்று மகிந்த பகிரங்கமாக இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால்.. மகிந்த ஒரு புற்றுநோய் தொடர்பாகத்தான் அமெரிக்கா போயுள்ளார் …
-
- 1 reply
- 959 views
-
-
புலிகள் இயக்க பிரமுகருக்கு எதிராக ஜேர்மனியில் வழக்கு! செவ்வாய், 08 பெப்ரவரி 2011 02:09 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என்று சந்தேகிக்கப்படுகின்ற டபிள்யூ. அகிலன் (வயது-35) என்பவருக்கு எதிராக ஜேர்மனிய நாட்டு நீதிமன்றம் ஒன்றில் குற்றவியல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர் ஜேர்மனியில் புலிகள் இயக்கத்தின் பேச்சாளர்களில் ஒருவராகவும், நிதி சேகரிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் ஜேர்மனிய பிரஜாவுரிமை உடையவர். கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 24 ஆம் திகதி இவருக்கு எதிரான குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வர…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் ஒரு இலட்சம் பேரைக் கொண்ட படையணி .... புதன்கிழமை, 09 பிப்ரவரி 2011 06:22 ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தி அதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கியதான ஒரு இலட்சம் பேரைக் கொண்ட படையணி ஒன்று தயாராகிறது. இந்தப் படையணியை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாச நேற்று ஆரம்பித்து வைத்தார். இந்த ஆரம்ப வைப நிகழ்வு சஜித் பிரேமதாசவின் நாராஹேன்பிட்டிய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தப் படையணிக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவராக முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் கருணாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கமம். சங்கமம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் போர்க்குற்றத்தை முன்வைக்க திட்டம் _ வீரகேசரி நாளேடு 2/9/2011 8:53:19 AM ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் திட்டங்களை தயாரித்து வருகின்றனர் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட புலி உறுப்பினர்களில் பிரபல்யமானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர கால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்று…
-
- 0 replies
- 842 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் விளையாட்டுத் தன்மையானவை இல்லை - அமெரிக்கா புதன்கிழமை, 09 பிப்ரவரி 2011 06:23 இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் விளையாட்டு தன்மை கொண்டவை இல்லை அவற்றுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று சென்னையில் அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Teresita Schaffer கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளை எடுக்க தவறின் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். வன்னி போரின் இறுதி நாட்கள் மிகவும் பயங்கரமானவை என்பதற்கு ஆதாரங்கள் உண்டு எனவும் நீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மஹிந்தா அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சங்கமம்
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரின் விரல் ரேகையைப் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு... புதன்கிழமை, 09 பிப்ரவரி 2011 11:37 தடுப்புக் காவலிலுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரொருவரின் கைவிரல் ரேகையைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தொடர்பாகவே நீதிமன்றம் இன்று அவ்வாறு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது சட்டமா அதிபரினால் அவருக்கெதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன…
-
- 0 replies
- 709 views
-
-
தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமான மணலாறில் சிங்களக் குடியேற்றங்கள்: இலங்கை அரசு திட்டம். [Wednesday, 2011-02-09 06:58:56] தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமான மணலாறில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்டவர்களின் மூன்றாவது தலைமுறையினருக்குப் போதிய காணிகள் இல்லை என்றும் அவர்களுக்கு வவுனியா மற்றும் பொலன்னறுவையில் காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் திசநாயக்க தகவல் வெளியிடுகையில், வேகமான சனத்தொகை வளர்ச்சியால் மகாவலி வலயங்களில் காணிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற…
-
- 0 replies
- 677 views
-
-
உல்லாசப் பயணிகளை கவர இலங்கையில் முதல் முறையாக கடல் விமான சேவை கிழக்குக் குளத்திலிருந்து ஆரம்பம்: [Wednesday, 2011-02-09 06:48:32] இலங்கையில் முதன் முதலாக கடல் விமான போக்குவரத்து சேவை (சீ பிளேன்) நேற்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கொண்டுவட்டுவான் குளத்தி லிருந்து வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. கொண்டுவட்டுவான் குளத்திலிருந்து புறப்பட்ட சீ பிளேன் களனி கங்கையில் இறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தினேஷ் சத்துரங்க கூறினார். ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தினால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சீ பிளேன் சேவை உல்லாசப் பயணிகளை கவரும் வகையிலேயே நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விமான சேவைகொண்…
-
- 0 replies
- 497 views
-
-
அனுராதபுரத்திலுள்ள புனித வெள்ளரச மரக்கிளை ஒன்று இன்று யாழ்ப்பாணம் செல்கின்றது ஜீரிஎன் செய்தியாளர் அனுராதபுரத்திலுள்ள புனித வெள்ளரச மரத்தின் கிளை ஒன்று இன்று யாழ்ப்பாணம் செல்கின்றது. இந்தியாவிற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற புனித வெள்ளரசு மரக் கிளை ஒன்று இலங்கையிலுள்ள அனைத்து முக்கிய விகாரைகளுக்கம் எடுத்துச் செல்லப்படுகின்றது என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள சங்கமித்தை வந்திறங்கியதாக தெரிவிக்கப்படும் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கும் இந்த வெள்ளரசு மரக் கிளை எடுத்துச் செல்லப்படுகின்றது. இதேவேளை நாகவிகாரைக்கும் இந்த வெள்ளரசு மரம் எடுத்துச் செல்லப்படலாம…
-
- 1 reply
- 989 views
-
-
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திருமலையில் 500 ஏக்கர் நிலம் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளிக் கரைப் பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலத்தை 22 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது என உல்லாசப்பயண மேம்பாட்டு அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இத் தீர்மானத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளரொருவர் 25 ஏக்கர் நிலப்பரப்பைக் கொள்வனவு செய்யமுடியும். ஏக்கர் ஒன்றுக்கு 20 மில்லியன் ரூபா என்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு 99 வருட குத்தகை அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்,ஒரே தடவையில் முழுப்பணமும் செலுத்தப்பட வேண்டுமென அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.யுத்தம் முடிவுற்றதன் பின்னர் குச்சவெளிக் கரைப்பிரதேசத…
-
- 0 replies
- 882 views
-
-
கடுவல - பியகம பிரதேசங்களுக்கு இடையில் இரவு வானில் தென்பட்ட மர்மான ஒளி : 09 பெப்ரவரி 2011 கடுவல - பியகம பிரதேசங்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு வானில் தென்பட்ட மர்மான ஒளி தொடர்பான நவகமுவ காவற்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி ஒருவர் இந்த மர்மான ஒளியை முதலில் அவதானித்துள்ளார். மிகவும் பிரகாசமான ஒளி தனது விமானத்தில் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர், சிறிது நேரத்தில் வானில் தென்பட்ட இந்த மர்ம ஒளியை முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த இருவர் அவதானித்துள்ளனர். இந்த ஒளி மிகவும் வேகமாக பயணித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். gtn
-
- 0 replies
- 792 views
-
-
