Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடற்படையினரால் மூடப்பட்டு வருகின்ற தளங்களில் இராணுவத்தினர் புகுந்து புதிய தளங்களை அமைக்கின்றனர்:- 08 பெப்ரவரி 2011 யாழ் குடாநாட்டில் கடற்படையினரால் மூடப்பட்டு வருகின்ற தளங்களில் இராணுவம் புகுந்து புதிய படைத் தளங்களை அமைத்து வருவதாக ஜீரீஎன்னின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மூளாய் உள்ளிட்ட நுளைவாயில்களிலும் தீவகப் பகுதிகளிலும் கடற்படைத் தளங்கள் மூடப்பட்டு வருகின்றன. சுமார் 15 வருடங்களின் பின் இந்தப் பகுதிகளில் கடற்படைத் தளங்கள் மூடப்படுவது குறித்து மக்களிடையே மகிழ்ச்சி காணப்பட்டது. ஊடகங்களும் இது குறித்து பிரமாதப்படுத்தி செய்திகளை வெளியிட்டு இருந்தன. விசேடமாக முளாய் உள்ளிட்ட பகுதிகள் சிலவற்றின் கடற்படைத் தளங்கள் முற்றாக மூடப்பட்டு கடற்படையினர் …

  2. வன்னியைச்சேர்ந்த இளைய வயதினர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லவிடாது பாதுகாப்புத்தரப்பு கெடுபிடி - 08 பெப்ரவரி 2011 வன்னியைச்சேர்ந்த இளைய வயதினோர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லவிடாது மீண்டும் பாதுகாப்புத்தரப்பு கெடுபிடிகளை மேற்கொள்ளத்தொடங்கியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் படைத்தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. யாழ்ப்பாணம் வந்து திரும்பும் இளவயதினரே கூடிய அளவினில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார் படையினரால் மேலதிக விசாரணைக்கென முகாம்களுக்கு அழைக்கப்படும் இவர்கள் அங்கு மீண்டும் விசாரணையெனும் பெயரினில் சித்திரவதைகளுககுள்ளாவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்ப…

  3. செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:9 IST) இலங்கை போர்க்குற்ற விசாரணை! ஐ.நா. நிபுணர் குழு புதிய முடிவு! இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஐ.நா. நிபுணர் குழு, வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தொடக்கத்தில் ஐ.நா. நிபுணர் குழு, இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போதிலும், அதில் ஏற்பட்ட சில இடையூறுகளையடுத்தே மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வீடீயோ கான்பரன்சிங் முறையில் மற்றும் எழுத்து வடிவிலான விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலம் பலரையும் நேர்காணலுக்கு உட்படுத்த முடியும் என்று நிபுணர் குழு கருதுவதாக தெரிய வருகின்றது. nakkhe…

  4. கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு வீரகேசரி இணையம் 2/8/2011 10:22:06 AM கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, கெத்தாராம பகுதிகளுக்கு நேற்றும் இன்றும் வருகை தந்த இராணுவத்தினர் பதிவு விண்ணப்பங்களைக் கொடுத்து குடும்ப விபரங்களை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பின் நிமித்தமே இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தனர்.

  5. ரத்தோட்டை பிரதேசத்தில் நிலம் தாழிறங்கி வருகிறது மக்கள் மத்தியில் பரபரப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-08 10:11:11| யாழ்ப்பாணம்] மாத்தளை மாவட்டத்தின் ரத் தோட்டை பிரதேசத்தில் 25 ஏக்கர் பரப் பைக்கொண்ட நிலம் மெது மெதுவாக நிலத்திற்குள் தாழிறங்கி வருவதால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நில வுகின்றது. இப்பிரதேசத்திலுள்ள 32 வீடுகள் மற்றும் சுற்றாடலிலுள்ள உயரமான மரங்கள் போன்றவை நிலத்திற்குள் அமிழ்ந்து வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவிய லாளர் மொரேமட தெரிவித்தார். இதன் காரணமாக புஞ்சிரத் தொட் டையில் மூன்று வீடுகள் போதிக் கொட்டு வையில் 14 வீடுகளும் பெரிதும் சேதமடைந்து காணப்படுகின்றன.தற்போது 50 -60அடி உயரங் கொண்டதாகக் காணப்பட்ட மரங்கள் பல நிலத்த…

