Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 26 மீனவர்களில் 04 பேர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 08 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய 22 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவர் 2022 ஆம் ஆண்டு எல்லை தாண்டி மீன் பிடித்தமைக்க…

  2. முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் பகுதியிலே கனமழை காரணமாக அதிகமாக மீன்கள் பிடிபட்டு வருகின்றது. உயிர் மீன்களான கெழுத்தி, மணலை, சிலாப்பி இன வகையை சார்ந்த மீன்களே இவ்வாறு பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் அதிகம் பிடிபட்ட மீன்கள் | Virakesari.lk

  3. குஷ்பு இலங்கை வரக் கூடாது; புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ‘ஸ்டார்’ நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல உள்ள நடிகை குஷ்புவுக்கு, விடுதலை புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன், தமிழக திரைப்பட கலைஞர்கள் அவ்வப்போது இலங்கை சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கை. கடந்த, 2009ல் விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக முடக்கப்பட்ட பின், திரைப்பட கலைஞர்கள் இலங்கை செல்வது படிப்படியாக குறைந்தது. அதற்கு அங்கு நிலவிய குழப்பமான அரசியல் சூழலே காரணம். சமீப காலமாக கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரைப்பட கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கொழும்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி ந…

  4. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப்பிரிவினா…

  5. தென்னிந்தியக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் இறக்குமதிக் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் முகிழ்ப்புப் பெற்றுள்ளமை இந்த மண்ணின் சுதேசியக் கலைஞர்களையும், இளைய தலைமுறைத் திறமையாளர்களையும் மலினப்படுத்துவதாகவே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற, கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவுவிழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள் மண்ணின் கலைஞர்களைப் புறக்கணித்து, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்சார் கலைகள் அத்தனைக்கும், தென்னிந்தியக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் இறக்குமதிக் கலாசாரம் …

  6. Published By: VISHNU 15 NOV, 2023 | 03:47 PM முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். புலிபாய்ந்தகல் பகுதியில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி வாடி அமைத்து தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் வழங்கப்பட்டு வாடிகளை அகற்றுமாறு கோரி பதாகை காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொக்குதொடுவாய் 15ஆம் கட்டை பகுதியில் இவர்கள் வாடிஅமைத்து சட்டவிரோத தாெழிலில் ஈடுபட்டு வருகி…

  7. 15 NOV, 2023 | 04:37 PM ( எம்.நியூட்டன்) சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளிடம், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று புதன் கிழமை (15) நடைபெற்றது. யாழ்பாணத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சிறுவர் மேம்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம…

  8. Published By: DIGITAL DESK 3 15 NOV, 2023 | 02:47 PM (துரைநாயகம் சஞ்சீவன்) நிலநடுக்கம் தொடர்பான இயற்கை சமிக்ஞைகளை கருத்தில் கொண்டு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெருமளவான இழப்புக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கிருபைராஜா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற நிலநடுக்கம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் சில வருடகாலமாக தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. இந்த இயற்கை சமிக்ஞைகளை கவனத்தில் கொண்டு நாம் சில முன்னாயத்த நடவடிக்கைகள…

  9. 2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் சவாலானதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னர், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இலங்கை முழுமையான பொருளாதார மீட்சியை நோக்கிச் செல்லும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு இலங்கை நிலைமைக்கு திரும்பவில்லை என்றும், 2024 ஆம் ஆண்டிலும் இந்த நிலை ஏற்படாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 2025 இல் அதை அடைவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும், இவை பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கான படிக்கட்டுகள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி பின்னடைவுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முதன்மை நோக்கம் என்பதை எடுத்துக்காட்ட…

  10. காணாமற் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடு! வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனவர்களுக்கான இழப்பீடை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக மேலும் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் …

  11. மீண்டும் ஜனாதிபதியாக ரணில் ? மீண்டும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து நான் தீர்மானிக்கவில்லை. அது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே எனது முதன்மையான நோக்கம், அதன் பின்னர் நான் முடிவு செய்வேன். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பொருளாதாரம் தொட…

  12. ஆதரிக்கும் ஆனால் ஆதரிக்காது: மஹிந்த பதில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கட்சி இது குறித்து விரைவில் முடிவெடுக்கும் என நேற்று (13) தெரிவித்தார். SLPP தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரேரணைகளை ஆதரிக்கும் என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை ஆதரிக்காது என்றும் ஊடகங்களுக்கு நேற்று (13)கருத்து தெரிவித்த போது கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் வரவு- செலவு திட்ட முன்மொழிவுகள் பற்றி கலந்துரையாடியதா என வினவியபோது, தான் அவ்வாறு எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவில்லை என்றும், கட்சியில் உள்ள மற்றவர்கள் அத்தகைய கலந்துரையாடலில் கலந்…

    • 1 reply
    • 371 views
  13. 14 NOV, 2023 | 05:02 PM மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வு குறித்தும் கனிய மண் அகழ்வை நிறுத்த அரசு மற்றும் உரிய அமைப்புக்களும் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்த மாவட்டம் முகம் கொடுக்கின்ற பிரச்சனையாக கனிய மணல் அகழ்வு காணப்படுகின்றது. காற்றாலை மின்சாரம் அதற்கு அப்பால் பல்வேறு பிரச்சின…