4ஆயிரத்து500 முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் கால எல்லையை வரையறுக்க முடியாது _ வீரகேசரி நாளேடு 2/9/2011 10:02:21 AM Share புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியுள்ள 4ஆயிரத்து 500 முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் கால எல்லையினை வரையறுக்க முடியாது. இதுவரையில் 55 சதவீதமான போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 375 முன்னாள் போராளிகளில் 212 பேர் சித்தியடைந்தும் 40 போராளிகள் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். விடுதலையாகும் முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பங்கள் சமூகத்தில் கிடைக்காமல் புனர்வாழ்வி…
-
- 0 replies
- 619 views
-
-
யாழ்ப்பாணம் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது – தமிழில் ஜீரிஎன் : யாழ்ப்பாணத்தில் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகப் பலவீனமான நிலையிலேயே.. யாழ்ப்பாணம் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று சொல்கிறார் லங்கா கார்டியன் கட்டுரையாளர் ஒருவர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்க விஜயம் செய்துள்ள அவர் தெற்கில் உள்ளதைப் போலன்றி யாழ்ப்பாணத்தில் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகப் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஜனநாயகக்கட்டமைப்பின் பலவீனமான நிலைமை உலகின் ஏனைய பாகங்களில் மாபியாக்களின் உருவாக்கத்திற்கு எவ்வாறு வழி வகுத்ததோ அதேபோன்று இங்கும் வழி வகுத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். இது தொடர்ந்தால் அது இன்னொரு பீகாராக மாறிவிடும்…
-
- 0 replies
- 829 views
-
-
அரசியல்வாதிகள் மாதிரி வாக்குறுதி வழங்கி விட்டு சும்மா இருக்க மாட்டேன்! மட்டு. அரச அதிபர் சபதம் வழமையானஅரசியல்வாதிகளைப் போல் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வெறுமனே சும்மா இருக்க மாட்டார் என்று தெரிவித்து உள்ளார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். இவர் மட்டக்களப்பு மாவட்டதின் வெள்ள நிலைமைகள் மற்றும் மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஆகியன குறித்து தமிழ்.சி.என்.என் இற்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில், நிவாரணங்கள், உதவிகள் ஆகியன சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சேர்வதற்கான முயற்சிகளை அரச அதிபர் என்கிற முறையில் தொடர்ந்தும் மேற்கொள்வார் என்றும் இதுவே பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோள் ஆகு…
-
- 0 replies
- 658 views
-
-
துப்பாக்கிகளை வைத்திருக்கும் பெட்டைகள்! இலங்கைப் பொலிஸாரை மட்டம் தட்டுகிறார் ஐ.தே.கவின் பிரசார பீரங்கி! (காணொளி இணைப்பு) .இலங்கைப் பொலிஸாரை துப்பாக்கிகளை வைத்திருக்கும் பெட்டைகள் என்று மட்டமாக கூறி உள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரோஸி சேனநாயக்க. இவர் கொழும்பு பொது நூலக அரங்கில் நேற்று மாலை இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். இவர் இங்கு மேலும் கூறியவை வருமாறு: "இலங்கைக்கு உண்மையில் சுதந்திரம் கிடைத்து விட்டதா? என்பது மிகப் பெரிய சந்தேகமே. பொலிஸார் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பெட்டைகளைப் போல் இருக்கின்றார்கள். காடையர்களால் எதிர்க் கட்சியினர் தாக்கப்படுகின்றபோது…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்கள் குற்றவாளிகளைப்போல நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு படையினரால் புகைப்படம் எடுக்கப்படுகிறார்கள். இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.பிக்கு சுதந்திரமாக வாழ அரசாங்கம் இடமளிக்குமானால் சிறு குற்றங்கள் இழைத்தோரை ஏன் விடுதலை செய்ய முடியாது? ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் அரச பயங்கரவாதிகளால் தான் கொல்லப்பட்டார்கள். மக்களுக்கு இன்று மூன்றுவேளை உணவு உண்ண முடியவில்லை. ஆனால் அரசாங்கமோ அவசியமற்ற விழாக்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவிடுகிறது…
-
- 1 reply
- 529 views
-
-