  6. தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் Monday, February 7, 2011, 8:40 தமிழீழ தேசிய தலைவரின் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதும் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனை தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவசர சிகிச்சைக்காக அவரை யாழ் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு மீண்டும் வல்வெட்டிதுரைக்கே வந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர். போர் சமயத்தில் அடிக்கடி இடம் பெயரப்பட்டதாலும் அதன்பின் பணகோடா முகாமில் அடைத்துவைக்கபட்டதாலும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. அவரின் ஒரு கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வதி அம்மையாருக்கு இரத்த அழுத்தமும் சர்கரையும…

  7. யாழில் இடம்பெறுவது அபிவிருத்தி அல்ல, அதிருப்தி! பேராசிரியர் சிவச்சந்திரன் கருத்து .மனிதனுக்கு எது திருப்தியோ கொடுக்கக் கூடியதோ அதுவே அபிவிருத்தி. ஆனால் யாழ்.குடாநாட்டில் இடம்பெறுவது அபிவிருத்தி அல்ல அதிருப்தி என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை போராசிரியர் இ.சிவச்சந்திரன் கூறி உள்ளார். யாழ். மாவட்டத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்? என்கிற தொனிப்பொருளிலான செயலமர்வு ஒன்று யாழ்ப்பாண சிந்தனைக் கூடத்தின் ஏற்பட்டில் யாழ்.தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் இதை நடத்தி இருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இ. சிவச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இவர் அங்கு மேலும் குறிப்பிட்டவை வருமாறு:- "பெரிய கட்…

  8. இன்று 07.02.2011 மதியம் 1.00 மணியளவில் யாழிலிருந்து பருத்தித்துறை நோக்கி பொருட்களுடன் வேகமாக வந்த பாரவூர்தி கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை மோதித் தள்ளி பிரதேச செயலகத்தின் மதிலையும் உடைத்துச் சென்றுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியானார். thx http://www.newjaffna.com

  9. தமிழ் மக்களின் காணிகளை விற்பனைசெய்ய சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை [ பிரசுரித்த திகதி : 2011-02-07 06:50:31 PM GMT ] தென் தமிழீழத்திலுள்ள தமிழ் மக்களிற்குச் சொந்தமான காணிகளை பல பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக, கொழும்பின் லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் (www.lankabusinessonline.com) என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. திருகோணமலை குச்சவெளியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை நட்சத்திர விடுதிகள் கட்டுவதற்காக அரசாங்கம் விற்பனை செய்ய இருக்கின்றது. 500 ஏக்கர் காணி 90 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (10 பில்லியன் ரூபா) விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இதேபோன்று தமிழீழத்தின் மேற்குப் பகுதியான புத்தளம் கற்பிட்டியிலுள்…

  10. கனடாவில் மிகவும் முன்னேறிய மக்கள் கூட்டத்தில் தமிழ் இனமும் ஒன்று! அந்நாட்டு அரச எம்.பி போல் புகழாரம்! ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 10:24 இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கனேடிய மனித உரிமைகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் கனடாவின் தலைநகர் ரொரன்ரோவில் நடத்தப்பட்ட மாநாட்டில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டார்கள். ஆளும் கட்சியில் இருந்து கலந்து கொண்ட முக்கிய பிரமுகரான போல் கலாண்ட்ரா தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் கனேடிய அரசு பார்க்கவில்லை, இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப இதுவே நல்ல தருணம், கனடாவில் விரைவில் முன்னேறிய இனங்களில் தமிழ் இனமும் ஒன்று என்றார். லிபரல் …