  14. 14 NOV, 2023 | 05:15 PM கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி கடவுச்சீட்டு பரிசோதனை இயந்திரங்களை நிறுவும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் நடைபெற்றது. கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் பயணிகளிடத்தில் ஏற்படும் நெரிசல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் , ஏர்போர்ட்ஸ் மற்றும் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இந்த இயந்திர திட்டத்திற்கான நிதி முதலீட்டை வழங்கியுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் பயணிகள் தங்கள் இருக்கைகளை தேர்ந்தெடுக்கவும் போர்டிங் பாஸ் முத்திரையிடுவதற்கும் பயண பையை …

  15. தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம். இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி பி ஜே ( CPJ) அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து குறித்த அமைப்பின் ஆசிய நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பெஹ் லி யீ கருத்துத் தெரிவிக்கையில்” “இலங்கை அதிகாரிகள் உடனடியாக தமிழ் ஊடகவியலாளர்களான சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் கைவிட்டு, அவர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதை உறுதி செய்ய …

  16. ஈஸ்டர் தாக்குதல் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திய தொகை வெளியானது! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினரால், இதுவரை 3 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரத்து, 88 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு,…

  17. யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு. யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றிவரும் நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில் உள்ள பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்க…

  18. Published By: RAJEEBAN 14 NOV, 2023 | 10:27 AM கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது வட இங்கையின் போர்நடந்த பகுதியில் நீர்வழங்கல் பணிக்காக தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனிதப் புதைகுழி ஒன்றினை கடந்த 2023 யூன் 29 அன்று கண்டுபிடித்தார்கள். 1990கள் முதல் இப்பகுதியில் பல இராணுவ முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் உடனடியாகவே முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு தகவல்தெரிவித்தார்கள். ந…

  19. Published By: DIGITAL DESK 3 14 NOV, 2023 | 09:46 AM சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் நிலவும் மோசமான வானிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பி இருந்தது. குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/1692…

  20. (நா.தனுஜா) மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததைப்போன்று எதிர்வரும் ஓரிரு வாரங்களில் உரியவாறான தீர்வு வழங்கப்படாவிடின், தமது போராட்ட வடிவத்தை மாற்றி மேலும் வீரியத்துடன் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் நிலங்கள் பெரும்பான்மையின சிங்களவர்களின் குடியேற்றங்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும் வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ர…

  21. 12 NOV, 2023 | 01:53 PM (எம்.வை.எம்.சியாம்) கடன் வழங்கி எம்மை நசுக்கி இந்து சமூத்திரத்தின் மூலோபாய நன்மைகளை பெற்றுக்கொள்ளவே மேற்கத்தேய நாடுகள் முயற்சிக்கின்றன. இந்த கடன்கள் மூலம் அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அவ்வாறான ஒன்று தேவையில்லை. இதுவும் பொருளாதார வங்குரோத்து நிலைக்கு மற்றொரு காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சர்வதேச அரங்கில் எமது கோட்பாடுகளுக்கு அமைய ஆற்றல் மிக்க அடையாளத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன…

  22. யாகப்பர் ஆலய படுகொலை நினைவேந்தல்! adminNovember 13, 2023 யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் காலை திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது உயிரிழத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளை, இலங்கை விமான படையின் “சுப்பர் சொனிக்” விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் ஆலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை …

  23. குழுக்களுக்கிடையில் மோதல்; போர்க்களமாக மாறிய உரும்பிராய் வீதி! தீபாவளி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும், ஏழாலையைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்துக்கு அருகில் பலாலி வீதியில் நின்றிருந்த உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் வீதியால் ஹன்ரர் ரக வாகனத்தில் பயணித்த ஏழாலையைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஹன்ரர் ரக வாகனத…

  24. Freelancer / 2023 நவம்பர் 13 , மு.ப. 01:24 - 0 - 23 இலங்கையின் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் அகதிகள் போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி வந்திறங்கிய நிலையில் கைது செய்த மரைன் பொலிஸார் அவரை சென்னை புழல் சிறையில் தடுத்து வைத்துள்ளனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் அந்நிய நபர்கள் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், சனிக்கிழமை (11) காலை ஈடுபட்டு வந்தனர். அப்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மரைன் பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற இலங்கை நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளா…

  25. நிதர்ஷன் வினோத் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கோரியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் அதன் வளாகத்துள் தங்குமிடங்கள் அமைத்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவு தின நாட்களிலும் பொது நினைவேந்தல் தினத்திலும் தங்களின் கவலைகள் தீர நினைவு கொள்ள முடியாது துன்பப்படுகின்றனர். யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்தும் நினைவேந்தலில் பூரண சுதந்திரம் கிடைக்காமல் பல்வேறு இராணுவ கெடுபிடிகளுக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவதியுறுகின்றனர். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக நினைவேந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.