இயற்கையின் கோரத்தாண்டவம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளைத்தான் மீண்டும் சின்னாபின்னமாக்கியுள்ளது. இரண்டு வாரம் தொடர்ந்த கடும் மழையின் பின்னர் சற்று ஓய்வு. ஆனால் மீண்டும் கடந்த வாரம் முதல் இரண்டாவது கட்டமாக கொட்டித் தீர்த்த கடும் மழையினால் வடக்கு கிழக்கில் அகதி முகாம்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இயற்கையின் இந்த அழிவுகளின் போதும் அரசாங்கம் தன்னுடைய மக்களைத்தான் அரவணைக்கின்றது. தமிழினம் அனாதரவாகத்தான் உள்ளது. பல தமிழ்க் கிராமங்கள் பல நாட்களாகத் தொடர்புகள் இன்றித் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் ஒரு நேர உணவுக்காக ஏங்கித் தவிக்கும் நிலையில் மிகவும் ஆட்மப்ரமாக சுதந்திர தினக்கொண்டாட்டங்களும் கண்காட்சியும் கதிர்காமத்தில் நடைபெறுகின்றது. மன்னாரில் மழை இல…
-
- 0 replies
- 512 views
-
-
இலங்கைக்கு போர்குற்ற விசாரணை ஆலோசனைக்குழு செல்லும் என பான் கி மூன் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு இலங்கை செல்லும் எனவும் பின்னர் செல்லாது எனவும் மாறி மாறி கதைகள் எழுந்தது. இப்போது ஐகிய நாடுகள் சபை ஆலோசனைக்குழு செய்மதியூடான விசாரணைகளை செய்யும் என கூறப்படுகின்றது. உண்மையில் உங்கள் நிலைப்பாடுதான் என்ன என பத்திரிகையாளர்கள் பான்கிமூனை கேட்டு துழைத்துக்கொண்டனர். இதற்கு பான்கிமூன் மறுமொழி கூறுகையில் எங்களுக்கும் இலங்கைக்கும் ஓர் ஒப்பந்தம் உள்ளது. அதன்படி நாம் அங்கு செல்வோம் என கூறியுள்ளார். ஒப்பந்தத்தின் விரிவான விளக்கம் கொடுகப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது, ---- http://www.eelanatham.net/story/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%…
-
- 0 replies
- 837 views
-
-
உயர் பாதுகாப்பு வலையங்களை சிங்கள வியாபாரிகளுக்கு படையினர் விற்றுவருகின்றனர். எழுதுமட்டுவாள் பகுதியில் உள்ள தென்னந்தோட்ட காணிகள், அரச பெருந்தோட்ட காணிகள் 100 ஏக்கர் வரை இவ்வாறு விற்கப்பட்டுள்ளன. இதே போல கிளாலிப்பகுதியிலும் 80 ஏக்கர் தென்னங்காணிகள் விற்கப்பட்டுள்ளன. முள்ளைத்தீவு கள்ளப்பாடு, அளம்பில், சுண்டிக்குளம் பகுதிகளில் தமிழர்களின் கரைவலைப்பாடுகளையும் சிங்கள மீனவர்க்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்த காணிகள் கைத்தொழில் அபிவிருத்திக்கு என வழங்கப்பட்டாலும் இது சிங்களவர்களை குடியேற்றுவதற்கான திட்டமாகவே மக்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த பகுதிகளில் சிங்களவர்கள் ஏற்கனவே தற்காலிகமாக குடியேற்றப்பட்டுள்ளனர். http://www.eelana…
-
- 0 replies
- 466 views
-
-
நாட்டில் அநீதியின் ஆட்சி.. காளியம்மனிடம் கருணை மனு சமர்ப்பித்து வழிபட்டார் அனோமா பொன்சேகா [Tuesday, 2011-02-08 15:52:29] முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைவைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதனையொட்டி அவர் விடுதலைக்காக கொழும்பு, முகத்துவாரத்திலுள்ள காளி கோயிலில் இன்று விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அனோமா பொன்சேகா, இந்த நாட்டில் அநீதிகளே இடம்பெறுகின்றன என்றும் இவ்வாறான கடவுள் சந்நிதானங்களில் வழிபடுவதன் மூலம் அவற்றினை இல்லாமல் செய்ய முடியும் எனவும் தெரிவித்ததார். இதேவேளை, மக்கள் ஜ…
-
- 1 reply
- 1k views
-
-
வி க்கிலீக்ஸ்....!" பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே. வாய்க்குள் நுழைவதற்குக் கஷ்டமாக இருந்தபோதும் கூட தம்முடைய அரட்டைகளின் போது "விக்கிலீக்ஸ்" என்ற சொல்லை உச்சரிக்காவிட் டால் நம்மவர்கள் பலருக்கும் " பத்தியப்படுவ தில்லை". அந்தளவுக்கு எல்லோரையும் ஆட்கொண்ட ஒரு மந்திரச் சொல்லாக இது மாறி இருக்கிறது. இந்த மந்திரச் சொல் இறுகத் தாழிடப்பட்டிருந்த பாதுகாப்பு நிறைந்த பல கதவுகளை ஒரே நொடியில் திறந்துவிட்டி ருக்கிறது. அந்தக் கதவுகளினூடே இது நாள்வரையும் பொத்திப் பாதுகாக்கப்பட்டு வந்த பல ரகசியங்கள் அம்பலமாகியிருக்கின்றன. யூலியன் அசாஞ்சே என்ற மந்திரவாதியின் கை வண்ணத்தில் உருவாகியிருக்கும் விக்கிலீக்ஸ் உலகை எப்போதுமே பரபரப்பின் முனையில் நிற்க வைத்துள்ளது. பொதுவாகவே மந்திர தந்திரங்கள…
-
- 2 replies
- 1.6k views
-