  11. செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 8, 2011 இலங்கைக்கே சோறு போட்ட வன்னி மாவட்டங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.வவுனியா மாவட்டத்தில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தோடும், நிதி அமைச்சுடனும் தொடர்பு கொண்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :- காலநிலை சீரற்று காணப்படுகின்றமையால் வவுனியா மாவட்டத்திலே பயிர்ச் செய்கை பாதிப்படைந்துள்ளது. உழுந்து பயிர்ச் செய்கை 13700 ஏக்கரும், நெற்பயிர்ச் செய்கை 14000 ஏக்கருக்கும் இவ்வாறு பாதிப்படைந்துள்ளது. கால்நடைகள் மழைக் குளிரினால் இறந்துள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலே போக்குவரத்துக்கான பல வீதிகள் சேதமடைந்துள்…

  12. 2011 நவம்பர் முதல் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு கூடாத காலம்! தென்னிலங்கையின் ஆஸ்தான ஜோதிடர் ஆரூடம் ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 22:09 எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வரை பொதுவாக நாட்டுக்கு நல்ல காலம் கிடையாது என்று எதிர்வு கூறி உள்ளார் தென்னிலங்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சோதிட மேதைகளில் ஒருவரான பியசேன ரத்துவிதான (வயது 80). இந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலருக்கும் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வருகின்றார். இவர் கிரக மாற்றம் எப்படிப்பட்ட பல்ன்களை இலங்கைக்கு கொடுக்க இருக்கின்றது? என்பது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சோதிட ரீதியாக விளக்கம் கொடுத்து உள்ளார். இவர் தெரிவித்தவை வருமாறு:- "2011 ஆம் ஆண்டு நவம்பர…

    • 6 replies
    • 2.2k views
  13. யாழ்.கல்வியங்காடு ஜே 259 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களை ஒளிப்படத்துடன் குடும்பப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அந்தப் பகுதி கிராமசேவையாளர் எஸ்.செல்வச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிராமசேவையாளர் அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் குடும்பமாகச் சென்று நேற்றுக் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை ஒளிப்படங்களை எடுத்தனர். இந்த விடயம் தொடர்பாக கிராமசேவையாளர் எஸ்.செல்வச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்:- "ஒளிப்படத்துடன் மக்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்.அச்செழு இராணுவ அதிகாரி பணித்ததாக கூறியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%…

  14. தியாகச் சுடர்களான முத்துக்குமார், முருகதாசன் உட்பட்ட 19 தியாக சீலர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் (06.01.2011) நேற்று இடம்பெற்றது. மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை மூர்க்கத்தனமாக முன்னேறிய சிங்கள படைகளின் கொடூர தாக்குதலில் தமிழர் தாயகமும், தமிழர்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள், உள்ளிட்ட அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டதோடு தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டும் இருந்த வேளையில் அதனை பார்த்து பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்த தமிழராய் தம் உடலில் தீயிட்டு சர்வதேசத்திடம் நீதி கேட்ட அற்புத மனிதர்களான அந்த 19 தியாகச் சுடர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வே லண்டனில் நேற்று இடம்பெற்றது. நேற்று (06-02-2011) ஞாயிற்றுக்கிழமை…

  15. பயணிகளின் அட்டகாசத்தால் சவூதி விமானம் இலங்கையில் அவசர தரையிறக்கம் வீரகேசரி இணையம் 2/7/2011 1:39:05 PM சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று இடைநடுவில் அவசரமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை தரையிறக்கப்பட்டது. அரேபியப் பயணிகள் மதுபோதையில் முறைகேடாக நடந்துகொண்டதால் நிலைமையை சமாளிக்க முடியாததால் விமானத்தைத் தரையிறக்கியதாக விமானி குறிப்பிட்டுள்ளார். இவர்கள் விமானப் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவ்வாறு நடந்துகொண்ட ஐவர் விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவி…

  16. ஊடகவியலாளர் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் * Monday, February 7, 2011, 17:44 காத்தான்குடி பிரதேசத்தை மையப்படுத்தி வெளிவரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மத்தல்லாஹ் இனந்தெரியாத நபர்களால் இன்று திங்கட்கிழமை இரவு தாக்கப்பட்டுள்ளார். காத்தான்குடியிலுள்ள வீதியொன்றில் சென்று கொண்டிருந்த இவர் மீது மிளகாய் தூள் வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதமும் இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். tamilthai.com

  17. மனிதனுக்கு எது திருப்தியோ அதுவே அபிவிருத்தி. ஆனால் "யாழ்.குடாநாட்டில் இடம்பெறுவது அபிவிருத்தி அல்ல அதிருப்தி!" என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை போராசிரியர் இ.சிவச்சந்திரன் கூறியுள்ளார். யாழ்ப்பாண சிந்தணைக் கூடத்தின் ஏற்பட்டில் "யாழ் மாவட்டத்ததை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்?" என்பது தொடர்பான செயலமர்வு ஒன்று அன்மையில் யாழ்.தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்துரை வழங்கும் போதே இ.சிவச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் சுட்டிகாட்டியதாவது; பெரிய கட்டிடங்கள், தொழிற்சாலைகள், வாகன நெரிசல் என்பன அதிகரித்தால் அது அபிவிருத்தியா?; பிரதேச மக்கள் என்ன நினைக்கின்றார்கள்?, எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள்? என்பதைப் பொறுத்தே அபிவிருத்தி தீர்மா…

    • 0 replies
    • 549 views
  18. பேஸ்புக்கின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன? 07 பெப்ரவரி 2011 உலகின் முன்னணி சமூக வலையமைப்பு இணைய தளங்களில் ஒன்றான பேஸ் புக் இணைய தளத்தின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு;ள்ளன. எவ்வாறெனினும், நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே இந்தத் தரவுகள் வெளியிடப்படும் என பேஸ் புக் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். பேஸ் புக் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பிலான தரவுகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா கம்பூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பொன்ஸ் டீம் கோரிக்கை விடுத்திருந்தது. பேஸ் இணையத்தை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டுள்…

  19. Monday, February 7th, 2011 | Posted by admin காங்கேசன்துறையில் இயந்திரம் வெடித்ததில் 7 பேர் காயம் யாழ் நகரப்பகுதியினில் கட்டட வேலைக்காக எடுத்து செல்லப்பட்ட இயந்திர தொகுதியொன்று இன்று காலை வெடித்துச்சிதறியதில் ஏழு தொழிலாளர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். காங்கேசன்துறை வீதிப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மாடிக்கட்டடமொன்றிற்கு பாரமான பொருட்களை ஏற்ற முற்பட்ட வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக யாழ் போதனா வைத்திசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலைத்தளத்தினில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்காமையே விபத்துக்கு காரணமென தெரிவிக்கப்ப…

  20. ஜயலத் எம்.பி - இலங்கை அரசியலில் நவீன நாரதர்! திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011 17:36 ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்தன இலங்கை அரசியலை பொறுத்த வரை நவீன நாரதராக செயல்படுகின்றார் என்கிற சாரப்பட செய்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது லங்கா புவத் செய்தி இணையத் தளம். நாரதர் என்றாலே கலகத்துக்கு பிரபலம் ஆனவர். " இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது எல்லாம் ஏதோ ஒரு வகையில் அவற்றோடு சம்பந்தப்பட்டவராக ஜயலத் இருந்து வந்து உள்ளார். புலிகள் இயக்கத்தின் பாதுகாவலர் போல் அவரைக் காட்டிக் கொண்டார். தேவை இல்லாமல் மூக்கு நுழைத்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…

  21. ஜே.வி.பியின் பெண் வேட்பாளருக்கு யாழ்.பருத்தித் துறையில் பொலிஸாரால் மிரட்டல்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபைக்கு போட்டியிடுகின்ற ஜே.வி.பி கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரால் நேற்று மிரட்டப்பட்டு உள்ளார்கள். தவராசா புஷ்பராணி என்கிற வேட்பாளரே மிரட்டப்பட்டு இருக்கின்றார். பொலிஸார் சீருடை அணிந்து கொண்டு இவரின் வீட்டுக்கு வந்து இருக்கின்றார்கள். இவருக்கும், ஜே.வி.பி கட்சிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துக் கேள்விக் கணைகளை தொடுத்தார்கள். தேர்தலில் இருந்து இவர் விலக வேண்டும் என்று அச்சுறுத்தி விட்டுச் சென்று இருக்கின்றார்கள். http://tamilcnn.com/index.php?option=com_…

    • 3 replies
    • 1.3k views
  22. வடக்கில் புலிகள் தொடர்ந்தும் செயற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன. வேறு அரசியல் கட்சிகளில் பின்னால் இருந்து அவர்கள் அரசியல்ரீதியாக இயங்க முடியும்.இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.வடக்கில் புலிகள் தொடர்ந்தும் செயற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவாகவே உள்ளன. வேறு அரசியல் கட்சிகளின் பின்னால் இருந்து அவர்கள் அரசியல் ரீதியாக இயங்கமுடியும்.ஆனால் அவர்களால் வெளிப்படையாகவோ அல்லது இராணுரீதியாகவோ இனிமேல் செயற்படமுடியாது என்று நான் உறுதியாக நம்பவில்லை. வேறு அரசியல் கட்சிகளின் ஊடாக அவர்கள் பலத்தைக் காட்டமுனையலாம்.வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு ஊடகங்கள் என்மீது குற்றம்சாட்டின. ஆனால் …

  23. ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த போதே தெற்குச் சூடானிலும் விடுதலைப்போர் ஆரம்பமானது. 25 ஆண்டுகளுக்கு மேலான காலம் தொடர்ந்த அந்தப் போராட்டம் தற்போது வெற்றியின் விளிம்பை எட்டிப் பிடித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களில் தென் சூடான் தனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுவிடும். தென்சூடானில் கடந்த இருபத்திரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு விடுதலைப் போராட்டம், வெற்றியைத்தொட்டு நிற்கிறது. பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் எல்லாம் மறந்து உண்மை யான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தென் சூடானியர்கள் தயாராகி நிற்கிறார்கள். 2005 ஆம் ஆண்டில் கென்யாவின் மத்தியஸ்தத்துடன் வட சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை தனிநாட்…

  24. திங்கட்கிழமை, பெப்ரவரி 7, 2011 வந்தாறுமூலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள், ஒரு உணவுப் பொதியில் 7 பேர் உண்ணும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் மக்கள் தமக்கு இதுவரை எதுவித உணவுப் பொருட்களும் வழங்கப்படவில்லையென தெரிவித்தனர். வந்தாறுமூலை மேற்குப் பிரதேசத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புகளை சந்தித்துள்ள போதிலும் இதுவரையில் எதுவித நிவாரணமும் தமக்கு வழங்கப்படவில்லையென கவலை தெரிவிக்கின்றனர். தமது குழந்தைகளுக்கு பால்மா கூட பெற்று…

    • 0 replies
    • 1.1k views
  25. விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிப்பது முடியாத காரியம்! அமைச்சர் தேவா வருத்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பூண்டோடு அழிப்பது என்று தெரிவித்து உள்ளார் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இவர் நாட்டின் இன்றைய அரசியல் நிலைவரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்து உள்ளார். இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு: "தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் தற்போதும் செயல்படுகின்றனர் என்றே கூற வேண்டி உள்ளது. சில அரசியல் கட்சிகள் மூலமாக புலிகள் செயல்பட முடிகின்றது. ஆனால் இராணுவ ரீதியாகவோ,இயக்கமாகவோ புலிகளால் செயல்பட முடியாது. எனினினும் புலிகளை பூண்டோடு அழிக்கின்றமை முடியாத காரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.